Posts Tagged ‘சூரியன்’

தமிழ் புத்தாண்டு – திராவிடத்துவம், மொழி-காமம், அரசியல் மற்றும் வானவியல் உண்மைகள்! [2]

ஏப்ரல் 14, 2020

தமிழ் புத்தாண்டுதிராவிடத்துவம், மொழிகாமம், அரசியல் மற்றும் வானவியல் உண்மைகள்! [2]

Karunanidhi letter refuting Jayalalita, Murasoli 22-04-2012-1

ஏப்ரல் 22, 2012 – கருணாநிதியின் பெரிய விளக்கம்[1]: முரசொலியில், மூன்று பக்கங்களுக்கு வரிந்து கட்டி எழுதிய கருணாநிதி கடிதத்தில், இந்த வரிகள் கவனத்தை ஈர்த்தன, “மேலும் கடந்த இரண்டு நாட்களாக நமதுவிடுதலைநாளிதழில் அமெரிக்காவில் நாசா விண் மையத்தில் பணியாற்றும் பிரபல விஞ்ஞானி முனைவர் நா. கணேசன் அவர்கள் எழுதிய நீண்ட கட்டுரையில்  இந்தப் பொருள் பற்றி விரிவான விளக்கங்களையும், எந்தெந்தப் புலவர்கள், தமிழறிஞர்கள் கடந்த காலத்தில்  தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தெரிவித்தார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளதுஇந்தப் புலவர் பெருமக்கள் எல்லாம் தெரிவித்த யோசனைகளின் அடிப்படையிலே தான் –  எந்த ஆண்டு அந்த யோசனை தெரிவிக்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மை அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதால்  2008இல் நான் இவற்றையெல்லாம் அறிந்து ஆய்ந்த பிறகு முடிவெடுத்து  அறிவித்தேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.” இந்த நாக.கணேசன் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு விவரங்களைக் கொடுத்து உதவுபவர். மு. தெய்வநாயகம், ஜி.ஜே.சாமுவேல் போன்றோரின் நண்பர்[2].

Karunanidhi letter refuting Jayalalita, Murasoli 22-04-2012-2

தமிழ்ப் புத்தாண்டு குறித்து முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்தது[3][september 2012]: இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயராகும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லை.  ஒரு தேவநாள் என்பது ஒரு மானிட ஆண்டு என்றும், அந்த தேவநாளின் பகற்பொழுதின் தொடக்கமே தை முதல் நாள் என்றும் அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படுகிறது எனவும் ஆகமங்களில் இருந்து அறிய முடிவதாக பிருகுசங்கிதை எனும் நூல் கூறுகிறது.  மேலும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி மூன்றாம் பாகத்தில் தை என்பதற்கு பொருள் கூறப்பட்டுள்ளது. தை என்பதற்குப் பொருளாக தமிழாண்டின் தொடக்க மாதம் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க மாதம் என்றுள்ளது. மேலும், அங்கேயே சுறவ மாதமே தமிழாண்டின் தொடக்கம் என அச்சிடப்பட்டுள்ளது.  திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை. இதனாலேயே தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திட திமுக அரசு முடிவு செய்தது. தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்காத நிலையில் திருவள்ளுவர் ஆண்டினை அதிமுக அரசு என்ன செய்யப் போகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்[4].

Karunanidhi letter refuting Jayalalita, Murasoli 22-04-2012-3

2020லும் உண்மைகள மறைத்து துவேசத்தை வளர்க்கும் போக்கு: இப்பொழுது 2020 ஆண்டு நடக்கிறது, ஆனால், அந்த திராவிடத்துவ ஊளைகளின் ஓசைக் கேட்கத்தான் செய்கிறது. பழைய விசயங்களை மறைத்து, மறுபடியும் மக்களிடம் மொழி ரீதியில் பிளவு, வெறுப்பு, காழ்ப்பு, துவேசம் முதலியவற்றைத் தூண்டும் முறையில் சமூக ஊடகங்களில் வேலை செய்து வருகின்றனர். இப்பொழுது, சமூக ஊடகங்கள் இந்த குழப்பங்களை செய்து வருகின்றன. இப்பொழுது “தமிழ்” என்ற முகமூடி அத்தகைய பிரச்சாரங்களில் உபயோகப் படுத்தப் படுகின்றன. வழக்கம் போல, பிராமணர் வெறுப்பு, பார்ப்பனக் காழ்ப்பு, சமஸ்கிருத துவேசம் எல்லாம் இருக்கின்றன, தொடர்கின்றன. இருப்பினும், கடந்த 12 ஆண்டுகளில் எந்த ஆராய்ச்சியும் செய்ததாகத் தெரியவில்லை. இருக்கின்ற விவரங்களை வைத்துக் கொண்டு, கூகுள் படங்களை சேர்த்துக் கொண்டு, ஒரே வார்தத்தில், எல்லாமே தமிழ் தான். தமிழிலிருந்து தான், சமஸ்கிருத எழுத்தாளர்கள் காப்பி அடித்தார்கள் என்று வாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற படி எந்த ஆதாரங்களியும் கொடுப்பதில்லை.

Ilangovan, Naga.Ganesan, Santhosam, Prajapati, Kumari Ananthan

தமிழில் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்ப நூல்கள் இருந்தனவா?: தழிழர்களின் கணிதம், கணித சாஸ்திரம், வானியல், வானியல் சாஸ்திரம், பேரண்டவியல், முதலியவைப் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் சிதறிக் கிடக்கின்றனவே தவிர, தனியாக நூல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இருப்பினும், பல்லவர் காலத்து கல்வெட்டுகளில் பலவித சாஸ்திரங்கள் இருந்தது தெரிகிறது. கோவில், கோவில்கட்டுமானம், அமைப்பு, முதலியவை, அதற்குப் பின்னுள்ள விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பங்களைக் காட்டுகின்றன. மற்ற மாநிலங்களைப் போல அத்தகைய நூல்கள் சமஸ்கிருதத்தில் இருதிருக்கக் கூடும், பிறகு தமிழில் இருந்திருக்கக் கூடும். ஏனெனில், சில குறிப்பிட்ட நூல்கள், 18-19ம் நூற்றாண்டுகளைச் சேந்ததாகத் தெரிகின்றன. நவீன காலத்தில், தனித்தமிழ் இயக்கம் தோன்றியபோது, தமிழைத் தனியாக எடுத்துக் காட்ட வேண்டும் என்ற நிலையில், “புத்தாண்டு,” என்ற கொள்கையைக் குழப்ப, மொழிவெறி வித்தகர்கள் முயன்றனர். மொழியின் மீதான காமம் அதிகமான போது, எல்லாமே தமிழ் என்ற நிலையில், ஒத்தாண்டையும் தனிமைப் படுத்த முயன்றனர். இதனால், சூரியன் ராசி மண்டலத்தில் புகும் போதான சந்திகளை “சங்கராந்தி” என்றறிந்து, அவற்றை குறிப்பிட்டு அழைத்தனர்.

60 years cycle

60 years cycle

சூரியன் ராசிமண்டலத்தில் நுழைவது 12 மாதங்கள் கணக்கீடு: சூரியன் ராசிமண்டலத்தில் நுழைவது மற்றும் வெளிவருவதை வைத்து, அத்தினத்தை விசேஷ தினமாகக் கொண்டாடுகின்றனர்.

சந்திரமாதத் தேதி / நாள் சங்கராந்தி பண்டிகை
14 January – Pongal, Makar Sankranti மகரம் பொங்கல்
12 February – Kumbha Sankranti கும்ப கும்பமேளா
14 March –  Meena Sankranti மீனம் நீர்நிலைகளுக்கு பூஜை
14 April –  Solar New Year, Mesha Sankranti மேஷம் சூரிய வருட ஆரம்பம்
14 May –  Vrishabha Sankranti ரிஷபம் சிவனுக்குரியது
15 June –  Mithuna Sankranti மிதுனம் மழை ஆரம்பம்
16 July (Sunday) Karka Sankranti கடகம் தக்ஷிணாயனம் ஆரம்பம்
17 August –  Simha Sankranti சிம்மம் செழுமை
17 September –  Kanya Sankranti, Vishwakarma Puja கன்னி விஸ்வகர்ம ஜெயந்தி / மஹாலயம்
17 October – Tula Sankranti துலாம் நிறைவான / திருப்திகரமான மாதம்
16 November – Vrischika Sankranti விருச்சிகம் கார்த்திகை
16 December  – Dhanu Sankranti தனுசு முதல் சூரிய மாத துவக்கம், உத்தராயணம்

சந்திரமாதம் முதலில் பின்பற்றப் பட்டது. பிறகு சூரியமாதம் வழக்கில் வந்தது. பிறகு, இரண்டையும் . “சௌர்ய-சந்திர” சேர்த்த போது, குழப்பங்கள் வந்தன. அதிகமாதம் சேர்ப்பு வந்தது. அந்நிலையில் தான், இவ்வருடம் யுகாதி கணக்கு படி சைத்ரமாதம் 25-03-2020 அன்றே ஆரம்பித்து 24-04-2020 அன்று முடிந்து, வைசாக மாதம் ஆரம்பிக்கிறது. ஆகவே வானியல், வானவியல் ரீதியில் அணுக வேண்டியதை மொழிப் பற்று, மொழிகாமம் என்ற ரீதியில், மொழிவெறியாக்கு, திரிபு விளக்கங்களினால் எதையும் மெய்ப்பிக்க முடியாது.

© வேதபிரகாஷ்

14-04-2020

60 years samvatsara

60 years samvatsara

[1] முரசொலி, தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012. மூன்று பக்கங்களில் வெளியானது.

[2] மே 2017, 17-19 தேதிகளில் ஸ்காட் கிருத்துவ கல்லூரியில் நடைபெற்ற அனைத்துலக திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

[3] தினமணி, தமிழ்ப் புத்தாண்டு எப்போது? கருணாநிதி விளக்கம், Published on : 20th September 2012 04:08 AM

[4]https://www.dinamani.com/tamilnadu/2012/apr/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-484331.html

தமிழ் புத்தாண்டு – திராவிடத்துவம், மொழி-காமம், அரசியல் மற்றும் வானவியல் உண்மைகள்! [1]

ஏப்ரல் 14, 2020

தமிழ் புத்தாண்டுதிராவிடத்துவம், மொழிகாமம், அரசியல் மற்றும் வானவியல் உண்மைகள்! [1]

Karunanidhi changed Tamil News year Thuglak

1969லிருந்து 2008 வரை தைக்காகக் குதிக்கவில்லை:  1969லிருந்து 2008 வரை திராவிட கட்சிகளுக்கு, திராவிடத்துவ வாதிகளுக்கு, இந்த “புத்தாண்டு” உணர்வு இல்லாமல் போனது வியப்பாக இருந்தது. ஆட்சியில் திராவிட கட்சியினர் தான் இருந்தனர். அண்ணாதுரைக்குப் பின்னர், கருணாநிதி தான் முதலமைச்சராக இருந்தார். நடுவில் எம்.ஜி.ஆர் ஆண்டாலும், இவரது தாக்கம் அலாதியானது. ஆகவே, மறுபடி-மறுபடி ஆட்சிக்கு வந்த் போது, சுலபமாக, தைமாதத்தில் தான், புத்தாண்டு வருகின்றனது என்று அடித்து சொல்லிருக்கலாம். சுலபமாக மாற்றி இருக்கலாம். ஆனால், சாதாரணன், சௌமியன் என்று கவிதை பாடிக் கொண்டிருந்த போது மறந்து விட்டனரோ, அல்லது கம்பரசத்தில் மூழ்கி மயங்கி விட்டனரோ என்று தெரியவில்லை. மார்பங்களில் மச்சங்கள் பார்த்து, நாடாவை அவிழ்க்கவா என்றெல்லாம் வசனம் பேசிக் கொண்டிருந்ததால், இதெல்லாம் பெரிதாகப் படவில்லை போலும்.

Karunanidhi enjoys 60 cycle yeas in 1970- Murasoli

14.04.1970 அன்று ஶ்ரீரங்கத்தில் நடந்த கவியரங்கம்[1]: இச்செய்தி முரசொலியில் வந்துள்ளது, “14.04.1970 அன்று நடந்த சாதரண ஆண்டு சித்திரைத் திருநாள் கவியரங்கம். அங்கு கவி பாடுகிறார். அதில் என்ன நுணுக்கமெல்லாம் வந்து விழுகிறது பாருங்கள். தமிழ் வருடம் என்று அவர்கள் சொல்லுகிற 60 ஆண்டுச் சுழற்சியில். சௌமிய என்ற பெயருடைய ஒரு ஆண்டு அதற்கு அடுத்த ஆண்டின் பெயர் சாதாரண ஆண்டு அண்ணா பிறந்த 1909ம் ஆண்டு சௌமிய ஆண்டு. அதனால் சௌமியன் என்ற புனை பெயரிலும் அண்ணா எழுதி வந்தார். அதையெல் லாம் நான்கு வரிகளுக்குள் அடக்கி விடுகிறார் கலைஞர். கவி வரிகளைக் கவனியுங்கள், “சித்திரைத் திங்களிலே சிரிக்கின்ற செழுமை கண்டோம் பெருமை கொண்டோம் சௌமியதான் சென்ற ஆண்டு நம் சௌமியனைத் தமிழுக்குத் தந்த ஆண்டு சௌமியாவை அண்ணனுமே புனைப் பெயராய்ப் பூண்டு சுவை சொட்டக் கதை குவித்துப் போனார்மாண்டு சௌமிய மறைந்து சாதாரண வந்தது போல அந்த சௌமியன் மறைந்து இந்தச் சாதாரணன் வந்துள்ளேன், என்கிறார்”. அந்த நாரதர்-நாரதி பெற்ற 60 அசிங்க சுழற்சி வருடங்களை வெறுத்திருந்தால், இக்கவிதை வந்திருக்குமோ?

Why Karunanidhi changed Tamil News year - news cutting-1

கருணாநிதி 28-01-2008 அன்று கொண்டு வந்த சட்டத்தை, ஜெயலலிதா, 23-08-2011 அன்று மாற்றினார் பழையபடி வைத்தார்: நீதிமன்றம் வரை சென்ற சமச்சீர் கல்வித் திட்டம் தவிர, திமுக ஆட்சியில் அறிமுகமான பெரும்பாலான திட்டங்களை ரத்து செய்துவிட்ட புதிய அதிமுக அரசு, 3 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் கருணாநிதி தைத் திங்கள் முதல் நாளை புத்தாண்டாக அறிவித்த சட்டத்தையும் இப்போது ரத்து செய்துவிட்டது[2]. அதற்கான மசோதாவினை இன்று செவ்வாய்க் கிழமை சட்டமன்றத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் அறிமுகப்படுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் விவாதத்திற்குப் பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது[3]. விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதா ‘தைத் திங்களில் புத்தாண்டு துவங்க எவ்வித ஆதாரமுமில்லை, மாறாக சித்திரையில் தொடங்கவே பல்வேறு ஆதாரங்கள் உண்டு, இந்நிலையில் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்தினை ரத்து செய்ய, பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்றே முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, ஜெயலலிதா வழக்கம் போல் ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுகிறார், தமிழ் புலவர்களின் கோரிக்கையின்படியே தை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. 1921ல் மறைமலை அடிகளார் தலைமையில் 500 புலவர்கள் இது தொடர்பில் கோரிககை வைத்திருந்தனர் என்றும் நினைவு கூர்ந்திருக்கிறார்.

Why Karunanidhi changed Tamil News year - news cutting-2

முதல்வர் ஜெயலலிதா விளக்கம் [ஏப்ரல் 2012]: சித்திரை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு ஏன் அறிவித்தது என்று முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 13, 2012 அன்று விளக்கம் அளித்தார். சித்திரை மாத துவக்கம் தான் தமிழ்புத்தாண்டின் துவக்கம் என்பதற்கான இலக்கியங்களை மேற்கோள் காட்டி, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் புகார்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்[4]. சென்னை பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 13, 2012 அன்று நடந்த தமிழ்ப் புத்தாண்டு தொடக்க விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை திருநாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். அதற்கான காரணங்கள் பல உள்ளன. சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையிலே பெயர்கள் வழங்கப்படுகின்றன”.

Tiruppananthal supported Jeyalalita April, 2012

இலக்கிய ஆதாரங்கள்: ஜெயலலிதா தொடர்ந்தார், “சித்திரையே வா நம் வாழ்வில் முத்திரை பதிக்க வாஎன்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தினால், சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டுக்குரிய பொருத்தமான நாள் என மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார். சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அகத்தியரின், “பன்னாயிரத்தில்பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. “திண்ணிலை, மருப்பின் ஆடுதலைஎன்று நக்கீரர் கூறியிருக்கிறார். இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்துள்ளார், முனைவர் ராசமாணிக்கனார். புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம்
கொடுத்துள்ளார் கமலை ஞானப்பிரகாசர். நாமக்கல் கவிஞரும், “சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்என்ற தன் வாழ்த்துப் பாடலின் மூலம் தமிழ்ப்பண்பாட்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத்தெரிவித்துள்ளார். கோடைக்காலமே முதலாவது பருவம் என, சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது”.

Jayalalita responded to Karunanidhi April 2012. DM

கருணாநிதியே ஏற்பு: ஜெயலலிதா தொடர்ந்தார், “தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் நாள்என்று திடீரென அறிவித்த கருணாநிதியே, “சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படும்என்று, தமிழ்ப் புத்தாண்டுக்கு பல முறை வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில், காவல் துறை குறித்த ஒரு வினாவிற்கு, 1990ம் ஆண்டில், பதிலளிக்கும்போது, சில காவல் அலுவலகங்கள் சித்திரை முதல் நாள் அமைய விருக்கின்றன, என்று பதில் அளித்தார். கைதிகளின் தண்டனை காலத்தைக் குறைப்பது குறித்து, 1990ம் ஆண்டு சட்டப்பேரவை விதி, 110ன்கீழ் அறிக்கை அளிக்கும் போது, “தமிழ்ப் புத்தாண்டு அன்று விடுதலை செய்யப்படுவர்என்று தெரிவித்துள்ளார். அதாவது, சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த, 1935ம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பது எளிதில் பெறப்படும். கிறிஸ்துபிறப்பிற்கு, 30 ஆண்டுகளுக்கு முன், திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்துகண்ட முடிவாகும் என்று மறைமலை அடிகளார் கூறியதாக, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில், சிறுவை நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்

Karunanidhi responded to Jayalalita 2012.DM

விளக்கம்: உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது, தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று ஒட்டுமொத்த எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டு உள்ள உண்மை என்று பொத்தாம் பொதுவாகக்கூறி, தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக, சட்டத்தின் மூலம் கருணாநிதி மாற்றியமைத்தார். யார் கேட்டார் இந்தச் சட்டத்தை; இதனால் மக்களுக்கு என்ன பயன்? இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான காரணத்தை, பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நன்மாறன் கேட்டதற்கு, கருணாநிதி தெளிவுபடுத்தவில்லை.

Karunanidhi responded to Jayalalita 2012
விளம்பர உத்தி:  ஜெயலலிதா தொடர்ந்தார், “தமிழ்ப்புத்தாண்டை மாற்ற எடுத்த நடவடிக்கை தமிழை வளர்க்கவோ, தமிழுக்குச் சிறப்பு சேர்க்கவோ எடுத்த நடவடிக்கை என, எவரும் ஒப்புக் கொள்ளவில்லை. இது போன்ற நடவடிக்கை வியாபார, விளம்பர உத்தி. கருணாநிதி சொல்வதைப் போன்று, தமிழ் அறிஞர்கள் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தால், அண்ணாத்துரை நிறைவேற்றி இருப்பார்; ஏன் கருணாநிதி கூட நிறைவேற்றி இருப்பார். தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் மீது தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம். அதை தமிழர்கள் விரும்பவில்லை; எனவே அதை தமிழக அரசு மாற்றியது”, என்றார்[5]. சென்ற வருடமே இதற்கான மசோதா கொண்டு வந்து, நிறைவேற்றி சட்டமாக்கினர்.

© வேதபிரகாஷ்

14-04-2020

Narada myth used for time reckoning

Narada myth used for time reckoning

[1] முரசொலி 75 சிறப்பிதழ், https://www.murasoli.in/details.php?news_id=1385

[2] பிபிசி.தமிழ், தமிழ் புத்தாண்டு மீண்டும் சித்திரையில்‘- ஜெ.23 ஆகஸ்ட் 2011

https://www.bbc.com/tamil/india/2011/08/110823_newyeartamil

[3] https://www.bbc.com/tamil/india/2011/08/110823_newyeartamil

[4] தினமலர், தமிழ் புத்தாண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் ஜெயலலிதா பதிலடி: கருணாநிதிக்கு கேள்வி, Updated : ஏப் 15, 2012 00:17 | Added : ஏப் 13, 2012 23:20

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=447682&Print=1

தீர்க்கதரிசி, 1000 ஹிஜிரா, வெள்ளைகுதிரை மீது வரப்போகும் மஹதி!

ஜூன் 19, 2015

தீர்க்கதரிசி, 1000 ஹிஜிரா, வெள்ளைகுதிரை மீது வரப்போகும் மஹதி!

[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (3).]

imam-mehdi-horse, flag

imam-mehdi-horse, flag

ஹிஜிரி 1000 ஆண்டு வந்ததும், முகமதியர்களின் கலக்கமும்[1]: 1592-93ம் காலம் ஹிஜிரி 1000த்துடன் வருகிறது. அப்பொழுது, முகமதியர்கள் மஹதி அல்லது தங்களை உய்விப்பவர் வருவார், அதற்கு தாங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டு, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர். இஸ்லாமிய உலகம் இதனை குறிப்பாக கவனித்துக் கணக்கிட்டு வந்தது[2]. இவ்விசயங்களை அறிந்த அக்பர், 1000 ஹிஜிரி அல்லது 1592ம் ஆண்டை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள விரும்பினார். அதனால், தீப் இலாஹியை 1582ல் பிரகடனம் செய்து, தனது இலாஹி சகாப்த ஆண்டையும் ஆரம்பித்து வைத்தார். அப்துல் பசல், நாஸிர்-இ-குஸ்ரு என்பவரின் பாட்டை நினைவு படுத்தினார்:

992ம் ஆண்டில்[3] கிரகங்கள் ஒன்றாக வரும் நிலையை இருமுறை நிகழக் கண்டேன்

நான் மஹதி மற்றும் எதிர்கிறிஸ்து வரும் அடையாளங்களையும் கண்டேன்.

அதனால் ஒன்று அரசாட்சி மாறவேண்டும் அல்லது மதம் மாறவேண்டும்.

மறைந்திருக்கும் ரகசியத்தை நான் நன்றாகவே கண்டுகொண்டேன்”.

கிரகங்கள் நீள்வட்டப்பாதையில் ஒன்றாக வரும்போது, உலகம் அழியும், ஊழி வரும், மறுபடியும் இன்னொரு சகாப்தம் ஏற்படும் என்பது எல்லா மக்களுக்கும் தெரிந்திருந்தது. அக்பர் இதையெல்லாம் அறிந்து கொண்டுதான், இவ்வாறு சூரியமுறை காலண்டரைம், இலாஹி சகாப்த ஆண்டைம் அறிமுகப்படுத்தினார். ஆயிரமாவது வருட நினைவாக அக்பர் 612-1162 CE என்று கணக்கிட்டு “ஆலிப்” (ALF) மற்றும் “ஏக் ஹஜாரி” நாணயங்களையும் வெளியிட்டார்[4]. அதாவது மெக்காவிலிருந்து மெதினாவுக்கு சென்ற ஆண்டு 622 CE என்று கொண்டு, ஹிஜிரா ஆண்டு கணக்கிடப்படுகிறது. சூரியமுறை காலண்டர் மற்றும் இலாஹி சகாப்த ஆண்டு கணக்கீட்டு முறை 44 ஆண்டுகள் வழக்கில் இருந்து, 1638ல் ஷாஜஹானால் நிறுத்தப்பட்டது. இருப்பினும், ஷாஜஹான் “நௌ ரூஜ்” / புதிய வருடம் கொண்டாடுவதைத் தொடர்ந்து கடைபிடித்தார். முகமதிய நாடுகளில் நிஸா மாதத்தின் முதல் புதன்கிழமை புத்தாண்டாகக் கொண்டாடுவது பிரபலமாக இருந்தது. சூரியன் வடக்காக நகரும்போது, பகல்-இரவு சமமாக இருக்கும் நாள் வரும், அது இளவேனிற்காலத்தைக் குறிக்கிறது. இது மார்ச் 19, 20, 21, அல்லது 22ம் தேதியில் வரும். இது பழங்கால நாகரிகங்களில் இன்றும் புத்தாண்டாகக் கொண்டாடப் படுகிறது. 1659ல் ஔரங்கசீப் மறுபடியும் அக்பர் இலாஹி சகாப்த ஆண்டு கடைப்பிடிப்பதை தடை செய்தார் என்றுள்ளதால், அது 1659 CE வரை இருந்தது என்றாகிறது[5]. சந்திரமுறை வருடக் கணக்கீட்டிலிருந்து, சூரியமுறை வருடக் கணக்கீட்டிற்கு மாறுவது என்பதே இந்திய தாகந்த்தைத் தான் காட்டுகிறது[6]. உண்மையில் இரண்டும் சடங்குகளுக்கு, கிரியைகளுக்கு பிரத்யேகமாக உபயோகப்படுத்தப்பட்டன. இதனை முகமதியர்கள் தங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டனர். கிரிகோரியும், சந்திர-சூரிய ஆண்டுமுறை காலண்டர்களை மாற்றியமைத்துதான், இப்பொழுதைய காலண்டரை உருவாக்கினார். கலியுகம் 3102 BCEல் பிறந்தது கிரகங்கள் எல்லாம் ஒன்றக சேர்ந்து வந்த நிலையைக் காட்டியது. அக்பர் பாரத்தத்தில் உள்ள எல்லா சகாப்தங்களையும் ஆய்ந்து, இலாஹி சகாப்தத்தை 1584ல் ஆரம்பித்தார்.

Christ coming on white horse

Christ coming on white horse

மொஹம்மதுக்குப் பிறகு வர வேண்டிய மஹதி, வெள்ளைக்குதிரை புராணக்கதைகளின் பின்னணி: “அல்லாவைத்தவிர வேறு கடவுளும் இல்லை, மொஹம்மதுதான் ரசூல், நபி, இறைத்தூதர்” என்று நம்பிவரும் முகமதியர்களே, மொஹம்மதுக்குப் பிறகு ஒரு “மஹதி வருவார்” என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது யூதர்கள் எதிர்பார்த்த “மேசியா” (Messaiah) மற்றும் “கிருத்துவர்களின் இரண்டாவது வரவு” (The Second coming of Jesus) போன்றவவை. மஹதி என்றால் முகமதியர்களைக் காப்பவர், உய்விப்பவர், உலகை ஆள்பவர், அல்லாவில் ஆட்சியை இப்பூமியின் மீது நிலைநிறுத்துபவர் என்றெல்லாம் முகமதியர் போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தனர். அவரைப் பற்றி ஏராளமான புராணக்கதைகள் அவர்களிடம் புழக்கத்தில் இருந்தன. எதிர்பார்க்கப்பட்ட அவர் வெள்ளைக்குதிரையின் மீதேறி வருவார், அவர் இறுதிதீர்ப்பு சொல்லப்படும் நாள் வரை 7, 9, 19 ஆண்டுகள் ஆட்சி செய்வார் என்று எதிர்பார்த்திருந்தனர். மஹதியைப் பற்றிய குறிப்பு குரானில் இல்லையென்றாலும், ஹதீஸிலிருந்து பல குறிப்புகள் கொடுக்கப்படுகின்றன. சில முகமதிய குறிப்புகளினின்று, மஹதியின் வரவு, கிருத்துவின் இரண்டாவது வரவு நாளுடன் சேர்ந்திருக்கும் என்றும், அப்பொழுது இருவரும் சேர்ந்து மஷிஹ்-அத்-தஜ்ஜல் (masih ad-Dajjal) அல்லது போலி தீர்க்கதரிசி (False imposter) அல்லது எதிர்-கிறிஸ்து (Anti-Christ) என்பரை எதிர்ப்பார்கள் என்று சொல்கின்றன.

Kalki coming on white horse

Kalki coming on white horse

மொஹம்மதுக்குப் பிறகு வர வேண்டிய மஹதி பற்றி சுன்னிஷியா முகமதியர் வேறுபடுவது: மொஹம்மதுக்குப் பிறகு ஒரு வரும் மஹதி பற்றி, சுன்னி மற்றும் ஷியா முகமதியர்களில் வேற்றுமை வருகிறது. சுன்னிகளின் நம்பிக்கையின் படி, மொஹம்மதுக்குப் பிறகு வர வேண்டிய மஹதி இன்னும் வரவில்லை, அதனால் வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஷியா முகமதியர்களைப் பொறுத்த வரையில் மஹதி ஏற்கெனவே பிறந்தாகி விட்டது, அவர் மறைந்து வாழ்கிறார். மஹதி பிறந்து வளர்ந்து இருக்கும் நேரத்தில், தனது ஏழாவது வயதில் காணாமல் போய்விட்டார். உலக மக்களுக்கு நியாயம் வழங்க, ஒரு நாள் தோன்றுவார், அவர் தான் அல்-மஹதி அல்லது 12வது இமாம் என்று சொல்கின்றனர், என்று ஷியாக்கள் நம்புகின்றனர். அந்நிலையில் ஏற்கெனவே பலர் தான்-தான் மஹதி என்று அறிவித்துக் கொண்டு தனிசாகைகளை, பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். உதாரணத்திற்கு சில கொடுக்கப்படுகின்றன[7]:

  • மொஹம்மது ஜோன்புரி – மஹ்தவியா பிரிவு.
  • பப் – சையிது அலி மொஹம்மது – பப்பிஸம்
  • மொஹம்மது அஹம்மது – மஹதியின் ஆட்சி – சூடான்.
  • மீர்ஜா குலாம் அஹமது – அஹமதியா பிரிவு.

பஹாய் முகமதியர் இரான் மற்றும் அஹமதியர் பாகிஸ்தான் நாடுகளிலிருந்து, அவர்கள் முஸ்லிம்கள் அல்லர் என்று அறிவிக்கப் பட்டு துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். அவர்களது மசூதிகளும் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டன.

white-horse Mahdi myth

white-horse Mahdi myth

வெள்ளைக்குதிரைக் கதைகள், புராணங்கள்: வெள்ளைக்குதிரை என்பது பழைய நாகரிங்களில் இருந்து வந்துள்ளது மற்றும் அவர்களின் இலக்கியங்களில் வெளிப்பட்டுள்ளன. இது பொதுவாக, சூர்யன், சூயனின் ரதம் முதலியவற்றுடன் சம்பந்தப்படுத்தப் பட்டுள்ளது. செல்டிக் (Celtic), ட்ருயிட் (Druid), கிரேக்க (Greek), ரோம ()Rome நாகரிகங்களில் எபோனா (Epona) என்ற தேவதை குதிரை, கழுதை முதலியவற்றின் காக்கும் தேவதையாக உள்ளது. யூத-கிருத்துவ-முகமதிய நம்பிக்கைகளில் வெள்ளைக் குதிரை புராணம் மனங்களில் ஆழப்பதிந்திருப்பதினாலும், அது பெரும்பாலான இந்து மக்களின் கல்கி அவதாரத்துடன் ஒத்துப் போவதினாலும், அக்பர் அதனை பயன்படுத்தி, எல்லா நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் பக்தியினால் ஆட்டிப்படைக்கலாம் என்று தீர்மானித்திருப்பார். இதனால், பவிஷ்யபுராணத்தைத் திரித்து, மொஹம்மது நபி தோன்றுவார் என்றெல்லாம் எழுதி சுலோகவரிகளை இடைசெருகல் (interpolations) செய்தனர். இன்னொருபக்கம், அல்லா உபநிஷதம் எழுதப்பட்டு முகமதியர்-இந்துக்கள் இருவர்களையும் மூளைசலவை செய்யப் பார்த்தார். புராணங்கள் அக்பர் மற்றும் ஆங்கிலேயர்கள் காலங்களில் மாற்றப்பட்டன, திருத்தப்பட்டன, இடைச்செருகல்கள் செய்யப்பட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[8].

வேதபிரகாஷ்

© 19-06-2015

[1] Harun Yahya (Adan Oktar), The Prophet Jesus (as) and Hazrat Mahdi will come this century, http://www.mahdi.com/

[2] Ali M. Ansari (Ed.), Perceptions of Iran: History, Myths and Nationalism from Medieval Persia to the Islamic Republic, I. B. Tauris % Co. Ltd, New York, 2014, p.58.

[3] 1584ம் ஆண்டு.

[4] Najaf Haider, The Monarch and the Millennium – A new inyerpretation of the Alf coins of Akbar, pp.76-83.

The millennial year of the Hijra (A. H. 1000 = Oct. 9, 1391, to Sept. 27, 1592, o.s.). Millennial coins issued.

https://ia601004.us.archive.org/3/items/MonarchMillennium/Monarch%20&%20Millennium.pdf

[5] Rajat Datta (Ed.), Rethinking a Millennium: Perspectives on Indian History from the Eighth to Eighteenth Century, Akbar Books, New Delhi, 2008, p.132.

[6]  “அயினி அக்பரி”யில், இந்தியாவில் வழக்கத்தில் உள்ள எல்லா சகாப்த உபயோக முறைகள், கணக்கிடுகள் முதலியவற்றை அறிந்து கொண்டார் என்றுள்ளது.

[7] இரான் (ஷியா), பாகிஸ்தான் (சுன்னி) போன்ற நாடுகள், இவர்களை “முஸ்லிம்கள்” இல்லை, “காபிர்கள்” என்றறிவித்து, அவர்களது மசூதிகளை உடைத்து, நாடு கடத்தியுள்ளன. இதனால் தான் பஹாய் தில்லியில் “தாமரை கோவில்” கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அஹமதிய முஸ்லிம்களும் இந்தியாவில் பல இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

[8] Klaus K. Klostermaier, A Study of Hinduism, Third edition, New York Press, 2007, p.582.

அக்பர், தீன் இலாஹி மற்றும் இதர மதங்களுடன் உரையாடல்!

ஜூன் 19, 2015

அக்பர், தீன் இலாஹி மற்றும் இதர மதங்களுடன் உரையாடல்!

[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (1)].

Akbar having religious discussion with others

Akbar having religious discussion with others

அக்பரின் 1582ல் அறிமுகப்படுத்தப்பட்ட தீன்-இலாஹியைப்பற்றிப் பிரமாதமாகப் பேசப்பட்டு வருகிறது. அவர் ஏதோ எல்லா மதங்களையும் இணைத்து, அனைவருக்கும் ஏற்கும்படியான ஒரு புதிய, சமரசம் கொண்ட, ஒப்புதல்-சம்மதம் கொண்ட, தீர்வுகளை அளிக்கும் சமத்துவ மதத்தை ஆரம்பித்தார், அறிமுகப்படுத்தினார், நிறுவினார் என்றெல்லாம் சமத்துவ வல்லுனர்கள், சமதர்ம எழுத்தாளர்கள் சரித்திரப் புத்தகங்களில் எழுதித் தள்ளினர். பிறகு அது ஏன் அவர் இறந்தவுடன், அதுவும் மறைந்து விட்டது என்று அத்தகைய விளக்கத்தை அவர்கள் கொடுத்து விளக்கவில்லை. அடிப்படை இஸ்லாம் கொள்கைகளினின்று மாறுபட்ட பழக்க-வழக்கங்களை நுழைத்தபோது, கர்வம் கொண்ட, எதேச்சதிகாரத்துடன் செயல்பட்ட அக்பருக்கும், மற்ற அடிப்படைவாத காஜிக்கள், மௌல்விகள் மற்றும் மௌலானாக்கள் முதலியோருக்கும் ஏற்பட்ட ஆக்ரோசமான சண்டை, வாதம், விவாதங்களையும் குறிப்பிடவில்லை. மேலும் காஜிக்கள், மௌல்விகள் மற்றும் மௌலானாக்கள் அக்பர் தொடர்ந்து தங்க்களது தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைவது, தங்களது மனைவிகள், சகோதரிகள், மகள்கள் முதலோருடன் குறுக்கிடுவது, அவர்களையும் மயக்கி தனது ஹேரத்தில் சேர்த்துக் கொள்வது போன்ற காரியங்களை வெகுவாக எதிர்த்தனர். அத்தகைய நிலைமையை உருவாக்கும் “மீனா பஜார்” பற்றி பிறகு இன்னொரு இடத்தில் விளக்கப்படுகிறது.

Akbar with birds

Akbar with birds

அக்பர் ஏன் அனைத்து மதங்களுடனான உரையாடலைத் தொடங்க வேண்டும்?: அக்பர் ஆட்சிக்கு வந்து, ஆளத்தொடங்கிய போது, பெருபான்மையான மக்கள் இந்துக்கள் மற்றும் அவர்களது ஒத்துழைப்பு, உழைப்பு, உதவி இல்லாமல் பாரதம் முழுவதையும் யாராலும் ஆட்சி செய்ய முடியாது என்பதனை அறிந்து கொண்டார். தெற்கே 1336லிருந்து விஜயநகர சாம்ராஜ்யம் இருந்தது, அது 1646 வரை சிறந்து விளங்கியது. ஒரு தடவை அதிரடியாகத் தாக்கி, குறிப்பிட்டப் பகுதியில் உள்ள ஆட்சியாளரை வென்று விடுவதால் மட்டும் அப்பகுதி முகலாய அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்தாலும், மக்கள் தொடர்ந்து தங்களது வேலைகளை சாதாரணமாகத்தான் செய்து கொண்டிருந்தார்கள், மேலும், முகமதியரைப் பற்றி வெறுப்பைத்தான் அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதனைத் தெரிந்து கொண்டார். முகமதியர் என்றாலே, கோவில்களை இடிப்பவர்கள், விக்கிரங்களை உடைப்பவர்கள், கோவில் செல்வத்தைக் கொள்ளையடிப்பவர்கள், பெண்களைத் தூக்கிச் செல்ப்பவர்கள், சிறுவர்-சிறுமிகளை அபகரித்துச் செல்பவர்கள் என்று தான் தீர்மானித்துள்ளார்கள், அவ்வாறுதான் “மிலேச்சர், துருக்கர்” என்று குறிப்பிடப்பட்டு நடத்தப் படுகிறார்கள் என்றறிந்து கொண்டார். அதனால், அவர்கள் அரசுடன் சுமுகமாக இருக்க வழியைத் தேடினார். அப்பொழுது உருவான எண்ணம் தான் “தீன் இலாஹி”. அல்லாவுத்தீன் கில்ஜியும் 14ம் நூற்றாண்டில் அத்தகைய திட்டத்தை வைத்திருந்தாலும், அவர் கத்தியால் சாதிக்க நினைத்தார், ஆனால், அக்பர் பணம் மூலம் சாதிக்க முடிவு செய்தார்[1], அதாவது உரையாடலுக்கு வந்தவர்களுக்கு பரிசளித்தார்.

Akbar and Sun - gold coin

Akbar and Sun – gold coin

போர்களில் ஈடுபட்டுக் கொண்டு, இடையிடையே மதவுரையாடல்கள்: அயினி-அக்பரி, அக்பர் நாமா போன்ற நூல்களைப் படிக்கும் போது, அக்பர் ஆப்கானிஸ்தானம், குஜராத், காஷ்மீர், வங்காளம் என்று பல இடங்களுக்குச் சென்று போராடுவதாக விவரங்கள் உள்ளன. இடையிடையே, பதேபூர் சிக்கிரிக்கு வந்து, மற்றவர்களுடன் மதம் சம்பந்தப்பட்ட உரையாடல்களில் ஈடுபடுவதாக உள்ளது. மற்றவர்களுடன் சேர்ந்து ஆன்மீக அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதற்காக பதேபூர் சிக்கிரி நகரத்தில் இபாதத் கானா என்ற கட்டிடத்திற்கு 1572ல் அடிக்கல் நாட்டினார், 1573ல் கட்டி முடிக்கப்பட்டது. இபாதத் கானாவில் அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை அழைத்து, உரையாடல்களை அக்பர் நடத்தினார். முதலில் இஸ்லாத்தில் உள்ள குழுக்களுடன் உரையாடல்கள் நடத்தியபோது, அமீர்களை கிழக்கு, சையதுகளை மேற்கு, உலேமாக்களை தெற்கு மற்றும் செயிக்குகளை வடக்கு திசைகளில் உட்காரவைத்து உரையாடினார். இது அவரது ஜோதிட நம்பிக்கையைக் காட்டுவதாக உள்ளது, இல்லை இஸ்லாத்தில் வாஸ்து போன்ற முறை இருந்ததா என்று தெரியவில்லை. போர்களில் ஈடுபட்டபோது, பல குற்றங்கள், வன்முறைகள், வரம்பு-மீறல்கள் நடந்துள்ளன. குறிப்பாக இந்துக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, எப்படி ஒருபக்கம் போர் மறுபக்கம் உரையாடல் என்று ஈடுபட்டார் என்று தெரியவில்லை.

Firangi in Mughal court

Firangi in Mughal court

அக்பரது மதத்தினைப் பற்றிய கிருத்துவ மிஷனரிகளின் பதிவுகள்: ஜெசுவைட்டுகளுக்கும் அக்பருக்கும் உள்ள தொடர்புகள் இருவகையானது. ஒன்று வியாபார ரீதியில் அவர்கள் இடைத்தரகர்களாக வேலை செய்தனர், இரண்டு அக்பருடன் மதரீதியில் உரையாடிப் பார்த்தனர்[2]. அவர்களது எழுத்துகளில் கிருத்துவ சார்புடைய, பாரபட்சமான பதிவுகள் அதிகமாகவே இருக்கின்றன. அக்பர் இவர்களிடம் கிருத்துவத்தைப் பற்றி கேட்டு அறிந்து கொண்டாலும், தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. மேலும் தன்னையே ஒரு மதத்தலைவர் அல்லது தெய்வீகநிலைக் கொண்டவர் போலக் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற நிலை வந்தபோது, மற்ற மதத்தினரை மதிக்கவில்லை, மாறாக அவற்றில் உள்ளவற்றை, குறிப்பாக சிலவற்றை தன்னுடைய மதத்தில் சேர்த்துக் கொண்டார். மோன்செரட் [Monserrate] போன்ற கிருத்துவ மிஷனரிகள் தங்களை அக்பர் மதிக்கவில்லை என்று பதிவு செய்துள்ளனர். “கமென்டாரெஸ்” [Commentarius] போன்ற நூல்களும் அக்பர் தான் உருவாக்கிய “தீன்-இலாஹி” மத்ததின் கடவுளாக தன்னை பாவிக்கச் சொன்னதாக குறிப்புள்ளது. நிச்சயமாக அவருக்கு தன்னை ஒரு கடவுள் அல்லது ஒரு பெரிய தீர்க்கதரிசி என்று தன்னை நம்பவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது என்று தெரிந்தது என்று பெர்ரி டு ஜாரிக் என்ற பாதிரி பதிவு செய்துள்ளார்[3]. போர்ச்சுகீசியரைத் திருப்திப்படுத்த அவர்கள் கொடுத்த தொப்பி, ஆடைகளை அணிந்து கொண்டார் என்று எழுதியுள்ளனர். மேலும் அவர்களை நம்ப வைப்பதற்காக, அக்பர் ஒருமுறை ஜெசுவைட்டுகள் இருக்கும் இடத்திற்கு வந்து, கிருத்து மற்றும் மேரியை வணங்கினார்[4]. தௌலபுரம் அக்பரைச் சந்திக்க வந்த ஜெசுவைட் கிருத்துவப் பாதிரிகளும் இதைப் பற்றி கண்கூடாகக் கண்டு எழுதி வைத்துள்ளனர். இவர்கள் ஏதோ அக்பர் கிருத்துவத்தை நெருங்கி வந்துவிட்டார், ஏற்றுகொள்ளவும் தயாராகி விட்டார் என்பதுபோல தங்களது ஆவணங்களில் எழுதி வைத்தாலும், அக்பர் தனது நம்பிக்கையிம் ஸ்திரமாக இருந்தார் என்பதுதான் உண்மை. அவர்களிடம் நட்புடன் இருந்த தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டார். போர்ச்சுகீசியர்களும் வியாபார ரீதியில் சலுகைகளைப் பெற்றார்கள்.

Sajahan and sun gold coin

Sajahan and sun gold coin

அக்பர் சூரிய வழிபாட்டை ஊக்குவித்தது: ஜலாலுத்தீன் மொஹம்மது அக்பர் [جلال الدین محمد اکبر , जलालुद्दीन मुहम्मद अकबर] மக்கள் தன்னை “ஜில்-இ-இலாஹி” [“Jil-i-Ilahi” which means shadow of God] அதாவது, “அல்லாவின் நிழல்” என்று அழைத்ததாக சொல்லிக் கொண்டார்[5]. 1556-1605 காலத்தில் தில்லியில் ஆட்சி செய்து வந்த காலத்தில், அக்பர் ஆசாரமான இஸ்லாத்தைப் பின்பற்றாமல் இருப்பது கண்டு பல முல்லாக்கள் கவலைக் கொண்டனர். அக்பர் காலத்தில் இஸ்லாம் மிகவும் ஆபத்தில் இருந்தது என்று அவர்கள் எடுத்துக் காட்டினர். முல்லா அப்துல் காதிர் பதாயூன் [Mulla Abdul Qader of Badayun] என்பவர் தான் கண்ணால் கண்டாதாக பலவிசயங்களைக் குறிப்பிடுகின்றார். அக்பர் சூரிய வழிபாட்டை ஊக்குவித்ததாக எடுத்துக் காட்டுகிறார். பிரசித்தி பெற்ற ஆலிம், முல்லா சிரி என்பவர் சமஸ்கிருத நூல்களை பாரசீக மொழியில், மொழிபெயர்க்க அக்பரால் நியமிக்கப்பட்டார். அக்பர் சூரியனைப் பார்த்து ஆயிரத்தொரு பெயர்களை உச்சரித்தபோது, அவற்றைத் தொகுத்து, சமஸ்கிருதத்தில் ஒரு பாட்டை எழுதிக் கொடுத்தார்[6].சூரிய உதயம், நடுப்பகல், சாயங்காலம் மற்றும் நடு-இரவு என்ற வேலைகளில் சூரியனை ஆராதிக்க வேண்டும் என்று “நான்கு கட்டளைகளை” இட்டதாகக் குறிப்பிடுகின்றார்[7]. இதற்கான அதிகாரத்தை வெளியிடுமாறு மௌலானாக்கள் கேட்டபோது, அப்துல் பசல் என்பவர், “சூரியன் தான் கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைந்து உலகத்திற்கு ஒளி அளிக்கின்றது. இதற்கான ஆதாரம் குரானில் சூரியன் என்ற சூரா உள்ளது”, என்று விளக்கம் அளித்தாராம்[8]. ஆசார இஸ்லாத்தில் முகமதியர் மேற்கு நோக்கித்தான் தொழவேண்டும், சூரியனை வழிபட வேண்டும் என்றால், கிழக்கு நோக்கி தொழவேண்டும், இது இஸ்லாத்திற்கு விரோதமானது. இதனால், மௌல்விகள் இத்தகைய விளக்கங்களை ஏற்றுக் கொள்ளவில்லை[9]. தெய்வீக விசயங்களில் (முதாஹிதூன்) ஒரு குறிப்பிட்ட விளக்கம் கொடுத்து பிரச்சினையை தீர்த்து வைக்கும் நேர்மையான ஆட்சியாளர் (சுல்தான்–இ-ஆதில்) தான் மற்ற பிரபலமான தெய்வீகமான அதிகாரம் பெற்றவர்களை (முஜாஹித்) விட, அல்லாவின் கண்களுக்கு உயர்ந்தவராகக் காணப்படுவார் என்று 1579ல் உலேமா ஆணையிட்டார்[10]. அக்பர் சூரிய நாட்காட்டியை (Solar Calendar) அறிமுகப்படுத்தி, அதன்படி, தனது ஆட்சிக்காலத்தையும் (Akbar Era) குறிக்க ஆரம்பித்தார்.

வேதபிரகாஷ்

© 19-06-2015

[1] He was so well acquainted with history that it is possible religion, that he may have been influenced by the example of Sultan Alau-d din Khilji, who at the beginning of the fourteenth century had allowed his vanity to be flattered by a similar mad scheme. Although the Sultan contemplated the enforcement of conformity by the power of the sword, while Akbar trusted to the influence of persuasion aided by bribery, the parallel between the two cases is sufficiently close to warrant quotation of the historian’s account of Alau-d din’s proposal.

Vincent A. Smith, Akbar, the great Mogul 1542-1605, Humphrey Milford, Oxford at the Clarendon Press, 1917, p.209.

[2] கடற்கொள்ளை, குதிரை விற்பனை, மற்ற பொருட்கள் இறக்குமதி-ஏற்றுமதி இவற்றில் ஜெசுவைட்டுகள் மற்றும் அரேபியர்-முகமதியர் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் வியாபாரத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க மத்தியஸ்தம் செய்து வந்தனர். அதற்காக கமிஷனையும் பெற்று வந்தனர்.

[3] It is more or less certain that he has a strong desire to be looked upon, and esteemed as a God, or some great Prophet.

Pierre Du Jarric, Akbar and the Jesuits – An account of the Jesuit Missions to the court of Akbar, George Routledge & Sons Lyd, London, 1926, p.68.

[4]  J. S. Hoyland (Trans), The Commentary of Father Monsrrate, S. J., on his Journey to the Court of Akbar, Humphrey Milford, Oxford University Press, London, 1922, p.48.

[5] http://livelystories.com/2013/12/02/an-interview-with-jalaluddin-muhammad-akbar/

[6] Molla Shiri, a well known ‘Alim of the reign of Akhar, was entrusted with the duty of translating the Sanskrit books into persian language, When he was informed that, the king utters one thousand one names of the sun looking towards it; to satisfy him he composed a poem which contained thousand stanza in praise of th sun and placed it before the king.

Abul Hasan ‘Ali. Nadwi, Saviours of Islamic Spirit, vol. III, P. 71-72.

[7] Maulana Mubarik presented an application em-powering Akbar to issue precepts after interpretation, and that he revered the sun, and he had special timings for its worship: sunrise, mid-day, sunset and mid-night. The reason for midnight worship was, says Abul Fazl: “The direction of that which gives light to the world has turned towards devotion and those afflicted by the dark nights received the tidings of delight”. For the approval of this wicked act, reliance was placed upon the Quranic Sura “The Sun”.

[8] Quran, Surah: XCI: 1-15.

[9] http://www.irfi.org/articles/articles_901_950/emperor_mogul_akbar_and_shai.htm

[10] Martin E. Marty, R. Scott Appleby, Fundamentalisms Comprehended, The University of Chicago Press, Chicago University, USA, 1995, p.299-300.

இந்தியாவில் காலக்கணக்கீட்டு முறையில் சுழற்சி மற்றும் நீண்டக்கிரம வழிகள் பின்பற்றப்பட்டன!

ஜனவரி 8, 2010

இந்தியாவில் காலக்கணக்கீட்டு முறையில் சுழற்சி மற்றும் நீண்டக்கிரம வழிகள் பின்பற்றப்பட்டன!

இந்தியர்களுக்கு சரித்திர உணர்வே இல்லை என்று ஆங்கிலேயர்கள் குற்றஞ்சாட்டுவதுண்டு.

அவ்வழி வந்த நவீனகால, மார்க்ஸியவாத சரித்திர ஆசிரியர்களும் அவ்வாறே பேசுவர், எழுதுவர்.

இப்பொழுது, அவர்கள் இந்தியாவில் காலக்கணக்கிட்டு முறையில் சுழற்சி வழியில்தான் பின்பற்றப்பட்டது என்று வாதித்தனர். முகமதியர்கள் வந்தபிறகுதான் நீள்கிரம முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் வாதிடப்பட்டது.

ஆனால், இத்தகைய கணக்கு சம்பந்தமான தத்துவங்களை சரித்திரத்தில் புகுத்தி குழப்புவது மற்றும் தாங்களும் குழம்பிப் போவது தவறு என்று மற்றவர்களால் எடுத்துக் காட்டப்பட்டது.

உடனே இப்பொழுது ரோமிலா தாபர் சுழற்ச்சி மற்றும் நீள்கிரம வழிகள் இரண்டும் பின்பற்றப்பட்டன என்று புதியதாக ஒரு கதையை விட ஆரம்பித்து விட்டார் போலும்!

2000 ஆண்டில் ஆஸ்லோ மாநாட்டில் ஹபான்ஸ் மிக்கியா என்ற மார்க்ஸீய சரித்திரவாதி இந்தியர்களின் காலக்கணக்கியல் சுழற்சி முறையானது, முகமதியர்கள் வந்துதான் நேர்காணக்கணக்கியல் ஆரம்பித்தது என்று கணக்குத் தெரியாமல் குழப்ப ஆரம்பித்தார்.

அப்பொழுது பலர் அதிலுள்ள தவறுகளை எடுத்துக் காட்டி விமர்சனம் செய்தனர். சரித்திர ஆசிரியர்கள் கணக்கு / வானியல் பற்றி பேசும்போது, கொஞ்சமாவது அடிப்படை விஷயம் தெரிந்திருக்கவேண்டும், இப்படி ஒன்றுமே தெரியாமல் உளரக்கூடாது, ஏனெனில் நேர்கிரம காலக்கணக்கீடு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொருந்தும். அது அதிகமாகும்போது, சுழற்சிமுறை பின்பற்றப்படுகிறது. இதில் ஒன்றும் கணக்கில் குழப்பம் இல்லை. ஆனால் அடிப்படையேத் தெரியாத சரித்திரவாதிகள்தாம் உளரிக்கொட்டுகின்றனர்.

உண்மைத் தெரிந்தவுடன், மறுபடியும் அந்த அபத்த ஊளரல்களை ரோமிலா தாபர் மாற்றியமைத்து உளர ஆரம்பித்துவிட்டார்.

அதாவது இந்தியர்கள் இரண்டு முறைகளும் கடைபிடித்தனர், இருப்பினும் அவர்களது சரித்திர காலக்கணக்கீடு தவறானது, புராணங்களில் உள்ள கணக்கியல் தவறு, இந்திய வம்சாவளிகள் உருவாக்கப்பட்டது என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டது வேடிக்கையாக உள்ளது!

இந்தியாவில் இருந்துகொண்டு தமது பாண்டித்தையத்தை, புலமையை, திறனை உண்மையாக பயன்படுத்தாமல், யாரோ அயல்நாட்டவர் காசு கொடுக்கிறார்கள், பதவி-பட்டம்-பரிசு கொடுக்கிறார்கள் என்று இப்படி தமது அறிவை அடகு வைத்து, அறிவுள்ள-அடிமைகளாக, சித்தாந்த கூலியாட்களாக இருப்பதே என்னே விந்தை?

இதுவும் காலத்தின் கோலம், அலங்கோலம், வளைவு, சுழிவு எல்லாம்……………………..!

இதை அரைகுறையாகப் படித்துப் புரிந்து கொண்ட சில திராவிட ஆலோசகர்கள் கருணநிதிக்கு சொல்ல அவரும், இதை “தமிழ் புத்தாண்டு” விசயத்தில் புகுத்தி குழப்பப் பார்க்கிறார்.

காலகணக்கீடு என்பது, நர்சத்திரங்கள், சூரியன் மற்றும் சந்திரன் முதலியவற்றின் குறிப்பிட்ட நிலத்த இடம், சுழற்சி, எடுத்துக் கொள்ளும் நேரம் முதலியவற்றை வைத்துக் கணக்கிடுவதாகும். இது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே செய்ததாகும். ஆகவே, அரசியல் ரீதியாகவோ, சித்தாந்தரீதியிலாகவோ, இதனை மாற்றமுடியாது.

 Ancient India had cyclic and linear time concepts, says Romila Thapar

Special Correspondent — Photo: S.S. Kumar

http://www.thehindu.com/2010/01/08/stories/2010010855631000.htm


Historian Romila Thapar delivers the Dennis Hudson Memorial talk on ‘Cyclical and linear time in ancient India,’ organised by Prakriti Foundation in Chennai on Thursday.

CHENNAI: Ancient India had concepts of both cyclic time and linear time, eminent historian Romila Thapar said on Thursday.

Referring to the argument in certain circles that the cyclic concept of time characterised Indian civilisation, Dr. Thapar said the view about the Indian civilisation was so firmly maintained that it was argued that the cyclic time prevented the evolving of a sense of history. Even in the 19th century, some scholars suggested that there was a strand of linear time in certain texts but the prevailing view then was that since cycles repeated endlessly, this minimised, if not eliminated, history.

But, the early India also had the concept of linear time, though not described as such but implicit in a variety of forms. Linear time was closely tied to a sense of history and more interestingly, the two concepts did intersect on some occasions.

At a function organised here by the Prakriti Foundation, Dr. Thapar was delivering the Hudson memorial lecture on ‘cyclic time and linear time in ancient India.’

Explaining the concepts of linear and cyclic time, she said the notion of cyclic time might be described as cosmological. Linear time, also called historical, was functional and dependent on human activity. Distinctions could be made between cosmological time and historical time but the degree of separation or overlap would vary depending upon how history or the past was perceived. Though both were carefully constructed, cosmological time was a conscious fantasy of time and reflective of the authors and their mythologies, whereas historical time reflected more manageable concerns.

The two time concepts — cyclical and linear — did not exhaust variations of time. The simultaneous use of more than one form of time indicated that the different segments of society viewed their past in different ways. If time were to be seen as a metaphor of history, many dimensions in historical intersections required to be explored, Dr. Thapar said.

Earlier, she released a publication authored by D. Dennis Hudson, a scholar on religions, on the Vaikuntha Perumal Temple in Kancheepuram.

Lori Hudson, wife of the scholar, handed over copies of the book to priests of the temple.

கோளத்தை எடுத்துக் கொண்டால், தீர்க்க-அட்சரேகைகள் கோடுகளாக வரையப்பட்டாலும், அவை வட்டங்களே! அதாவது கோடுகள் சந்திக்காவிட்டால், உலகம் தட்டையாகிவிடும்!

ஆகவே, கிருத்துவ இறையியல் ரீதியாகத் தான் அத்தகைய குழப்பம் ஏற்பட்டது. ஆனால், இந்திய காலக்கணக்கீட்டியலை அறிந்தபிறகு, ஐரோப்பியர்களுக்கு தங்களுடைய தவறு தெரிந்துவிட்டது! இருப்பினும், பைபிளுக்கு எதிராக போக இருக்கவேண்டுமே என்று விஞ்ஞானிகளை பலாத்காரம் செய்து உண்மையை மறைக்க முயன்றனர்.

அகஸ்டின் என்ற கிருத்துவர்தான் இத்தகைய சுழற்சி மற்றும் நேரிட்டு நேரம் (linear and cyclic time) என்று பிரிவை ஏற்படுத்தினார். அதாவது, கிருத்துவர்களின் நம்பிக்கை மற்றும் விஞ்ஞானம் இரண்டையும் அனுசரித்தது மாதிரி!

Beyond the history of Time

http://www.hinduonnet.com/thehindu/mp/2003/09/18/stories/2003091800260100.htm

Coming out with his second book, “The Eleven Pictures of Time” this week, physicist C.K. Raju declares that it traverses beyond Stephen Hawking’s work. SANGEETA BAROOAH PISHAROTY gives a glimpse

QUESTINONING SCIENCE luminaries like Albert Einstein, Isaac Newton and Augustine’s credibility is no easy undertaking. Not that C.K. Raju is unaccompanied in the world arena in this venture but this home-grown scientist would well be remembered by posterity for arguing on the issue in book length. Being conditioned from one’s school studies that what stalwarts like Einstein propagated is absolute and indisputable, Raju’s arguments might need one to do a lot of unlearning. But, his uninhibited inferences in his latest labour of love, “The Eleven Pictures of Time”, published this week in New Delhi, are a series of rich, wide-ranging logical deductions encompassing arguments of early scholars including Augustine, Proclus, through Anri Poenkare, Einstein, Newton to Stephen Hawking “and beyond.”

Beginning with a critical elucidation of various time beliefs, the SAGE Publication rollout, released by former Prime Minister I.K. Gujral, reasons “the need to de-theologise time”. And in the process, Raju, one of the few minds behind the country’s first supercomputer, Param, puts a question mark on Einstein’s understanding of relativity theory.

“Many scholars before me have questioned Einstein’s understanding of the theory of relativity and I would also say that whether Einstein copied the idea from somebody else belonging to that era is a serious probability,” says Raju. Though Einstein might get the benefit of doubt that he was a prominent man of his age and great minds think alike but the author insists: “I would add that there is a difference between the original idea and a copied version. Einstein falters in his understanding of the theory of relativity, especially the many body problems.”

Relaxing at his favourite joint, the Triveni Kala Sangam canteen, the Head of Centre for Computer Science, MCRP University, Bhopal, calls Einstein “a habitual plagiarist,” often accompanied by a fervent turning of pages to exact paragraphs that hold his arguments. He suggests that a `tilt in the arrow of time’ or a small tendency towards cycles will help mend the prevalent confusion about time.

Unruffled by what he calls a “tiff with a Cambridge scholar” over Newton’s papers, he shifts to the man behind the gravitational force: “Very few people know that Newton was obsessed with religion. He thought the early church distorted the Bible and he immersed himself in researching the facts. So, obviously, a man so obsessed with something will definitely reflect on his scientific notions. But most scholars on Newton refuse to accept that.” He claims that most of Newton’s papers are still unpublished. The first paper of Newton, the author says, came out publicly in 1970 and in 1998, the Imperial College put up a website.

Raju also accuses Augustine of “causing a dichotomy between linear and cyclic time.”

Though Raju had dealt with his time thoughts in his maiden venture, “Times Towards Consistent Theory”, this book took him seven years to delve deep into research on physics, the history of science, comparative religions and sociology. He exhibits an abundance of nifty wit to drive home his point, so much so that, at one point, he persists that the book has gone beyond Stephen Hawking’s bestseller, “A Brief History of Time”.

“The notion of time is central to several theories. Time shapes human value system and mediates the interaction between science and religion, both of which rest fundamentally on assumptions about the nature of time,” states the Editorial Fellow of the Project of History of Indian Science, Philosophy and Culture at Delhi’s Centre for Studies in Civilisations. The 592-page tome ends with a vision of Man as Creator, surprising God.

“True spontaneity and freedom leads to creativity which is not pre-determined by God and hence the inference,” he explains.

Even if the volume, one would understandably deduce by now, is meant only for those with special interest, Raju, labels it as equally aimed at laypersons – it could intrigue anyone and will educate its readers to question the unquestionable.

Well at this point, one would like to leave it to the readers to decide about this and reason why.