Posts Tagged ‘நான்கு குண்டு’

மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (5): இறந்தவர்கள் வந்து சாட்சி சொல்லப் போவதில்லை!

ஜூலை 6, 2018

மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (5): இறந்தவர்கள் வந்து சாட்சி சொல்லப் போவதில்லை!

Pankaj Phadnis of Abhinav Bharat Mumbai - Vishnu V. Nair- the week

நாராயண ஆப்தே ஒரு பிரிடிஷ் ஏஜென்ட் என்று பங்கஜ் பட்னிஸ் தனது வழக்கு ஆவணத்தில் குறிப்பிட்டது: கபூர் கமிஷன் அறிக்கையில், நாராயண ஆப்தே இந்திய ஆகாயப்படையில் இருந்ததாகக் குறிப்பிட்டார்[1]. அது இல்லை என்று நேரிடையாக, யாரும் மறுக்கவில்லை. அதனால், பங்கஜ் பட்னிஸ் [Dr Pankaj Phadnis] என்ற ஆராய்ச்சியாளர், மரணதண்டனை அடைந்த நாராயண ஆப்தேவின் அடையாளம் சரியாகக் கண்டறியப்படவில்லை என்று உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தனது மனுவில் குறிப்பிட்டார்[2]. இருப்பினும் அதற்கான ஆதாரங்களை இவர் எடுத்துக் கட்டவில்லை. அவர் (ஆப்தே) ஒரு ஆங்கிலேரின் ஏஜென்டாக [British Force 136] இருந்திருக்கலாம், அதற்கான  வாய்ப்புள்ளது என்றும், அதற்கான ஆவணங்கள் வேண்டும் என்றும் கேட்டார்[3]. ஏனெனில், சுதந்திரத்திற்கு முன்னர், எல்லோருமே ஆங்கிலப் பிரஜைகள் என்பதால், அத்தகைய ஆவணங்கள் அவர்களிடம் இருக்கலாம் என்றும் எடுத்துக் காட்டினார். ஆனால், ஜனவரி 7, 2016 அன்று ராணுவ அமைச்சர், நாராயண ஆப்தே அவ்வாறு இந்திய ஆகாயப்படையில் இருந்ததற்கான, எந்த ஆவணமும் இல்லை என்று தெரிவித்தார்[4].

Apte british agent- the week

நாராயண ஆப்தே என்றா பெயரில் இந்தி ஆகாயப் படையில் யாரும் இல்லை – ராணுவ அமைச்சர் பதில்: “நான் இந்த விசயத்தை நன்றாக சோதித்துப் பார்த்தேன். இங்குள்ள ஆகாயப் படை பிரிவுகள், இங்கிலாந்து முதலிய படைப்பிரிவுகளிலும் விசாரித்துப் பார்த்ததில், அத்தகைய பெயரை கொண்டவர், இந்திய ஆகாயப்படையில் இருந்ததாக இல்லை என்று அறிவித்துள்ளனர். தேசிய ஆவணக் காப்பகம், தேசிய நூலகம், மஹாத்மா காந்தி கொலை வழக்கு, தனிப்பட்ட ஆவணங்கள் என்று எல்லாவற்றிலும் பார்த்தாகி விட்டது. 1943-46 ஆண்டுகளுக்கான அரசு கெஜட்டியர்களிலும் தேடிப்பார்த்தாகி விட்டது. ஆனால், அத்தகைய பெயரில் ஆகாயப்படை அதிகாரி இல்லை,” என்று அமைச்சர் பதிலளித்தார்[5]. இது பற்றி கேட்டதற்கு, பங்கஜ் பட்னிஸ், “ஆவணங்கள் இல்லை என்பது வேறு, உள்ள ஆவணங்களில் அவர் பெயர் இல்லை என்பது வேறு, அத்தகைய ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம்….” என்று எடுத்துக் காட்டினார்[6]. மேலும் ஆங்கில அரசு எல்லா ஆவணங்களையும் கொடுக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. குறிப்பாக, ஆங்கில அரசையே குற்றஞ்சாட்டி, இவர் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், யாரும் அத்தகையை ஆதாரத்தை, இருந்தாலும் கொடுக்க மாட்டார்கள் என்பது சாதாரணமான விசயம்.

Apte namje not found in the records- Jan 2016

காந்தி கொலையால் யார்க்கு லாபம்?: காந்தியை கொலை செய்வதால், கோட்சேவுக்கு எந்த பலனும் [benefit] இல்லை. காந்தி கொலையுண்டதால், இந்தியாவில் இந்துக்களின் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை. அப்பொழுதே எப்படி கோடிகள் கொல்லப் பட்டார்களோ, காஷ்மீரத்தில், அப்பொழுது முதல், இப்பொழுது வரை லட்சக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். செக்யூலரிஸ இந்தியாவாக மாறிவிட்டப் பிறகு, முஸ்லிம்கள் அதிகமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டு வெடிப்புகளில் அப்பாவி இந்துக்களை தொடர்ந்து கொன்று வருகின்றனர். பாகிஸ்தான் கொடுக்கப்பட்டுப்  பிறகு கூட, இருக்கும் முஸ்லிம்களால் வன்முறை, சட்டரீதியிலான பிரச்சினைகள், பிரிவினைவாத  வன்முறைகள், முதலியன தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. எந்த அரசியல்வதியாலும், இதனைத் தடுக்க முடியவில்லை, தடுப்பதாகவும் தெரியவில்லை. ஆகவே, 1947-48 காலக்கட்டத்தில், நிச்சயமாக இந்துக்களுக்கு எந்த பலனும் இல்லை. மாறாக, நேருவுக்கு, ஆங்கிலேயர்களுக்கு லாபம் இருந்தது. நேரு, தனக்கு யாரும் போட்டியில்லாமல் பிரதமர் ஆகிவிட்டார். ஆங்கிலேயர் மறைமுகமாக ஆதிக்கத்தைச் செல்லுத்தி, சென்று விட்டது. பாகிஸ்தானுக்கும் லாபம் கிடைத்தது. ஆக, இந்த கோணத்தில் கவனித்தால், கோட்சே மாட்டிக் கொண்டான் என்று தெரிகிறது. ஏதோ, மனநோயாளி போன்று, தாம் காந்தியைக் கொன்றேன் என்று ஒப்புக் கொண்டு, தத்துவம் பேசி, தண்டனை பெற்றுள்ளான். அவனது வாக்குமூலம் கூட, தத்துவம் போலத்தான் இருக்கிறது. பழிவாங்கும் உணர்வு, கொலை செய்ய வேண்டிய “மோடிவ்” [motive] – துஉண்டுதல் வெளிப்படவில்லை. ஆனால், காந்தியால், ஆரம்பத்திலிருந்தே ஆங்கிலேருக்குத் தலைவலிதான். காந்தி, பாகிஸ்தான் உருவானால், என் பிண்த்தின்மீது தான் நடந்து செல்ல வேண்டும் என்றார், ஆனால், லட்சக்கணக்கான இந்து பிணங்கள்மீது பிரிவினைவாதிகள் நடந்து சென்றனர். நவகாளியில் கூட, இந்துக்கள் கொலைசெய்யப் பட்டபோது, முஸ்லிம்களுக்கு ஆதரவாக, நடை-யாத்திரை மேற்கொண்டார்.

Manohar Malonkar - book

பெரும்பாலான அரசியல்வாதிகள் காங்கிரஸில் இருந்துள்ளனர், பிறகு தான் அவர்கள் மற்ற கட்சிகள் துவங்கியபோது, அவர்களில் சிலர் துவக்கியபோது, அக்கட்சிகளின் உறுப்பினர்கள் ஆனார்கள். அதுபோல, ஆர்.எஸ்.எஸ்.ல் எத்தனையோ நபர்கள் உறுப்பினர்களாக இருந்திருக்கலாம் அல்லது பின்பற்றும் ரசிக்ர்களாகக் கூட இருக்கலாம். அதனால், எல்லோருமே ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் என்று சொல்ல முடியாது. ஒரு தனிநபர் இத்தகைய முரண்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று இறந்து விட்டப் பிறகு, கோட்சே ஆர்.எஸ்.எஸ் இருந்தார்-இல்லை என்ற வாதம் எந்த விதத்தில், நாட்டிற்கு வேறு விசயத்தில் உபயோகப்ப் படும் என்று தெரியவில்லை.

Mira Behn, Gandhi.2

முழு விவரங்கள் பொது மக்கள் முன்பு வைக்காத நிலையில், பாரபட்சத்தோடு, சித்தாந்திகள் எழுதுவது, பிரச்சாரம் செய்வது: தெளிவாக மக்களுக்கு முன்னால் ஆவணங்களை வைக்காமல், ஓரளவுக்கு ரகசயமாக நடத்தப் பட்ட, இவ்வழக்கில், “கோட்சே காந்தியைக் கொன்றான்” என்ற அளவுக்கு தெரிகிறது. ஆனால், பின்னணியில் உள்ள 90% விவகாரங்கள் சொல்லப்படவில்லை, மக்களுக்குத் தெரியாது. ஆனால், இடதுசாரி, மார்க்ஸீய, முஸ்லிம் குழுக்கள், செக்யூலரிஸப் போர்வையில், தெரிந்த விவரங்களையே திரித்து எழுதி வருவது வியப்பாக இருக்கிறது. தி இந்து, பிரென்ட் லைன் போன்றவற்றில் முன்னமே குறிப்பிட்டப் படி, ஏ.ஜி.நூரானி போன்றோர், வேண்டுமென்றே, மிக்கத் திறமையாக, பாதி விவரங்களைக் கொடுத்து, பாதி விவரங்களை மறைத்து கட்டுரை வெளியிட்டுள்ளனர். அவற்றைத் தொகுத்து, பிரச்சார ரீதியில், இணைதளத்தில் பாப்பவும் செய்கின்றனர்[7]. அவர்கள் எழுதியுள்ள தோரணையை கவனித்தால், இவர்கள் ஏதோ, ஜே.டி. கோஸ்லா, கபூர் போன்ற நீதிபதிகளையும் மிஞ்சியவர்கள், அவர்களுக்குத் தான் எல்லாமே தெரியும் என்ற போக்கில் எழுதித் தள்ளியுள்ளனர். ஆனால், “காந்தி சதிகொலை – கோட்சே  மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு” என்ற தலைப்பிலேயே, அவர்கள் ஏர்கெனவே தீர்மானித்து எழுதியுள்ள நிலையை வெளிப்படுத்திக் கொண்டு விட்டார்கள். அதாவது, அவர்களின் தீர்மானித்த முடிவுகளுக்கு ஏற்ப எழுதி தொகுத்தார்கள் என்பது தெர்கிறது. ஆகவே, நிச்சயமாக, பாரபட்சமற்ற, நடுநிலையான, ஒருதலைபட்சமற்ற, திரிபுவாதம் இல்லாத, சித்தாந்தசார்பில்லாத, வாதங்கள் அவர்களின் எழுத்துகளில் காணப்படவில்லை.

© வேதபிரகாஷ்

05-07-2018

The Men Who Killed Gandhi - book

[1] Indian Express, Mahatma Gandhi murder: Supreme Court told Narayan Dattatraya Apte’s identity mired in doubt, By: PTI | New Delhi | Updated: November 15, 2017 4:45:38 pm

[2] The Week, “Apte was a British agent”, By Dnyanesh Jathar | From issue dated November 12, 2017

[3] https://www.theweek.in/theweek/cover/apte-was-a-british-agent.html

[4] Parrikar’s letter states: “I have got the matter examined. I have been informed that the matter was referred to various agencies within the Air Force, MoD History Division as well as to AA at HCI, UK with the request to provide any information pertaining to Mr Narayan Dattatraya Apte. “All the agencies have confirmed that they have not found any records pertaining to Mr Narayan Dattatraya Apte. History Division of MoD even liased with National Archives, Central Secretariat Library and consulted private papers of Mahatma Gandhi’s murder trial,” it said. The letter also said that the Gazettes of India (Air Branch) for the year 1943-46 were also searched but no information related to him being an IAF officer “could be found anywhere.”

https://indianexpress.com/article/india/mahatma-gandhi-murder-supreme-court-told-narayan-dattatraya-aptes-identity-mired-in-doubt-4938689/

[5] Times of India, Was World War II secret British unit involved in Gandhi murder?, P Naveen | TNN | Oct 5, 2017, 10:15 IST
https://timesofindia.indiatimes.com/city/bhopal/was-world-war-ii-secret-british-unit-involved-in-gandhi-murder/articleshow/60949949.cms

[6] This means his record was destroyed. Force 136 had a policy of destroying records of its operatives. The point I want to drive home is that since the records of Apte are not available, there is a possibility he was a Force 136 operative.

https://timesofindia.indiatimes.com/india/was-wwii-secret-british-unit-involved-in-mahatma-gandhi-murder-plot/articleshow/60949099.cms

[7] Gandhi’s Assassination – Godse and RSS Connection An E-Digest, Published by Centre for Study of Society and Secularism 602 & 603 New Silver Star, Prabhat Colony Rd., Behind BEST Bus Depot, Santacruz (E), Mumbai: – 400 055. E-mail: csss2work@gmail.com

http://www.csss-isla.com/wp-content/uploads/2015/03/E-Book-RSSS-Godse-Gandhi.pdf

 

மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (5): வழக்கில் பல முரண்பாடுகள் உள்ளது திகைப்பாக உள்ளது!

ஜூலை 6, 2018

மஹாத்மாகாந்தி கொலை, கொலை வழக்கு, ஆர்.எஸ்.எஸ் (5): வழக்கில் பல முரண்பாடுகள் உள்ளது திகைப்பாக உள்ளது!

Rehashing Gandh-Godse stuff by the leftists and muslims

காந்தி கொலையைப் பற்றி இப்பொழுது ஆராய்ச்சித் தேவையா?: காந்தி கொலைவழக்கு முடிந்தாகி விட்டது, கொலைகாரன் கோட்சே தூக்கில் போட்டாகி விட்டது, ஆகவே, இப்பொழுது அக்கொலை, கொலைசதி முதலியவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதன் அவசியம் என்ன என்று சிலர் கேட்கலாம். தேவை, அவசியம் இல்லையென்றால், தி இந்து (The Hindu), பிரன்ட் லைன் (Frontline) தொடர்ந்து கட்டுரைகள் வெளியிடாது. ராகுல் காந்தி முதல் திக்விஜய் சிங் வரை அவ்வப்போது, ஆர்.எஸ்.எஸ் தான் காந்தியைக் கொன்றது என்று பேசுவதும், அதற்கு ஆர்.எஸ்.எஸ் நேரிடையாக எதிர்த்து முடிவு கட்டுகிற முறையில் நடவடிக்கை எடுக்காமல், யாரோ ஒரு ஆர்.எஸ்.எஸ்-காரர் வழக்குத் தொடுப்பது, மன்னிப்புக் கேட்பது, பிறகு மறுபடியும் மேடையில்-கூட்டத்தில் பேசுவது, ஜனரஞ்சக ரீதியில் நாளிதழ்-சஞ்சிகைகளில் எழுதுவது என்ற செயல்பாடு இருக்காது. ஆர்.எஸ்.எஸ்-தாக்குதல் என்பதை விட, இந்து-எதிர்ப்பு, இந்துமத-தூஷணம் முதலியவற்றில் தான், குறிப்பிட்ட கூட்டங்கள் ஈடுபடுவதை கவனிக்க முடிகிறது.  “ஒரு இந்து, ஒரு இந்து கொன்றான்” என்ற விதத்தில் கூட சுருக்கி, இந்துக்கள் எல்லோருமே கொலைகாரர்கள், வன்முறையாளர்கள், காந்தி போன்றவர்களைக் கூட கொலை செய்ய தயாராக இருப்பதால், இனிமேலும், அத்தகைய வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று அடுக்கிக் கொண்டே போவதை கவனிக்கலாம். ஒருகுறிப்பிட்ட திரிபுவாதத்தில், பிராமண-எதிர்ப்புப் போர்வையில், இந்துமதம் அதிகமாகவே தாக்கப் படுகிறது. ஆகவே, இதை அரசியல் பிரச்சாரம், ஆர்.எஸ்.எஸ்-எதிர்ப்பு என்ற நிலைகளினின்று மீறி செயல்படுவதால், நிச்சயமாக, இதனை ஆராய வேண்டியுள்ளது.

Against RSS - The Hindu, Frontline

திரும்பதிரும்ப எழுதுதல், மறுபடிமறுபடி பேசுதல் முறைகளில் உள்ள ஆபத்து: மேலும், தி இந்து, பிரன்ட் லைன் வகையறாக்கள் அதிகமாகவே பாரபட்சத்துடன், திரிபுவாதங்களுடன், பொய்களை குழைத்து, ஆங்கிலத்தில் திறமையாக எழுதி, துவேசத்தை, விசத்தைக் கக்கியுள்ளார்கள். ஏ.ஜி.நூரானி போன்றோர் அதில் தகுதிக்கு கீழாக எழுதியுள்ளனர் என்பது நோக்கத் தக்கது. பொதுவாக, இவற்றைப் படிப்பவர் சில நூறு ஆட்கள் என்று கொண்டாலும், சில ஆயிரம் ஆதிக்கத்தில் உள்ள எழுத்தாளர்கள், சித்தாந்திகள், பிரபலங்கள் மறுபடி-மறுபடி அத்தகைய பொய்களை திரும்ப-திரும்ப எழுதி, பேசி, தமது கட்டுரைகள், புத்தகங்களில் முதலியவற்றில் எடுத்தாண்டு வருவதால் [quoted-quote methodology], அப்பொய்களே, ஏதோ நிலைநிறுத்தப் பட்ட உண்மை போன்ற பிரமிப்பை உண்டாக்கியுள்ளனர். ஜே. டி. கோஸ்லா தீர்ப்பைக் கூடப் படிக்காமல், இவற்றை குறிப்பிட ஆரம்பித்து விட்டனர். அத்தகைய போக்கு, மிகவும் ஆபத்தானது. இவர்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்களை, பாசிஸ்டுகள், கொயபல்ஸ் என்றெல்லாம் விமசரித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் இவர்கள் தாம் அத்தகைய போக்கைக் கொண்டிருப்பதை காணும் போது, திகைப்பாக இருக்கிறது.

Chaouri Chura 1922

1922 – சௌரி சௌரா, ஒத்துழையாமை இயக்கம், வன்முறை: பிப்ரவரி 5, 1922 ம் தேதி, சுமார் 2,000-2,500 மக்கட்கூட்டம், ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு, திரும்பிக் கொண்டிருந்தது. யுனைடெட் ப்ரோவின்ஸ் [உத்திரபிரதேசம்], கோரக்பூர் மாவட்டம், சௌரி சௌரா என்ற இடத்தில், மார்க்கெட்டை நோக்கி அக்கூட்டம் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, இடையில் ஒரு போலீஸ் ஷ்டேஷனைக் கடந்து சென்றது. அவ்வேளையில் போலீஸார் மற்றும் கூட்டத்தில் உள்ள மக்களுக்கு இடையில் பார்வை பரிமாற்றம் நடந்த போது, அதில் கோபம், சந்தேகம், பீதி, பயங்கரம் என்றிருந்தன. கூட்டம் கடந்து சென்று விட்டது. ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடைசியில் மெதுவாக நடந்து வந்த சிலரை, போலீஸார் பிடித்து, ஷ்டேசனிற்குள் கூட்டிச் சென்று விட்டனர், அடித்துக் கொண்டிருக்கின்றனர்; வெளியில் வந்து துப்பாக்கி சூடு நடத்தப் போகிறது; என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், திரும்பி வந்தகூட்டம், போலீஸ் ஷ்டேஷனைத் தாக்கியது; சூரையாடியது, தீயிட்டுக் கொளுத்தவ்போலீஸ் ஷ்டேஷவும் செய்தது. கொல்லப்பட்டவர் 10 பேர், 20, 23, 30 என்றெல்லாம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதில் அதிகமாகக் கொல்லப்பட்டவர் போலீஸ் தான்.  இந்த வன்முறைக்கு, கலவரத்திற்கு காந்தி தான் பொறுப்பு என்று ஆம்ஹ்கிலேய அரசாங்கம் கூறியது. ஆனால், காந்தி பொறுப்பேற்றுக் கொண்டு, இனி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவதில்லை என்று வாக்குருதி கொடுத்து, முடிவு கட்டினார்.

Churi chura violence 1922

1942-1947 – ஒத்துழையாமை இயக்கமும், சத்தியாகிரகமும்: மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவன் தான் தலைவன் ஆகிறான், வன்முறையை, தூண்டுபவன், கட்டவிழ்ப்பவன் அல்ல! காந்தி இந்தியர்களைக் கட்டுப் படுத்திய விதத்தை கவனிக்க வேண்டும். வன்முறையை கட்டுப் படுத்தியதால் தான், அவர் மஹாத்மா ஆனார்! காந்தி, சௌரி சௌராவை தொடர்ந்து பின்பற்றியிருந்தால், ஆங்கிலேயர் எல்லாம் ஒட்டு மொத்தமாக, அன்றே செத்திருப்பார்கள்! நூறு கோடி இந்துக்களில் ஒரு கோடி இந்துக்கள் நடந்து சென்று  எதிரி நாட்டின் மீது படுத்தாலே, அது தெரியாமல் போய் விடும்!இந்திய / இந்து மக்கள் சக்தி மகத்தானது, அதனை ஒருமித்து, செயல்படுத்த வேண்டும். பலன் கிடைக்கும், என்றுணர்ந்ததால், அவர் சத்தியாகிரகத்திற்கு மாறினார். ஆங்கிலேயனை வன்முறையளன் ஆக்கி, தான், அமைதியின் பிரதிநிதி ஆனதால் தான், காந்திக்கு சிறப்பு உண்டானது. மேனாட்டவரே, ஏசுவின் மறு உருவம், ரிஷி-முனி போன்றவர் போன்று மதிக்க ஆரம்பித்தனர்.

Police recovered four bullets

30-01-1948 – காந்தி கொலையில் நான்கு துப்பாக்கி குண்டுகள் சர்சை விவரங்கள்: காந்தியின் ரத்தக்கறை படிந்த உடை, சுட்டபோது போத்திக் கொண்ட சால்வை, நான்கு புல்லட்டுகளைக் காட்டுகிறது[1].  மேலும், காந்தியின் உடலை பிரேத பரிசோதனையும் செய்யப்படவில்லை என்பது கூரிப்பிடத் தக்கது[2]. “டான்” நாளிதழ் தலைப்புச் செய்தியில் நான்கு முறை துப்பாக்கி சுடப்பட்டு, நான்கு குண்டுகள் பாய்ந்தன என்று குறிப்பிட்டது. பிறகு, “டைம்ஸ் ஆப் இந்தியா,” லோக் சத்தா போன்றவையும் நான்கு புல்லட்டுகள் சுடப்பட்டன என்றே குறிப்பிட்டன. வின்சென்ட் ஷெரீன் [Vincent Sheean] நான்கு கருமையான குண்டு வெடிப்புகள் [“four full dark explosions”] என்று குறிப்பிட்டுள்ளார். “ரியூட்டர்ஸ்” என்ற நாளிதழ் குழுமத்தைச் சேர்ந்த கே.சி. ராய் [K.C. Roy (of Reuters)] என்பவரும் நான்கு துப்பாக்கி குண்டுவெடி சப்தத்தை கேட்டதாகக் குறிப்பிட்டார். “தி இந்து” ஜனவர் 31, 1948 அன்று வெளியிட்ட புகைப்படத்தில் நான்கு துப்பாக்கி காயங்கள் இருப்பதைக் கவனிக்கலாம். அது அரசு புகைப்படம் ஆகும் [government photograph, PIB MG 2626]. ஆகவே, நான்கு எவ்வாறு மூன்றாகியது? சுடுவதற்கு உபயோகப்படுத்தப் பட்ட பெரெட்டா பிஸ்டலில் [Beretta pistol] நான்கு குண்டுகள் பாக்கி இருந்ததாக, போலீஸார் குறிப்பிட்டனர். அப்படியென்றால் இதிலிருந்து மூன்று குண்டுகள் தான் வெளியேறியுள்ளன. பிறகு, நான்காவது புல்லட் எங்கிருந்து வந்தது, எந்த துப்பாக்கி மூலம் சுடப்பட்டது, யார்-எங்கிருந்து சுட்டார்கள் போன்ற கேள்விகள் எழுகின்றன. இருப்பினும் இவ்வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

Four bullets, news cuttings

மீரா பென்னின் வாக்குமூலம்: கபூர் கமிஷன் முன்பு, மீரா பென்[3] வாக்குமூலம் கொடுக்க செல்லும் போது, மொரார்ஜி தேசாய், தான் சிறியவள் என்பதால், எனக்கு சரியாக ஞாபகம் இல்லை என்று சொல்லுமாறு அறிவுருத்தினாராம். ஆனால், மீரா பென் தான் காந்தியின் சீடை டென்பதால் உண்மைதான் கூறுவேன் என்று உறுதியாக இருந்தாளாம்[4]. ஜனவரி 30 அன்று கோட்சே மதியம் வந்தான், காந்தியின் வலது பக்கத்தில் நின்றிருந்தான். அவன் காந்தியைக் கொன்றிருக்கலாம், ஆனால், ஏதோ காரணத்திற்கு அவ்வாறு செய்யவில்லை என்றாளாம். மீரா பென் காந்தியின் அருகில் இருந்தாலும், கோட்சே அவளைத் தள்ளிக் கொண்டு, காந்தியின் முன்பு வந்து சுட்டான் என்பதாலும், அவரது வாக்குமூலம் முக்கியமானதாகக் கருதப் பட்டது. ஆனால், அதுவே பாதிக்கப்பட்டது, அழுத்தத்திற்குட்பட்டது, அதன் மீதும் மாற்றுக் கருத்துச் சொல்லப்படுகிறது எனும் போது, பொது மக்களுக்கு சந்தேகம் எழத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

04-07-2018

 

Mira Behn, Gandhi

[1] The PIL also says an examination of the “blood-stained shawl” that Gandhi wore at the time of his death would reveal the truth behind the number of gunshot wounds and expose the inherent inconsistencies in the murder trial.

Hindustan Times, Two assassins, four bullets and a foreign hand: What PIL seeking fresh probe into Mahatma Gandhi’s murder says, Ashok Bagriya, New Delhi, Updated: Jan 10, 2018 07:50 IST.

[2] https://www.hindustantimes.com/india-news/two-assassins-four-bullets-and-a-foreign-hand-what-pil-seeking-fresh-probe-into-mahatma-gandhi-s-murder-says/story-GKNSQ5ZFqbciLHMf87OO0M.html

[3] Madeleine Slade (Mirabehn) (22 November 1892 – 20 July 1982), daughter of the British Rear-Admiral Sir Edmond Slade, was a British woman who left her home in Britain to live and work with Mohandas Gandhi, the leader of the Indian Independence Movement. She devoted her life to human development and the advancement of Gandhi’s principles.

[4] Tushar Gandhi, Let us kill Gandhi, p.77.