Posts Tagged ‘காலக் கணக்கீடு’

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், ஆய்வுக் கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (2)

ஓகஸ்ட் 30, 2022

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு: நிகழ்வுகள், ஆய்வுக்கட்டுரைகள் தரம், செய்ய வேண்டியது என்ன? (2)

கலந்து கொண்ட சிலரின் கருத்துகள்: வரலாறை உலகறிய செய்யவேண்டும்: முத்துப்பாண்டி, புத்தக விற்பனையாளர், மதுரை ஆராய்ச்சி மையம்: வரலாற்று ஆய்வு மாணவர்கள் கள்,பேராசிரியர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடமாக இம்மாநாடு திகழ்கிறது.எங்களிடம் ரூ.80 முதல் ரூ.2500 வரை புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளது. முதல் முறையாக திண்டுக்கல்லில் விற்பனை நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

புத்தகங்களுக்கு மவுசு: உதயகுமார் மதுரை கல்வெட்டுஆய்வாளர்: கி.மு.6ம் நுாற்றாண்டில் எழுத்து முறையில் உள்ள புத்தகங்கள் இங்கே கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 3 தினங்கள் மாநாடு நடப்பதால் அதிக வரவேற்பு உள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ள பேராசிரியர்கள் அதிகமானோர் பங்கேற்பதால் புத்தகங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது: ராஜவர்மன், வரலாற்று பேராசிரியர், பழநி: தென் இந்தியாவில் முதன் முறையாக இம்மாநாடு நடக்கிறது. அதிக ஆர்வமாக மற்ற மாநிலத்தவரும் கலந்து கொண்டுள்ளனர் .வரலாற்றுக்கு ஜி.டி.என்.கல்லுாரி முக்கியத்துவம் கொடுத்துள்ளது. மக்களுக்கு வரலாற்றை கற்றுகொடுக்க வேண்டும். 4 வகையில் பிரித்து கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான அறிஞர்களும்,பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்ததை பார்க்க நெகிழ்ச்சியாக இருக்கிறது.

அறிவியல் படித்தவர்களும் ஆர்வம்: முருகேஸ்வரி, பேராசிரியை, திண்டுக்கல்: கேரளாவிலிருந்து அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் கலாசாராத்தை அறிய அவர்களும் ஆர்வமாக உள்ளனர். இம்மாநாட்டின் மூலம் வரலாற்று அறிஞர்கள் தொடர்பு பெருகும். அறிவியல் படித்தவர்களும் வரலாற்றை அறிவதற்கு ஆர்வமாக உள்ளனர்.

உணர்ச்சிகளை ஊக்குவிக்கலாம்: செல்லப்பாண்டி, பேராசிரியர், அருப்புக்கோட்டை: வரலாற்றின் பாரம்பரியத்தை மாணவர்களின் மத்தியில் புகுத்தவேண்டும். வரலாற்று சிறப்புமிக்க மாநாடுகளை அதிகம் நடத்துவதன் மூலம் வரலாற்றிஞர்களின் உணர்ச்சிகளை ஊக்குவிக்கலாம். மாணவர்களுக்கும் ஆர்வம் ஏற்படும்.

புதிதாக கற்றுகொள்வோம்” ரகசனா, வரலாற்று மாணவி, கேரளா: கேரளாவிலிருந்து 20க்கு மேற்பட்ட மாணவர்கள் வந்துள்ளோம். வரலாறு போற்றப்படக்கூடிய விஷயம். கலாசாரத்தை அறிந்துகொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவோம். புதிதாக வரலாறு குறித்து கற்றுகொள்வோம்.

நல்லதொரு வாய்ப்பு: சிவாங்கி, பேராசிரியர், பஞ்சாப்: இதுபோன்ற வரலாற்று மாநாட்டில் கலந்து கொள்வது எனக்கு இது முதல் அனுபவம்மிக ஆர்வமாக உள்ளது. தென்னிந்திய மன்னர்களை அறிவது மிக அபூர்வம். ஒவ்வொரு படைப்புகளும் என்னை வியப்படைய செய்கிறது.வரலாற்றை அறிய நல்ல வாய்ப்பாக உள்ளது.

மகிழ்ச்சியாக இருக்கிறது: இஷா டம்டா, பேராசிரியர், பஞ்சாப்: இவ்வளவு அதிகமான வரலாற்று அறிஞர்களை ஒரே இடத்தில் பார்ப்பது மகிழ்ச்சி. இதுபோன்ற மாநாடுகளை ஆண்டு முழுவதும் நடத்தினால் நன்மை பயக்கும்.

பிறகு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் உறுப்பினர்களிடம் உரையாடி, விசயங்களை அறிந்த போது, இவர்கள் எல்லோரும் (மேலே கருத்து சொன்னவர்கள்) முழு உண்மை அறியாமல் கருத்துத் தெரிவித்துள்ளார்கள் என்று தெரிந்தது.

ஆய்வுக்கட்டுரைகளின் தராதரம் முதலியன: நிறைவாக புதியத் தலைவர், சுப்பராயலு பேசும் பொழுது, “நான் ஒவ்வொரு அறையாகச் சென்று, 20-30 நிமிடங்கள் உட்கார்ந்து, ஆய்வுக்கட்டுரை வாசிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆய்வுக்கட்டுரை வாசிப்பவர்களுக்கும், அறையில் இருந்து கேட்பவர்களுக்கும்;  நிர்வகிக்கும் தலைவருக்கும் ஆய்வுக்கட்டுரை வாசிப்பவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல இருந்தது. அறையில் இருந்து கேட்பவர்கள், ஆய்வுக்கட்டுரை வாசிப்பதைக் கேட்காமல், கவனிக்காமல் தமக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அதே போல, நிர்வகிக்கும் தலைவரைச் சுற்றி ஐந்தாறு பேர் சுற்றி நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். ஆய்வுக்கட்டுரை வாசிப்பவரும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. யாரும் எந்த கேள்வியையும் கேட்கவில்லை, உரையாடல் இல்லை. படித்துமுடித்தவுடன், சான்றிதழை வாங்கிக் கொண்டு, அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். கட்டுரைகளின் தரமும் நன்றாக இல்லை…..இந்நிலை மாறவேண்டும். ஆராய்ச்சித் திறன் வளரவேண்டும்………..சரித்திரம் படிப்பவர்களுக்கு வேலைக் கிடைப்பதில்லை என்பதில்லை. இஞ்சினியரிங் படித்தவர்களுக்கும் சரியான, முறையான வேலைக் கிடைப்ப்தில்லை. குறைந்த சம்பளத்திற்கு, சம்பந்தம் இல்லாத வேலையை செய்து வருகிறார்கள். எனவே, தமது திறமையை உயர்த்திக் கொண்டால் தான் முன்னேறமுடியும்….,.” என்றெல்லாம் நிலைமையை எடுத்துக் காட்டினார். இதனை நிர்வாகிகள் மற்றவர்கள் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாட்டு பிரச்சினைகள்: 40வது மாநாட்டிலேயே (சிதம்பரம்) உணவு சரியில்லை, மற்ற ஏற்பாடுகளும் உரிய முறையில் செய்யப்படவில்லை: என்றெல்லாம் குறிப்பிட்டப் பட்டது[1]. 41வது மாநாட்டிலோ, அதைவிட படுமோசமாக உணவு இருந்தது. நிர்வாகிகள் ஒன்றையும் கற்றுக் கொண்டதாக, வருத்தப் பட்டதாக, மாறியதாகத் தெரியவில்லை. “History repeats” என்பது போல அதை விட மோசமாக நடந்துள்ளது. மாநாட்டில் வரலாற்று அறிஞர்கள் சமூக அறிவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஆயிரத்து 1600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். என்று கல்லூரி நிர்வாகத்தினரே ஒப்புக் கொண்டனர். அதாவது, சுமார் ரூ 32 லட்சம் வசூலாகி உள்ளது. முதல் நாளில் 800, இரண்டாம் நாள் 1200 மற்றும் மூன்றாம் நாள் 1600 என்று பதிவுசெய்யப் பட்டதாகக் கூறிக் கொள்கின்றனர். இதைத் தவிர மற்ற நிதியுதவிகளும் உள்ளன. அப்படியென்றால், உடனடியாக அறிந்து சரிசெய்திருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை. இதிலிருந்தே, அவர்கள் வேண்டுமென்றே செய்தது போலிருக்கிறது.  ஒரு முறை தெரியவில்லை, எதிர்பார்க்கவில்லை, அதனால், அப்படி நடந்து விட்டது என்றால் சரி ஆனால், திரும்ப-திரும்ப மூன்று வேளையும் அப்படியே நடக்கின்றது-நடந்தது என்றால் என்னத்தைச்சொல்வது. முடியவில்லை என்றால் கூட்டத்தை சேர்க்கக் கூடாது. உணவு, மிக சாதாரணமாக இருந்தது, தினம் தயிர்சாதம் என்று மோர்சாதத்தை விட மோசமாக, வெறும் சாதம் கொடுக்கப் பட்டது.

உணவு இல்லை, கொடுத்ததும் தரமாக இல்லை: ஒரே ஒரு உணவு வகைதான் மூன்று வேளைகளுக்கும் கொடுக்கப் பட்டது. தயிரே காணப் படாத தயிர்சாதம், உப்புமா, இட்லி, ஊத்தப்பம், சாம்பார்-சாதம் என்று அவையே பரிமாறப் பட்டது. முதல் நாளிலிருந்தே, அனைவருக்கும் உணவு கிடைக்கவில்லை. இட்லி புளிப்பாக, ஒல்லியாக தட்டையாக இருந்தது, சட்னி இல்லை, சாம்பார் குறைவாகவே ஊற்றப் பட்டது. இரவு சாப்பாடும் சிக்கனமாகவே செய்யப் பட்டது என்று எடுத்துக் காட்டினர்.  உணவுப் பெறுவதற்குக் கூட நெரிசல் ஏற்பட்டது. மற்றவர்களின் தலைகளுக்கு மேலாக தட்டுகளைக் நீட்டிக் கொண்டு, கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். காலியான பாத்திரங்கள் முன்பாக நின்று கொண்டு மற்றவர்கள் தவித்தனர். அருகில் எந்த ஒட்டலும் இல்லை, இதனால், பலர் தத்தம் தகுமிடங்களுக்குச் சென்று, அருகில் கிடைப்பதை வாங்கி உண்ணும் நிலை ஏற்பட்டது. அவர்களால் முடியவில்லை என்றால், இவ்வாறு ஆயிரக் கணக்கில் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தொடர்ந்து அவ்வாறு செய்கின்றனர் என்றால் என்ன அர்த்தம், மர்மம், அதன் பின்னணி என்ன என்று தெரியவில்லை. கோவில்களில் கூட கொடுக்கும் பிரசாதம் நன்றாக இருக்கும்.

பொறுப்புள்ளவர்கள் நிலைமையை மாற்ற வேண்டும்: ஓய்வு பெற்ற சரித்திர ஆசிரியர்கள், பேராசிரியர்கள், முதலியோர் தனியாக ஒரு சங்கத்தை வைத்து நடத்திக் கொள்ளலாம். ஆனால், சரித்திரம் பயிலும் மாணவ-மாணவியரை இணைத்து, ஆய்வுக் கட்டுரை படிக்கலாம், பதிப்பிக்கலாம் என்ற ஒரே தூண்டுதல், கவர்ச்சி மற்றும் தேவையை வைத்துக் கொண்டு, அவர்களை வரவழைத்து, உறுப்பினர்கள் ஆக்கி, சான்றிதழ் கொடுக்கிறேன், ஆய்வுக் கோவை புத்தகத்தில் வெளியிடுகிறோம் என்ற ஆசையைக் காட்டி கூட்டத்தைச் சேர்க்கின்றனர். ஆங்கிலம் தெரியாமல், பார்த்துப் படிக்கக் கூட முடியாமல்……………….தவிக்கும் மாணவ-மாணவியர் கட்டுரை வாசிப்பது விசித்திரமாக, திகைப்பாக, வருத்தமாக இருக்கிறது. சுப்பராயலு இதனை வெளிப்படையாகவே எடுத்துக் காட்டி விட்டார். இவ்வாறு படிப்பு, ஆராய்ச்சி, சரித்திர ஆராய்ச்சி, ஆராய்ச்சித் திறன், சரித்திர வரைவியல் முறை, என்று செல்லாமல், சந்தர்ப்பவாதம் மற்றும் இதர காரணங்களை வைத்துக் கொன்டு அடத்தப் படும், இத்தகைய கூட்டங்களுக்கு நாளடைவில் வரவேர்பு குறைந்து விடும். சரித்திரம், சரித்திர பாடம் மீதுள்ள மரியாதையும், மதிப்பும், ஆர்வமும், ஏன் முக்கியத்துவமும் போய் விடும். எனவே, பொறுப்புள்ளவர்கள் உன்னிப்பாகக் கவனித்து தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.

© வேதபிரகாஷ்

29-08-2022


[1] வேதபிரகாஷ், தென்னிந்தியவரலாற்று பேரவையின் (South Indian History Congress, SIHC) 40வது ஆண்டு மாநாடு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த விவரங்கள்!, பிப்ரவரி 2, 2020.

தமிழ் புத்தாண்டு – திராவிடத்துவம், மொழி-காமம், அரசியல் மற்றும் வானவியல் உண்மைகள்! [2]

ஏப்ரல் 14, 2020

தமிழ் புத்தாண்டுதிராவிடத்துவம், மொழிகாமம், அரசியல் மற்றும் வானவியல் உண்மைகள்! [2]

Karunanidhi letter refuting Jayalalita, Murasoli 22-04-2012-1

ஏப்ரல் 22, 2012 – கருணாநிதியின் பெரிய விளக்கம்[1]: முரசொலியில், மூன்று பக்கங்களுக்கு வரிந்து கட்டி எழுதிய கருணாநிதி கடிதத்தில், இந்த வரிகள் கவனத்தை ஈர்த்தன, “மேலும் கடந்த இரண்டு நாட்களாக நமதுவிடுதலைநாளிதழில் அமெரிக்காவில் நாசா விண் மையத்தில் பணியாற்றும் பிரபல விஞ்ஞானி முனைவர் நா. கணேசன் அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையில்  இந்தப் பொருள் பற்றி விரிவான விளக்கங்களையும், எந்தெந்தப் புலவர்கள், தமிழறிஞர்கள் கடந்த காலத்தில்  தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தெரிவித்தார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளதுஇந்தப் புலவர் பெருமக்கள் எல்லாம் தெரிவித்த யோசனைகளின் அடிப்படையிலே தான் –  எந்த ஆண்டு அந்த யோசனை தெரிவிக்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மை அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதால்  2008இல் நான் இவற்றையெல்லாம் அறிந்து ஆய்ந்த பிறகு முடிவெடுத்து  அறிவித்தேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.” இந்த நாக.கணேசன் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு விவரங்களைக் கொடுத்து உதவுபவர். மு. தெய்வநாயகம், ஜி.ஜே.சாமுவேல் போன்றோரின் நண்பர்[2].

Karunanidhi letter refuting Jayalalita, Murasoli 22-04-2012-2

தமிழ்ப் புத்தாண்டு குறித்து முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்தது[3][september 2012]: இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயராகும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லை.  ஒரு தேவநாள் என்பது ஒரு மானிட ஆண்டு என்றும், அந்த தேவநாளின் பகற்பொழுதின் தொடக்கமே தை முதல் நாள் என்றும் அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படுகிறது எனவும் ஆகமங்களில் இருந்து அறிய முடிவதாக பிருகுசங்கிதை எனும் நூல் கூறுகிறது.  மேலும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி மூன்றாம் பாகத்தில் தை என்பதற்கு பொருள் கூறப்பட்டுள்ளது. தை என்பதற்குப் பொருளாக தமிழாண்டின் தொடக்க மாதம் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க மாதம் என்றுள்ளது. மேலும், அங்கேயே சுறவ மாதமே தமிழாண்டின் தொடக்கம் என அச்சிடப்பட்டுள்ளது.  திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை. இதனாலேயே தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திட திமுக அரசு முடிவு செய்தது. தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்காத நிலையில் திருவள்ளுவர் ஆண்டினை அதிமுக அரசு என்ன செய்யப் போகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்[4].

Karunanidhi letter refuting Jayalalita, Murasoli 22-04-2012-3

2020லும் உண்மைகள மறைத்து துவேசத்தை வளர்க்கும் போக்கு: இப்பொழுது 2020 ஆண்டு நடக்கிறது, ஆனால், அந்த திராவிடத்துவ ஊளைகளின் ஓசைக் கேட்கத்தான் செய்கிறது. பழைய விசயங்களை மறைத்து, மறுபடியும் மக்களிடம் மொழி ரீதியில் பிளவு, வெறுப்பு, காழ்ப்பு, துவேசம் முதலியவற்றைத் தூண்டும் முறையில் சமூக ஊடகங்களில் வேலை செய்து வருகின்றனர். இப்பொழுது, சமூக ஊடகங்கள் இந்த குழப்பங்களை செய்து வருகின்றன. இப்பொழுது “தமிழ்” என்ற முகமூடி அத்தகைய பிரச்சாரங்களில் உபயோகப் படுத்தப் படுகின்றன. வழக்கம் போல, பிராமணர் வெறுப்பு, பார்ப்பனக் காழ்ப்பு, சமஸ்கிருத துவேசம் எல்லாம் இருக்கின்றன, தொடர்கின்றன. இருப்பினும், கடந்த 12 ஆண்டுகளில் எந்த ஆராய்ச்சியும் செய்ததாகத் தெரியவில்லை. இருக்கின்ற விவரங்களை வைத்துக் கொண்டு, கூகுள் படங்களை சேர்த்துக் கொண்டு, ஒரே வார்தத்தில், எல்லாமே தமிழ் தான். தமிழிலிருந்து தான், சமஸ்கிருத எழுத்தாளர்கள் காப்பி அடித்தார்கள் என்று வாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற படி எந்த ஆதாரங்களியும் கொடுப்பதில்லை.

Ilangovan, Naga.Ganesan, Santhosam, Prajapati, Kumari Ananthan

தமிழில் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்ப நூல்கள் இருந்தனவா?: தழிழர்களின் கணிதம், கணித சாஸ்திரம், வானியல், வானியல் சாஸ்திரம், பேரண்டவியல், முதலியவைப் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் சிதறிக் கிடக்கின்றனவே தவிர, தனியாக நூல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இருப்பினும், பல்லவர் காலத்து கல்வெட்டுகளில் பலவித சாஸ்திரங்கள் இருந்தது தெரிகிறது. கோவில், கோவில்கட்டுமானம், அமைப்பு, முதலியவை, அதற்குப் பின்னுள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பங்களைக் காட்டுகின்றன. மற்ற மாநிலங்களைப் போல அத்தகைய நூல்கள் சமஸ்கிருதத்தில் இருதிருக்கக் கூடும், பிறகு தமிழில் இருந்திருக்கக் கூடும். ஏனெனில், சில குறிப்பிட்ட நூல்கள், 18-19ம் நூற்றாண்டுகளைச் சேந்ததாகத் தெரிகின்றன. நவீன காலத்தில், தனித்தமிழ் இயக்கம் தோன்றியபோது, தமிழைத் தனியாக எடுத்துக் காட்ட வேண்டும் என்ற நிலையில், “புத்தாண்டு,” என்ற கொள்கையைக் குழப்ப, மொழிவெறி வித்தகர்கள் முயன்றனர். மொழியின் மீதான காமம் அதிகமான போது, எல்லாமே தமிழ் என்ற நிலையில், ஒத்தாண்டையும் தனிமைப் படுத்த முயன்றனர். இதனால், சூரியன் ராசி மண்டலத்தில் புகும் போதான சந்திகளை “சங்கராந்தி” என்றறிந்து, அவற்றை குறிப்பிட்டு அழைத்தனர்.

60 years cycle

60 years cycle

சூரியன் ராசிமண்டலத்தில் நுழைவது 12 மாதங்கள் கணக்கீடு: சூரியன் ராசிமண்டலத்தில் நுழைவது மற்றும் வெளிவருவதை வைத்து, அத்தினத்தை விசேஷ தினமாகக் கொண்டாடுகின்றனர்.

சந்திரமாதத் தேதி / நாள் சங்கராந்தி பண்டிகை
14 January – Pongal, Makar Sankranti மகரம் பொங்கல்
12 February – Kumbha Sankranti கும்ப கும்பமேளா
14 March –  Meena Sankranti மீனம் நீர்நிலைகளுக்கு பூஜை
14 April –  Solar New Year, Mesha Sankranti மேஷம் சூரிய வருட ஆரம்பம்
14 May –  Vrishabha Sankranti ரிஷபம் சிவனுக்குரியது
15 June –  Mithuna Sankranti மிதுனம் மழை ஆரம்பம்
16 July (Sunday) Karka Sankranti கடகம் தக்ஷிணாயனம் ஆரம்பம்
17 August –  Simha Sankranti சிம்மம் செழுமை
17 September –  Kanya Sankranti, Vishwakarma Puja கன்னி விஸ்வகர்ம ஜெயந்தி / மஹாலயம்
17 October – Tula Sankranti துலாம் நிறைவான / திருப்திகரமான மாதம்
16 November – Vrischika Sankranti விருச்சிகம் கார்த்திகை
16 December  – Dhanu Sankranti தனுசு முதல் சூரிய மாத துவக்கம், உத்தராயணம்

சந்திரமாதம் முதலில் பின்பற்றப் பட்டது. பிறகு சூரியமாதம் வழக்கில் வந்தது. பிறகு, இரண்டையும் . “சௌர்ய-சந்திர” சேர்த்த போது, குழப்பங்கள் வந்தன. அதிகமாதம் சேர்ப்பு வந்தது. அந்நிலையில் தான், இவ்வருடம் யுகாதி கணக்கு படி சைத்ரமாதம் 25-03-2020 அன்றே ஆரம்பித்து 24-04-2020 அன்று முடிந்து, வைசாக மாதம் ஆரம்பிக்கிறது. ஆகவே வானியல், வானவியல் ரீதியில் அணுக வேண்டியதை மொழிப் பற்று, மொழிகாமம் என்ற ரீதியில், மொழிவெறியாக்கு, திரிபு விளக்கங்களினால் எதையும் மெய்ப்பிக்க முடியாது.

© வேதபிரகாஷ்

14-04-2020

60 years samvatsara

60 years samvatsara

[1] முரசொலி, தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012. மூன்று பக்கங்களில் வெளியானது.

[2] மே 2017, 17-19 தேதிகளில் ஸ்காட் கிருத்துவ கல்லூரியில் நடைபெற்ற அனைத்துலக திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

[3] தினமணி, தமிழ்ப் புத்தாண்டு எப்போது? கருணாநிதி விளக்கம், Published on : 20th September 2012 04:08 AM

[4]https://www.dinamani.com/tamilnadu/2012/apr/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-484331.html

தமிழ் புத்தாண்டு – திராவிடத்துவம், மொழி-காமம், அரசியல் மற்றும் வானவியல் உண்மைகள்! [1]

ஏப்ரல் 14, 2020

தமிழ் புத்தாண்டுதிராவிடத்துவம், மொழிகாமம், அரசியல் மற்றும் வானவியல் உண்மைகள்! [1]

Karunanidhi changed Tamil News year Thuglak

1969லிருந்து 2008 வரை தைக்காகக் குதிக்கவில்லை:  1969லிருந்து 2008 வரை திராவிட கட்சிகளுக்கு, திராவிடத்துவ வாதிகளுக்கு, இந்த “புத்தாண்டு” உணர்வு இல்லாமல் போனது வியப்பாக இருந்தது. ஆட்சியில் திராவிட கட்சியினர் தான் இருந்தனர். அண்ணாதுரைக்குப் பின்னர், கருணாநிதி தான் முதலமைச்சராக இருந்தார். நடுவில் எம்.ஜி.ஆர் ஆண்டாலும், இவரது தாக்கம் அலாதியானது. ஆகவே, மறுபடி-மறுபடி ஆட்சிக்கு வந்த் போது, சுலபமாக, தைமாதத்தில் தான், புத்தாண்டு வருகின்றனது என்று அடித்து சொல்லிருக்கலாம். சுலபமாக மாற்றி இருக்கலாம். ஆனால், சாதாரணன், சௌமியன் என்று கவிதை பாடிக் கொண்டிருந்த போது மறந்து விட்டனரோ, அல்லது கம்பரசத்தில் மூழ்கி மயங்கி விட்டனரோ என்று தெரியவில்லை. மார்பங்களில் மச்சங்கள் பார்த்து, நாடாவை அவிழ்க்கவா என்றெல்லாம் வசனம் பேசிக் கொண்டிருந்ததால், இதெல்லாம் பெரிதாகப் படவில்லை போலும்.

Karunanidhi enjoys 60 cycle yeas in 1970- Murasoli

14.04.1970 அன்று ஶ்ரீரங்கத்தில் நடந்த கவியரங்கம்[1]: இச்செய்தி முரசொலியில் வந்துள்ளது, “14.04.1970 அன்று நடந்த சாதரண ஆண்டு சித்திரைத் திருநாள் கவியரங்கம். அங்கு கவி பாடுகிறார். அதில் என்ன நுணுக்கமெல்லாம் வந்து விழுகிறது பாருங்கள். தமிழ் வருடம் என்று அவர்கள் சொல்லுகிற 60 ஆண்டுச் சுழற்சியில். சௌமிய என்ற பெயருடைய ஒரு ஆண்டு அதற்கு அடுத்த ஆண்டின் பெயர் சாதாரண ஆண்டு அண்ணா பிறந்த 1909ம் ஆண்டு சௌமிய ஆண்டு. அதனால் சௌமியன் என்ற புனை பெயரிலும் அண்ணா எழுதி வந்தார். அதையெல் லாம் நான்கு வரிகளுக்குள் அடக்கி விடுகிறார் கலைஞர். கவி வரிகளைக் கவனியுங்கள், “சித்திரைத் திங்களிலே சிரிக்கின்ற செழுமை கண்டோம் பெருமை கொண்டோம் சௌமியதான் சென்ற ஆண்டு நம் சௌமியனைத் தமிழுக்குத் தந்த ஆண்டு சௌமியாவை அண்ணனுமே புனைப் பெயராய்ப் பூண்டு சுவை சொட்டக் கதை குவித்துப் போனார்மாண்டு சௌமிய மறைந்து சாதாரண வந்தது போல அந்த சௌமியன் மறைந்து இந்தச் சாதாரணன் வந்துள்ளேன், என்கிறார்”. அந்த நாரதர்-நாரதி பெற்ற 60 அசிங்க சுழற்சி வருடங்களை வெறுத்திருந்தால், இக்கவிதை வந்திருக்குமோ?

Why Karunanidhi changed Tamil News year - news cutting-1

கருணாநிதி 28-01-2008 அன்று கொண்டு வந்த சட்டத்தை, ஜெயலலிதா, 23-08-2011 அன்று மாற்றினார் பழையபடி வைத்தார்: நீதிமன்றம் வரை சென்ற சமச்சீர் கல்வித் திட்டம் தவிர, திமுக ஆட்சியில் அறிமுகமான பெரும்பாலான திட்டங்களை ரத்து செய்துவிட்ட புதிய அதிமுக அரசு, 3 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் கருணாநிதி தைத் திங்கள் முதல் நாளை புத்தாண்டாக அறிவித்த சட்டத்தையும் இப்போது ரத்து செய்துவிட்டது[2]. அதற்கான மசோதாவினை இன்று செவ்வாய்க் கிழமை சட்டமன்றத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் அறிமுகப்படுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் விவாதத்திற்குப் பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது[3]. விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதா ‘தைத் திங்களில் புத்தாண்டு துவங்க எவ்வித ஆதாரமுமில்லை, மாறாக சித்திரையில் தொடங்கவே பல்வேறு ஆதாரங்கள் உண்டு, இந்நிலையில் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்தினை ரத்து செய்ய, பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்றே முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, ஜெயலலிதா வழக்கம் போல் ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுகிறார், தமிழ் புலவர்களின் கோரிக்கையின்படியே தை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. 1921ல் மறைமலை அடிகளார் தலைமையில் 500 புலவர்கள் இது தொடர்பில் கோரிககை வைத்திருந்தனர் என்றும் நினைவு கூர்ந்திருக்கிறார்.

Why Karunanidhi changed Tamil News year - news cutting-2

முதல்வர் ஜெயலலிதா விளக்கம் [ஏப்ரல் 2012]: சித்திரை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு ஏன் அறிவித்தது என்று முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 13, 2012 அன்று விளக்கம் அளித்தார். சித்திரை மாத துவக்கம் தான் தமிழ்புத்தாண்டின் துவக்கம் என்பதற்கான இலக்கியங்களை மேற்கோள் காட்டி, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் புகார்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்[4]. சென்னை பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 13, 2012 அன்று நடந்த தமிழ்ப் புத்தாண்டு தொடக்க விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை திருநாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். அதற்கான காரணங்கள் பல உள்ளன. சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையிலே பெயர்கள் வழங்கப்படுகின்றன”.

Tiruppananthal supported Jeyalalita April, 2012

இலக்கிய ஆதாரங்கள்: ஜெயலலிதா தொடர்ந்தார், “சித்திரையே வா நம் வாழ்வில் முத்திரை பதிக்க வாஎன்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தினால், சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டுக்குரிய பொருத்தமான நாள் என மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார். சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அகத்தியரின், “பன்னாயிரத்தில்பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. “திண்ணிலை, மருப்பின் ஆடுதலைஎன்று நக்கீரர் கூறியிருக்கிறார். இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்துள்ளார், முனைவர் ராசமாணிக்கனார். புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம்
கொடுத்துள்ளார் கமலை ஞானப்பிரகாசர். நாமக்கல் கவிஞரும், “சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்என்ற தன் வாழ்த்துப் பாடலின் மூலம் தமிழ்ப்பண்பாட்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத்தெரிவித்துள்ளார். கோடைக்காலமே முதலாவது பருவம் என, சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது”.

Jayalalita responded to Karunanidhi April 2012. DM

கருணாநிதியே ஏற்பு: ஜெயலலிதா தொடர்ந்தார், “தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் நாள்என்று திடீரென அறிவித்த கருணாநிதியே, “சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படும்என்று, தமிழ்ப் புத்தாண்டுக்கு பல முறை வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில், காவல் துறை குறித்த ஒரு வினாவிற்கு, 1990ம் ஆண்டில், பதிலளிக்கும்போது, சில காவல் அலுவலகங்கள் சித்திரை முதல் நாள் அமைய விருக்கின்றன, என்று பதில் அளித்தார். கைதிகளின் தண்டனை காலத்தைக் குறைப்பது குறித்து, 1990ம் ஆண்டு சட்டப்பேரவை விதி, 110ன்கீழ் அறிக்கை அளிக்கும் போது, “தமிழ்ப் புத்தாண்டு அன்று விடுதலை செய்யப்படுவர்என்று தெரிவித்துள்ளார். அதாவது, சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த, 1935ம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பது எளிதில் பெறப்படும். கிறிஸ்துபிறப்பிற்கு, 30 ஆண்டுகளுக்கு முன், திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்துகண்ட முடிவாகும் என்று மறைமலை அடிகளார் கூறியதாக, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில், சிறுவை நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்

Karunanidhi responded to Jayalalita 2012.DM

விளக்கம்: உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது, தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று ஒட்டுமொத்த எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டு உள்ள உண்மை என்று பொத்தாம் பொதுவாகக்கூறி, தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக, சட்டத்தின் மூலம் கருணாநிதி மாற்றியமைத்தார். யார் கேட்டார் இந்தச் சட்டத்தை; இதனால் மக்களுக்கு என்ன பயன்? இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான காரணத்தை, பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நன்மாறன் கேட்டதற்கு, கருணாநிதி தெளிவுபடுத்தவில்லை.

Karunanidhi responded to Jayalalita 2012
விளம்பர உத்தி:  ஜெயலலிதா தொடர்ந்தார், “தமிழ்ப்புத்தாண்டை மாற்ற எடுத்த நடவடிக்கை தமிழை வளர்க்கவோ, தமிழுக்குச் சிறப்பு சேர்க்கவோ எடுத்த நடவடிக்கை என, எவரும் ஒப்புக் கொள்ளவில்லை. இது போன்ற நடவடிக்கை வியாபார, விளம்பர உத்தி. கருணாநிதி சொல்வதைப் போன்று, தமிழ் அறிஞர்கள் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தால், அண்ணாத்துரை நிறைவேற்றி இருப்பார்; ஏன் கருணாநிதி கூட நிறைவேற்றி இருப்பார். தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் மீது தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம். அதை தமிழர்கள் விரும்பவில்லை; எனவே அதை தமிழக அரசு மாற்றியது”, என்றார்[5]. சென்ற வருடமே இதற்கான மசோதா கொண்டு வந்து, நிறைவேற்றி சட்டமாக்கினர்.

© வேதபிரகாஷ்

14-04-2020

Narada myth used for time reckoning

Narada myth used for time reckoning

[1] முரசொலி 75 சிறப்பிதழ், https://www.murasoli.in/details.php?news_id=1385

[2] பிபிசி.தமிழ், தமிழ் புத்தாண்டு மீண்டும் சித்திரையில்‘- ஜெ.23 ஆகஸ்ட் 2011

https://www.bbc.com/tamil/india/2011/08/110823_newyeartamil

[3] https://www.bbc.com/tamil/india/2011/08/110823_newyeartamil

[4] தினமலர், தமிழ் புத்தாண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் ஜெயலலிதா பதிலடி: கருணாநிதிக்கு கேள்வி, Updated : ஏப் 15, 2012 00:17 | Added : ஏப் 13, 2012 23:20

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=447682&Print=1

தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள் (4)

மார்ச் 21, 2016

தமிழில் சரித்திர நூல்கள்வரலாற்று நோக்கில் ஓரு பார்வைஇடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள் (4)

வேதபிரகாஷ்

இடைக்கால சரித்திர நூற்கள்

இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள்: பதிற்றுப்பத்தில் சேர மன்னர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. ஆனால், அதிலும், முதல் பத்து மற்றும் பத்தாம் பத்து பாட்டுகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் கிடைக்கவில்லை. ஐப்பெரும்காப்பியங்களில் வளையாதி, குண்டலகேசி போன்ற நூற்கள் காணப்படவில்லை. ஓலைச்சுவடிகளில் பல சரித்திரப் புத்தகங்கள் இருந்தன. அவை பெரும்பாலும் ஐரோப்பிய கிருத்துவ மிஷினரிகள், ஆட்சியாளர்கள் முதலியோர் எடுத்துச் சென்று விட்டனர். இடைக்காலத்தில் கவிதையாக இருந்தாலும், வரையப்பட்ட வரலாற்று நூல்கள் என்ற நிலையில் கீழ்கண்டவைக் காணப்படுகின்றன:

  1. கலிங்கத்துப் பரணி
  2. விக்கிரமசோழனுலா
  3. வீரசோழியம்
  4. தண்டியலங்காரம்
  5. நந்திகலம்பகம்
  6. பின்பழகிய ஜீயர் குருபரம்பராபிரபவம்
  7. கோயிலொழுகு
  8. சோழன் பூர்வ பட்டையம்[1] (17-18ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது)
  9. சுந்தர பாண்டியம்[2]
  10. பாண்டியசரித்திரம் (436, 437)[3]
  11. கேரளவுற்பத்தி (392) –
  12. குலோத்துங்கன் சோழனுலா (273)
  13. கிரீகருணர்சரித்திரம் (399, 400,401, 402)
  14. சிவமதமடாதிபகள் சரித்திரம் (404, 404)
  15. தமிழ் நாவலர் சரித்திரம் (355)
  16. ஆழ்வார்கள் சரித்திரம் (1987)
  17. குருபரம்பராக்ரமம் (1109, 1110)
  18. குருபரம்பராப்ரபாவம் (1111, 1112, 1113, 1114, 1115, 1116,1117)

ஓலைச்சுவடி நூல்களில் கூட எழுதிய தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பஞ்சாங்கம் என்ற முறையில் யுகம், வருடம், மாதம், தேதி, நாள், நட்சத்திரம் முதலியவைக் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. தமிழில் இவற்றை பதிவு செய்யும் போது, நேரம், காலம், இடம் முதலியவற்றை நன்றாக அறிந்துதான் அவற்றைப் பதிவு செய்துள்ளார்கள்.

History palm leave book in Tamil

ஓலைச்சுவடி சகாப்தம் குறிப்பிட்டுள்ளது நடப்பு ஆண்டு வரிசை எண் இருக்குமிடம்
குலோத்துங்கன் கோவை சித்திரபானு வருடம்,

கார்த்திகை மாதம்,

21ம் தேதி, பூச நட்சத்திரம், மங்கள வாரம், பஞ்சமி அன்று வெங்கடாசல முதலியார் எழுதியது

223, ப.180 A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Lubrary, Madras, 1912
விஷ்ணுபுராணவசனம் சாலிவாகன சகம் 1726, கலியுகாத்தம் 4904 1803 465, ப.432
கேரளவுற்பத்தி கலி 3446 குறிப்பிடப்பட்டுள்ளது 345 392, ப,352
பரத்தையர் மாலை பராபர வருடம், சித்திரை மாதம், 3ம் தேதி எழுதி  முடிக்கப்பட்டது.. 191, ப.152
பழனிக்காதல் பிலவங்க வருடம்,

மாசி, சனிவாரம்

அவிட்ட நட்சத்திரம்

திருவரங்க அந்தாதி பிலவ, புரட்டாதி

முதல் தேதி

256, ப.212
திருவாவினன்குடிப் பதிற்றுப்பத்தந்தாதி கீலக, தை, 21, சுக்ர,

உத்தராட

உதாரணத்திற்காக இவை கொடுக்கப் பட்டுள்ளன. இவைத்தவிர, நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், வானவியல் மூலமாக, இத்தேதிகளை கண்டறிதல் போன்றவற்றில் தமிழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுவதில்லை. உடனே அவற்றை “பழப்பஞ்சாங்கம்” என்று சொல்லி ஒதுக்கிவிடுகின்றனர். பிறகு எப்படி சரித்திரம் அறிய முடியும்?

Aihole inscription mentioning the date of Mahbharat 3102 BCE-with text

மேனாட்டவர்கள் எடுத்துச் சென்ற ஓலைச்சுவடி புத்தகங்கள்: காலெனல் மெக்கன்ஸி என்பவன் பெரும்பாலான மூல ஓலைச் சுவடி நூல்களை எடுத்துச் சென்றான். பிறகு, காகிதத்தில் எழுதப்பட்ட பிரதிகள், இரண்டிற்கும் மேலாக உள்ள ஓலைச்சுவடிகள் என்ற நிலையில், சென்னை நூலகத்திற்குக் கொடுக்கப்பட்டது. பலமுறை அவை இந்தியாவிலிருந்து லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, திரும்பியதால், சேதமடைந்த நிலை, முதலில்-ஆரம்பத்தில், நடுவில் சில ஓலைச் சுவடிகள் காணாமல் போன நிலைகளுடன் தான் உள்ளன. பெஸ்கி போன்ற பாதிரிகள் தமிழ் நூல்களை அபகரித்து எரித்துள்ளனர். முகமதியர்களும், முகமது நபி, கதீஜா  பற்றிய பிள்ளைத்தமிழ், உலா போன்ற நூல்களை மறைத்துள்ளனர். இஸ்லாத்திற்கு ஒவ்வாதது என்று அழித்துள்ளனர். இவர்கள் தங்களது குற்றங்களை மறைக்க, ஆற்றுபெருக்கில் ஓலைச்சுவடி நூற்களை போட்டு விட்டார்கள், பலவற்றை அழித்து விட்டார்கள் என்றேல்லாம் கதைகட்டி விட்டனர். ஆனால், நிச்சயமாக, ஒவ்வொரு குருகுலத்திலும், மடாலயத்திலும், கோவிலிலும் ஓலைச் சுவடி நூல்கள் லட்சக்கணக்கில் இருந்திருக்கின்றன. அவற்றைத்தான் ஐரோப்பியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர், அவை, கோடிக்கணக்கில், இன்றும் அந்தந்த நாட்டு அருங்காட்சியகங்கள், ஆவணக்காப்பகங்கள் மற்றும் தனிப்பட்டவர்களின் சேகரிப்புகளில் காணப்படுகின்றன.

Copper plate records - history embossed

தாமிரப் பட்டயங்களில் காணப்படும் சரித்திரம்: சரித்திர நூல்கள், புத்தகங்கள் என்றால் காகிதத்தில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவில் நெடுங்காலத்திற்கு அழியாமல் எப்படி அறிவை, ஞானத்தைப் பாதுகாத்து வைப்பது என்ற முறையைக் கண்டுபிடித்து அதற்கேற்றபடி, பல ஊடகங்களை உபயோகப் படுத்தி வந்துள்ளார்கள். மரப்பட்டை, இலைகள், ஓலைகள், துணி மட்டுமல்லாது கல், உலோகம் முதலியவற்றையும் சரித்திர மூல அவணங்களாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில், சரித்திர விவரங்கள் மட்டுமல்லாது, உலோக தொழிற்நுட்பம், உலோகக்கலவை தயாரிப்புமுறை முதலினவும் அறியப்படுகின்றன. அப்பொருட்களின் பின்னால் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் முதலியவற்றை ஆயும்போது, அவற்றின் சரித்திரம், தொன்மை முதலியனவும்  வெளிப்படுகிறது. அதாவது, தாமிரப்பட்டயங்கள் உள்ளன, ஆனால், அவற்றின் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பத்துறைகளை எடுத்துக் காட்டும் நூற்கள் கிடைக்கப்படவில்லை. அவற்றால் உருவான பொருட்கள் ஆதாரமாக இருக்கும் போது, அந்நூற்கள் இல்லை என்றாகாது, உபயோகப்படுத்திய மக்கள் அறிவற்றவற்றவர்கள் என்றாகாது. அவை அக்காலக்கட்டத்தில் ஆட்சி செய்தவர்கள் எடுத்துச் சென்றிருக்க வேண்டும், சரித்திரத்தை மறைத்திருக்க வேண்டும்.

Nammalwar born tamarind-tree dated to 3102 BCE

கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில்கள், குடவரைகள் சொல்லும் சரித்திரம்: இங்குதான் இந்தியர்களின் தலை சிறந்த சரித்திரம் காக்கும் முறை வெளிப்படுகிறது. காகிதம், மரப்பட்டை, ஓலை முதலியவற்றால் உண்டாக்கப் படும் புத்தகங்கள், ஆவணங்கள் 500-1000 வருடங்களில் அழிந்துவிடும், மறைந்து விடும்.. உலோகத்தினால் செய்யப்படும் தாமிர பட்டயங்கள், நாணயங்கள் முதலியனவும், அதன் மதிப்பிற்காக உருக்கப்படலாம், அழிக்கப்படலாம். ஆனால், கற்களில் உள்ள சரித்திரத்தை அழிக்கமுடியாது அல்லது அழிப்பது கடினமானது. அதனால் தான், இந்தியர்கள் கல்வெட்டுகள், சிற்பங்கள், கோவில்கள், குடவரைகள் முதலியவற்றிலும் சரித்திரத்தை பதிவு செய்து வைத்தார்கள். அங்கும், அவற்றின் பின்னால் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் முதலியவற்றை அறிந்து மற்றவர்கள் வியக்கிறார்கள்.

Alexander was defeated by the Indian King

குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.

[1] C. M. Ramachandra Chettiar, Colan Purvapattaiyam, Government Oriental manuscript Library, Madras, 1950.

[2] T. Chandrasekharan, Sundarapandiyam, Government Oriental manuscript Library, Madras, 1955.

[3]  அடைப்புக் குறிகளில் உள்ள எண்கள், கீழ்கண்ட புத்தகத்திலிருக்கும் வரிசை எண் ஆகும்:

A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Library, Madras, 1912.

[4] அடைப்புக் குறிகளில் உள்ள எண்கள், கீழ்கண்ட புத்தகத்திலிருக்கும் வரிசை எண் மற்றும் பக்க எண் ஆகும்:

A Descriptive catalogue of the Tamil Manuscripts of the Government Oriental Manuscripts Library, Madras, 1912.

மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதி – சரித்திர ரீதியில் ஒரு காலக்கணக்கீடு

ஏப்ரல் 30, 2012

மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதி – சரித்திர ரீதியில் ஒரு காலக்கணக்கீடு

293வது பட்டத்தில் நித்யானந்தா வருகிறார் என்றால், 292 மடாதிபதிகள் இருந்துள்ளனர்கள் என்றாகிறது.

மடங்களில் மடாதிபதிகள் இருந்தத்தை பல்வேறு விதமாகக் குறித்து வைத்துள்ளனர். “குரு பரம்பரை” என்று நூல்கள் உள்ளன. மடங்களில் அவர்களின் சிலைகளே வடிக்கப் பட்டிருக்கும். இறந்தவுடன், மடத்தின் வளகத்தினுள்ளேயே புதைக்கப் படுவதால், சமாதிகளில் சில குறிப்புகள் இருக்கும்.

ஏனெனில், தொடர்ந்து 40-80 ஆண்டுகள் ஆட்சி செய்த மன்னர்களும் உண்டு, பட்டமேற்று சில நாட்களிலேயே காலமாகிவிடுபவர்களும் உண்டு. அதனால், பொதுவாக சரித்திர ஆசிரியர்கள் ஒரு மடாதிபதி / அரசன் ஆட்சிகாலத்தை சுமார் 10 அல்லது 20 வருடங்கள் என்று கொண்டு கணக்கிடுவர்.

ஆகவே, ஒவ்வொருவர் 10 / 20 ஆண்டுகள் பட்டத்தில் இருந்தனர் என்று கொண்டால், மொத்த மடாதிபதிகளின் காலம் 293 x 20 = 5860 அல்லது 293 x 10 = 2910 வருடங்கள் என்றாக இருக்க வேண்டும்.

அதாவது 5860 – 2910 YBP (Years Before Present) வருடங்களுக்கு முன்பு அம்மடம் ஸ்தாபித்ததாக ஆகிறது. சராசரியாக எடுத்துக் கொண்டால் கூட 4300 வருடங்கள் ஆகிறது. ஆகையால் தான் 2500 வருடம் தொன்மையானது என்று மடாதிபதி கூறுகிறார் போலிருக்கிறது.

மடத்தில் அப்படி இருந்த 292 மடாதிபதிகளின் கால அட்டவணை இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படியிருந்தால், சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு அது பெரிய அத்தாட்சியாக இருக்கும்.