Posts Tagged ‘பிர்லா’

மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (1)

ஜூன் 15, 2018

மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (1)

The accused Godse 12-05-1948

நாதுராம் கோட்சே கடைசிவரை நான் தான் கொன்றேன் என்று ஒப்புக் கொண்டது: மஹாத்மா காந்தி கொலை வழக்கைப் பொறுத்த வரையில், கடைசி வரை, நாதுராம் கோட்சே தார்மீகத்தைக் கடைப் பிடித்து, “ஆமாம், நான் தான் மகாத்மாவைக் கொன்றேன்,” என்று ஒப்புக் கொண்டதால் தான் வழக்கில், தூக்குத் தண்டனைக் கிடைத்தது. சுட்டப் பிறகு ஏற்பட்ட அமளியில், நாதுராம், கொஞ்சம் தூரம் சென்று அமைதியாக நின்றிருந்தால் கூட, ஒன்றும் தெரிந்திருக்காது. ஆனால், நாதுராம் ஓடவில்லை, ஒளியவில்லை, அமைதியாக நின்றிருந்தான். அப்படியே நின்றிருந்தான் பிறகு நடந்ததைப் பற்றி பலவிதமாக சொல்லப்பட்டது, எழுதப்பட்டது. கோட்ஸே அமைதியான சரண்டர் ஆனார், மக்கள் அடித்து நொறுக்கினர், ரத்த வெள்ளத்தில் கிடந்தான் ….ஆகாயப்படை அதிகாரி அவனைப் பிடித்தார், கையில் இருந்த துப்பாக்கி பிடுங்கப் பட்டது, போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர்……. இப்படி செய்திகள் வந்தன.

Fourth bullet theory - The Dawn, Pakistan

சுடப்பட்டது, குண்டுகள் எண்ணிக்கைப் பற்றிய சர்ச்சைகள்: “தி கார்டியன்” என்ற நாளேட்டின் படி[1], “கோட்ஸே, தன்னை கொல்வதற்காக நான்காம் முறை சுட்டான், ஆனால், அருகிலிருந்த விமான அதிகாரி அவனது கையை முறுக்கி, துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டார். அவர் கோட்ஸேவை சுட முயன்றார், ஆனால், போலீஸார் தடுத்து விட்டனர். கோபம் கொண்ட கூட்டம், கொம்புகளால் கோட்ஸேவை அடித்தனர். ஆனால், போலீஸார் அவனைப் பிடித்துக் கொண்டு, போலீஸ் ஷ்டேசனுக்குக் கூட்டிச் சென்று விட்டனர்.” ஆகவே, துப்பாக்கியில் கைரேகை இருந்தது பற்றிய விவரங்கள் ஆதாரமாகாது. காந்தி சுடப்பட்டது பற்றி கூட இவ்வாறு, விதவிதமான செய்திகள் உலக நாளிதழ்களில் வெளி வந்தன. மூன்று மற்றும் நான்கு முறை சுடப்பட்டது, சுட்ட சப்தம் கேட்டது…..போன்ற செய்திகள் வெளிவந்தன. கொலை செய்ய முயன்றது பற்றிக் கூட, முயற்சிகள் நடந்தது எத்தனை என்பது பற்றி தெளிவாக இல்லை. பலர், பலவிதமாக செய்திகளை வெளியிட்டனர். வெளிநாட்டவர் பலவிதமாக, புத்தகங்களில் எழுதி வைத்தனர்.

Gandhi assassination, Gita recited 30-01-1948

காந்தி இறந்தது எப்பொழுது?: காந்தி உடனே இறந்தாரா, “ஹே ராம்” சொல்லி இறந்தாரா, பிர்லா ஹவுஸுக்கு கொண்டு சென்றபிறகு 30 நிமிடம் கழித்து இறந்தாரா என்றெல்லாம் தெரியவில்லை. பிர்லா மாளிகைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மந்திரங்கள் உச்சாடனம் செய்யப் பட்டது. இதனால், அவர் இறக்கும் வரை மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தனர் என்ற செய்தி வேறு வந்தது. மனுபென் குறிப்பின்படி, காந்தி கீழே விழுந்தபோது, கடிகாரத்தில் 5.17 காட்டியது. அவரது வெண்ணிற உடையில் பல இடங்களில் ரத்தம் தோய்ந்திருந்தது. அவரை திரும்ப வீட்டிற்குள் எடுத்துச் செல்ல 10 நிமிடங்கள் ஆகின. அப்பொழுது எந்த டாக்டரும் இல்லை. முதலுதவி பெட்டிதான் இருந்தது, ஆனால், அதில் காயத்திற்கு போட எந்த மருந்தும் இல்ல, காந்தி அதிகமாக ரத்தத்தை இழந்தார். எல்லோரும் சப்தமாகக் கத்திக் கொண்டிருந்தனர். பாய் சாஹெப் மருத்துவ மனைக்கு போன் செய்து கொண்டிருந்தார். ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. பிறகு வெல்லிங்டன் ஹாஸ்பிடலுக்குச் சென்று திரும்ப வந்தார். அவர் உடல் அறையில் வைக்கப்பட்டு, கீதா படிக்கப் பட்டது, பிறகு காலனெல் பார்கவ் வந்து, பார்த்து அவர் இறந்து விட்டார் என்று அறிவித்தார்[2].

Gandhi assassination, by a fanatic 30-01-1948

காந்தியைஇந்து வெறியாளன்சுட்டான்: “இந்து வெறியாளன்” என்ற சொற்றோடர் மட்டும் எல்லாவற்றிலும் இருந்தது[3]. ஆனால், உடனடியாக, மௌன்ட் பேட்டன், நேரு, படேல் முதலியோர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஏற்கெனவே கொதித்திருக்கும் இந்துஸ்தான மக்கள் கலவரங்களில் ஈடுபட்டால், துலுக்கருக்குத் தான் அபாயம் ஏற்படும் என்று அறிந்து செயல்பட்டனர். இதனால் தான், பல உண்மைகள் மறைக்கப் பட்டன. சர்தார் பட்டேல் பற்றியும் முரண்பட்ட வாதங்கள் இன்று வைக்கப் படுகின்றன[4]. மஹாத்மா காந்தி கொலைசெய்யப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கைப் படித்துப் பார்த்தால், வழக்கில் உள்ள ஓட்டைகள் தெரியும். இது ஒரு அரசியல் கொலை, தனிமட்ட மனிதனின் கொலையல்ல என்று கோடானு கோடி மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. 1947-48 காலங்களில் வாழ்ந்த முதியோர்களில் பெரும்பாலோர், மஹாத்மாவின் முஸ்லிம் ஆதரவு கொள்கைகளை விரும்பவில்லை.

Gandhi assassination, Noakhali appeasement, 30-01-1948

மஹாத்மாவை மதித்த மக்கள், அவரது முஸ்லிம் சார்பு கொள்கைகளினால் வருத்தமடைந்தது: “பாகிஸ்தான் உருவானால், எனது இறந்த உடல் மீது தான் நடந்து செல்ல வேண்டும்,” என்று காந்தி சொன்னது எல்லோருக்கும் தெரியும். ஆனால், லட்சக்கணக்கான துலுக்கர், இந்துக்களைக் கொன்று அவகளின் உடல்களின் மீது தான் நடந்து பாகிஸ்தானிற்குச் சென்றனர். அப்பொழுது கூட, இந்து நலன் காக்காமல், சந்தோசமாக நேரு பதவி ஏற்றார். காந்தியோ, துலுக்கரின் உயிரைக் காப்பேன் என்று நவ்காளிக்குச் சென்றார். உண்மையான தேசப்பற்றுக் கொண்டவன் கொதித்துக் கொண்டிருந்தான். கோடானு கோடி மக்களுக்கு, மஹாத்மா கடவுள் போன்றே இருந்தார். அவர் விஜயம் செய்தால், லட்சக்கணக்கில் மக்கள் வந்து, கால்களில் வீழ்ந்து வணங்கிச் சென்றது சாதாரணமான விசயமாக இருந்தது. ஆனால், சுதந்திரம் கிடைத்து பத்தே நாட்களில் நிலைமை மாறியது. நேரு மற்றும் காந்தி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதை, நன்றாகப் புரிந்து கொண்டனர். துலுக்கர் இந்துக்களின் பிணங்களை அனுப்பி வைத்தபோது, கோடிகளை இவர்கள் பதிலுக்கு தானமாகக் கொடுத்தனர். இப்படி பட்ட விசயங்களுக்காக, நாதுராம் மட்டும் கோபப் படவில்லை, கோடானு கோடி இந்திஸ்தான மக்கள் கோபப் பட்டனர், “இந்த கிழவன் செத்தால் தேவலை,” என்று கரித்துக் கொட்டினர். அந்நிலையில் தான் நாதுராம் சுட்டுக் கொன்ற போது, மக்கள் மகிழ்ந்தனர், “மஹாத்மா” சென்று விட்டதால் வருத்தம் அடையவும் செய்தனர். அதனால், சிலர் இனிப்புக் கொடுத்து மகிழ்ந்தனர் என்றால், அவர்கள் ஆர்.எஸ்.எஸ் / ஹிந்துமஹா / அபிநவ பாரத் சபாகாரர்கள், என்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஊடகங்கள் ஆர்.எஸ்.எஸ் என்றே குறிப்பிட்டன.

Gandhi assassination, Cincinnati Post 30-01-1948

காந்தி இறப்பு ஆர்.எஸ்.எஸ்.க்கு முன்னரே தெரியுமா, இனிப்புகள் விநியோகித்தார்களா?: ஆங்கிலத்தில் எப்பொழுதும் பொய்யை சொல்லும் போது, சுற்றி வளைத்துக் சொல்வார்கள். உதாரணத்திற்கு இதனை எடுத்துக் காட்டுகிறேன்:

 As Gandhi’s Boswell, Pyarelal, records in his memoirs[5], “members of the RSS at some places had been instructed beforehand to tune in their radio sets on the fateful Friday for the ‘good news’, and sweets were distributed by the members at many places.”

போஸ்வெல் மற்றும் பியாரேலால் தங்களது நினைவுகளை பதிவு செய்தபடி, “முன்னமே, சில இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அங்கத்தினர்களுக்கு ரேடியோவை ஆன் செய்து வெள்ளிக்கிழமை அன்று நல்ல செய்தி வரும் என்று அறிவுருத்தப் பட்டார்கள், மற்றும் இனிப்புகள் பல இடங்களில் விநியோகித்ததார்கள்,” என்று ஏ.ஜி. நூரானி எழுதியுள்ளதை கவனிக்கலாம்.

  1. அதாவது நூரானிக்கு போஸ்வெல் மற்றும் பியாரேலால் தான் ஆதாரம்.
  2. போஸ்வெல் மற்றும் பியாரேலால் இவர்களுக்கு அவர்களது நினைவுகள் ஆதாரம்.
  3. அந்நினைவுகளிலோ ஆர்.எஸ்.எஸ். அங்கத்தினர்களுக்கு யார் அறிவுருத்தினர் என்று தெரியாது.
  4. மேலும், அறிவுருத்தப் பட்ட ஆர்.எஸ்.எஸ். அங்கத்தினர்கள் ரேடியோ கேட்டார்களா இல்லையா – நூரானிக்குத் தெரியாது.
  5. பிறகு, “sweets were distributed by the members at many places.” என்றால் அதே ஆர்.எஸ்.எஸ். அங்கத்தினர்கள் விநியோகித்தார்கள் என்றால் என்ன அர்த்தம்?
  6. அதிலும் பல இடங்களில் விநியோகித்தார்கள் என்றால் என்ன அர்த்தம்?
  7. இதுவும் காந்தி சுடப்பட்டது, குண்டுகள் எண்ணிக்கை கதையாக இருக்கிறது.
  8. ஏதோ, ஒரு இயக்கம் இருக்கிறது, அதன் மீது எல்லா பழிகளையும் போடலாம், என்ற ரீதியில் தான் வாதன் உள்ளது.
  9. பிறகு இதில் உண்மை என்னத்தான் உள்ளது?

 

© வேதபிரகாஷ்

14-06-2018

Gandhi assassination, who killed

[1] According to The Guardian report, which did not mention Herbert Reiner Jr, Godse “fired a fourth shot, apparently in an effort to kill himself, but a Royal Indian Air Force sergeant standing alongside jolted his arm and wrenched the pistol away. The sergeant wanted to shoot the man but was stopped by the police. An infuriated crowd fell upon the man and beat him with sticks, but he was apprehended by the police and taken to a police station.”

https://www.theguardian.com/world/1948/jan/31/india.fromthearchive

[2] The watch she was carrying showed 5:17 p.m. and blood was everywhere on their white clothes. Manuben estimated that it took about ten minutes to carry Gandhi back into the house, and no doctor was available in the meanwhile. They only had a first aid box, but there was no medicine in it for treating Gandhi’s wounds. According to Manuben,………Gandhi had suffered profuse blood loss. Everyone was crying loudly. In the house, Bhai Saheb had phoned the hospital many times, but was unable to reach any help. He then went to Willingdon Hospital in person, but came back disappointed. Manuben and others read Gita as Gandhi’s body lay in the room. Col. Bhargava arrived, and he pronounced Gandhi dead.

Gandhi, Manuben (1962), Last Glimpses of Bapu, Ahmedabad: Nuvajivan, Delhi: Agarwal

[3] ஒரு முஸ்லிம் சுட்டான் என்று கூட செய்தி வந்து கலவரம் கூட ஏற்பட்டது, என்றெல்லாம் ஆதாரங்களேஐல்லாமல் இப்பொழுது பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

[4] The Front Line, The BJP and Nathuram Godse, A.G. NOORANI, Print edition : February 08, 2013

https://www.frontline.in/books/the-bjp-and-nathuram-godse/article4328688.ece

[5] Frontline, The BJP and Nathuram Godse, A.G. NOORANI, Print edition : February 08, 2013;  ( Mahatma Gandhi: The Last Phase; page 750).

https://www.frontline.in/books/the-bjp-and-nathuram-godse/article4328688.ece