மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (5): இறந்தவர்கள் வந்து சாட்சி சொல்லப் போவதில்லை!
நாராயண ஆப்தே ஒரு பிரிடிஷ் ஏஜென்ட் என்று பங்கஜ் பட்னிஸ் தனது வழக்கு ஆவணத்தில் குறிப்பிட்டது: கபூர் கமிஷன் அறிக்கையில், நாராயண ஆப்தே இந்திய ஆகாயப்படையில் இருந்ததாகக் குறிப்பிட்டார்[1]. அது இல்லை என்று நேரிடையாக, யாரும் மறுக்கவில்லை. அதனால், பங்கஜ் பட்னிஸ் [Dr Pankaj Phadnis] என்ற ஆராய்ச்சியாளர், மரணதண்டனை அடைந்த நாராயண ஆப்தேவின் அடையாளம் சரியாகக் கண்டறியப்படவில்லை என்று உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தனது மனுவில் குறிப்பிட்டார்[2]. இருப்பினும் அதற்கான ஆதாரங்களை இவர் எடுத்துக் கட்டவில்லை. அவர் (ஆப்தே) ஒரு ஆங்கிலேரின் ஏஜென்டாக [British Force 136] இருந்திருக்கலாம், அதற்கான வாய்ப்புள்ளது என்றும், அதற்கான ஆவணங்கள் வேண்டும் என்றும் கேட்டார்[3]. ஏனெனில், சுதந்திரத்திற்கு முன்னர், எல்லோருமே ஆங்கிலப் பிரஜைகள் என்பதால், அத்தகைய ஆவணங்கள் அவர்களிடம் இருக்கலாம் என்றும் எடுத்துக் காட்டினார். ஆனால், ஜனவரி 7, 2016 அன்று ராணுவ அமைச்சர், நாராயண ஆப்தே அவ்வாறு இந்திய ஆகாயப்படையில் இருந்ததற்கான, எந்த ஆவணமும் இல்லை என்று தெரிவித்தார்[4].
நாராயண ஆப்தே என்றா பெயரில் இந்தி ஆகாயப் படையில் யாரும் இல்லை – ராணுவ அமைச்சர் பதில்: “நான் இந்த விசயத்தை நன்றாக சோதித்துப் பார்த்தேன். இங்குள்ள ஆகாயப் படை பிரிவுகள், இங்கிலாந்து முதலிய படைப்பிரிவுகளிலும் விசாரித்துப் பார்த்ததில், அத்தகைய பெயரை கொண்டவர், இந்திய ஆகாயப்படையில் இருந்ததாக இல்லை என்று அறிவித்துள்ளனர். தேசிய ஆவணக் காப்பகம், தேசிய நூலகம், மஹாத்மா காந்தி கொலை வழக்கு, தனிப்பட்ட ஆவணங்கள் என்று எல்லாவற்றிலும் பார்த்தாகி விட்டது. 1943-46 ஆண்டுகளுக்கான அரசு கெஜட்டியர்களிலும் தேடிப்பார்த்தாகி விட்டது. ஆனால், அத்தகைய பெயரில் ஆகாயப்படை அதிகாரி இல்லை,” என்று அமைச்சர் பதிலளித்தார்[5]. இது பற்றி கேட்டதற்கு, பங்கஜ் பட்னிஸ், “ஆவணங்கள் இல்லை என்பது வேறு, உள்ள ஆவணங்களில் அவர் பெயர் இல்லை என்பது வேறு, அத்தகைய ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம்….” என்று எடுத்துக் காட்டினார்[6]. மேலும் ஆங்கில அரசு எல்லா ஆவணங்களையும் கொடுக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. குறிப்பாக, ஆங்கில அரசையே குற்றஞ்சாட்டி, இவர் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், யாரும் அத்தகையை ஆதாரத்தை, இருந்தாலும் கொடுக்க மாட்டார்கள் என்பது சாதாரணமான விசயம்.
காந்தி கொலையால் யார்க்கு லாபம்?: காந்தியை கொலை செய்வதால், கோட்சேவுக்கு எந்த பலனும் [benefit] இல்லை. காந்தி கொலையுண்டதால், இந்தியாவில் இந்துக்களின் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை. அப்பொழுதே எப்படி கோடிகள் கொல்லப் பட்டார்களோ, காஷ்மீரத்தில், அப்பொழுது முதல், இப்பொழுது வரை லட்சக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். செக்யூலரிஸ இந்தியாவாக மாறிவிட்டப் பிறகு, முஸ்லிம்கள் அதிகமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டு வெடிப்புகளில் அப்பாவி இந்துக்களை தொடர்ந்து கொன்று வருகின்றனர். பாகிஸ்தான் கொடுக்கப்பட்டுப் பிறகு கூட, இருக்கும் முஸ்லிம்களால் வன்முறை, சட்டரீதியிலான பிரச்சினைகள், பிரிவினைவாத வன்முறைகள், முதலியன தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. எந்த அரசியல்வதியாலும், இதனைத் தடுக்க முடியவில்லை, தடுப்பதாகவும் தெரியவில்லை. ஆகவே, 1947-48 காலக்கட்டத்தில், நிச்சயமாக இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. மாறாக, நேருவுக்கு, ஆங்கிலேயர்களுக்கு லாபம் இருந்தது. நேரு, தனக்கு யாரும் போட்டியில்லாமல் பிரதமர் ஆகிவிட்டார். ஆங்கிலேயர் மறைமுகமாக ஆதிக்கத்தைச் செல்லுத்தி, சென்று விட்டது. பாகிஸ்தானுக்கும் லாபம் கிடைத்தது. ஆக, இந்த கோணத்தில் கவனித்தால், கோட்சே மாட்டிக் கொண்டான் என்று தெரிகிறது. ஏதோ, மனநோயாளி போன்று, தாம் காந்தியைக் கொன்றேன் என்று ஒப்புக் கொண்டு, தத்துவம் பேசி, தண்டனை பெற்றுள்ளான். அவனது வாக்குமூலம் கூட, தத்துவம் போலத்தான் இருக்கிறது. பழிவாங்கும் உணர்வு, கொலை செய்ய வேண்டிய “மோடிவ்” [motive] – துஉண்டுதல் வெளிப்படவில்லை. ஆனால், காந்தியால், ஆரம்பத்திலிருந்தே ஆங்கிலேருக்குத் தலைவலிதான். காந்தி, பாகிஸ்தான் உருவானால், என் பிண்த்தின்மீது தான் நடந்து செல்ல வேண்டும் என்றார், ஆனால், லட்சக்கணக்கான இந்து பிணங்கள்மீது பிரிவினைவாதிகள் நடந்து சென்றனர். நவகாளியில் கூட, இந்துக்கள் கொலைசெய்யப் பட்டபோது, முஸ்லிம்களுக்கு ஆதரவாக, நடை-யாத்திரை மேற்கொண்டார்.
பெரும்பாலான அரசியல்வாதிகள் காங்கிரஸில் இருந்துள்ளனர், பிறகு தான் அவர்கள் மற்ற கட்சிகள் துவங்கியபோது, அவர்களில் சிலர் துவக்கியபோது, அக்கட்சிகளின் உறுப்பினர்கள் ஆனார்கள். அதுபோல, ஆர்.எஸ்.எஸ்.ல் எத்தனையோ நபர்கள் உறுப்பினர்களாக இருந்திருக்கலாம் அல்லது பின்பற்றும் ரசிக்ர்களாகக் கூட இருக்கலாம். அதனால், எல்லோருமே ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் என்று சொல்ல முடியாது. ஒரு தனிநபர் இத்தகைய முரண்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று இறந்து விட்டப் பிறகு, கோட்சே ஆர்.எஸ்.எஸ் இருந்தார்-இல்லை என்ற வாதம் எந்த விதத்தில், நாட்டிற்கு வேறு விசயத்தில் உபயோகப்ப் படும் என்று தெரியவில்லை.
முழு விவரங்கள் பொது மக்கள் முன்பு வைக்காத நிலையில், பாரபட்சத்தோடு, சித்தாந்திகள் எழுதுவது, பிரச்சாரம் செய்வது: தெளிவாக மக்களுக்கு முன்னால் ஆவணங்களை வைக்காமல், ஓரளவுக்கு ரகசயமாக நடத்தப் பட்ட, இவ்வழக்கில், “கோட்சே காந்தியைக் கொன்றான்” என்ற அளவுக்கு தெரிகிறது. ஆனால், பின்னணியில் உள்ள 90% விவகாரங்கள் சொல்லப்படவில்லை, மக்களுக்குத் தெரியாது. ஆனால், இடதுசாரி, மார்க்ஸீய, முஸ்லிம் குழுக்கள், செக்யூலரிஸப் போர்வையில், தெரிந்த விவரங்களையே திரித்து எழுதி வருவது வியப்பாக இருக்கிறது. தி இந்து, பிரென்ட் லைன் போன்றவற்றில் முன்னமே குறிப்பிட்டப் படி, ஏ.ஜி.நூரானி போன்றோர், வேண்டுமென்றே, மிக்கத் திறமையாக, பாதி விவரங்களைக் கொடுத்து, பாதி விவரங்களை மறைத்து கட்டுரை வெளியிட்டுள்ளனர். அவற்றைத் தொகுத்து, பிரச்சார ரீதியில், இணைதளத்தில் பாப்பவும் செய்கின்றனர்[7]. அவர்கள் எழுதியுள்ள தோரணையை கவனித்தால், இவர்கள் ஏதோ, ஜே.டி. கோஸ்லா, கபூர் போன்ற நீதிபதிகளையும் மிஞ்சியவர்கள், அவர்களுக்குத் தான் எல்லாமே தெரியும் என்ற போக்கில் எழுதித் தள்ளியுள்ளனர். ஆனால், “காந்தி சதிகொலை – கோட்சே மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு” என்ற தலைப்பிலேயே, அவர்கள் ஏர்கெனவே தீர்மானித்து எழுதியுள்ள நிலையை வெளிப்படுத்திக் கொண்டு விட்டார்கள். அதாவது, அவர்களின் தீர்மானித்த முடிவுகளுக்கு ஏற்ப எழுதி தொகுத்தார்கள் என்பது தெர்கிறது. ஆகவே, நிச்சயமாக, பாரபட்சமற்ற, நடுநிலையான, ஒருதலைபட்சமற்ற, திரிபுவாதம் இல்லாத, சித்தாந்தசார்பில்லாத, வாதங்கள் அவர்களின் எழுத்துகளில் காணப்படவில்லை.
© வேதபிரகாஷ்
05-07-2018
[1] Indian Express, Mahatma Gandhi murder: Supreme Court told Narayan Dattatraya Apte’s identity mired in doubt, By: PTI | New Delhi | Updated: November 15, 2017 4:45:38 pm
[2] The Week, “Apte was a British agent”, By Dnyanesh Jathar | From issue dated November 12, 2017
[3] https://www.theweek.in/theweek/cover/apte-was-a-british-agent.html
[4] Parrikar’s letter states: “I have got the matter examined. I have been informed that the matter was referred to various agencies within the Air Force, MoD History Division as well as to AA at HCI, UK with the request to provide any information pertaining to Mr Narayan Dattatraya Apte. “All the agencies have confirmed that they have not found any records pertaining to Mr Narayan Dattatraya Apte. History Division of MoD even liased with National Archives, Central Secretariat Library and consulted private papers of Mahatma Gandhi’s murder trial,” it said. The letter also said that the Gazettes of India (Air Branch) for the year 1943-46 were also searched but no information related to him being an IAF officer “could be found anywhere.”
[5] Times of India, Was World War II secret British unit involved in Gandhi murder?, P Naveen | TNN | Oct 5, 2017, 10:15 IST
https://timesofindia.indiatimes.com/city/bhopal/was-world-war-ii-secret-british-unit-involved-in-gandhi-murder/articleshow/60949949.cms
[6] This means his record was destroyed. Force 136 had a policy of destroying records of its operatives. The point I want to drive home is that since the records of Apte are not available, there is a possibility he was a Force 136 operative.
[7] Gandhi’s Assassination – Godse and RSS Connection An E-Digest, Published by Centre for Study of Society and Secularism 602 & 603 New Silver Star, Prabhat Colony Rd., Behind BEST Bus Depot, Santacruz (E), Mumbai: – 400 055. E-mail: csss2work@gmail.com
http://www.csss-isla.com/wp-content/uploads/2015/03/E-Book-RSSS-Godse-Gandhi.pdf