மஹாத்மா காந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (4) – கபூர் கமிஷனிலிருந்து உருவான, ஆதாரமில்லாத சதிதிட்ட கதைகள்!
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியிலிருந்து உருவான ஜீவன்லால் கபூர் கமிஷன் விசாரணை: இனி கோட்சே வழக்கிற்கு செல்வோம். 05-02-1948 அன்று கோபால் கோட்சே மற்ற எழுவருடன் கைது செய்யப்பட்டார். நாதுராம் கோட்சே மற்றும் விநாயக் ஆப்தே தவிர மற்றவர் விடுவிக்கப்பட்டனர். 15-11-1949 அன்று அம்பாலா ஜெயிலில் இருவரும் தூக்கிலிடப்பட்டனர். 12-11-1964 அன்று கோபால் கோட்சே, மதன்லால் பாவா, விஷ்ணு கர்கரே விடுவிக்கப்பட்டதற்கு ஒரு விழா நடத்தப்பட்டது. அதில் பால கங்காதர திலகரின் பேரன், ஜி.வி. கேட்கர் [கஜானன் விஸ்வநாத கேட்கர்], கோட்சே தன்னிடம், காந்தியை கொலை செய்ய வேண்டும் போன்ற எண்ணத்தை வெளியிட்டதாகவும், ஆனால், தான் மறுத்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால், இதை கேட்கர், பாலுகாகா கனித்கர் என்பவருக்குத் தெரியப் படுத்தியதாகவும், அவர், அப்பொழுதைய மஹாராஷ்ட்ரா முதலமைச்சர் பி.ஜி.கேருக்கு அறிவித்ததாகவும், இந்தியன் எக்ஸ்பிரஸில், 14-11-1964ல் செய்தி வெளியானது. பி.ஜி.கேரோ 1957ல் காலமாகி விடுகிறார். இதனால், கேட்கர் கைது செய்யப்பட்டபோது, மாநில அசெம்பிளி மற்றும் பாராளுமன்றத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், காந்தி கொலை சதித்திட்டத்தில், பெரிய இடத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற நிலையில், அதை முழுவதமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 13-11-1964 அன்று மற்றவர் ஜெயிலிலிருந்து விடுவிக்கப்பட்டனர். கோபால் கோட்சே மறுபடியும் 25-11-1964 அன்று கைது செய்யப் பட்டு, 30-11-1964 அன்று விடுவிக்கப்பட்டார். அப்புத்தகத்தில் உள்ள விசயங்கள் ஏற்கெனவே “பைஞ்சன்” என்ற மராத்தி மாத இதழில் தொட்ராக ஜூன் 1966 முதல் அக்டோபர் 1967 வரை வெளியானது[1].
காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப்பட்டதால், அமுக்கப்பட்டதா?: அதன்படி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் எம்.பி கோபால் ஸ்வரூப் பதக் என்பவரை, குல்சாரிலால் நந்தா நியமித்தார். ஆனால், அவர் மைசூருக்கு கவர்னராக நியமிக்கப் பட்டதால், ஜீவன்லால் கபூர் நியமிக்கப்பட்டார்[2]. ஆனால், இத்தகைய புதிய கருதுகோள், ஏ.ஜி.நூரானியின் திரிபு கட்டுரைகளிலிருந்து தான் உருவானது[3]. உண்மையில், இதில் சம்பந்தப் பட்டவர் அனைவருமே – முதலமைச்சர் முதல் மற்றவர் – காங்கிரஸ்காரர்கள் தாம். கேட்கர் பாம்பே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, அத்தீர்ப்பில், இவ்விவரங்கள் வெளிவந்துள்ளன[4]. அப்படியென்றால், காங்கிரஸ் தான் உண்மையினை மறைத்தது என்றாகிறது. இல்லை, ஏ.ஜி.நூரானி போன்று கட்டுரை எழுதுவதென்றால், காங்கிரஸ் தான் இந்து இந்துத்துவவாதி பைத்தியங்களைத் தூண்டிவிட்டு, காந்தியை கொலை செய்தது என்று கூட எழுதலாம். ஏனெனில், காந்தியின் இறப்பினால், யாருக்கு லாபம் என்று பார்த்தால், நேருக்குத் தான் என்று தெள்ளத் தெளிவாகி விடும்.
விசனத்தில், விரக்தியில், இயலாமையில், வெளியிட்ட, வெளியிடும் அப்பாவித்தனமான கருத்துகள், பேச்சுகளை செய்திகளாக்குவது: பொதுவாக இந்துத்துவவாதிகள் அப்பாவிகள், “இந்து” என்று பெருமையாக, சொல்லிக் கொண்டு, ஏதோ கடவுளைப் போன்று பேசுகின்ற விதத்தைக் கொண்டிருப்பதால், அடிக்கடி கோபத்தில் சாபம் இடுவது வழக்கமாக உள்ளது. “அவன் நாசமா போக, அழிந்து விடுவான், கட்டையில் போக, அவனை கொன்றே விடுவேன்……,” என்றெல்லாம் கூறுவது வழக்கம். “அவன் நாசமா போக” என்றவுடன் யாரும் நாசமாகி போய்விட மாட்டார்கள். அதாவது, அவர்களின் இயலாமையாலும், இந்துக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு, அமுக்கப்பட்டு வருவதால், தனிமையில் அவ்வாறான கருத்துகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவையெல்லாம், விசனத்தில், விரக்தியில், இயலாமையில், வெளியிட்ட, வெளியிடும் அப்பாவித்தனமான கருத்துகள், பேச்சுகள். அதனால், உண்மையிலேயே அவர்கள் கொல்ல திட்டம் போட்டனர் என்றாகாது. “குஜராத் கலவரம்,” அஸீமானந்தா வாக்குமூலம் போனேஅவற்றிலும், அத்தகைய இயலாமை வெளிப்பட்டது. ஆனால், அவற்றையே ஆதாரமாக்கப்பட்டு, வழக்குத் தொடர்ந்து, இறுதியில் விடுவிக்கப்பட்டார்கள்.
ஜஸ்டிஸ் ஜீவன்லால் கபூர் விசாரணை செத்த பாம்பை அடிப்பது போன்றதாகும்: ஜீவன்லால் கபூர் 21-11-1964 அன்று “காந்தி கொலை சதித்திட்டம் விசாரணை கமிஷனுக்கு” நியமிக்கப்பட்டார். 101 சாட்சிகள், 407 ஆவணங்கள் முதலியவறுடன் 162 முறை கூடி, விசாரணைக்குப் பிறகு அவரது அறிக்கை 30-09-1969 அன்று முடிவடைந்தது. இதற்காக பாம்பே, தில்லி, நாக்பூர், தார்வா, பூனே, பரோடா, சண்டிகர் முதலிய இடங்களுக்கு சென்று வந்தார். ஆர்.எஸ். கொத்வால் மற்றும் பி.பி.லால் மஹாராஷ்ட்ராவுக்கு வக்கீல்களாக இருந்தனர். அவர்கள் முறையே 37 மற்றும் 17 நாட்களுக்கு வாதித்தனர். ஜி.வி. கேட்கர் முதலாவதாக விசஐக்கப் பட்ட சாட்சி. ஜே.டி.நகர்வாலா, மற்றும் மொராஜி தேசாய் முறையே 15 மற்றும் 7 நாட்களுக்கு சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். ஏற்கெனவே, விசாரணை நடந்து, கோட்ஸே மற்றும் ஆப்தே தூக்கிலிட்டப் பிறகு, நடந்த இந்த விசாரணைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஏனெனில், தண்டனை முடிந்த பிறகு, வழக்குகளை போஸ்ட்மார்டம் செய்ய முடியாது.
ஜூன் 25, 1934 அன்று முதல் முயற்சி: ஜூன் 25, 1934 அன்று காந்தி புனேவுக்கு தன் மனைவி கஸ்தூரிபாய் காந்தியுடன் மாநகராட்சி அரங்கத்தில் உரையாற்ற சென்றார். அவர்கள் இரண்டு மகிழுந்தில் சென்றனர். காந்தியும் அவர் மனைவியும் இருந்த மகிழுந்து அரங்கத்தை சென்று அடையும் முன்னரே, முதலாவது மகிழுந்து அரங்கத்தை வந்து சேர்ந்தது. அந்த வாகனம் அரங்கத்தினுள் நுழைந்த சில நிமிடங்களில் அதனை நோக்கி எறியப்பட்ட கையெறிக்குண்டு அதன் முன் வெடித்தது. இதனால் புனே ஊராட்சித் தலைமை அதிகாரி, இரு காவலர்கள் மற்றும் ஏழு இதர உறப்பினர்கள் பலத்த காயமடைந்தனர். காந்தி எக்காயமுமின்றி உயிர் தப்பினார். அது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை யாரும் கைது செய்யப்படவில்லை. இது கப்பூர் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. “சான்று தேவை” என்ற பீடிகையுடன் விக்கிபீடியா போன்றவை இக்கதையை வெளியிட்டுள்ளன.
மே 1944, இரண்டாவது முயற்சி: மே 1944, காந்தி அகாகான் அரண்மணை சிறையில் இருந்து மலேரியா தாக்குதலினால் விடுவிக்கப்பட்டார். மருத்துவர் அறிவுறுத்தலின் படி பஞ்ச்கனி மலை வாழ்விடத்தில் தங்கவைக்கப்பட்டார். இவர் இருப்பிடத்தை எப்படியோ அறிந்து நாதுராம் கோட்சே குழுவினர் 20 இளைஞர்களுடன் சிறப்பு பேருந்தில் வந்திறங்கினர். மாலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியை நோக்கி காந்தி எதிர்ப்பு வாசகங்களைக் கூறிக்கொண்டே மிகுந்த ஆவேசத்துடன் உள்ளே நுழைந்தனர். ஆனால் அங்கு இருந்த கூட்ட நெரிசலில் அவர்களால் காந்தியை நெருங்க முடியவில்லை காந்தியை பத்திரமாக அவர் தொண்டர்கள் அழைத்துச் சென்று விட்டனர். “சான்று தேவை” என்று விக்கிபீடியா போன்றவை இக்கதையை வெளியிட்டுள்ளன.
செப்டம்பர் 9, 1944 மூன்றாவது முயற்சி: காந்தி முகமது அலி ஜின்னாவுடன் பேச்சு வர்த்தை நடத்துவதற்காக செப்டம்பர் 9, 1944 ல் சேவாகிராம் ஆசிரமத்தை விட்டு மும்பைக்கு பயணமானார் வழியில் ஹிந்து மகா சபாவினர் இடைமறித்தனர். அவரை மும்பையில் ஜின்னாவுடன் சந்திப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அந்த கூட்டத்தின் தலைவனாக நாதுராம் கோட்சே அவர்கள் காந்தியைக் கொல்வதற்கு முயன்றனர். அவர்களை காவலர்கள் தடுத்து எதற்கு காந்தியை கொல்வதற்கு முயல்கிறாய் என்று வினவியதற்கு வீர் சாவர்க்கர் கட்டளைப்படி அவரைக் கொல்லவேண்டும் என்று கூறினர். டாக்டர் சுசிசிலா நாயர் கப்பூர் ஆணையத்தின் முன் இவ்விவரங்களை அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. “சான்று தேவை” என்று விக்கிபீடியா போன்றவை இக்கதையை வெளியிட்டுள்ளன.
ஜூன் 29, 1946 நான்காவது முயற்சி: ஜூன் 29, 1946ல் காந்திக்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தொடர்வண்டியில் பிராயாணித்தபொழுது அத்தொடர்வண்டி மும்பை அருகேயுள்ள நேரல்-க்கும் கர்ஜட் க்கும் இடையே தடம் புரண்டது. தொடர் வண்டியின் ஒட்டுநர் அறிக்கை இருப்புப்பாதையின் கடையாணிகளை விசமிகள் வேண்டுமென்றே காந்திக்கு குறிவைத்து கழற்றியுள்ளதால் தடம் புரண்டது என்ற அறிக்கையை சமர்ப்பித்தார். ஏனென்றால் காந்தியின் சிறப்பு தொடர்வண்டி மட்டுமே அவ்வழியில் செல்வதாயிருந்தது. வேறு எந்த வண்டியும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “சான்று தேவை” என்று விக்கிபீடியா போன்றவை இக்கதையை வெளியிட்டுள்ளன.
ஜனவரி 20, 1948, ஐந்தாவது முயற்சி: ஜனவரி 20, 1948, மதன்லால் பக்வா, சங்கர் கிஸ்தயா, திகம்பர் பட்கே, விஷ்ணு கார்கேற், கோபால் கோட்சே, நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் அப்தே இவர்கள் அனைவரும் தில்லியில் பிர்லா பவனில் கூடி அடுத்தக்கட்டத் தாக்குதலைத் தீர்மானித்தனர். அதன்படி காந்தி பேசும் மேடை அருகே வெடிகுண்டை வெடிக்கச்செய்து அதன்மூலம் கலவரம் ஏற்பட்டவுடன் காந்தியை சுட்டுக் கொல்லத் தீர்மானிக்கப்பட்டது. சுட்டுக்கொல்ல திகம்பர் பக்டேவும் அல்லது சங்கர் கிஸ்தி இருவரில் யாராவது நிலைமைக்குத் தகுந்தார்போல் செயல்படவேண்டும் என்ற தீர்மானத்தின்படிப் புறப்பட்டனர். அதன்படி தனியார் வாகனத்தை பயன்படுத்தி காந்தி பேசும் மேடையருகே மத்னலால் பக்வாவால் பற்றவைக்கப்பட்டது எதிர்பாராதவிதமாக குண்டு வெடிக்கவில்லை இதனால் இந்த முயற்சியும் தோல்வியுற்றது.மதன்லால் பக்வாவை விட்டுவிட்டு மற்றவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். காவல்துறை மதன்லால் பக்வாவை விசாரித்ததில் உண்மைகள் தெரிந்தன ஆனால் காவல்துறையால் உடனிருந்தவர்களை பிடிக்கமுடியவில்லை. அவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்தைவிட்டு தப்பிவிட்டனர். “சான்று தேவை” என்று விக்கிபீடியா போன்றவை இக்கதையை வெளியிட்டுள்ளன.
காந்தி கொலை சதி–திட்டம் – ஆங்கிலேயர்களின் அமைதியான ஆதரவு: சதி-திட்டம் பற்றிய கருதுகோளை [Conspiracy hypothesis] இவ்வாறு உருவாக்கி, அதனை வளர்த்த பெருமை ஏ.ஜி.நூரானியை சேரும். விக்கிபீடியா போன்றவை “சான்று தேவை” என்று இக்கதையை நூரானி கதையை ஆதாரமாக வைத்து வெளியிட்டுள்ளன. ஆதாரம் இல்லை எனும் போது, அத்தகைய கதைகளை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. மேலும், சம்பந்தப் பட்டவர்கள் இறந்து விட்டனர் எனும்போது, அவர்கள் வந்து சாட்சி சொல்ல முடியாது. உதாரணத்திற்கு, பி.ஜி.கேரோ 1957ல் காலமாகி விடுகிறார். ஆக, அவர் தரப்பு வாத-விவாதங்கள் பிறகு ஏற்படுத்தப் பட்ட கமிஷன்களில் பொருளற்றதாகி விடுகிறது. அப்படி பார்த்தால், காந்தியை அதிக அளவில், திட்டித் தீர்த்த பெருமை ஆங்கில ஆட்சியாளர்களுக்கு உண்டு. வெளியில், அவரை “மிஸ்டர் காந்தி” என்றேல்லாம் விளித்தாலும், “இந்த கிழவன் தொல்லை தாங்கவில்லை, என்றுதான் சாவானோ” என்று வசைப்பாடியுள்ளனர், சபித்துள்ளனர். ஆகவே, ஆங்கிலேயர்களுக்கு, இந்தியாவில் நடக்கும் எல்லா சதிதிட்டங்களும் தெரிந்திருக்கும். ஆனானப் பட்ட அரவிந்தர் போன்றோர் வைத்த குண்டுகளை கண்டுபிடித்தர் என்றால், கோட்சே விகிபீடியா சொல்லும் கதைகளைப் போன்று, ஐந்தாறு முறை தாக்க திட்டம் போட்டது, குண்டு வைத்தது, ரெயிலை கவிழ்ததது என்றெல்லாம் யாருக்கும் தெரியாமல் நடந்தேறாது.
© வேதபிரகாஷ்
20-06-2018
[1] The book first appeared in a serial form. Fifteen out of its sixteen chapters were serialized in a monthly Marathi magazine called ‘Painjan’ in its issues of June 1966 to October 1967. What is now the seventh chapter of the book — “Throw my ashes into the Indus” — appeared in the issue dated the 8th October, 1967 of a Marathi weekly called ‘Sobat’. Both the journals are published by ‘Asmita Prakashan’, Poona, of which Behere is the proprietor.
[2] Hindustan Times, The politics of an assassination: Who killed Gandhi and why?, Abhishek Saha, ANALYSIS Updated: May 28, 2017 19:23 IST.
[3] https://www.hindustantimes.com/analysis/the-politics-of-an-assassination-who-killed-gandhi-and-why/story-iUJqKjuw0sP9nAfc5KcOII.html
[4] Bombay High Court – Gajanan Vishwanath Ketkar vs The State on 21 July, 1965; Equivalent citations: AIR 1967 Bom 96, (1966) 68 BOMLR 321, 1967 CriLJ 427, ILR 1966 Bom 839, Author: Naik; Bench: Naik, Palekar