மஹாத்மா காந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (3) – பிரிவினை, இந்துக்கள்–சீக்கியர் பட்ட சொல்லொனா குரூரங்கள், ரூ 55 கோடி விவகாரம்!
மேற்கு–கிழக்கு பாகிஸ்தான்களில் இந்துக்கள் நடத்தப் பட்ட விதம்: 1947, ஆகஸ்ட் 14 மற்றும் 15 தேதிகளில் நடந்ததை முழுமையாக அறிந்தால், ஏன் கேட்டறிந்தால்[1], படித்தறிந்தால், துலுக்க அடிப்படைவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், ஜிஹாதி தீவிரவாதம்[2], நேருவின் செக்யூலரிஸம், படேலின் குழப்பமான தீர்வுகள், நேரு-படேல் கருத்து வேற்றுமை, காந்தியின் தொடர்ந்த, முஸ்லிம் சார்பு உண்ணாவிரதங்கள், பேச்சுகள், முடிவுகள் முதலியவை எந்த மனிதனையும் கொதிப்படையத்தான் செய்யும். அந்நிலையில் பாதிக்கப்பட்ட இந்துவை கேட்டால், அவன் காந்தியைத் தான் குற்றம் சொல்வான். மதரீதியில் முஸ்லிம்கள் தனி நாடு கேட்டதால், முஸ்லிம்கள் அதிகமாக இருந்த இடங்களில், உடனடியாக, இந்துக்கள் வெளியேற்றப் பட்டனர்; அவர்களது உடமைகள் பரிக்கப்பட்டன; வீடுகள் சூரையாடப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டன; பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்; தடுத்த இந்துக்கள் கொல்லப்பட்டனர். அப்பொழுது பாகிஸ்தானின் தந்தையான ஜின்னா, இந்துக்களுக்காக எதையும் செய்யவில்லை. நேருவைப் போன்று, பாகிஸ்தான் பிரதம மந்திரி, இந்துக்களுக்காக பரிந்து பேசவில்லை. செக்யூலரிஸ ரீதியில், துலுக்கரைக் கண்டிக்கவில்லை.
இந்தியாவில் முஸ்லிம்கள், முசல்மான்கள், துலுக்கர், நடத்தப் பட்ட விதம்: நிச்சயமாக கொதித்திருந்த இந்துக்களில், சிலர் முஸ்லிம்களை பதிலுக்கு-பதில் பழிவாங்க வேண்டும் என்ற மனப்பாங்கில் வன்முறையில் இறங்கினர். 10% தான் அவ்வாறான இந்துக்கள் இருந்தனர். அவர்கள், யார் சொல்லியும் அவ்வாறான வன்முறையில் இறங்கவில்லை. இந்துமகாசபாவோ, ஆர்எஸ்எஸ்ஸோ சொல்லவில்லை, தூண்டிவிடவில்லை. அவ்வாறாக இருந்தால், காந்தி நவ்காளிக்குச் சென்றிருக்க வேண்டாம். நேரிடையா, நேருவை வைத்து, அவர்களை மிரட்டி அல்லது பணிய வைத்து, முஸ்லிம்களை கிழக்கு வங்காளத்திற்கு அமைதியாக அனுப்பி வைத்திருக்கலாம். மாறாக, காந்தி போன்று, இந்துக்களுக்கு உயிர் வாழ ஆசையிருந்தால், நவ்காளியை விட்டு சென்று விடுங்கள் என்று சொல்லியிருக்க மாட்டார். நேரு, படேல், மற்றும் ராணுவ அமைச்சர் முதலியோர், இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. மாறாக “இந்திய தந்தை” காந்தி “நவ்காளி யாத்திரை” என்று விளம்பரப் படுத்தி, சொந்த நாட்டிலேயே இந்துக்கள் கொல்லப்பட வழி செய்தனர்.
“தில்லி சலோ” கூக்குரல் அதிகமாக இருந்தது: பாகிஸ்தான் பஞ்சாபிலிருந்த அனைத்து சீக்கியரும், தில்லுக்குச் சென்றுவிடவேண்டும் என்ற உணர்வோடு இருந்தனர். ஏனெனில், முஸ்லிம்கள் தாக்க ஆரம்பித்தது தெரிந்து விட்டது. ஆக அந்நேரத்தில் “தில்லி சலோ” என்ற கோஷம், தேசப்பற்றாக இல்லை, தப்பித்துச் சென்று அங்கே சென்றடைய வேண்டும் என்ற உந்துதலோடு, கூக்குரலிட்டனர், தில்லிக்கு வந்து சேர்ந்தனர். அதனால் தான், தில்லியில் சீக்கியர் அதிகமாக உள்ளனர். சீக்கியர் அதிகமாக இருந்த பஞ்சாபையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது, சீக்கியர்களுக்கு பெருத்த மனவருத்தம் தான்[3]. இன்றைக்கும் பாகிஸ்தான் பஞ்சாம், இந்திய பஞ்சாப் என்றுள்ளது. சீக்கியர் துலுக்கர்களால் அதிகமாக பாதிக்கப் பட்டிருக்கின்றனர். ஆனால், அவர்களை 1947க்குப் பிறகும், இன்றைக்கும் மற்ற இந்தியர்கள் முறையாகப் போற்றுவதில்லை.
காந்தியின் மற்றவரைக் கட்டுப் படுத்தும் சக்தி[4]: காந்தியை யாரும் எதிர்க்க முடியாத நிலையில் இருந்தார். ஒரு முனிவர்-துறவி அந்தஸ்தில் உள்ளவராக்கி விட்டார்; “மஹாத்மா” என்ற நிலையில் ஆளுமையுடன், அதிகாரத்துடன் செயல்பட்டார். தன்னுடைய பேச்சை யாரும் தட்ட முடியாத அளவிற்கு தார்மீக அழுத்தத்தை உண்டாக்கி வைத்திருந்தார். ஏதோ மந்திரவாதியைப் போன்று மத்தியஸ்தர்கள் என்று எல்லோரையும் தனது ஹிப்னாடிஸம் போன்ற திறமையால் கட்டுப்பட செய்தார். இதனால், அதிகாரம் கொண்டவர் வந்தால் கூட, முதுகெலும்பு இல்லாத மிருகங்கள் போன்று செயலற்றவர்களாகினர். அவர் சொன்னதை தட்டாமல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனானப் பட்ட லார்ட் இர்வினே, இதை வெளிப்பட்டுத்தியுள்ளார். அவரது சக்திக்கு கட்டுப்பட்டுத்தான் “காந்தி-இர்வின் பேக்ட்”ற்கு [Gandhi Irwin Pact] ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். அவரிடம் சென்றால், ஏதோ மந்திர-ஏவல் தம் மீது பாய்ந்து கட்டுப்பட வைத்து விடும் என்று அஞ்சினர். அதனால், தாங்கள் கொள்கைக்களுக்கு எதிராக இருந்தாலும், சமரசம் செய்து கொண்டு, ஒப்புக்கொள்ளாதவற்றை எல்லாம், ஒப்புக்கொள்ளவேண்டிய நிலையும் ஏற்பட்டது. அத்தகைய மந்திரசக்தியின் சக்க்தியை சமீபத்தில் உணர்ந்தாதாக கோஸ்லா, ரூ 55 கோடிகள் பாகிஸ்தானிற்கு கொடுக்கப்பட்டதை குறிப்பிட்டார். 12-01-1948 படேலே, அத்தனை பெரிய தொகையைக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம் என்று எடுத்துக் கூறினார். ஆனால், “சாகும் வரை உண்ணாவிரதம்” ஆரம்பித்ததால், காந்தி மூன்றே நாட்களில் அப்பணம் கொடுக்க வேண்டியதாயிற்று. அதனை ஒரு அதிசயம் [miracle] என்றே கோஸ்லா குறிப்பிட்டார்.
மகாத்மாவின் “சாகும் வரை உண்ணாவிரதம்” போராட்டம் [Fast unto death]: அவரது “சாகும் வரை உண்ணாவிரதம்” போராட்டம் [Fast unto death], ஆங்கில அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதலியோரை கதிகலங்க வைத்தது. அவருக்கு எதிராக வந்து பேசக்கூட மறுத்தனர். சி.இ.எம். ஜோட் [C.E.M. Joad] என்பவர், காந்தி எப்படி “சாகும் வரை உண்ணாவிரதம்” என்றதை பேரம் பேசும் கருவியாக [fasting as a bargaining tool] உபயோகப் படுத்தினார், என்று குறிப்பிட்டார். உண்மையினை சொன்னால், காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தால், அது உலக செய்தியாக இருந்தது, “ஒருவேளை அந்த கிழவர் இறந்து விட்டால், பழி நம் மீது விழுந்து விடும் என்று அஞ்சினர்,” என்றும் குறிப்பிடப் பட்டது. அந்த அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதாவது, யாரும் அவரது இறப்பை உருவாக்க முடியாது என்ற நிலை இருந்தது, அதனால், பயந்து, அவரது கோரிக்கைகளை ஏற்று ஒப்புக் கொண்டனர். ஆக அத்தகைய பெரிய மகாத்மாவை யாராலாவது இறக்கச் செய்ய முடியுமா?.
ரூ 55 கோடிகளுக்கான மகாத்மாவின் “சாகும் வரை உண்ணாவிரதம்”: ஜனவரி 23, 1948 அன்று பாதுகாப்பு அமைச்சர் சர்தார் பல்தேவ் சிங் மவுண்ட்பேட்டனை சந்திக்கிறார். அவர் கசப்புடன் இந்த உண்ணாவிரதத்திற்கு ஒரே நோக்கம் 55 கோடிகளை பாகிஸ்தானுக்கு அளிப்பது என்று எடுத்துக் காட்டினார். துணை பிரதமமந்திரி பாராளுமன்ற அவையில் காஷ்மீர் பிரச்சனை முடிவுக்கு வரும்வரை நிலுவை தொகை நிறுத்திவைக்கப்படும் என அறிவித்து, அதன் பின்னர் பிரதமமந்திரியும் அதை ஏற்று அறிக்கை சமர்பித்தார், மேலும் ராணுவ தளவாடங்கள் பகிர்ந்துகொள்ள படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது. துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விரிவாக விளக்கிய பின்னர், ஒரு கிழவரின் உண்ணாவிரதம் ஒருமித்த முடிவை கேலிக்குரியதாக ஆகியது, அனைவருக்கும் திகைப்பாக இருந்தது, அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய அடியானது. எதிர்கட்சி இருந்தால் அரசை கவிழ்த்திருப்பார்கள் ஆனால், அடங்கி போக வேண்டியதாயிற்று. 55 கோடி நிலுவை தொகை அளிப்பதற்கான முடிவு எட்டப்பட்டபோது பிர்லா இல்லத்தில் இருந்ததாக கூறும் பல்தேவ் கனஷ்யாம் தாஸ் பிர்லாவிடம் காந்தியின் நோக்கம் ஈடேறிவிட்டதால் இன்னும் 48 மணிநேரத்திற்குள் உண்ணாவிரதத்தை முடித்துகொள்வார் என பந்தயம் கட்டியதாக சொல்கிறார்.
நிர்பந்தத்தில் அவசாமாக ரூ 55 கோடிகள் கொடுக்கப்பட்ட விதம்: காந்தியின் அழுத்தத்தினால், எவ்வாறு பணம் கொடுக்கப் பட்டது:
- இஸ்லாம் பெயரால் பாரதத்தைத் துண்டாடிய பாகிஸ்தான் பிரிவினையின் போது தன் பங்காக 100 கோடி பணத்தைப் பிரித்துக் கொடு என்று கேட்டது.
- 1948-49 பட்ஜெட்டை பிப்ரவரி 28, 1948 அன்று சண்முகம் செட்டி சமர்ப்பித்தபோது, பாகிஸ்தான் ரூ 300 கோடிகள் கொடுக்க வேண்டும் என்று பதிவு செய்தார்.
- நிதியமைச்சர் சண்முகம் செட்டி பிரிவினை-கடன்-பாக்கி ரூ 300 கோடிகள் பணத்திற்கு 3% வட்டியும் பாக்கியுள்ளது என்று எடுத்துக் காட்டினார்[5].
- ரூ 100 கோடிகளில் இந்தியா முதற்கட்டமாக 20 கோடி கொடுத்து, பேச்சுவார்த்தையின் முடிவாக மீதி 75 கோடி அளிக்க ஒப்புக்கொண்டது.
- மீதி 55 கோடிகளை அளிப்பதற்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பழங்குடியினர் காஷ்மீருக்குள் ஊடுருவி கிளர்ச்சி ஏற்படுத்தினர்.
- அதனால் இந்திய அரசு பாகிஸ்தானுக்கு அளிக்க வேண்டிய தொகையை நிறுத்தி வைத்தது. ஆனால் காந்தி புகுந்து பிரச்சினை உண்டாக்கினார்.
- 12-01-1948 படேலே, அத்தனை பெரிய தொகையைக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம் என்று காந்திக்கு எடுத்துக் கூறினார்.
- ஆனால், “சாகும் வரை உண்ணாவிரதம்” ஆரம்பித்து, மூன்றே நாட்களில் அப்பணத்தைக் கொடுக்க செய்து, விரதத்தை முடித்துக் கொண்டார்[6].
- 13-01-1948 அன்று உண்ணாவிரதம் ஆரம்பம், 15-16 RBI அவசர கூட்டம்; 16-01-2018 விரதம் முடிவு, 30-01-2018 அன்று கொலை செய்யப்பட்டார்.
- நேரு, படேல் முதல் கோட்சே வரை எல்லோரும் ரூ 55 கோடி கொடுக்கக் கூடாது என்றனர், RBI க்கு உத்தரவிட்டு கொடுக்கப்பட்டது! [10]
© வேதபிரகாஷ்
19-06-2018
[1]இன்றைக்குக் கூட 80 வயதுக்கு மேலே உள்ளவர்கள், குறிப்பாக வடவிந்தியாவில், ஏன் பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்களின் வம்சாவளியினரிடம் கேட்டால், அத்தகைய உண்மைகளை சொல்வார்கள்.
[2] துலுக்க அடிப்படைவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், ஜிஹாதி தீவிரவாதம்…இவற்றிற்கெல்லாம் தனித்தனி அர்த்தங்கள் உள்ளன, அதனால் தான் பிரித்து குறிப்பிடப்பட்டுள்ளது, இன்றைக்கு இஸ்லாமிசம் என்று வேறு சொல்கிறார்கள்.
[3] இதைத்தான், பிறகு துலுக்கர், சீக்கியர்களை “காலிஸ்தான்” இயக்கம் தூண்ட ஊக்குவித்தாக அமைந்தது. காஷ்மீர் பிரச்சினை போன்று, காலிஸ்தான் பிரச்சினையை உண்டாக்கி, இரு மாநிலங்களிலும், தொடர்ந்தமெல்லைப் பிரச்சினைகளை உண்டாக்க பாகிஸ்தான் திட்டம் போட்டது.
[4] But then, suddenly, I was overcome by a strange apprehension, which only they can appreciate who knew the position held by Mahatma Gandhi in India and the influence he exercised in every sphere of activity, political, social and economic. It was reported that there was, about him, an aura of saintliness and a magical power which hypnotised his interlocutors and reduced them to tame, supine creatures ready to efface themselves, to agree to whatever he said and carry out his directions. Lord Irwin was supposed to have been affected in this manner when he gave his assent to the Gandhi-Irwin pact in 1931. His fasts had converted his strongest opponents, and it was rumoured that die-hard British politicians and administrators were unwilling to meet him, lest under his mysterious spell they compromised their principles. Only a few days previously the world had witnessed a demonstration of his powers……
Khosla, The Muder of Mahatma, p.9.
[5] ………for 1948-49 on February 28, 1948, R.K. Shanmukham Chetty, the then Minister for Finance, had put the rate of interest at around three per cent for the Rs 300-crore debt. It shows the total liabilities at Rs 56,51,784.22 crore for 2013-14.
[6] http://www.gandhitoday.in/2015/12/55.html