Posts Tagged ‘நாதுராம் கோட்சே’

மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (5): இறந்தவர்கள் வந்து சாட்சி சொல்லப் போவதில்லை!

ஜூலை 6, 2018

மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (5): இறந்தவர்கள் வந்து சாட்சி சொல்லப் போவதில்லை!

Pankaj Phadnis of Abhinav Bharat Mumbai - Vishnu V. Nair- the week

நாராயண ஆப்தே ஒரு பிரிடிஷ் ஏஜென்ட் என்று பங்கஜ் பட்னிஸ் தனது வழக்கு ஆவணத்தில் குறிப்பிட்டது: கபூர் கமிஷன் அறிக்கையில், நாராயண ஆப்தே இந்திய ஆகாயப்படையில் இருந்ததாகக் குறிப்பிட்டார்[1]. அது இல்லை என்று நேரிடையாக, யாரும் மறுக்கவில்லை. அதனால், பங்கஜ் பட்னிஸ் [Dr Pankaj Phadnis] என்ற ஆராய்ச்சியாளர், மரணதண்டனை அடைந்த நாராயண ஆப்தேவின் அடையாளம் சரியாகக் கண்டறியப்படவில்லை என்று உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தனது மனுவில் குறிப்பிட்டார்[2]. இருப்பினும் அதற்கான ஆதாரங்களை இவர் எடுத்துக் கட்டவில்லை. அவர் (ஆப்தே) ஒரு ஆங்கிலேரின் ஏஜென்டாக [British Force 136] இருந்திருக்கலாம், அதற்கான  வாய்ப்புள்ளது என்றும், அதற்கான ஆவணங்கள் வேண்டும் என்றும் கேட்டார்[3]. ஏனெனில், சுதந்திரத்திற்கு முன்னர், எல்லோருமே ஆங்கிலப் பிரஜைகள் என்பதால், அத்தகைய ஆவணங்கள் அவர்களிடம் இருக்கலாம் என்றும் எடுத்துக் காட்டினார். ஆனால், ஜனவரி 7, 2016 அன்று ராணுவ அமைச்சர், நாராயண ஆப்தே அவ்வாறு இந்திய ஆகாயப்படையில் இருந்ததற்கான, எந்த ஆவணமும் இல்லை என்று தெரிவித்தார்[4].

Apte british agent- the week

நாராயண ஆப்தே என்றா பெயரில் இந்தி ஆகாயப் படையில் யாரும் இல்லை – ராணுவ அமைச்சர் பதில்: “நான் இந்த விசயத்தை நன்றாக சோதித்துப் பார்த்தேன். இங்குள்ள ஆகாயப் படை பிரிவுகள், இங்கிலாந்து முதலிய படைப்பிரிவுகளிலும் விசாரித்துப் பார்த்ததில், அத்தகைய பெயரை கொண்டவர், இந்திய ஆகாயப்படையில் இருந்ததாக இல்லை என்று அறிவித்துள்ளனர். தேசிய ஆவணக் காப்பகம், தேசிய நூலகம், மஹாத்மா காந்தி கொலை வழக்கு, தனிப்பட்ட ஆவணங்கள் என்று எல்லாவற்றிலும் பார்த்தாகி விட்டது. 1943-46 ஆண்டுகளுக்கான அரசு கெஜட்டியர்களிலும் தேடிப்பார்த்தாகி விட்டது. ஆனால், அத்தகைய பெயரில் ஆகாயப்படை அதிகாரி இல்லை,” என்று அமைச்சர் பதிலளித்தார்[5]. இது பற்றி கேட்டதற்கு, பங்கஜ் பட்னிஸ், “ஆவணங்கள் இல்லை என்பது வேறு, உள்ள ஆவணங்களில் அவர் பெயர் இல்லை என்பது வேறு, அத்தகைய ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம்….” என்று எடுத்துக் காட்டினார்[6]. மேலும் ஆங்கில அரசு எல்லா ஆவணங்களையும் கொடுக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. குறிப்பாக, ஆங்கில அரசையே குற்றஞ்சாட்டி, இவர் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், யாரும் அத்தகையை ஆதாரத்தை, இருந்தாலும் கொடுக்க மாட்டார்கள் என்பது சாதாரணமான விசயம்.

Apte namje not found in the records- Jan 2016

காந்தி கொலையால் யார்க்கு லாபம்?: காந்தியை கொலை செய்வதால், கோட்சேவுக்கு எந்த பலனும் [benefit] இல்லை. காந்தி கொலையுண்டதால், இந்தியாவில் இந்துக்களின் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை. அப்பொழுதே எப்படி கோடிகள் கொல்லப் பட்டார்களோ, காஷ்மீரத்தில், அப்பொழுது முதல், இப்பொழுது வரை லட்சக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். செக்யூலரிஸ இந்தியாவாக மாறிவிட்டப் பிறகு, முஸ்லிம்கள் அதிகமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டு வெடிப்புகளில் அப்பாவி இந்துக்களை தொடர்ந்து கொன்று வருகின்றனர். பாகிஸ்தான் கொடுக்கப்பட்டுப்  பிறகு கூட, இருக்கும் முஸ்லிம்களால் வன்முறை, சட்டரீதியிலான பிரச்சினைகள், பிரிவினைவாத  வன்முறைகள், முதலியன தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. எந்த அரசியல்வதியாலும், இதனைத் தடுக்க முடியவில்லை, தடுப்பதாகவும் தெரியவில்லை. ஆகவே, 1947-48 காலக்கட்டத்தில், நிச்சயமாக இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. மாறாக, நேருவுக்கு, ஆங்கிலேயர்களுக்கு லாபம் இருந்தது. நேரு, தனக்கு யாரும் போட்டியில்லாமல் பிரதமர் ஆகிவிட்டார். ஆங்கிலேயர் மறைமுகமாக ஆதிக்கத்தைச் செல்லுத்தி, சென்று விட்டது. பாகிஸ்தானுக்கும் லாபம் கிடைத்தது. ஆக, இந்த கோணத்தில் கவனித்தால், கோட்சே மாட்டிக் கொண்டான் என்று தெரிகிறது. ஏதோ, மனநோயாளி போன்று, தாம் காந்தியைக் கொன்றேன் என்று ஒப்புக் கொண்டு, தத்துவம் பேசி, தண்டனை பெற்றுள்ளான். அவனது வாக்குமூலம் கூட, தத்துவம் போலத்தான் இருக்கிறது. பழிவாங்கும் உணர்வு, கொலை செய்ய வேண்டிய “மோடிவ்” [motive] – துஉண்டுதல் வெளிப்படவில்லை. ஆனால், காந்தியால், ஆரம்பத்திலிருந்தே ஆங்கிலேருக்குத் தலைவலிதான். காந்தி, பாகிஸ்தான் உருவானால், என் பிண்த்தின்மீது தான் நடந்து செல்ல வேண்டும் என்றார், ஆனால், லட்சக்கணக்கான இந்து பிணங்கள்மீது பிரிவினைவாதிகள் நடந்து சென்றனர். நவகாளியில் கூட, இந்துக்கள் கொலைசெய்யப் பட்டபோது, முஸ்லிம்களுக்கு ஆதரவாக, நடை-யாத்திரை மேற்கொண்டார்.

Manohar Malonkar - book

பெரும்பாலான அரசியல்வாதிகள் காங்கிரஸில் இருந்துள்ளனர், பிறகு தான் அவர்கள் மற்ற கட்சிகள் துவங்கியபோது, அவர்களில் சிலர் துவக்கியபோது, அக்கட்சிகளின் உறுப்பினர்கள் ஆனார்கள். அதுபோல, ஆர்.எஸ்.எஸ்.ல் எத்தனையோ நபர்கள் உறுப்பினர்களாக இருந்திருக்கலாம் அல்லது பின்பற்றும் ரசிக்ர்களாகக் கூட இருக்கலாம். அதனால், எல்லோருமே ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் என்று சொல்ல முடியாது. ஒரு தனிநபர் இத்தகைய முரண்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று இறந்து விட்டப் பிறகு, கோட்சே ஆர்.எஸ்.எஸ் இருந்தார்-இல்லை என்ற வாதம் எந்த விதத்தில், நாட்டிற்கு வேறு விசயத்தில் உபயோகப்ப் படும் என்று தெரியவில்லை.

Mira Behn, Gandhi.2

முழு விவரங்கள் பொது மக்கள் முன்பு வைக்காத நிலையில், பாரபட்சத்தோடு, சித்தாந்திகள் எழுதுவது, பிரச்சாரம் செய்வது: தெளிவாக மக்களுக்கு முன்னால் ஆவணங்களை வைக்காமல், ஓரளவுக்கு ரகசயமாக நடத்தப் பட்ட, இவ்வழக்கில், “கோட்சே காந்தியைக் கொன்றான்” என்ற அளவுக்கு தெரிகிறது. ஆனால், பின்னணியில் உள்ள 90% விவகாரங்கள் சொல்லப்படவில்லை, மக்களுக்குத் தெரியாது. ஆனால், இடதுசாரி, மார்க்ஸீய, முஸ்லிம் குழுக்கள், செக்யூலரிஸப் போர்வையில், தெரிந்த விவரங்களையே திரித்து எழுதி வருவது வியப்பாக இருக்கிறது. தி இந்து, பிரென்ட் லைன் போன்றவற்றில் முன்னமே குறிப்பிட்டப் படி, ஏ.ஜி.நூரானி போன்றோர், வேண்டுமென்றே, மிக்கத் திறமையாக, பாதி விவரங்களைக் கொடுத்து, பாதி விவரங்களை மறைத்து கட்டுரை வெளியிட்டுள்ளனர். அவற்றைத் தொகுத்து, பிரச்சார ரீதியில், இணைதளத்தில் பாப்பவும் செய்கின்றனர்[7]. அவர்கள் எழுதியுள்ள தோரணையை கவனித்தால், இவர்கள் ஏதோ, ஜே.டி. கோஸ்லா, கபூர் போன்ற நீதிபதிகளையும் மிஞ்சியவர்கள், அவர்களுக்குத் தான் எல்லாமே தெரியும் என்ற போக்கில் எழுதித் தள்ளியுள்ளனர். ஆனால், “காந்தி சதிகொலை – கோட்சே  மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு” என்ற தலைப்பிலேயே, அவர்கள் ஏர்கெனவே தீர்மானித்து எழுதியுள்ள நிலையை வெளிப்படுத்திக் கொண்டு விட்டார்கள். அதாவது, அவர்களின் தீர்மானித்த முடிவுகளுக்கு ஏற்ப எழுதி தொகுத்தார்கள் என்பது தெர்கிறது. ஆகவே, நிச்சயமாக, பாரபட்சமற்ற, நடுநிலையான, ஒருதலைபட்சமற்ற, திரிபுவாதம் இல்லாத, சித்தாந்தசார்பில்லாத, வாதங்கள் அவர்களின் எழுத்துகளில் காணப்படவில்லை.

© வேதபிரகாஷ்

05-07-2018

The Men Who Killed Gandhi - book

[1] Indian Express, Mahatma Gandhi murder: Supreme Court told Narayan Dattatraya Apte’s identity mired in doubt, By: PTI | New Delhi | Updated: November 15, 2017 4:45:38 pm

[2] The Week, “Apte was a British agent”, By Dnyanesh Jathar | From issue dated November 12, 2017

[3] https://www.theweek.in/theweek/cover/apte-was-a-british-agent.html

[4] Parrikar’s letter states: “I have got the matter examined. I have been informed that the matter was referred to various agencies within the Air Force, MoD History Division as well as to AA at HCI, UK with the request to provide any information pertaining to Mr Narayan Dattatraya Apte. “All the agencies have confirmed that they have not found any records pertaining to Mr Narayan Dattatraya Apte. History Division of MoD even liased with National Archives, Central Secretariat Library and consulted private papers of Mahatma Gandhi’s murder trial,” it said. The letter also said that the Gazettes of India (Air Branch) for the year 1943-46 were also searched but no information related to him being an IAF officer “could be found anywhere.”

https://indianexpress.com/article/india/mahatma-gandhi-murder-supreme-court-told-narayan-dattatraya-aptes-identity-mired-in-doubt-4938689/

[5] Times of India, Was World War II secret British unit involved in Gandhi murder?, P Naveen | TNN | Oct 5, 2017, 10:15 IST
https://timesofindia.indiatimes.com/city/bhopal/was-world-war-ii-secret-british-unit-involved-in-gandhi-murder/articleshow/60949949.cms

[6] This means his record was destroyed. Force 136 had a policy of destroying records of its operatives. The point I want to drive home is that since the records of Apte are not available, there is a possibility he was a Force 136 operative.

https://timesofindia.indiatimes.com/india/was-wwii-secret-british-unit-involved-in-mahatma-gandhi-murder-plot/articleshow/60949099.cms

[7] Gandhi’s Assassination – Godse and RSS Connection An E-Digest, Published by Centre for Study of Society and Secularism 602 & 603 New Silver Star, Prabhat Colony Rd., Behind BEST Bus Depot, Santacruz (E), Mumbai: – 400 055. E-mail: csss2work@gmail.com

http://www.csss-isla.com/wp-content/uploads/2015/03/E-Book-RSSS-Godse-Gandhi.pdf

 

மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (5): வழக்கில் பல முரண்பாடுகள் உள்ளது திகைப்பாக உள்ளது!

ஜூலை 6, 2018

மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (5): வழக்கில் பல முரண்பாடுகள் உள்ளது திகைப்பாக உள்ளது!

Rehashing Gandh-Godse stuff by the leftists and muslims

காந்தி கொலையைப் பற்றி இப்பொழுது ஆராய்ச்சித் தேவையா?: காந்தி கொலைவழக்கு முடிந்தாகி விட்டது, கொலைகாரன் கோட்சே தூக்கில் போட்டாகி விட்டது, ஆகவே, இப்பொழுது அக்கொலை, கொலைசதி முதலியவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதன் அவசியம் என்ன என்று சிலர் கேட்கலாம். தேவை, அவசியம் இல்லையென்றால், தி இந்து (The Hindu), பிரன்ட் லைன் (Frontline) தொடர்ந்து கட்டுரைகள் வெளியிடாது. ராகுல் காந்தி முதல் திக்விஜய் சிங் வரை அவ்வப்போது, ஆர்.எஸ்.எஸ் தான் காந்தியைக் கொன்றது என்று பேசுவதும், அதற்கு ஆர்.எஸ்.எஸ் நேரிடையாக எதிர்த்து முடிவு கட்டுகிற முறையில் நடவடிக்கை எடுக்காமல், யாரோ ஒரு ஆர்.எஸ்.எஸ்-காரர் வழக்குத் தொடுப்பது, மன்னிப்புக் கேட்பது, பிறகு மறுபடியும் மேடையில்-கூட்டத்தில் பேசுவது, ஜனரஞ்சக ரீதியில் நாளிதழ்-சஞ்சிகைகளில் எழுதுவது என்ற செயல்பாடு இருக்காது. ஆர்.எஸ்.எஸ்-தாக்குதல் என்பதை விட, இந்து-எதிர்ப்பு, இந்துமத-தூஷணம் முதலியவற்றில் தான், குறிப்பிட்ட கூட்டங்கள் ஈடுபடுவதை கவனிக்க முடிகிறது.  “ஒரு இந்து, ஒரு இந்து கொன்றான்” என்ற விதத்தில் கூட சுருக்கி, இந்துக்கள் எல்லோருமே கொலைகாரர்கள், வன்முறையாளர்கள், காந்தி போன்றவர்களைக் கூட கொலை செய்ய தயாராக இருப்பதால், இனிமேலும், அத்தகைய வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று அடுக்கிக் கொண்டே போவதை கவனிக்கலாம். ஒருகுறிப்பிட்ட திரிபுவாதத்தில், பிராமண-எதிர்ப்புப் போர்வையில், இந்துமதம் அதிகமாகவே தாக்கப் படுகிறது. ஆகவே, இதை அரசியல் பிரச்சாரம், ஆர்.எஸ்.எஸ்-எதிர்ப்பு என்ற நிலைகளினின்று மீறி செயல்படுவதால், நிச்சயமாக, இதனை ஆராய வேண்டியுள்ளது.

Against RSS - The Hindu, Frontline

திரும்பதிரும்ப எழுதுதல், மறுபடிமறுபடி பேசுதல் முறைகளில் உள்ள ஆபத்து: மேலும், தி இந்து, பிரன்ட் லைன் வகையறாக்கள் அதிகமாகவே பாரபட்சத்துடன், திரிபுவாதங்களுடன், பொய்களை குழைத்து, ஆங்கிலத்தில் திறமையாக எழுதி, துவேசத்தை, விசத்தைக் கக்கியுள்ளார்கள். ஏ.ஜி.நூரானி போன்றோர் அதில் தகுதிக்கு கீழாக எழுதியுள்ளனர் என்பது நோக்கத் தக்கது. பொதுவாக, இவற்றைப் படிப்பவர் சில நூறு ஆட்கள் என்று கொண்டாலும், சில ஆயிரம் ஆதிக்கத்தில் உள்ள எழுத்தாளர்கள், சித்தாந்திகள், பிரபலங்கள் மறுபடி-மறுபடி அத்தகைய பொய்களை திரும்ப-திரும்ப எழுதி, பேசி, தமது கட்டுரைகள், புத்தகங்களில் முதலியவற்றில் எடுத்தாண்டு வருவதால் [quoted-quote methodology], அப்பொய்களே, ஏதோ நிலைநிறுத்தப் பட்ட உண்மை போன்ற பிரமிப்பை உண்டாக்கியுள்ளனர். ஜே. டி. கோஸ்லா தீர்ப்பைக் கூடப் படிக்காமல், இவற்றை குறிப்பிட ஆரம்பித்து விட்டனர். அத்தகைய போக்கு, மிகவும் ஆபத்தானது. இவர்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்களை, பாசிஸ்டுகள், கொயபல்ஸ் என்றெல்லாம் விமசரித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் இவர்கள் தாம் அத்தகைய போக்கைக் கொண்டிருப்பதை காணும் போது, திகைப்பாக இருக்கிறது.

Chaouri Chura 1922

1922 – சௌரி சௌரா, ஒத்துழையாமை இயக்கம், வன்முறை: பிப்ரவரி 5, 1922 ம் தேதி, சுமார் 2,000-2,500 மக்கட்கூட்டம், ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு, திரும்பிக் கொண்டிருந்தது. யுனைடெட் ப்ரோவின்ஸ் [உத்திரபிரதேசம்], கோரக்பூர் மாவட்டம், சௌரி சௌரா என்ற இடத்தில், மார்க்கெட்டை நோக்கி அக்கூட்டம் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, இடையில் ஒரு போலீஸ் ஷ்டேஷனைக் கடந்து சென்றது. அவ்வேளையில் போலீஸார் மற்றும் கூட்டத்தில் உள்ள மக்களுக்கு இடையில் பார்வை பரிமாற்றம் நடந்த போது, அதில் கோபம், சந்தேகம், பீதி, பயங்கரம் என்றிருந்தன. கூட்டம் கடந்து சென்று விட்டது. ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடைசியில் மெதுவாக நடந்து வந்த சிலரை, போலீஸார் பிடித்து, ஷ்டேசனிற்குள் கூட்டிச் சென்று விட்டனர், அடித்துக் கொண்டிருக்கின்றனர்; வெளியில் வந்து துப்பாக்கி சூடு நடத்தப் போகிறது; என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், திரும்பி வந்தகூட்டம், போலீஸ் ஷ்டேஷனைத் தாக்கியது; சூரையாடியது, தீயிட்டுக் கொளுத்தவ்போலீஸ் ஷ்டேஷவும் செய்தது. கொல்லப்பட்டவர் 10 பேர், 20, 23, 30 என்றெல்லாம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதில் அதிகமாகக் கொல்லப்பட்டவர் போலீஸ் தான்.  இந்த வன்முறைக்கு, கலவரத்திற்கு காந்தி தான் பொறுப்பு என்று ஆம்ஹ்கிலேய அரசாங்கம் கூறியது. ஆனால், காந்தி பொறுப்பேற்றுக் கொண்டு, இனி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவதில்லை என்று வாக்குருதி கொடுத்து, முடிவு கட்டினார்.

Churi chura violence 1922

1942-1947 – ஒத்துழையாமை இயக்கமும், சத்தியாகிரகமும்: மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவன் தான் தலைவன் ஆகிறான், வன்முறையை, தூண்டுபவன், கட்டவிழ்ப்பவன் அல்ல! காந்தி இந்தியர்களைக் கட்டுப் படுத்திய விதத்தை கவனிக்க வேண்டும். வன்முறையை கட்டுப் படுத்தியதால் தான், அவர் மஹாத்மா ஆனார்! காந்தி, சௌரி சௌராவை தொடர்ந்து பின்பற்றியிருந்தால், ஆங்கிலேயர் எல்லாம் ஒட்டு மொத்தமாக, அன்றே செத்திருப்பார்கள்! நூறு கோடி இந்துக்களில் ஒரு கோடி இந்துக்கள் நடந்து சென்று  எதிரி நாட்டின் மீது படுத்தாலே, அது தெரியாமல் போய் விடும்!இந்திய / இந்து மக்கள் சக்தி மகத்தானது, அதனை ஒருமித்து, செயல்படுத்த வேண்டும். பலன் கிடைக்கும், என்றுணர்ந்ததால், அவர் சத்தியாகிரகத்திற்கு மாறினார். ஆங்கிலேயனை வன்முறையளன் ஆக்கி, தான், அமைதியின் பிரதிநிதி ஆனதால் தான், காந்திக்கு சிறப்பு உண்டானது. மேனாட்டவரே, ஏசுவின் மறு உருவம், ரிஷி-முனி போன்றவர் போன்று மதிக்க ஆரம்பித்தனர்.

Police recovered four bullets

30-01-1948 – காந்தி கொலையில் நான்கு துப்பாக்கி குண்டுகள் சர்சை விவரங்கள்: காந்தியின் ரத்தக்கறை படிந்த உடை, சுட்டபோது போத்திக் கொண்ட சால்வை, நான்கு புல்லட்டுகளைக் காட்டுகிறது[1].  மேலும், காந்தியின் உடலை பிரேத பரிசோதனையும் செய்யப்படவில்லை என்பது கூரிப்பிடத் தக்கது[2]. “டான்” நாளிதழ் தலைப்புச் செய்தியில் நான்கு முறை துப்பாக்கி சுடப்பட்டு, நான்கு குண்டுகள் பாய்ந்தன என்று குறிப்பிட்டது. பிறகு, “டைம்ஸ் ஆப் இந்தியா,” லோக் சத்தா போன்றவையும் நான்கு புல்லட்டுகள் சுடப்பட்டன என்றே குறிப்பிட்டன. வின்சென்ட் ஷெரீன் [Vincent Sheean] நான்கு கருமையான குண்டு வெடிப்புகள் [“four full dark explosions”] என்று குறிப்பிட்டுள்ளார். “ரியூட்டர்ஸ்” என்ற நாளிதழ் குழுமத்தைச் சேர்ந்த கே.சி. ராய் [K.C. Roy (of Reuters)] என்பவரும் நான்கு துப்பாக்கி குண்டுவெடி சப்தத்தை கேட்டதாகக் குறிப்பிட்டார். “தி இந்து” ஜனவர் 31, 1948 அன்று வெளியிட்ட புகைப்படத்தில் நான்கு துப்பாக்கி காயங்கள் இருப்பதைக் கவனிக்கலாம். அது அரசு புகைப்படம் ஆகும் [government photograph, PIB MG 2626]. ஆகவே, நான்கு எவ்வாறு மூன்றாகியது? சுடுவதற்கு உபயோகப்படுத்தப் பட்ட பெரெட்டா பிஸ்டலில் [Beretta pistol] நான்கு குண்டுகள் பாக்கி இருந்ததாக, போலீஸார் குறிப்பிட்டனர். அப்படியென்றால் இதிலிருந்து மூன்று குண்டுகள் தான் வெளியேறியுள்ளன. பிறகு, நான்காவது புல்லட் எங்கிருந்து வந்தது, எந்த துப்பாக்கி மூலம் சுடப்பட்டது, யார்-எங்கிருந்து சுட்டார்கள் போன்ற கேள்விகள் எழுகின்றன. இருப்பினும் இவ்வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

Four bullets, news cuttings

மீரா பென்னின் வாக்குமூலம்: கபூர் கமிஷன் முன்பு, மீரா பென்[3] வாக்குமூலம் கொடுக்க செல்லும் போது, மொரார்ஜி தேசாய், தான் சிறியவள் என்பதால், எனக்கு சரியாக ஞாபகம் இல்லை என்று சொல்லுமாறு அறிவுருத்தினாராம். ஆனால், மீரா பென் தான் காந்தியின் சீடை டென்பதால் உண்மைதான் கூறுவேன் என்று உறுதியாக இருந்தாளாம்[4]. ஜனவரி 30 அன்று கோட்சே மதியம் வந்தான், காந்தியின் வலது பக்கத்தில் நின்றிருந்தான். அவன் காந்தியைக் கொன்றிருக்கலாம், ஆனால், ஏதோ காரணத்திற்கு அவ்வாறு செய்யவில்லை என்றாளாம். மீரா பென் காந்தியின் அருகில் இருந்தாலும், கோட்சே அவளைத் தள்ளிக் கொண்டு, காந்தியின் முன்பு வந்து சுட்டான் என்பதாலும், அவரது வாக்குமூலம் முக்கியமானதாகக் கருதப் பட்டது. ஆனால், அதுவே பாதிக்கப்பட்டது, அழுத்தத்திற்குட்பட்டது, அதன் மீதும் மாற்றுக் கருத்துச் சொல்லப்படுகிறது எனும் போது, பொது மக்களுக்கு சந்தேகம் எழத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

04-07-2018

 

Mira Behn, Gandhi

[1] The PIL also says an examination of the “blood-stained shawl” that Gandhi wore at the time of his death would reveal the truth behind the number of gunshot wounds and expose the inherent inconsistencies in the murder trial.

Hindustan Times, Two assassins, four bullets and a foreign hand: What PIL seeking fresh probe into Mahatma Gandhi’s murder says, Ashok Bagriya, New Delhi, Updated: Jan 10, 2018 07:50 IST.

[2] https://www.hindustantimes.com/india-news/two-assassins-four-bullets-and-a-foreign-hand-what-pil-seeking-fresh-probe-into-mahatma-gandhi-s-murder-says/story-GKNSQ5ZFqbciLHMf87OO0M.html

[3] Madeleine Slade (Mirabehn) (22 November 1892 – 20 July 1982), daughter of the British Rear-Admiral Sir Edmond Slade, was a British woman who left her home in Britain to live and work with Mohandas Gandhi, the leader of the Indian Independence Movement. She devoted her life to human development and the advancement of Gandhi’s principles.

[4] Tushar Gandhi, Let us kill Gandhi, p.77.

மஹாத்மா காந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (4) – கபூர் கமிஷனிலிருந்து உருவான, ஆதாரமில்லாத சதிதிட்ட கதைகள்!

ஜூன் 20, 2018

மஹாத்மா காந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (4) – கபூர் கமிஷனிலிருந்து உருவான, ஆதாரமில்லாத சதிதிட்ட கதைகள்!

G.V. Ketkar granson of Tilak

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியிலிருந்து உருவான ஜீவன்லால் கபூர் கமிஷன் விசாரணை: இனி கோட்சே வழக்கிற்கு செல்வோம். 05-02-1948 அன்று கோபால் கோட்சே மற்ற எழுவருடன் கைது செய்யப்பட்டார். நாதுராம் கோட்சே மற்றும் விநாயக் ஆப்தே தவிர மற்றவர் விடுவிக்கப்பட்டனர். 15-11-1949 அன்று அம்பாலா ஜெயிலில் இருவரும் தூக்கிலிடப்பட்டனர். 12-11-1964 அன்று கோபால் கோட்சே, மதன்லால் பாவா, விஷ்ணு கர்கரே விடுவிக்கப்பட்டதற்கு ஒரு விழா நடத்தப்பட்டது. அதில் பால கங்காதர திலகரின் பேரன், ஜி.வி. கேட்கர் [கஜானன் விஸ்வநாத கேட்கர்], கோட்சே தன்னிடம், காந்தியை கொலை செய்ய வேண்டும் போன்ற எண்ணத்தை வெளியிட்டதாகவும், ஆனால், தான் மறுத்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால், இதை கேட்கர், பாலுகாகா கனித்கர் என்பவருக்குத் தெரியப் படுத்தியதாகவும், அவர், அப்பொழுதைய மஹாராஷ்ட்ரா முதலமைச்சர் பி.ஜி.கேருக்கு அறிவித்ததாகவும், இந்தியன் எக்ஸ்பிரஸில், 14-11-1964ல் செய்தி வெளியானது. பி.ஜி.கேரோ 1957ல் காலமாகி விடுகிறார். இதனால், கேட்கர் கைது செய்யப்பட்டபோது, மாநில அசெம்பிளி மற்றும் பாராளுமன்றத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், காந்தி கொலை சதித்திட்டத்தில், பெரிய இடத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற நிலையில், அதை முழுவதமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 13-11-1964 அன்று மற்றவர் ஜெயிலிலிருந்து விடுவிக்கப்பட்டனர். கோபால் கோட்சே மறுபடியும் 25-11-1964 அன்று கைது செய்யப் பட்டு, 30-11-1964 அன்று விடுவிக்கப்பட்டார். அப்புத்தகத்தில் உள்ள விசயங்கள் ஏற்கெனவே “பைஞ்சன்” என்ற மராத்தி மாத இதழில் தொட்ராக ஜூன் 1966 முதல் அக்டோபர் 1967 வரை வெளியானது[1].

B G Kher 1888-1957

காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப்பட்டதால், அமுக்கப்பட்டதா?: அதன்படி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் எம்.பி கோபால் ஸ்வரூப் பதக் என்பவரை, குல்சாரிலால் நந்தா நியமித்தார். ஆனால், அவர் மைசூருக்கு கவர்னராக நியமிக்கப் பட்டதால், ஜீவன்லால் கபூர் நியமிக்கப்பட்டார்[2]. ஆனால், இத்தகைய புதிய கருதுகோள், ஏ.ஜி.நூரானியின் திரிபு கட்டுரைகளிலிருந்து தான் உருவானது[3]. உண்மையில், இதில் சம்பந்தப் பட்டவர் அனைவருமே – முதலமைச்சர் முதல் மற்றவர் – காங்கிரஸ்காரர்கள் தாம். கேட்கர் பாம்பே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, அத்தீர்ப்பில், இவ்விவரங்கள் வெளிவந்துள்ளன[4]. அப்படியென்றால், காங்கிரஸ் தான் உண்மையினை மறைத்தது என்றாகிறது. இல்லை, ஏ.ஜி.நூரானி போன்று கட்டுரை எழுதுவதென்றால், காங்கிரஸ் தான் இந்து இந்துத்துவவாதி பைத்தியங்களைத் தூண்டிவிட்டு, காந்தியை கொலை செய்தது என்று கூட எழுதலாம். ஏனெனில், காந்தியின் இறப்பினால், யாருக்கு லாபம் என்று பார்த்தால், நேருக்குத் தான் என்று தெள்ளத் தெளிவாகி விடும்.

Gandhi cartoon-jail
விசனத்தில், விரக்தியில், இயலாமையில், வெளியிட்ட, வெளியிடும் அப்பாவித்தனமான கருத்துகள், பேச்சுகளை செய்திகளாக்குவது: பொதுவாக இந்துத்துவவாதிகள் அப்பாவிகள், “இந்து” என்று பெருமையாக, சொல்லிக் கொண்டு, ஏதோ கடவுளைப் போன்று பேசுகின்ற விதத்தைக் கொண்டிருப்பதால், அடிக்கடி கோபத்தில் சாபம் இடுவது வழக்கமாக உள்ளது. “அவன் நாசமா போக, அழிந்து விடுவான், கட்டையில் போக, அவனை கொன்றே விடுவேன்……,” என்றெல்லாம் கூறுவது வழக்கம். “அவன் நாசமா போக” என்றவுடன் யாரும் நாசமாகி போய்விட மாட்டார்கள். அதாவது, அவர்களின் இயலாமையாலும், இந்துக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு, அமுக்கப்பட்டு வருவதால், தனிமையில் அவ்வாறான கருத்துகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவையெல்லாம், விசனத்தில், விரக்தியில், இயலாமையில், வெளியிட்ட, வெளியிடும் அப்பாவித்தனமான கருத்துகள், பேச்சுகள். அதனால், உண்மையிலேயே அவர்கள் கொல்ல திட்டம் போட்டனர் என்றாகாது. “குஜராத் கலவரம்,” அஸீமானந்தா வாக்குமூலம் போனேஅவற்றிலும், அத்தகைய இயலாமை வெளிப்பட்டது. ஆனால், அவற்றையே ஆதாரமாக்கப்பட்டு, வழக்குத் தொடர்ந்து, இறுதியில் விடுவிக்கப்பட்டார்கள்.

J L Kapoor report 1969

ஜஸ்டிஸ் ஜீவன்லால் கபூர் விசாரணை செத்த பாம்பை அடிப்பது போன்றதாகும்: ஜீவன்லால் கபூர் 21-11-1964 அன்று “காந்தி கொலை சதித்திட்டம் விசாரணை கமிஷனுக்கு” நியமிக்கப்பட்டார். 101 சாட்சிகள், 407 ஆவணங்கள் முதலியவறுடன் 162 முறை கூடி, விசாரணைக்குப் பிறகு அவரது அறிக்கை 30-09-1969 அன்று முடிவடைந்தது. இதற்காக பாம்பே, தில்லி, நாக்பூர், தார்வா, பூனே, பரோடா, சண்டிகர் முதலிய இடங்களுக்கு சென்று வந்தார். ஆர்.எஸ். கொத்வால் மற்றும் பி.பி.லால் மஹாராஷ்ட்ராவுக்கு வக்கீல்களாக இருந்தனர். அவர்கள் முறையே 37 மற்றும் 17 நாட்களுக்கு வாதித்தனர். ஜி.வி. கேட்கர் முதலாவதாக விசஐக்கப் பட்ட சாட்சி. ஜே.டி.நகர்வாலா, மற்றும் மொராஜி தேசாய் முறையே 15 மற்றும் 7 நாட்களுக்கு சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். ஏற்கெனவே, விசாரணை நடந்து, கோட்ஸே மற்றும் ஆப்தே தூக்கிலிட்டப் பிறகு, நடந்த இந்த விசாரணைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஏனெனில், தண்டனை முடிந்த பிறகு, வழக்குகளை போஸ்ட்மார்டம் செய்ய முடியாது.

The accused in Mahatma Gandhi case

ஜூன் 25, 1934 அன்று முதல் முயற்சி: ஜூன் 25, 1934 அன்று காந்தி புனேவுக்கு தன் மனைவி கஸ்தூரிபாய் காந்தியுடன் மாநகராட்சி அரங்கத்தில் உரையாற்ற சென்றார். அவர்கள் இரண்டு மகிழுந்தில் சென்றனர். காந்தியும் அவர் மனைவியும் இருந்த மகிழுந்து அரங்கத்தை சென்று அடையும் முன்னரே, முதலாவது மகிழுந்து அரங்கத்தை வந்து சேர்ந்தது. அந்த வாகனம் அரங்கத்தினுள் நுழைந்த சில நிமிடங்களில் அதனை நோக்கி எறியப்பட்ட கையெறிக்குண்டு அதன் முன் வெடித்தது. இதனால் புனே ஊராட்சித் தலைமை அதிகாரி, இரு காவலர்கள் மற்றும் ஏழு இதர உறப்பினர்கள் பலத்த காயமடைந்தனர். காந்தி எக்காயமுமின்றி உயிர் தப்பினார். அது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை யாரும் கைது செய்யப்படவில்லை. இது கப்பூர் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. “சான்று தேவை” என்ற பீடிகையுடன் விக்கிபீடியா போன்றவை இக்கதையை வெளியிட்டுள்ளன.

Gandhi in Aga Khan palace, 1944

மே 1944, இரண்டாவது முயற்சி: மே 1944, காந்தி அகாகான் அரண்மணை சிறையில் இருந்து மலேரியா தாக்குதலினால் விடுவிக்கப்பட்டார். மருத்துவர் அறிவுறுத்தலின் படி பஞ்ச்கனி மலை வாழ்விடத்தில் தங்கவைக்கப்பட்டார். இவர் இருப்பிடத்தை எப்படியோ அறிந்து நாதுராம் கோட்சே குழுவினர் 20 இளைஞர்களுடன் சிறப்பு பேருந்தில் வந்திறங்கினர். மாலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியை நோக்கி காந்தி எதிர்ப்பு வாசகங்களைக் கூறிக்கொண்டே மிகுந்த ஆவேசத்துடன் உள்ளே நுழைந்தனர். ஆனால் அங்கு இருந்த கூட்ட நெரிசலில் அவர்களால் காந்தியை நெருங்க முடியவில்லை காந்தியை பத்திரமாக அவர் தொண்டர்கள் அழைத்துச் சென்று விட்டனர். “சான்று தேவை” என்று விக்கிபீடியா போன்றவை இக்கதையை வெளியிட்டுள்ளன.

Gandhi at Seva gram

செப்டம்பர் 9, 1944 மூன்றாவது முயற்சி: காந்தி முகமது அலி ஜின்னாவுடன் பேச்சு வர்த்தை நடத்துவதற்காக செப்டம்பர் 9, 1944 ல் சேவாகிராம் ஆசிரமத்தை விட்டு மும்பைக்கு பயணமானார் வழியில் ஹிந்து மகா சபாவினர் இடைமறித்தனர். அவரை மும்பையில் ஜின்னாவுடன் சந்திப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அந்த கூட்டத்தின் தலைவனாக நாதுராம் கோட்சே அவர்கள் காந்தியைக் கொல்வதற்கு முயன்றனர். அவர்களை காவலர்கள் தடுத்து எதற்கு காந்தியை கொல்வதற்கு முயல்கிறாய் என்று வினவியதற்கு வீர் சாவர்க்கர் கட்டளைப்படி அவரைக் கொல்லவேண்டும் என்று கூறினர். டாக்டர் சுசிசிலா நாயர் கப்பூர் ஆணையத்தின் முன் இவ்விவரங்களை அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. “சான்று தேவை” என்று விக்கிபீடியா போன்றவை இக்கதையை வெளியிட்டுள்ளன.

Gandhi train derailed

ஜூன் 29, 1946 நான்காவது முயற்சி: ஜூன் 29, 1946ல் காந்திக்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தொடர்வண்டியில் பிராயாணித்தபொழுது அத்தொடர்வண்டி மும்பை அருகேயுள்ள நேரல்-க்கும் கர்ஜட் க்கும் இடையே தடம் புரண்டது. தொடர் வண்டியின் ஒட்டுநர் அறிக்கை இருப்புப்பாதையின் கடையாணிகளை விசமிகள் வேண்டுமென்றே காந்திக்கு குறிவைத்து கழற்றியுள்ளதால் தடம் புரண்டது என்ற அறிக்கையை சமர்ப்பித்தார். ஏனென்றால் காந்தியின் சிறப்பு தொடர்வண்டி மட்டுமே அவ்வழியில் செல்வதாயிருந்தது. வேறு எந்த வண்டியும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “சான்று தேவை” என்று விக்கிபீடியா போன்றவை இக்கதையை வெளியிட்டுள்ளன.

Gandhi abused by the British

ஜனவரி 20, 1948, ஐந்தாவது முயற்சி: ஜனவரி 20, 1948, மதன்லால் பக்வா, சங்கர் கிஸ்தயா, திகம்பர் பட்கே, விஷ்ணு கார்கேற், கோபால் கோட்சே, நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் அப்தே இவர்கள் அனைவரும் தில்லியில் பிர்லா பவனில் கூடி அடுத்தக்கட்டத் தாக்குதலைத் தீர்மானித்தனர். அதன்படி காந்தி பேசும் மேடை அருகே வெடிகுண்டை வெடிக்கச்செய்து அதன்மூலம் கலவரம் ஏற்பட்டவுடன் காந்தியை சுட்டுக் கொல்லத் தீர்மானிக்கப்பட்டது. சுட்டுக்கொல்ல திகம்பர் பக்டேவும் அல்லது சங்கர் கிஸ்தி இருவரில் யாராவது நிலைமைக்குத் தகுந்தார்போல் செயல்படவேண்டும் என்ற தீர்மானத்தின்படிப் புறப்பட்டனர். அதன்படி தனியார் வாகனத்தை பயன்படுத்தி காந்தி பேசும் மேடையருகே மத்னலால் பக்வாவால் பற்றவைக்கப்பட்டது எதிர்பாராதவிதமாக குண்டு வெடிக்கவில்லை இதனால் இந்த முயற்சியும் தோல்வியுற்றது.மதன்லால் பக்வாவை விட்டுவிட்டு மற்றவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். காவல்துறை மதன்லால் பக்வாவை விசாரித்ததில் உண்மைகள் தெரிந்தன ஆனால் காவல்துறையால் உடனிருந்தவர்களை பிடிக்கமுடியவில்லை. அவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்தைவிட்டு தப்பிவிட்டனர். “சான்று தேவை” என்று விக்கிபீடியா போன்றவை இக்கதையை வெளியிட்டுள்ளன.

Gandhi abused by the British-carricatured

காந்தி கொலை சதிதிட்டம்ஆங்கிலேயர்களின் அமைதியான ஆதரவு: சதி-திட்டம் பற்றிய கருதுகோளை [Conspiracy hypothesis] இவ்வாறு உருவாக்கி, அதனை வளர்த்த பெருமை ஏ.ஜி.நூரானியை சேரும். விக்கிபீடியா போன்றவை “சான்று தேவை” என்று இக்கதையை நூரானி கதையை ஆதாரமாக வைத்து வெளியிட்டுள்ளன. ஆதாரம் இல்லை எனும் போது, அத்தகைய கதைகளை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. மேலும், சம்பந்தப் பட்டவர்கள் இறந்து விட்டனர் எனும்போது, அவர்கள் வந்து சாட்சி சொல்ல முடியாது. உதாரணத்திற்கு, பி.ஜி.கேரோ 1957ல் காலமாகி விடுகிறார். ஆக, அவர் தரப்பு வாத-விவாதங்கள் பிறகு ஏற்படுத்தப் பட்ட கமிஷன்களில் பொருளற்றதாகி விடுகிறது. அப்படி பார்த்தால், காந்தியை அதிக அளவில், திட்டித் தீர்த்த பெருமை ஆங்கில ஆட்சியாளர்களுக்கு உண்டு. வெளியில், அவரை “மிஸ்டர் காந்தி” என்றேல்லாம் விளித்தாலும், “இந்த கிழவன் தொல்லை தாங்கவில்லை, என்றுதான் சாவானோ” என்று வசைப்பாடியுள்ளனர், சபித்துள்ளனர். ஆகவே, ஆங்கிலேயர்களுக்கு, இந்தியாவில் நடக்கும் எல்லா சதிதிட்டங்களும் தெரிந்திருக்கும். ஆனானப் பட்ட அரவிந்தர் போன்றோர் வைத்த குண்டுகளை கண்டுபிடித்தர் என்றால், கோட்சே விகிபீடியா சொல்லும் கதைகளைப் போன்று, ஐந்தாறு முறை தாக்க திட்டம் போட்டது, குண்டு வைத்தது, ரெயிலை கவிழ்ததது என்றெல்லாம் யாருக்கும் தெரியாமல் நடந்தேறாது.

© வேதபிரகாஷ்

20-06-2018

Gandhi cartoon - versus others

[1] The book first appeared in a serial form. Fifteen out of its sixteen chapters were serialized in a monthly Marathi magazine called ‘Painjan’ in its issues of June 1966 to October 1967. What is now the seventh chapter of the book — “Throw my ashes into the Indus” — appeared in the issue dated the 8th October, 1967 of a Marathi weekly called ‘Sobat’. Both the journals are published by ‘Asmita Prakashan’, Poona, of which Behere is the proprietor.

[2] Hindustan Times, The politics of an assassination: Who killed Gandhi and why?, Abhishek Saha, ANALYSIS Updated: May 28, 2017 19:23 IST.

[3] https://www.hindustantimes.com/analysis/the-politics-of-an-assassination-who-killed-gandhi-and-why/story-iUJqKjuw0sP9nAfc5KcOII.html

[4] Bombay High Court – Gajanan Vishwanath Ketkar vs The State on 21 July, 1965; Equivalent citations: AIR 1967 Bom 96, (1966) 68 BOMLR 321, 1967 CriLJ 427, ILR 1966 Bom 839, Author: Naik; Bench: Naik, Palekar

https://indiankanoon.org/doc/383735/

மஹாத்மா காந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (3) – பிரிவினை, இந்துக்கள்-சீக்கியர் பட்ட சொல்லொனா குரூரங்கள், ரூ 55 கோடி விவகாரம்!

ஜூன் 19, 2018

மஹாத்மா காந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (3) – பிரிவினை, இந்துக்கள்சீக்கியர் பட்ட சொல்லொனா குரூரங்கள், ரூ 55 கோடி விவகாரம்!

Pakistan separatism led to Khalistan

மேற்குகிழக்கு பாகிஸ்தான்களில் இந்துக்கள் நடத்தப் பட்ட விதம்: 1947, ஆகஸ்ட் 14 மற்றும் 15 தேதிகளில் நடந்ததை முழுமையாக அறிந்தால், ஏன் கேட்டறிந்தால்[1], படித்தறிந்தால், துலுக்க அடிப்படைவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், ஜிஹாதி தீவிரவாதம்[2], நேருவின் செக்யூலரிஸம், படேலின் குழப்பமான தீர்வுகள், நேரு-படேல் கருத்து வேற்றுமை, காந்தியின் தொடர்ந்த, முஸ்லிம் சார்பு உண்ணாவிரதங்கள், பேச்சுகள், முடிவுகள் முதலியவை எந்த மனிதனையும் கொதிப்படையத்தான் செய்யும். அந்நிலையில் பாதிக்கப்பட்ட இந்துவை கேட்டால், அவன் காந்தியைத் தான் குற்றம் சொல்வான். மதரீதியில் முஸ்லிம்கள் தனி நாடு கேட்டதால், முஸ்லிம்கள் அதிகமாக இருந்த இடங்களில், உடனடியாக, இந்துக்கள் வெளியேற்றப் பட்டனர்; அவர்களது உடமைகள் பரிக்கப்பட்டன; வீடுகள் சூரையாடப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டன; பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்; தடுத்த இந்துக்கள் கொல்லப்பட்டனர். அப்பொழுது பாகிஸ்தானின் தந்தையான ஜின்னா, இந்துக்களுக்காக எதையும் செய்யவில்லை. நேருவைப் போன்று, பாகிஸ்தான் பிரதம மந்திரி, இந்துக்களுக்காக பரிந்து பேசவில்லை. செக்யூலரிஸ ரீதியில், துலுக்கரைக் கண்டிக்கவில்லை.

Partition horror 1947

இந்தியாவில் முஸ்லிம்கள், முசல்மான்கள், துலுக்கர்நடத்தப் பட்ட விதம்: நிச்சயமாக கொதித்திருந்த இந்துக்களில், சிலர் முஸ்லிம்களை பதிலுக்கு-பதில் பழிவாங்க வேண்டும் என்ற மனப்பாங்கில் வன்முறையில் இறங்கினர். 10% தான் அவ்வாறான இந்துக்கள் இருந்தனர். அவர்கள், யார் சொல்லியும் அவ்வாறான வன்முறையில் இறங்கவில்லை.  இந்துமகாசபாவோ, ஆர்எஸ்எஸ்ஸோ சொல்லவில்லை, தூண்டிவிடவில்லை. அவ்வாறாக இருந்தால், காந்தி நவ்காளிக்குச் சென்றிருக்க வேண்டாம்.  நேரிடையா, நேருவை வைத்து, அவர்களை மிரட்டி அல்லது பணிய வைத்து, முஸ்லிம்களை கிழக்கு வங்காளத்திற்கு அமைதியாக அனுப்பி வைத்திருக்கலாம். மாறாக, காந்தி போன்று, இந்துக்களுக்கு உயிர் வாழ ஆசையிருந்தால், நவ்காளியை விட்டு சென்று விடுங்கள் என்று சொல்லியிருக்க மாட்டார்.  நேரு, படேல், மற்றும் ராணுவ அமைச்சர் முதலியோர், இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. மாறாக  “இந்திய தந்தை” காந்தி “நவ்காளி யாத்திரை” என்று விளம்பரப் படுத்தி, சொந்த நாட்டிலேயே இந்துக்கள் கொல்லப்பட வழி செய்தனர்.

Noakhali atrocities, gandhi- riots

தில்லி சலோகூக்குரல் அதிகமாக இருந்தது: பாகிஸ்தான் பஞ்சாபிலிருந்த அனைத்து சீக்கியரும், தில்லுக்குச் சென்றுவிடவேண்டும் என்ற உணர்வோடு இருந்தனர். ஏனெனில், முஸ்லிம்கள் தாக்க ஆரம்பித்தது தெரிந்து விட்டது. ஆக அந்நேரத்தில் “தில்லி சலோ” என்ற கோஷம், தேசப்பற்றாக இல்லை, தப்பித்துச் சென்று அங்கே சென்றடைய வேண்டும் என்ற உந்துதலோடு, கூக்குரலிட்டனர், தில்லிக்கு வந்து சேர்ந்தனர். அதனால் தான், தில்லியில் சீக்கியர் அதிகமாக உள்ளனர். சீக்கியர் அதிகமாக இருந்த பஞ்சாபையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது, சீக்கியர்களுக்கு பெருத்த மனவருத்தம் தான்[3]. இன்றைக்கும் பாகிஸ்தான் பஞ்சாம், இந்திய பஞ்சாப் என்றுள்ளது. சீக்கியர் துலுக்கர்களால் அதிகமாக பாதிக்கப் பட்டிருக்கின்றனர். ஆனால், அவர்களை 1947க்குப் பிறகும், இன்றைக்கும் மற்ற இந்தியர்கள் முறையாகப் போற்றுவதில்லை.

Gandhi partition debt-- news cuttings

காந்தியின் மற்றவரைக் கட்டுப் படுத்தும் சக்தி[4]: காந்தியை யாரும் எதிர்க்க முடியாத நிலையில் இருந்தார். ஒரு முனிவர்-துறவி அந்தஸ்தில் உள்ளவராக்கி விட்டார்; “மஹாத்மா” என்ற நிலையில் ஆளுமையுடன், அதிகாரத்துடன் செயல்பட்டார். தன்னுடைய பேச்சை யாரும் தட்ட முடியாத அளவிற்கு தார்மீக அழுத்தத்தை உண்டாக்கி வைத்திருந்தார். ஏதோ மந்திரவாதியைப் போன்று மத்தியஸ்தர்கள் என்று எல்லோரையும் தனது ஹிப்னாடிஸம் போன்ற திறமையால் கட்டுப்பட செய்தார். இதனால், அதிகாரம் கொண்டவர் வந்தால் கூட, முதுகெலும்பு இல்லாத மிருகங்கள் போன்று செயலற்றவர்களாகினர். அவர் சொன்னதை தட்டாமல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனானப் பட்ட லார்ட் இர்வினே, இதை வெளிப்பட்டுத்தியுள்ளார். அவரது சக்திக்கு கட்டுப்பட்டுத்தான் “காந்தி-இர்வின் பேக்ட்”ற்கு [Gandhi Irwin Pact] ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். அவரிடம் சென்றால், ஏதோ மந்திர-ஏவல் தம் மீது பாய்ந்து கட்டுப்பட வைத்து விடும் என்று அஞ்சினர். அதனால், தாங்கள் கொள்கைக்களுக்கு எதிராக இருந்தாலும், சமரசம் செய்து கொண்டு, ஒப்புக்கொள்ளாதவற்றை எல்லாம், ஒப்புக்கொள்ளவேண்டிய நிலையும் ஏற்பட்டது. அத்தகைய மந்திரசக்தியின் சக்க்தியை சமீபத்தில் உணர்ந்தாதாக கோஸ்லா, ரூ 55 கோடிகள் பாகிஸ்தானிற்கு கொடுக்கப்பட்டதை குறிப்பிட்டார். 12-01-1948 படேலே, அத்தனை பெரிய தொகையைக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம் என்று எடுத்துக் கூறினார். ஆனால், “சாகும் வரை உண்ணாவிரதம்” ஆரம்பித்ததால், காந்தி மூன்றே நாட்களில் அப்பணம் கொடுக்க வேண்டியதாயிற்று.  அதனை ஒரு அதிசயம் [miracle] என்றே கோஸ்லா குறிப்பிட்டார்.

Gandhi fast unto death - news cuttings

மகாத்மாவின்சாகும் வரை உண்ணாவிரதம்போராட்டம் [Fast unto death]: அவரது “சாகும் வரை உண்ணாவிரதம்” போராட்டம் [Fast unto death], ஆங்கில அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதலியோரை கதிகலங்க வைத்தது. அவருக்கு எதிராக வந்து பேசக்கூட மறுத்தனர். சி.இ.எம். ஜோட் [C.E.M. Joad] என்பவர், காந்தி எப்படி “சாகும் வரை உண்ணாவிரதம்”  என்றதை பேரம் பேசும் கருவியாக [fasting as a bargaining tool] உபயோகப் படுத்தினார், என்று குறிப்பிட்டார். உண்மையினை சொன்னால், காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தால், அது உலக செய்தியாக இருந்தது, “ஒருவேளை அந்த கிழவர் இறந்து விட்டால், பழி நம் மீது விழுந்து விடும் என்று அஞ்சினர்,” என்றும் குறிப்பிடப் பட்டது. அந்த அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதாவது, யாரும் அவரது இறப்பை உருவாக்க முடியாது என்ற நிலை இருந்தது, அதனால், பயந்து, அவரது கோரிக்கைகளை ஏற்று ஒப்புக் கொண்டனர். ஆக அத்தகைய பெரிய மகாத்மாவை யாராலாவது இறக்கச் செய்ய முடியுமா?.

Gandhi partition debt--RBI note

ரூ 55 கோடிகளுக்கான மகாத்மாவின்சாகும் வரை உண்ணாவிரதம்: ஜனவரி 23, 1948 அன்று பாதுகாப்பு அமைச்சர் சர்தார் பல்தேவ் சிங் மவுண்ட்பேட்டனை சந்திக்கிறார். அவர் கசப்புடன் இந்த உண்ணாவிரதத்திற்கு ஒரே நோக்கம் 55 கோடிகளை பாகிஸ்தானுக்கு அளிப்பது என்று எடுத்துக் காட்டினார். துணை பிரதமமந்திரி பாராளுமன்ற அவையில் காஷ்மீர் பிரச்சனை முடிவுக்கு வரும்வரை நிலுவை தொகை நிறுத்திவைக்கப்படும் என அறிவித்து, அதன் பின்னர் பிரதமமந்திரியும் அதை ஏற்று அறிக்கை சமர்பித்தார், மேலும் ராணுவ தளவாடங்கள் பகிர்ந்துகொள்ள படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது. துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விரிவாக விளக்கிய பின்னர், ஒரு கிழவரின் உண்ணாவிரதம் ஒருமித்த முடிவை கேலிக்குரியதாக ஆகியது, அனைவருக்கும் திகைப்பாக இருந்தது, அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய அடியானது. எதிர்கட்சி இருந்தால் அரசை கவிழ்த்திருப்பார்கள் ஆனால், அடங்கி போக வேண்டியதாயிற்று. 55 கோடி நிலுவை தொகை அளிப்பதற்கான முடிவு எட்டப்பட்டபோது பிர்லா இல்லத்தில் இருந்ததாக கூறும் பல்தேவ் கனஷ்யாம் தாஸ் பிர்லாவிடம் காந்தியின் நோக்கம் ஈடேறிவிட்டதால் இன்னும் 48 மணிநேரத்திற்குள் உண்ணாவிரதத்தை முடித்துகொள்வார் என பந்தயம் கட்டியதாக சொல்கிறார்.

Noakhali atrocities, gandhi

நிர்பந்தத்தில் அவசாமாக ரூ 55 கோடிகள் கொடுக்கப்பட்ட விதம்: காந்தியின் அழுத்தத்தினால், எவ்வாறு பணம் கொடுக்கப் பட்டது:

  1. இஸ்லாம் பெயரால் பாரதத்தைத் துண்டாடிய பாகிஸ்தான் பிரிவினையின் போது தன் பங்காக 100 கோடி பணத்தைப் பிரித்துக் கொடு என்று கேட்டது.
  2. 1948-49 பட்ஜெட்டை பிப்ரவரி 28, 1948 அன்று சண்முகம் செட்டி சமர்ப்பித்தபோது, பாகிஸ்தான் ரூ 300 கோடிகள் கொடுக்க வேண்டும் என்று பதிவு செய்தார்.
  3. நிதியமைச்சர் சண்முகம் செட்டி பிரிவினை-கடன்-பாக்கி ரூ 300 கோடிகள் பணத்திற்கு 3% வட்டியும் பாக்கியுள்ளது என்று எடுத்துக் காட்டினார்[5].
  4. ரூ 100 கோடிகளில் இந்தியா முதற்கட்டமாக 20 கோடி கொடுத்து, பேச்சுவார்த்தையின் முடிவாக மீதி 75 கோடி அளிக்க ஒப்புக்கொண்டது.
  5. மீதி 55 கோடிகளை அளிப்பதற்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பழங்குடியினர் காஷ்மீருக்குள் ஊடுருவி கிளர்ச்சி ஏற்படுத்தினர்.
  6. அதனால் இந்திய அரசு பாகிஸ்தானுக்கு அளிக்க வேண்டிய தொகையை நிறுத்தி வைத்தது.  ஆனால் காந்தி புகுந்து பிரச்சினை உண்டாக்கினார்.
  7. 12-01-1948 படேலே, அத்தனை பெரிய தொகையைக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம் என்று காந்திக்கு எடுத்துக் கூறினார்.
  8. ஆனால், “சாகும் வரை உண்ணாவிரதம்” ஆரம்பித்து, மூன்றே நாட்களில் அப்பணத்தைக் கொடுக்க செய்து, விரதத்தை முடித்துக் கொண்டார்[6].
  9. 13-01-1948 அன்று உண்ணாவிரதம் ஆரம்பம், 15-16 RBI அவசர கூட்டம்; 16-01-2018 விரதம் முடிவு, 30-01-2018 அன்று கொலை செய்யப்பட்டார்.
  10. நேரு, படேல் முதல் கோட்சே வரை எல்லோரும் ரூ 55 கோடி கொடுக்கக் கூடாது என்றனர், RBI க்கு உத்தரவிட்டு கொடுக்கப்பட்டது! [10]

© வேதபிரகாஷ்

19-06-2018

Pakistan stamp.1950

[1]இன்றைக்குக் கூட 80 வயதுக்கு மேலே உள்ளவர்கள், குறிப்பாக வடவிந்தியாவில், ஏன் பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்களின் வம்சாவளியினரிடம் கேட்டால், அத்தகைய உண்மைகளை சொல்வார்கள்.

[2] துலுக்க அடிப்படைவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், ஜிஹாதி தீவிரவாதம்…இவற்றிற்கெல்லாம் தனித்தனி அர்த்தங்கள் உள்ளன, அதனால் தான் பிரித்து குறிப்பிடப்பட்டுள்ளது, இன்றைக்கு இஸ்லாமிசம் என்று வேறு சொல்கிறார்கள்.

[3] இதைத்தான், பிறகு துலுக்கர், சீக்கியர்களை “காலிஸ்தான்” இயக்கம் தூண்ட ஊக்குவித்தாக அமைந்தது. காஷ்மீர் பிரச்சினை போன்று, காலிஸ்தான் பிரச்சினையை உண்டாக்கி, இரு மாநிலங்களிலும், தொடர்ந்தமெல்லைப் பிரச்சினைகளை உண்டாக்க பாகிஸ்தான் திட்டம் போட்டது.

[4] But then, suddenly, I was overcome by a strange apprehension, which only they can appreciate who knew the position held by Mahatma Gandhi in India and the influence he exercised in every sphere of activity, political, social and economic. It was reported that there was, about him, an aura of saintliness and a magical power which hypnotised his interlocutors and reduced them to tame, supine creatures ready to efface themselves, to agree to whatever he said and carry out his directions. Lord Irwin was supposed to have been affected in this manner when he gave his assent to the Gandhi-Irwin pact in 1931. His fasts had converted his strongest opponents, and it was rumoured that die-hard British politicians and administrators were unwilling to meet him, lest under his mysterious spell they compromised their principles. Only a few days previously the world had witnessed a demonstration of his powers……

Khosla, The Muder of Mahatma, p.9.

[5] ………for 1948-49 on February 28, 1948, R.K. Shanmukham Chetty, the then Minister for Finance, had put the rate of interest at around three per cent for the Rs 300-crore debt. It shows the total liabilities at Rs 56,51,784.22 crore for 2013-14.

[6] http://www.gandhitoday.in/2015/12/55.html

 

மஹாத்மா காந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் – தூக்கிலிட்டப் பிறகு ஆர்.எஸ்.எஸ் தடை மற்றும் தடை நீக்கம்! (2)

ஜூன் 17, 2018

மஹாத்மா காந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ்தூக்கிலிட்டப் பிறகு ஆர்.எஸ்.எஸ் தடை மற்றும் தடை நீக்கம்! (2)

 A G Noorani, left, anti-Hintuwa-3

ஆர்.எஸ்.எஸ்.ஐ காந்தி கொலையுடன் இணைத்து எழுதும் முறை: முன்னமே குறிப்பிட்டப்படி, ஏ.ஜி.நூரானி இவ்விசயத்தில் தீவிரமாக கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர், எழுதிய ஆங்கில கட்டுரை தமிழில் “தி.இந்து”வில் அக்டோபர் 2016ல் வெளியிடப் பட்டுள்ளது[1]. அதிலும், அதே கதை சிறிது மாற்றி வெளியிடப்பட்டுள்ளது[2]. “ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் குரு கோல்வால்கருக்கு படேல் செப். 11, 1948-ல் எழுதிய கடிதம் இப்படிச் செல்கிறது. “இந்து சமுதாயத்துக்கு ஆர்எஸ்எஸ் செய்திருக்கும் சேவையைப் பற்றி எவ்விதச் சந்தேகமும் இல்லை. … ஆனால் ஆட்சேபத்திற்குரிய கட்டம் எங்கு எழுகிறதென்றால், அவர் கள் பழிவாங்கும் உணர்ச்சி கொழுந்து விட்டெரிய முஸல்மான்களைத் தாக்கத் தொடங்கியபோதுதான். இந்துக்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு நன்மை செய்வது என்பது ஒரு விஷயம். ஆனால் அவர்களின் துன்பங்களுக்குப் பழிவாங்குவது என்ற பெயரில் அப்பாவியான ஆண்களையும், பெண்களையும் குழந்தைகளையும் தாக்குவது வேறு…. அவர்களின் பேச்சுக்கள் முழுவதிலும் வகுப்புவாத விஷம் நிறைந்திருக்கிறது[3]. இந்துக்களை உற்சாகப்படுத்தி ஒன்று திரட்டுவதற்கும் பாதுகாப் பதற்கும் விஷத்தைப் பரப்ப வேண்டிய அவசியமில்லை. இந்த விஷத்தின் இறுதி விளைவாகக் காந்திஜியின் உயிர்த் தியாகத்தை நாடு தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆர்எஸ்எஸ் மீது இந்திய அரசாங்கத்திற்கோ மக்களுக்கோ துளி கூடப் பரிவு இல்லை. உண்மையில், காந்திஜியின் மரணத்திற்குப் பின் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இனிப்புகளை வினியோகித்தபோது மக்களின் கோபம் அதிகரித்து மேலும் தீவிரமானது.” ஏ,ஜி,.நூரானிக்கு பதிலாக, ஆர்..விஜயசங்கர் என்ற பெயர் உள்ளது[4].

Sardar patel letter to Golwalkar 09-1948

படேலின் முழு கடிதத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது: படேலின் முழு கடிதத்தைப் படித்தால் தான் அதன் உண்மைத் தன்மை விளங்கும்[5]. முதல் பத்தியில் ஆர்எஸ்எஸ் சேவையைப் பாராட்டி, பிறகு அவர்களது முஸ்லிம் வெறுப்பைக் கண்டிக்கிறார். இரண்டாவது பத்தியில், ஆர்எஸ்எஸ் காங்கிரஸுக்கு எதிராக செயல்படும் போது, எவ்வாறு நடந்து கொள்கிறது, மற்றும் காந்தி கொலைக்குப் பிறகு, அரசு ஆர்எஸ்எஸ்.ஐ நம்புவதாக இல்லை என்று விவரிக்கிறார். மூன்றவது பத்தியில், எவ்வாறு ஆர்எஸ்எஸ் காங்கிரஸுடன் இணைந்து செயல்படலாம் என்று விவரிக்கிறார். ஆர்எஸ்எஸ்.காரன் காந்தியைக் கொன்றான் என்றால், படேல் எவ்வாறு ஆர்எஸ்எஸ் காங்கிரஸுடன் சேர உத்தேசித்து அறிவுரை கூறுவார். பிறகு, நேருவும் அதனை ஆமோதித்திருப்பார்? ஆக, இதில் எவ்வாறு ஆர்எஸ்எஸ் சம்பந்தப்படவில்லை என்று உறுதியாகிறது. ஹிந்து மஹாசபாவின் பங்கு மறுக்கப்படவில்லை, காங்கிரஸுக்கும் அது ஒத்துப் போகவில்லை. அதனால், ஒருவேளை, ஆர்எஸ்எஸ் காங்கிரஸுடன் சேர்ந்தால், காங்கிரஸ் வலுவடையும் என்று நினைத்திருக்கலாம்.

A G Noorani, left, anti-Hintuwa-2

ஆர்எஸ்எஸ் மற்றும் காங்கிரஸ் சேவா தள் அமைப்புகள்: ஆர்எஸ்எஸ் செப்டம்பர் 27, 1925 அன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் சேவா தள் முன்னரே, ஜனவரி 1, 1924ல் ஆரம்பிக்கப்பட்டது. காந்தி தொப்பியை அணிந்து, ஆனால், ராணுவம் போன்ற சீருடையை அணிந்து, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு செயல்பட்டது. நேரு இதற்கு தலைவராக இருந்தர். 1923லேயே நாக்பூரில் கொடி ஊர்வலம் சென்றபோது, ஆங்கில அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராணுவம் போன்ற இந்த அமைப்பை, காங்கிரஸாரே எதிர்த்தனர். 1932ல் பெண்கள் ராணுவம் உருவாக்கியதால், ஆங்கிலேயரால் தடைசெய்யப்பட்டது. 1948ல், மேற்கு வங்காள அரசும் தடை செய்தது, ஆனால், நேரு அந்த தடையி நீக்கினார். ஆகவே, ஆர்எஸ்எஸ் ஒருவேளை, இதற்கு போட்டியாக, ஆரம்பித்தாரா என்ற கேள்வியும் எழுகின்றது. தொப்பி மற்றும் சீருடை வண்ணம் தவிர, மற்றெல்லாம், ஒரே மாதிரியாக இருப்பதை கவனிக்கலாம். நேருவின் இதற்கான ஆதரவு மற்றும் ஆர்எஸ்எஸ்கான எதிர்ப்பையும் கவனிக்கலாம். நேரு மே 27, 1964 அன்று இறந்த பிறகு, ஜீவன்லால் கமிஷன் அமைக்கப் பட்டது.

A G Noorani, left, anti-Hintuwa

ஜீவன்லால் ஜஸ்டிஸ் விசாரணை செத்த பாம்பை அடிப்பது போன்றதாகும்: ஜீவன்லால் கபூர் 21-11-1964 அன்று “காந்தி கொலை சதித்திட்டம் விசாரணை கமிஷனுக்கு” நியமிக்கப்பட்டார். 101 சாட்சிகள், 407 ஆவணங்கள் குதலியவறுடன் 162 முறை கூடி, விசாரணைக்குப் பிறகு அவரது அறிக்கை 30-09-1969 அன்று முடிவடைந்தது. இதற்காக பாம்பே, தில்லி, நாக்பூர், தார்வா, பூனே, பரோடா, சண்டிகர் முதலிய இடங்களுக்கு சென்று வந்தார். ஆர்.எஸ். கொத்வால் மற்றும் பி.பி.லால் மஹாராஷ்ட்ராவுக்கு வக்கீல்களாக இருந்தனர். அவர்கள் முறையே 37 மற்றும் 17 நாட்களுக்கு வாதித்தனர். ஜி.வி. கேட்கர் முதலாவதாக விசஐக்கப் பட்ட சாட்சி. ஜே.டி.நகர்வாலா, மற்றும் மொராஜி தேசாய் முறையே 15 மற்றும் 7 நாட்களுக்கு சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். ஏற்கெனவே, விசாரணை நடந்து, கோட்ஸே மற்றும் ஆப்தே தூக்கிலிட்டப் பிறகு, நடந்த இந்த விசாரணைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஏனெனில், தண்டனை முடிந்த பிறகு, வழக்குகளை போஸ்ட்மார்டம் செய்ய முடியாது.

Sardar patel letter to Nehru RSS not involved- 27-02-1948

கோல்வால்கர் கைது, ஆர்.எஸ்.எஸ் தடை: காந்தி கொலைக்குப் பிறகு, பிப்ரவரி 1, 1948 அன்று குருஜி கோல்வால்கர் கைது செய்யப்பட்டார். பிப்ரவரி 4, 1948 அன்று ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப் பட்டது. பிப்ரவரி 4, 1948 அன்று “தடை அமூலில் இருக்கும் வரை” ஆர்.எஸ்.எஸ்.ஐ கலைத்து விடும்படி கோல்வால்கரே ஆணையிடுகிறார். அதற்குள் கோல்வால்கர் அரசுக்கு பல கைதங்கள் எழுதி, ஆர்.எஸ்.எஸ்க்கும், காந்தி கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்குகிறார். இருப்பினும், முஸ்லிம் விரோதம், வன்முறை முதலியவற்றைச் சுட்டிக் காட்டி ஒப்புக்கொள்ளாமல் இருந்தது. பிறகு, ஆகஸ்ட் 6 1948 அன்று கோல்வால்கர் சரத்துகளுடன் விடுவிக்கப் படுகிறார், ஆனால், நாக்பூரிலேயே இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது. ஆகஸ்ட் 11, 1948 அன்று தொடரும் கட்டுப்பாடுகளைப் பற்றி, நேரு மற்றும் படேலிடம், கோல்வால்கர் புகார் செய்கிறார். நவம்பர் 3, 1948 அன்று கட்டுப்பாடு தளர்த்தப் பட்டதால், கோல்வால்கர் தில்லிக்குச் செல்கிறார்.

Nehru forced patel to ban RSS 27-02-1948

ஆர்.எஸ்.எஸ்.காரர்களை காங்கிரஸில் சேர்க்க நேரு, படேல் முயன்றதேன்?: பல கடித பரிமாற்றங்கள் நடக்கின்றன. ஜூலை 11, 1949 அன்று ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கப்படுகிறது. அக்டோபர் 7, 1949 அன்று காங்கிரஸ்காரகள் ஆர்.எஸ்.எஸ்.சில் சேர நேரு காங்கிரஸ்கமிட்டி மூலம் ஒப்புதல் வாங்கினார். ஆனால், நேருவின் ஆணைக்கு இணங்க, நவம்பர் 7, 1949 அன்று ஆர்.எஸ்.எஸ்.ஐ விட்டு விலகினால் காங்கிரஸில் சேரலாம் என்று சொல்லப்பட்டது.  அரசாங்கம், எந்த இயக்கத்தையும், தடை செய்ய வேண்டும் என்றால், அது அரசுக்கு அல்லது மக்களுக்கு எதிராக எப்படி செயல்படுகிறது என்பதனைக் காட்ட வேண்டும். ஆகவே, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கொம்பு வைத்துக் கொள்கிறார்கள், முஸ்லிம்களை எதிர்க்கிறார்கள், ரகசியமாக செயல்படுகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப் பட்டன. கோல்வால்கர், அதற்கெல்லாம் பதில் அளித்தப் பிறகு தான், தடை நீக்கப் பட்டது. அந்நிலையில், அரசு குற்றஞ்சாட்டப் பட்ட விவரங்களை வைத்து, 2010, 1016 ஆண்டுகளில் திரித்து எழுதுவது சரியில்லை. இவ்விவரங்களை, ஏ.ஜி.நூரானி, பிரென்ட் லைனில், தமக்கேயுரிய பாணியில் திரித்து எழுதியுள்ளார்[6]. ஆர்.எஸ்.எஸ்.காரர்களை படேல் காங்கிரஸில் சேர்ந்து விட வேண்டும் என்றதையும், நேரு மறைமுகமாக வற்புருத்தியதையும் மறைத்து எழுதி வருகிறார்கள்[7]. நேரு, படேலை வற்புருத்தி, ஆர்எஸ்எஸ்.ஐ தடை செய்ய பணித்தார் என்பது, கடித பரிமாற்றங்களில் புலப்படுகிறது.

© வேதபிரகாஷ்

17-06-2018

Congress Seva Dal- RSS prototype

[1] தி.இந்து, காந்தி 147: காந்தி, கோட்ஸே, ஆர்எஸ்எஸ், பாஜக!, Published : 02 Oct 2016 11:52 IST; Updated : 02 Oct 2016 11:52 IST.

ஆர். விஜயசங்கர், ‘ஃப்ரண்ட்லைன்’ இதழின் ஆசிரியர். தொடர்புக்கு: vijay62@gmail.com

[2]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-147-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/article9176072.ece

[3] இது காங்கிரஸை ஆர்எஸ்எஸ் அணுகும் விசயத்தில் சொன்னது, ஆனால், அதை முஸ்லிம்களுடன் இணைத்து எழுதியுள்ளார் விஜயசங்கர்.

[4] ஆர். விஜயசங்கர், ‘ஃப்ரண்ட்லைன்’ இதழின் ஆசிரியர். தொடர்புக்கு: vijay62@gmail.com

[5] Aurangzeb Road, New Delhi, 11th Sept. 1948,

Brother Sri Golwalkar, Received your letter dated 11th August. Jawaharlal has also sent me your letter of the same date.

You are very well aware of my views on the RSS. I have expressed these thoughts at Jaipur in December last month at Lucknow in January. The people had welcomed those views. I had hoped that your people also would accept them. But they appear to have no effect on the RSS persons, nor was there any change in their programmes. There can be no doubt that the RSS did service to the Hindu Society. In the areas where there was the need for help and organisation, the young men of the RSS protected women and children and strove much for their sake. No person of understanding could have a word of objection regarding that. But the objectionable part arose when they, burning with revenge, began attacking Mussalmans. Organising Hindus and helping them is one thing but going in for revenge for its sufferings on innocent and helpless men, women and children is quite another thing.

Apart from this, their opposition to the Congress, that too of such virulence, disregarding all considerations of personality, decency or decorum, created a kind of unrest among the people. All their speeches were full communal poison. It was not necessary to spread poison and enthuse the Hindus and organise for their protection. As a final result of the poison, the country had to suffer the sacrifice of the valuable life of Gandhiji. Even an iota of sympathy of the Government or of the people no more remained for the RSS. In fact the opposition grew. Opposition turned more severe, when the RSS men expressed joy and distributed sweets after Gandhiji’s death. Under these conditions it became inevitable for the Government to take action against the RSS.

Since then, over six months have elapsed. We have hoped that after this lapse of time, with full and proper consideration the RSS persons would come to the right path. But from the reports that come to me, it is evident that attempts to put fresh life into their same old activities are afoot. I once again ask you to give your thought to my Jaipur and Lucknow speeches and accept the path I had indicated for the RSS. I am quite certain that therein lies the good of the RSS and the country and moving in that path we can join hands in achieving the welfare of our country. Of course, you are aware that we are passing through delicate times. It is the duty of every one from the highest to the lowliest in this country to contribute his mite, in whatever way possible, to the service of the country. In this delicate hour there is no place for party conflicts and old quarrels. I thoroughly convinced that the RSS men can carry on their patriotic endeavor only by joining the Congress and not by keeping separate or by opposing. I am glad that you have been released. I hope that you will arrive at the proper decision after due consideration of what I have said above. With regard to restrictions imposed upon you I am in correspondence with the CP Government. I shall let you know after receiving their reply.

Yours
VALLABH BHAI PATEL (Written originally in Hindi)

[6] A.G. NOORANI, Communalism, Basic instinct And the Sangh’s survival strategy, Frontline, Volume 27 – Issue 01 :: Jan. 02-15, 2010.

[7] https://www.frontline.in/static/html/fl2701/stories/19930326052.htm

மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (1)

ஜூன் 15, 2018

மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (1)

The accused Godse 12-05-1948

நாதுராம் கோட்சே கடைசிவரை நான் தான் கொன்றேன் என்று ஒப்புக் கொண்டது: மஹாத்மா காந்தி கொலை வழக்கைப் பொறுத்த வரையில், கடைசி வரை, நாதுராம் கோட்சே தார்மீகத்தைக் கடைப் பிடித்து, “ஆமாம், நான் தான் மகாத்மாவைக் கொன்றேன்,” என்று ஒப்புக் கொண்டதால் தான் வழக்கில், தூக்குத் தண்டனைக் கிடைத்தது. சுட்டப் பிறகு ஏற்பட்ட அமளியில், நாதுராம், கொஞ்சம் தூரம் சென்று அமைதியாக நின்றிருந்தால் கூட, ஒன்றும் தெரிந்திருக்காது. ஆனால், நாதுராம் ஓடவில்லை, ஒளியவில்லை, அமைதியாக நின்றிருந்தான். அப்படியே நின்றிருந்தான் பிறகு நடந்ததைப் பற்றி பலவிதமாக சொல்லப்பட்டது, எழுதப்பட்டது. கோட்ஸே அமைதியான சரண்டர் ஆனார், மக்கள் அடித்து நொறுக்கினர், ரத்த வெள்ளத்தில் கிடந்தான் ….ஆகாயப்படை அதிகாரி அவனைப் பிடித்தார், கையில் இருந்த துப்பாக்கி பிடுங்கப் பட்டது, போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர்……. இப்படி செய்திகள் வந்தன.

Fourth bullet theory - The Dawn, Pakistan

சுடப்பட்டது, குண்டுகள் எண்ணிக்கைப் பற்றிய சர்ச்சைகள்: “தி கார்டியன்” என்ற நாளேட்டின் படி[1], “கோட்ஸே, தன்னை கொல்வதற்காக நான்காம் முறை சுட்டான், ஆனால், அருகிலிருந்த விமான அதிகாரி அவனது கையை முறுக்கி, துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டார். அவர் கோட்ஸேவை சுட முயன்றார், ஆனால், போலீஸார் தடுத்து விட்டனர். கோபம் கொண்ட கூட்டம், கொம்புகளால் கோட்ஸேவை அடித்தனர். ஆனால், போலீஸார் அவனைப் பிடித்துக் கொண்டு, போலீஸ் ஷ்டேசனுக்குக் கூட்டிச் சென்று விட்டனர்.” ஆகவே, துப்பாக்கியில் கைரேகை இருந்தது பற்றிய விவரங்கள் ஆதாரமாகாது. காந்தி சுடப்பட்டது பற்றி கூட இவ்வாறு, விதவிதமான செய்திகள் உலக நாளிதழ்களில் வெளி வந்தன. மூன்று மற்றும் நான்கு முறை சுடப்பட்டது, சுட்ட சப்தம் கேட்டது…..போன்ற செய்திகள் வெளிவந்தன. கொலை செய்ய முயன்றது பற்றிக் கூட, முயற்சிகள் நடந்தது எத்தனை என்பது பற்றி தெளிவாக இல்லை. பலர், பலவிதமாக செய்திகளை வெளியிட்டனர். வெளிநாட்டவர் பலவிதமாக, புத்தகங்களில் எழுதி வைத்தனர்.

Gandhi assassination, Gita recited 30-01-1948

காந்தி இறந்தது எப்பொழுது?: காந்தி உடனே இறந்தாரா, “ஹே ராம்” சொல்லி இறந்தாரா, பிர்லா ஹவுஸுக்கு கொண்டு சென்றபிறகு 30 நிமிடம் கழித்து இறந்தாரா என்றெல்லாம் தெரியவில்லை. பிர்லா மாளிகைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மந்திரங்கள் உச்சாடனம் செய்யப் பட்டது. இதனால், அவர் இறக்கும் வரை மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தனர் என்ற செய்தி வேறு வந்தது. மனுபென் குறிப்பின்படி, காந்தி கீழே விழுந்தபோது, கடிகாரத்தில் 5.17 காட்டியது. அவரது வெண்ணிற உடையில் பல இடங்களில் ரத்தம் தோய்ந்திருந்தது. அவரை திரும்ப வீட்டிற்குள் எடுத்துச் செல்ல 10 நிமிடங்கள் ஆகின. அப்பொழுது எந்த டாக்டரும் இல்லை. முதலுதவி பெட்டிதான் இருந்தது, ஆனால், அதில் காயத்திற்கு போட எந்த மருந்தும் இல்ல, காந்தி அதிகமாக ரத்தத்தை இழந்தார். எல்லோரும் சப்தமாகக் கத்திக் கொண்டிருந்தனர். பாய் சாஹெப் மருத்துவ மனைக்கு போன் செய்து கொண்டிருந்தார். ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. பிறகு வெல்லிங்டன் ஹாஸ்பிடலுக்குச் சென்று திரும்ப வந்தார். அவர் உடல் அறையில் வைக்கப்பட்டு, கீதா படிக்கப் பட்டது, பிறகு காலனெல் பார்கவ் வந்து, பார்த்து அவர் இறந்து விட்டார் என்று அறிவித்தார்[2].

Gandhi assassination, by a fanatic 30-01-1948

காந்தியைஇந்து வெறியாளன்சுட்டான்: “இந்து வெறியாளன்” என்ற சொற்றோடர் மட்டும் எல்லாவற்றிலும் இருந்தது[3]. ஆனால், உடனடியாக, மௌன்ட் பேட்டன், நேரு, படேல் முதலியோர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஏற்கெனவே கொதித்திருக்கும் இந்துஸ்தான மக்கள் கலவரங்களில் ஈடுபட்டால், துலுக்கருக்குத் தான் அபாயம் ஏற்படும் என்று அறிந்து செயல்பட்டனர். இதனால் தான், பல உண்மைகள் மறைக்கப் பட்டன. சர்தார் பட்டேல் பற்றியும் முரண்பட்ட வாதங்கள் இன்று வைக்கப் படுகின்றன[4]. மஹாத்மா காந்தி கொலைசெய்யப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கைப் படித்துப் பார்த்தால், வழக்கில் உள்ள ஓட்டைகள் தெரியும். இது ஒரு அரசியல் கொலை, தனிமட்ட மனிதனின் கொலையல்ல என்று கோடானு கோடி மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. 1947-48 காலங்களில் வாழ்ந்த முதியோர்களில் பெரும்பாலோர், மஹாத்மாவின் முஸ்லிம் ஆதரவு கொள்கைகளை விரும்பவில்லை.

Gandhi assassination, Noakhali appeasement, 30-01-1948

மஹாத்மாவை மதித்த மக்கள், அவரது முஸ்லிம் சார்பு கொள்கைகளினால் வருத்தமடைந்தது: “பாகிஸ்தான் உருவானால், எனது இறந்த உடல் மீது தான் நடந்து செல்ல வேண்டும்,” என்று காந்தி சொன்னது எல்லோருக்கும் தெரியும். ஆனால், லட்சக்கணக்கான துலுக்கர், இந்துக்களைக் கொன்று அவகளின் உடல்களின் மீது தான் நடந்து பாகிஸ்தானிற்குச் சென்றனர். அப்பொழுது கூட, இந்து நலன் காக்காமல், சந்தோசமாக நேரு பதவி ஏற்றார். காந்தியோ, துலுக்கரின் உயிரைக் காப்பேன் என்று நவ்காளிக்குச் சென்றார். உண்மையான தேசப்பற்றுக் கொண்டவன் கொதித்துக் கொண்டிருந்தான். கோடானு கோடி மக்களுக்கு, மஹாத்மா கடவுள் போன்றே இருந்தார். அவர் விஜயம் செய்தால், லட்சக்கணக்கில் மக்கள் வந்து, கால்களில் வீழ்ந்து வணங்கிச் சென்றது சாதாரணமான விசயமாக இருந்தது. ஆனால், சுதந்திரம் கிடைத்து பத்தே நாட்களில் நிலைமை மாறியது. நேரு மற்றும் காந்தி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதை, நன்றாகப் புரிந்து கொண்டனர். துலுக்கர் இந்துக்களின் பிணங்களை அனுப்பி வைத்தபோது, கோடிகளை இவர்கள் பதிலுக்கு தானமாகக் கொடுத்தனர். இப்படி பட்ட விசயங்களுக்காக, நாதுராம் மட்டும் கோபப் படவில்லை, கோடானு கோடி இந்திஸ்தான மக்கள் கோபப் பட்டனர், “இந்த கிழவன் செத்தால் தேவலை,” என்று கரித்துக் கொட்டினர். அந்நிலையில் தான் நாதுராம் சுட்டுக் கொன்ற போது, மக்கள் மகிழ்ந்தனர், “மஹாத்மா” சென்று விட்டதால் வருத்தம் அடையவும் செய்தனர். அதனால், சிலர் இனிப்புக் கொடுத்து மகிழ்ந்தனர் என்றால், அவர்கள் ஆர்.எஸ்.எஸ் / ஹிந்துமஹா / அபிநவ பாரத் சபாகாரர்கள், என்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஊடகங்கள் ஆர்.எஸ்.எஸ் என்றே குறிப்பிட்டன.

Gandhi assassination, Cincinnati Post 30-01-1948

காந்தி இறப்பு ஆர்.எஸ்.எஸ்.க்கு முன்னரே தெரியுமா, இனிப்புகள் விநியோகித்தார்களா?: ஆங்கிலத்தில் எப்பொழுதும் பொய்யை சொல்லும் போது, சுற்றி வளைத்துக் சொல்வார்கள். உதாரணத்திற்கு இதனை எடுத்துக் காட்டுகிறேன்:

 As Gandhi’s Boswell, Pyarelal, records in his memoirs[5], “members of the RSS at some places had been instructed beforehand to tune in their radio sets on the fateful Friday for the ‘good news’, and sweets were distributed by the members at many places.”

போஸ்வெல் மற்றும் பியாரேலால் தங்களது நினைவுகளை பதிவு செய்தபடி, “முன்னமே, சில இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அங்கத்தினர்களுக்கு ரேடியோவை ஆன் செய்து வெள்ளிக்கிழமை அன்று நல்ல செய்தி வரும் என்று அறிவுருத்தப் பட்டார்கள், மற்றும் இனிப்புகள் பல இடங்களில் விநியோகித்ததார்கள்,” என்று ஏ.ஜி. நூரானி எழுதியுள்ளதை கவனிக்கலாம்.

  1. அதாவது நூரானிக்கு போஸ்வெல் மற்றும் பியாரேலால் தான் ஆதாரம்.
  2. போஸ்வெல் மற்றும் பியாரேலால் இவர்களுக்கு அவர்களது நினைவுகள் ஆதாரம்.
  3. அந்நினைவுகளிலோ ஆர்.எஸ்.எஸ். அங்கத்தினர்களுக்கு யார் அறிவுருத்தினர் என்று தெரியாது.
  4. மேலும், அறிவுருத்தப் பட்ட ஆர்.எஸ்.எஸ். அங்கத்தினர்கள் ரேடியோ கேட்டார்களா இல்லையா – நூரானிக்குத் தெரியாது.
  5. பிறகு, “sweets were distributed by the members at many places.” என்றால் அதே ஆர்.எஸ்.எஸ். அங்கத்தினர்கள் விநியோகித்தார்கள் என்றால் என்ன அர்த்தம்?
  6. அதிலும் பல இடங்களில் விநியோகித்தார்கள் என்றால் என்ன அர்த்தம்?
  7. இதுவும் காந்தி சுடப்பட்டது, குண்டுகள் எண்ணிக்கை கதையாக இருக்கிறது.
  8. ஏதோ, ஒரு இயக்கம் இருக்கிறது, அதன் மீது எல்லா பழிகளையும் போடலாம், என்ற ரீதியில் தான் வாதன் உள்ளது.
  9. பிறகு இதில் உண்மை என்னத்தான் உள்ளது?

 

© வேதபிரகாஷ்

14-06-2018

Gandhi assassination, who killed

[1] According to The Guardian report, which did not mention Herbert Reiner Jr, Godse “fired a fourth shot, apparently in an effort to kill himself, but a Royal Indian Air Force sergeant standing alongside jolted his arm and wrenched the pistol away. The sergeant wanted to shoot the man but was stopped by the police. An infuriated crowd fell upon the man and beat him with sticks, but he was apprehended by the police and taken to a police station.”

https://www.theguardian.com/world/1948/jan/31/india.fromthearchive

[2] The watch she was carrying showed 5:17 p.m. and blood was everywhere on their white clothes. Manuben estimated that it took about ten minutes to carry Gandhi back into the house, and no doctor was available in the meanwhile. They only had a first aid box, but there was no medicine in it for treating Gandhi’s wounds. According to Manuben,………Gandhi had suffered profuse blood loss. Everyone was crying loudly. In the house, Bhai Saheb had phoned the hospital many times, but was unable to reach any help. He then went to Willingdon Hospital in person, but came back disappointed. Manuben and others read Gita as Gandhi’s body lay in the room. Col. Bhargava arrived, and he pronounced Gandhi dead.

Gandhi, Manuben (1962), Last Glimpses of Bapu, Ahmedabad: Nuvajivan, Delhi: Agarwal

[3] ஒரு முஸ்லிம் சுட்டான் என்று கூட செய்தி வந்து கலவரம் கூட ஏற்பட்டது, என்றெல்லாம் ஆதாரங்களேஐல்லாமல் இப்பொழுது பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

[4] The Front Line, The BJP and Nathuram Godse, A.G. NOORANI, Print edition : February 08, 2013

https://www.frontline.in/books/the-bjp-and-nathuram-godse/article4328688.ece

[5] Frontline, The BJP and Nathuram Godse, A.G. NOORANI, Print edition : February 08, 2013;  ( Mahatma Gandhi: The Last Phase; page 750).

https://www.frontline.in/books/the-bjp-and-nathuram-godse/article4328688.ece