கருணாநிதி ரோமிலா தாபர் ஆக பார்க்கிறார், ரோமிலா தாபர் கருணாநிதி ரோமிலா தாபர் ஆக பார்க்கிறார்!
நம்மால் (கருணாநிதியால்) கண்டுபிடிக்கமுடியாததுவேதனைதருகிறது: பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாக கூறப்படும் ராமரின் பிறந்த இடத்தைக் கண்டுபிடித்து விட்டார்களாம். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னகத்தையே ஆட்சி புரிந்து வந்த மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த இடத்தையோ, அவனது உடல் புதைக்கப்பட்ட இடத்தையோ, அதன் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடத்தையோ நம்மால் கண்டுபிடிக்க முடியாதது வேதனை தருகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை[1]: அண்மையில் நடைபெற்ற இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை இணைத்து பார்க்கும்போது, எனக்கு ஒருபக்கம் பிரமிப்பாகவும், பெருமையாகவும் இன்னொரு பக்கம் ஆச்சரியமாகவும் இருக்கிறது.
குப்புசாமி, ராஜம் ஜான், ஜி. எம். ஷா, இவர்கள் எல்லாம் அகழ்வாய்வு நிபுணர்களா?: 20.9.2010 அன்று நாகர்கோவிலில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற எழுச்சிமிகு தி.மு.க. முப்பெரும்விழா நடைபெற்றது. அந்த விழாவில், `தந்தை பெரியார் விருதினை‘ தம்பி வீரபாண்டி ஆறுமுகத்திற்கும்; `அண்ணா விருதினை‘ செ. குப்புசாமிக்கும்; `பாவேந்தர் பாரதிதாசன் விருதினை‘ ராஜம் ஜானுக்கும்; `கலைஞர் விருதினை‘ ஜி. எம். ஷாவிற்கும் வழங்கி; முரசொலி அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு பரிசு–சான்றிதழ், சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நற்சான்று–பணமுடிப்பு–பதக்கம் மற்றும் தி.மு.க. அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு நிதியளித்து; நான் உரையாற்றியபோது:-
லெமூரியாகண்டம் இருந்த பகுதியிலே தா ன்நா ம்இன்றைக்குக் கூடியிருக்கிறோம்: “நான் பேசுகின்ற இந்த இடம் நாகர்கோவில். ஆதித்தமிழன் தோன்றிய இடம். ஏதோ கற்பனையாக சொல்லப்படுவது அல்ல; லெமூரியா கண்டம் இருந்த பகுதியிலேதான் நாம் இன்றைக்குக் கூடியிருக்கிறோம். இந்த லெமூரியாக் கண்டம்தான் மாற்றமடைந்து, கன்னியாகுமரி மாவட்டமாக விளங்கி – இன்றைக்கு “லெமூரியா” என்ற பெயரை உச்சரிக்கின்ற அளவுக்கு நம்முடைய பழம்பெரும் புலவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இவர்களெல்லாம் எடுத்துக்கூறிய அந்த ஆதாரங்களுக்கு விளக்கமாகத் திகழ்கின்ற இந்த நாகர்கோவில் நகரம்!
நாகர் என்றால் நாம்தாம் – திராவிடர்கள் – லெமூரியர்கள்: நாகர் என்றால் வேறு யாருமல்ல – நாகர் என்றால் அது நம்மை குறிப்பிடுவதுதான். நாகர் என்றால் வேறு யாரோ எவரோ என்று யாரும் கருத தேவையில்லை. இனவழி நாகர்க்கு உரிமையான பெரும்பரப்பு, நாகரிக பண்பாட்டின் உறைவிடமாக இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இன்றைக்கும் “நாகர்கோவில்” வட்டாரம் காண்கிறோம். நாகப்பட்டினம், நாகர்கோவில் இவைகளெல்லாம் தமிழர்களுடைய பழம்பெரும் பூமிக்கான அடையாளங்கள்.
லெமூரியா கண்ட நாகரிகத்தின் பரிணாம வளச்சிதான் திராவிட நாகரிகம்: கன்னியாகுமரி உள்ளிட்ட இந்த இடத்தை லெமூரியா கண்டம் என்று அழைத்த அந்த காலத்தில், நாமெல்லாம் தோன்றா விட்டாலும் கூட, நம்முடைய முன்னோர்கள் தோன்றிய இடம்தான் இந்த இடம். அப்படிப்பட்ட முன்னோர்கள் விதைத்த நாகரிகம்தான் கொஞ்சம்கொஞ்சமாக சிறிதுசிறிதாக, படிப்படியாக வளர்ச்சியுற்ற அந்த பரிணாம வளர்ச்சிதான் இன்றைக்கு நாம் அனுபவித்து கொண்டிருக்கின்ற இந்த நாகரிக வளர்ச்சி; அப்படிப்பட்ட பெரும்புகழுக்கும், வரலாற்று சிறப்பிற்கும் உரிய பகுதி இந்த நாகர்கோவில் பகுதி.
ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய மக்களின் சந்ததிகள் நாம்: அப்படிப்பட்ட பழம்பெரும் பூமியில்–வரலாற்று சிறப்புவாய்ந்த பூமியில் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய மக்களின் சந்ததிகள் நாம். நம்முடைய கலாசாரம் தனி கலாசாரம். அதற்கு பெயர்தான் திராவிட கலாசாரம். திராவிட கலாசாரம் என்று சொல்லும்போது, அதிலே என்ன முக்கியமான பொருள் என்றால், ஏதோ இன்னொரு கலாசாரம் இருக்கிறது, அதனால் தான் இதனை திராவிட கலாசாரம் என்று பிரித்துச் சொல்கிறோம் என்ற அந்த வேறுபாட்டை பொதுவிலே உணரக்கூடியவர்கள் உண்டு. ஆரிய கலாசாரத்தை பிரித்துக்காட்ட, நாம் திராவிட கலாசாரத்தை சொல்ல வேண்டியிருக்கிறது.
2000 / 3000 / 5000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய திராவிட பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்: திராவிட கலாசாரத்தில் ஊறி வளர்ந்தவர்கள் நாம். அதனால்தான், இந்த இயக்கத்திற்கு, திராவிட முன்னேற்றக்கழகம் என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றால், திராவிட கலாசாரத்தை வாழ்த்த, திராவிட கலாசாரத்தை போற்ற, திராவிட கலாசாரத்தை வெற்றி கொள்ள செய்ய, நாம் உருவாக்கியிருக்கின்ற கழகத்திற்கு பெயர் தான் திராவிட முன்னேற்றக்கழகம் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அல்லது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய திராவிட பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியை குறிப்பிட்டு காட்டினேன்.
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்தகுடி”: “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்தகுடி” திராவிட இனம் என்பது வாழையடி வாழையாக வரும் மரபு. அதைப்போலவே, தமிழரின் கலை, பண்பாடு, கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இராஜராஜனின் தஞ்சைப் பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா – லட்சோப லட்சம் தமிழ் மக்கள் பங்கேற்க – தஞ்சை மாநகரில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது
சோழர் காலத்தின் அருமை பெருமைகளை எல்லாம் எடுத்துச் சொன்னவர் கருணாநிதி: அந்த விழாவில், நிறைவுரை ஆற்றும்போது, தென்னிந்திய வரலாற்றில் மிகவும் படைப்பாற்றல் நிறைந்த சோழர் காலத்தின் அருமைபெருமைகளை எல்லாம் எடுத்துச்சொல்லி; அவர்கள் கையாண்ட வெளிநாட்டு வாணிகம், கடல் வாணிகம், செய்முறைகள் ஆகியவற்றின் நுணுக்கங்களைபற்றியெல்லாம் விளக்கி உரைத்து, 176 ஆண்டுகள் சோழப்பேரரசு தென்னகத்திலே நிலைத்து வாழ்ந்தது என்பதற்கான ஆதாரங்களை நீலகண்ட சாஸ்திரி, காத்யாயனர் போன்ற ஆய்வாளர்களின் கருத்துகளை எடுத்துவைத்து, நான் ஆற்றிய உரையில்:-
இராஜராஜனுடைய நிர்வாகம் கருணநிதியின் நிர்வாகம் மாதிரி இருந்ததா அல்லது கருணாநிதியின் நிர்வாகம் ராஜராஜன் மாதிரி இருந்ததா?: “இராஜராஜனுடைய நிர்வாகம் அனைத்து மன்னர்களுக்கும் ஒரு உதாரணமாக விளங்கியது. எல்லா எல்லைகளிலும் காவல் படைகள்; சிங்கம்போல் சாம்ராஜ்யத்தை சுற்றி வருவதற்கு மகன் ராஜேந்திரன். புதிதாக வென்ற நாடுகளில் பழைய நம்பிக்கையான அதிகாரிகள். அரசியல் அறிவும், கூர்மதியும் கொண்ட அலுவலாளர்கள் எல்லோரையும் தன்னிடத்திலே வைத்துக்கொள்ளும் சாதுர்யம் பெற்றிருந்தார் ராஜேந்திரன்” – என்று குறிப்பிட்டு; இராஜராஜசோழன் காலத்தில் நிர்வாகத்தில் அறிமுகம் செய்துவைத்த நில அளவை முறை, நீட்டல் அளவை முறை, நிறுத்தல் அளவை முறை, ஊராட்சிக்கான குடவோலை முறை ஆகியவற்றை பற்றியெல்லாம் எடுத்துரைத்தேன். இது ஆயிரம் ஆண்டு காலத்திற்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் சரித்திரம்.
இவையனைத்திற்கும் ஆதாரங்களாக இராஜராஜனே எழுப்பியிருக்கும் தஞ்சை பெரியகோவிலும், பொறித்து வைத்திருக்கும் கல்வெட்டுகளும் நீடித்து நிலைத்திருக்கும் சான்றுகளாக நம் கண்முன்னே காட்சியளிக்கின்றன.
அயோத்தி தீர்ப்பு: 30.9.2010 அன்று அயோத்தி சம்பந்தமான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரித்து, இரண்டு இந்து அமைப்புகளுக்கும், ஒரு முஸ்லிம் அமைப்பிற்கும் சமமாக வழங்கவேண்டு மென்று தீர்ப்பு சொல்லப்பட்டது. நீதிபதி டி.வி.சர்மா என்பவர் தனது தீர்ப்பில், “சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டிடம் எழுப்பப்பட்டது. எந்த வருடம் என்பது நிச்சயமாக தெரியவில்லை. சர்ச்சைக்குரிய இடத்தில் 1949-ம் ஆண்டில் டிசம்பர் 22-ந்தேதி நள்ளிரவில், சிலைகள் வைக்கப்பட்டன. சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் பிறந்த இடமாக கருதி, இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலிருந்தே, அதை புனிதத்தலமாக கருதி, ஆன்மிக பயணம் சென்று வருகிறார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும்: ராமர் கிருதயுகத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். இப்படி கற்பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்குமுன், நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு உறுதியாக வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பை பார்க்கும்போது; சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது;
உயிருள்ளவர்களுக்கு சிலைவைத்தவர்களுக்கு, சமாதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஒப்பாரி; ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து – தென்னகத்தையே கட்டி ஆண்ட மாமன்னன் இராஜராஜசோழன் மறைந்தவிதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கான நினைவுத்தூண் அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது.
திராவிட நாகரிகம் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது: திராவிட இனத்தின் வரலாறு, நிரல்படுத்தி முறையாக எழுதப்படவில்லை என்றாலும்கூட, லெமூரியா கண்டத்தை பற்றிய ஆராய்ச்சி, சிந்துவெளி நாகரிகத்தை பற்றிய ஆராய்ச்சி, தமிழ்மொழியை பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூலமாக, வெளிநாடுகளை சேர்ந்த தொல்லியல் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் திராவிட நாகரிகம் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
திராவிட இனத்தை புறந்தள்ள முயற்சித்த ஆரியநாகரிகம் அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூடநம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாக செயல்பட்டிருக்கிறது: இந்த அடிப்படையில்–நம்முடைய திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்பொழுது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றினை தெளிவாக உலகம் அறிந்துகொள்ளமுடியும். ஆனால், திராவிட இனத்தை புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம் அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூடநம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாக செயல்பட்டிருக்கிறது என்பதை நீ அறிந்துகொண்டால் போதும்”, என்று கூறியுள்ளார் கருணாநிதி.
சுன்னி வக்ஃப் போர்டின் சாட்சிகள் – பிரபல சரித்திர பேராசிரியர்கள்! செக்யூலரிஸம் பேசுபவர்கள் இப்படி முஸ்லீம்களுக்கு சாட்சிகளாக இருப்பார்களா என்பதை இந்தியர்கள் தாம் கவனித்துப் பார்க்க வேண்டும். கருணாநிதி, குல்லா போட்டு கஞ்சி குடித்து, இந்துக்களைப் பற்றி அவதூறு பேசுவதற்கும், இவர்கள் இப்படி சாட்சிகளாக இருப்பதற்கும், ஒன்றும் வித்தியாசம் இல்லை.
“Their Eminences”, who are quoted as witnesses for the Sunni Waqf Board in the courts dealing with the Ayodhya – Babri Masjid case:
(a) – Witness No. 63 – R.S. Sharma – ஆர்.எஸ். சர்மா
(b) – Witness No. 64 – Suraj Bhan – சூரஜ் பான்
(c) – Witness No. 65 – D.N. Jha – டி. என். ஜா
(d) – Witness No. 66 – Romila Thapar – ரோமிலா தாபர்
(e) – Witness No. 70 – Irfan Habib – இர்ஃபான் ஹபீப்
(f) – Witness No. 72 – B.N. Pandey – பி. என். பாண்டே
(g) – Witness No. 95 – K.M. Shrimali – கே. எம். ஸ்ரீமாலி
(h) – Witness No. 99 – Satish Chandra – சதீஸ் சந்திரா.
(i) – Witness No. 102 – Gyanendra Pandey – கியானேந்திர பாண்டே
ஆனால் துரதிருஷ்டமாக, இந்த பேராசிரியர்கள் எல்லாம் பொய் சொல்லி வந்தது, மிகவும் கேவலமாக இருந்தது. இதோ எதிர்பார்த்தபடியே, வந்துவிட்டார், ரோமிலா தாபர்! இனி ரோமிலா தாபர் என்ன கூறியுள்ளார் என்று பார்ப்போம். இவர் ஒரு பிரபலமான சரித்திர ஆசிரியாராக இருந்தாலும், கடந்த 25 வருடங்களாக, முஸ்லீம்களுக்கு சாதகமாக பேசி வருகிறார். முன்பு “இந்துத்வா” தீர்ப்பு என்று சொல்லி, அதற்கு எதிராக அப்பீல் செய்வேன் என்றெல்லாம் “உதார்” விட்டார், ஆனல், அமைதியாக இருந்து விட்டார். இவ்வாறு முரன்பாடுகளுடன், இவர் இருப்பது வியப்பாஅகவே உள்ளது.
அயோத்தி: வரலாற்றை செல்லாக் காசாக்கிய தீர்ப்பு: டாக்டர் ரொமிலா தாப்பர்[2]: “நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அரசியல் ரீதியானதாகும். பல ஆண்டுகளுக்கு முன்பே அரசு எடுத்த முடிவைத்தான் இது பிரதிபலிக்கிறது. நிலம் யாருக்கு சொந்தமானது மற்றும் தகர்க்கப்பட்ட மசூதியின் இடத்தில் புதிய கோவிலைக் கட்டுவது ஆகிய இரண்டின் மீதுதான் இந்தத் தீர்ப்பு கவனம் செலுத்தியுள்ளது. மத அடையாளங்களை தற்கால அரசியலோடு பொருத்திப் பார்க்கும் சிக்கல் உருவாகியுள்ளது.
இந்துக்களின் நம்பிக்கை அடிப்படையில் எழுந்த கோரிக்கையை ஏற்றே இதைத் தெரிவித்துள்ளது. “ஆனால் இது வரலாற்று ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் சித்திரிக்கப்படுகிறது. இது இந்த வழக்கில் இணைக்கப்பட்டாலும், தீர்ப்பின் போது தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. கடவுள்கள் பிறந்ததாகக் கருதப்படும் குறிப்பிட்ட இடத்தில் அந்தக் கடவுளின் நினைவாகக் கோவில் எழுப்ப வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்துக்களின் நம்பிக்கை அடிப்படையில் எழுந்த கோரிக்கையை ஏற்றே இதைத் தெரிவித் துள்ளது”.
நிலத்தின் உரிமையை தீர்மானிப்பது சட்டமா, சரித்திரமா, முஸ்லீம்களா? எந்தவித ஆதாரமும் அந்தக் கோரிக்கைக்கு இல்லாத நிலையில், சட்டத்தை நிலை நாட்டும் நீதிமன்றத்திடமிருந்து இத்தகைய தீர்ப்பை யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். ராமரைக் கடவுளாக இந்துக்கள் வழிபடுகிறார்கள். ஆனால், அவர் பிறந்த இடம், நிலத்திற்கான உரிமை மற்றும் இந்த இடத்தை கையகப்படுத்திக் கொள்ள பெரிய வரலாற்றுச் சின்னத்தைத் தகர்ப்பது[3] ஆகியவற்றிற்கு இந்த நம்பிக்கை உதவ முடியுமா? மசூதியைக் கட்டுவதற்காக 12-ஆம் நூற்றாண்டில் அங்கிருந்த கோவில் தகர்க்கப்பட்டதாக தீர்ப்பு கூறுகிறது[4]. இதனால் புதிய கோவில் கட்டுவதை நியாயப்படுத்தியுள்ளார்கள்.
மறுப்புகளைத் தெரிவித்தால் ஆதாரமாகி விடுமா? “தேசியத் தொல்பொருள் ஆய்வுக்கழகத்தின் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் அதன் அறிக்கைகள் அப்படியே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன[5]. இத்தனைக்கும் இந்த ஆய்வு மற்றும் அறிக்கைகள்மீது அகழ்வாராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்றாய்வாளர்கள் ஆகியோர் ஏராளமான மறுப்புகளைத் தெரிவித்துள்ளனர்[6]. நிபுணத்துவம் தேவைப்படும் இந்த விஷயத்தில், அதிலும் பல நிபுணர்கள் கேள்விக் குறியாக்கிய ஆய்வறிக்கையை, ஒருதரப்புக் கருத்தை அதுவும் அப்படியே ஏற்றுக் கொள்வது தீர்ப்பின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்த உதவவில்லை[7].
கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் வரலாற்றுக் கட்டடங்கள் தான் சர்ச்சைக்குரியதாக உள்ளன: “தான் ஒரு வரலாற்றாய்வாளர் இல்லை என்பதால் வரலாற்று ரீதியான அம்சத்தை அலசிப் பார்க்கவில்லை என்று ஒரு நீதிபதி கூறியுள்ளார்[8]. ஆனால் இந்த வழக்கில் தீர்ப்பு சொல்ல வரலாறு மற்றும் தொல் பொருள் ஆய்வு ஆகிய இரண்டும் அவசியம் (!) என்று தெரிவித்துள்ளார். இவர் இப்படிச் சொன்னாலும் வரலாற்று ரீதியான கோரிக்கைகள் மற்றும் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் வரலாற்றுக் கட்டடங்கள்தான் சர்ச்சைக் குரியதாக உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்ட மசூதி, இத்தனைக்கும் நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக இருந்த மசூதி, ஒரு அரசியல் தலைமையின் தூண்டுதலின்பேரில் தகர்த்தெறியப்பட்டது.
சர்ச்சைக்குட் பட்ட கட்டிடத்தை இடித்தது சரியா, தவறா என்றதற்கா நீதிமன்றத்திற்கு சென்றனர்? இந்த ஒழுக்கங்கெட்ட அழிவுச்செயல் மற்றும் நமது பாரம்பரியத்திற்கு எதிரான குற்றம் கண்டிக்கப்பட வேண்டியது என்று தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. கட்டப்படவிருக்கும் புதிய கோவிலின் கருவறை மசூதி இருந்த இடத்தில் இருக்கும். இருந்ததாகக் கருதப் படும் கோவில் தகர்க்கப்பட்டது கண்டனத்துக் குள்ளாகியுள்ளது. இது தான் புதிய கோவிலை நியாயப்படுத்துகிறது. ஆனால் மசூதியைத் தகர்த்ததற்கு கண்டனம் எழவில்லை. வழக்கிற்குள் இந்த அம்சம் வராமல் வசதியாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.
“சட்டத்தில் தவறான முன்னுதாரணம்” பார்ப்பது சரித்திர ஆசிரியர்: ஒரு “சமூகம் என்று கூறிக் கொண்டு, தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இதுதான் கடவுள் பிறந்த இடம் என்று அறிவிப்பு செய்யக்கூடிய முன்னுதாரணத்தை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இனி ஏராளமான அவதரித்த இடங்கள் என்ற பிரச்சனைகள் உருவாகலாம். வேண்டுமென்றே வரலாற்று ரீதியான சின்னங்களை அழித்தது கண்டிக்கப்படவில்லை என்றால், மற்ற சின்னங்களை அழிப்பதை எப்படித் தடுக்க முடியும்? வழிபாட்டுத் தலங்களின் அந்தஸ்தை மாற்றுவதற்கு எதிரான 1993-ஆம் ஆண்டு மசோதா பலனளிக்கவில்லை என்பதை நாம் கடந்த சில ஆண்டுகளாகவே பார்த்து வருகிறோம்.
வரலாற்றில் எது நடந்ததோ, அது நடந்து விட்டது. அதை மாற்ற முடியாது: “வரலாற்றில் எது நடந்ததோ, அது நடந்துவிட்டது. அதை மாற்ற முடியாது. ஆனால் அதன் முழுமையான தன்மையிலிருந்து அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். நம்பத் தகுந்த ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வுகளைப் பார்க்க முனையலாம். தற்போதைய அரசியலுக்காக கடந்த காலத்தை மாற்றி அமைத்துவிட முடியாது. வர லாற்றுக்குள்ள மரியாதையை இந்தத் தீர்ப்பு செல்லாக் காசாக்கி விட்டது. வரலாற்றின் இடத்தில் மத நம்பிக்கையை அமர்த்திவிட்டது. வெறும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாக இல்லாமல், ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் சட்டம் இயங்கும் என்று நம்பும் போது தான் உண்மையான சமாதானம் வரும்.
[1] தட் ஈஸ் தமிள், திங்கள்கிழமை, ராமர்பிறந்தஇடத்தைக்கண்டுபிடித்தவர்களால்ராஜராஜசோழனின்நினைவிடத்தைகண்டுபிடிக்கமுடியாததுஏன், அக்டோபர் 4, 2010, http://thatstamil.oneindia.in/news/2010/10/04/karunanidhi-rama-rajaraaja-chozhan-ayodhya-verdict.html
[2] முதலில் “தி ஜிந்து”வில் ஆங்கிலத்தில் வந்தது, பிறகு தமிழில் : ஹரி (நன்றி: தீக்கதிர் 3.10.2010). கட்டுரையாளர், ரோமிலா தாபர், பண்டைக்கால இந்தியா குறித்த பிரபல வரலாற்றாய்வாளர்
[3] மசூதிகள் அல்லர்து சர்ச்சைக்குட்பட்ட கட்டிடங்கள் தாம் “வரலாற்றுச் சின்னம்”, மற்றவை அவ்வாறு இல்லை என்று பேசுவதே சரியில்லையே? அதாவது, கோவில்களும் வரலாற்றுச் சின்னங்களே, அவற்றை முஸ்லீம்கள் இடித்ததும் தவறுதான், குற்றந்தான். இதைச் சொல்லத் தயங்குவதுதான், சரித்திர ஆசிரியர்களின் அயோக்கியத்தனம், போலித்தனம்.
[4] தீர்ப்பில் சம்ந்தப்பட்டவர்களுக்கு எதிரில் நடந்த அகழ்வாய்வில் தான், அந்த ஆதாரங்கள் வெளிப்பட்டு, ஒப்புக்க்கொண்டுள்ளார்கள்.
[5] நீதிமன்றத்தின் ஆணையின் படியே அந்த அகழ்வாய்வு நடந்தது. 2002லேயே அறிக்கையினையும் கொடுத்து விட்டது. ஆனால், காங்கிரஸ் அதை, கோர்ட் ஆவணம் / அத்தாட்சி என்று ரகசியமாக வைத்திருந்தது.
[6] மறுப்பு தெரிவித்தால் என்ன, அவர்கள் சாட்சிகளாக உள்ளநிலையில், நீதிமன்றத்திற்கு வந்து சொல்லியிருக்கலாமே. அவ்வாறில்லாமல், தி ஹிந்து, ஃபிரண்ட் லைன் போன்ற நாளிதழ்களில் / வாரப்பத்திரிக்கைகளில் எழுதிக் கொண்டிருந்தால் ஆதாரமாகி விடுமா?
[7] இந்த வழக்கில் சம்பந்தம் இல்லாதவர்கள் இப்படி பேசி, எழுதிக் கொண்டிருந்தால், எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனெனில், இவர்கள் இதில் சம்பந்தப்பட்டவர்களே இல்லை.
[8] கான் தான் அப்படி சொல்லியிருப்பது, ஏனெனில், அகழ்வாய்வு ஆதாரங்கள் அவருக்கு சாதகமாக இல்லை. அதாவது, மசூதி / சர்ச்சைக்குட்பட்ட கட்டிடம், கோவிலை இடித்துக் கட்டப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்த பிறகு, அவர் அப்படி சொல்லியிருப்பதில், எந்த ஆச்சரியம்ம் இல்லைத்தான்.