Posts Tagged ‘பழங்கால இந்தியா’

அலெக்சாந்தர் கட்டுக்கதை, இட்டுக்கதை, ரோமாஞ்சன கதைகள் முதலியவற்றைப் பற்றிய கண்காட்சியும், விவரங்களும்.

செப்ரெம்பர் 7, 2023

அலெக்சாந்தர் கட்டுக்கதை, இட்டுக்கதை, ரோமாஞ்சன கதைகள் முதலியவற்றைப் பற்றிய கண்காட்சியும், விவரங்களும்.

அலெக்சாந்தர் கட்டுக் கதையும், இந்திய சத்திரமும்: மூல சரித்திர ஆதாரங்களை ஆயும் பொழுது, அலெக்சாந்தர் என்ற நபர் இருந்ததே சந்தேகத்திற்கு எடுத்துச்சென்றது. இதைப் பற்றி 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஐரோப்பியர் கண்டறிந்தனர். அலெக்சாந்தர் 367-326 BCEல் “இந்தியாவின்” மீது படையெடுத்தான், வென்றான், அதிலிருந்து தான் “இந்தியாவின்” சரித்திரமே ஆரம்பிக்கிறது என்றெல்லாம் ஆங்கிலேயர் எழுதி வைக்க, அது பிரபலமாகி இன்னும் தொயடர்ந்து கற்பிக்கப் படுகிறது, இந்தியர் படித்து தேர்ச்சிப் பெற்று வருகின்றன. ஒரு சிலரே இந்த கட்டுக்கதையினை அவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளனர்[1]. ஆனால், முதலில், அவர்களை “Revisionist historians” என்று முத்திரைக் குத்தி, தனிமைப் படுத்தப் பட்டனர்[2]. ஆனால், கட்டுக்கதைகளை தொடர்ந்து, “சரித்திரம்” என்று சொல்லிப் பரப்ப முடியாது. “சந்திரகுப்த” மற்றும் “அலெக்சாந்த” சொற்பிரயோகங்கள் பாரசீக, அரேபிய, உருது மொழிகளில் ஒரே மாதிரி இருப்பதை பலர் எடுத்து காட்டியும் இந்தியாவில் அதைப் பற்றிப் பேசப் படவில்லை. சரித்திராசிரியர்களும் கவனத்தில் கொள்ளவில்லை. 

A mosaic of Alexander at House of the Faun in Pompeii, Italy. | Unknown authorUnknown author, Public domain, via Wikimedia Commons

2022ல் அல்லெக்சாந்தர் கட்டுக்கதைகள் பற்றிய கண்காட்சி ஆங்கிலேய நூலகம், லண்டனில் நடந்தது[3]: அந்நிலையில் சென்ற ஆண்டு 2022, அக்டோபர் 21 முதல், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகம் “அலெக்சாண்டர் தி கிரேட்: தி மேக்கிங் ஆஃப் எ மித்” (Alexander the Great: The Making of a Myth) என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை நடத்தியது[4]. பொதுவாக அவனது கதைகளுக்கு ஆதாரமாக உள்ளதாகச் சொல்லப் படும் ஆதாரங்களும் பார்வைக்கு வைக்கப் பட்டன. அலெக்சாண்டர்  356 BCE ஜூலையில் மாசிடோனின் அரசன் பிலிப் II மற்றும் மனைவி ஒலிம்பியாஸின் மகனாக, மாசிடோனின் தலைநகரான பெல்லாவில் (Pella) பிறந்தான். கிமு 330 BCE ஜூலை வாக்கில், அவன் பாரசீக இராணுவத்தை தோற்கடித்தான், 25 வயதில், ஆசியா மைனரின் ஆட்சியாளராகவும், எகிப்தின் பார்வோனாகவும், பாரசீகத்தின்  பேரரசன் டேரியஸ் III பின் ஆட்சியாளனாகவும் ஆனான். அதாவது, ஒரே நபர் மூன்று நாகரிகங்களின் தலைவனாக, கடவுளாகச் சித்தரிக்கப் பட்டதை எடுத்துக் காட்டப் படுகிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில், அலெக்சாண்டர் ஒரு பேரரசை மேற்கில் கிரீஸிலிருந்து கிழக்கில் சிந்து நதிக்கு அப்பால் வரை உருவாக்கினான். 32 வயதில் பாபிலோனில் தனது மரணத்திற்கு முன், அவ்வாறு சாதித்ததாகச் சொல்லப் படுகிறது. .

A Christian Alexander described as ‘enemy of devils’ heads this amulet scroll in the Ethiopian Ge‘ez language. Ethiopia, 18th century?

இதுரோமாஞ்சன கட்டுக்கதைகள் தான், சரித்திரம் அல்லஎன்ற முன்னுரைஎச்சரிக்கை: எவ்வாறாயினும், இந்த கண்காட்சி வரலாற்றைப் பற்றியது அல்ல, ஆனால் 2,000 ஆண்டுகளாக நிலவி வரும் கட்டுக்ககதைகள், மற்றும் புராணக்கதைகளை வைத்து புனையப்பட்டுள்ளவற்றை ஆராய்வதற்கான அண்காட்சியாக அமைந்தது என்று மிகவும் எச்சரிக்கையாக அறிவித்துக் கொன்டனர். 25 நாடுகளில் இருந்து 21 மொழிகளில் உள்ள பொருட்களைக் கொண்டு, புனையப் பட்ட ஒரு உருவம் எப்படி பல நோக்கங்களுக்காக சரித்திரம் போல செயல்பட, சேவை செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறது, இது உலகளாவிய “அலெக்ஸ்சாந்தர் கட்டுக்கதைகள்” (The Alexander Romance),  மூன்றாம் நூற்றாண்டில் CE முதலில் கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட அலெக்சாண்டர் ரொமான்ஸ் கட்டுக்கதைகள் ஆதாரமானவை. ஆனால், அவற்றை மறைக்க இந்த முன்னுரையும் கொடுக்கப் பட்டது.

Nahid, daughter of Philip of Macedon, is here married to the Persian emperor as part of a diplomatic alliance. Rejected on account of her bad breath, she was sent home, unknowingly pregnant, to Greece where she gave birth to a son, Alexander. This version of Alexander’s origins saw him, in Persian eyes, as the legitimate heir and successor to the throne. From the Darabnamah (Story of Darab), by Abu Tahir Muhammad Tarsusi, Mughal India, 1580–85 (British Library Or.4615, f. 129r)

வியாபாரமயமாக்கல் யுக்திகளில் கட்டுக்கதைகள் பரப்பப் படுதல்: அலெக்சாந்தரின் திரைப் படம் பலமுறை வெளிவந்துள்ளது. 2004ல் வெளிவந்த படம் பலரின் கவனத்தை ஈர்த்தது. சரித்திர ஆதாரமாக, கோடிகள் செலவழிக்கப் பட்டு எடுக்கப் பட்ட படம் சிலரால் எதிர்க்கப் படவும் செய்தது.  இதனால், நான்கு விதமான படப்பிரதிகள் உருவாக்கப் பட்டு விநியோகத்தில் வந்தன[5]. இருப்பினும்,கட்டுக் கதைகளையும் வியாபாரமாக்குவதில் சளைக்கவில்லை. அதிலும் பலர் இறங்கினர். ஆனால் புராணக்கதைகள் காவியக் கவிதை மற்றும் நாடகத்திலும், மேலும் சமீபத்தில் நாவல்கள், காமிக்ஸ், திரைப்படங்கள் மற்றும் வீடியோ கேம்களிலும் பிரபலமாக்கப் பட்டது. இவை அனைத்தின் உதாரணங்களையும் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப் பட்டன.

Aristotle instructs a pupil in the Kitab na‘t al-hayawan (On the Characteristics of Animals). Baghdad?, about 1225 (British Library Or.2784, f. 96r)

கண்காட்சியில் வைக்கப் பட்ட ஆதாரங்கள்: ஏறக்குறைய 140 பொருட்களில், 86 பிரிட்டிஷ் நூலகத்தின் சேகரிப்பில் இருந்து வந்தவை. ஆசிய மற்றும் ஆப்பிரிக்க சேகரிப்புகளில் இருந்து 37 கண்காட்சிகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப் பட்டன.

Alexander comforts the dying Darius and agrees to his final requests in Firdawsi’s Shahnamah (Book of Kings). According to one Persian tradition, Darius was in fact his half-brother. Isfahan?, Iran, 1604 (British Library IO Islamic 966, f. 335r)

குதிரையின் சமாதி, அதைப் பற்றிய கட்டுக்கதை: அலெக்சாண்டரின் புகழ்பெற்ற வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கண்காட்சி ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு அறிமுகத்திற்குப் பிறகு, A Conqueror in the Makeing அலெக்சாண்டரின் தோற்றத்தின் வெவ்வேறு பதிப்புகளும் ஆராயப் படுகிறது. , தத்துவஞானி அரிஸ்டாட்டில் மற்றும் அவரது விசுவாசமான போர்க்குதிரை புசெபாலஸ் முதலியவையும் இருந்தன. அது போரஸுடன் நடந்த போரில் கொல்லப் பட்டதாகவும், அங்கேயே சமாதி கட்டப் பட்டதாகவும் சரித்திரம் எழுதி வைக்கப் பட்டது. ஆனால், அதெல்லாம் யாருக்கும் தெரியாது. இவ்வாறு சரித்திரம் போர்வையில், அலெக்சாந்தர் கட்டுக்கதைகளை இந்திய சரித்திரத்தில் எழுதி வைத்தனர்.

In Kandahar, Alexander was persuaded by a beautiful priestess not to destroy the sacred statue. This copy of the twelfth-century poet Nizami’s Khamsah (Five Poems) was especially commissioned by the Mughal Emperor Akbar who had conquered Kandahar in 1595 while this manuscript was still being copied. The painting would have deliberately invited comparison between Akbar, famous for his religious tolerance, and Alexander. Artists: Mukund and La‘l, Lahore, 1593–95 (British Library Or.12208, ff. 317v–318r)

கிரேக்கர்களுக்கு பூகோள ரீதியில் இந்தியா தெரியாது: பகுதி மூன்று, ஒரு பேரரசை உருவாக்குதல், பெர்சியாவின் டேரியஸ் III மீது அலெக்சாண்டரின் வெற்றி மற்றும் இந்தியா மற்றும் சீனாவிற்கு மேலும் கிழக்கே மேற்கொண்டதாக விளக்கும் அவனது பயணங்களைனாக்கட்டுக்கதைகள் விவரிக்கிறது – ஆனால் அலெக்சாண்டர் இந்தியாவை அடைந்தார், என்று கதைகள் சொன்னாலும் சீனாவுக்கு செல்லவில்லை, என்று அக்கட்டுக்கதை பண்டிதர்கள் ஒப்புக் கொண்டனர். இந்தியாவைப் பற்றிய அறிவே கிரேக்க பூகோள ஆசிரியர்களுக்குத் தெரியாது என்பது உண்மை. முதலில் கிரேக்க பூகோள ஆசிரியர்கள், சிந்துநதிக்கரைக்கு வந்ததும், உலகத்தின் எல்லைக்கு கடற்கரைக்கு வந்து விட்டோம் என்றனர். ஆனால், அதைத் தாண்டி ஒரு பெரிய நாடு, பேரரசு இருந்ததை அறிந்த அவன், அவர்களைக் கொன்றுவிடுவதாகவும் கதைகள் குறிப்பிடுகின்றன.

The wedding of Alexander and Darius’ daughter, Roxana. From Firdawsi’s Shahnamah (Book of Kings), Qazvin, Iran, about 1590–95 (British Library Add MS 27257, f. 326v)

அலெக்சாண்டரின் உறவுகள் பற்றிய விவரங்கள்: அலெக்சாந்தர் தனது தாயிடமே மையல் கொண்டதாக உள்ளது. ஒரு பகுதியில், அவரது வாழ்க்கையில் முக்கியமான நபர்களை அறிமுகப்படுத்தப் படுகின்றன: அவரது மனைவிகள், அவர் சந்தித்த சக்திவாய்ந்த பெண்கள், அவரது ஜெனரல் ஹெபஸ்டின் மற்றும் அலியான அடிமை பகோவாஸ், முதலியோர் காணப்படுகின்றனர். தவிர, அவன், ஒரு அலி என்றும் கதைகள் விவரிக்கின்றன. ஓரின சேர்க்கையில் ஈடுபட்டவன் என்று 2004-திரைப்படம் எடுத்துக் காட்டியதால், கிரேக்கர் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும், பாரசீக, கிரேக்க, எகிப்திய பாலியல் கதைகளில் இவையெல்லாம் சகஜம் என்பது, எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்[6]. ஆகவே தான், இதைப் பற்றிய விவரங்கள் அதிகமாக மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்று தான், நான்குமுறை திரைப்படத்தை எடிடிங் செய்யப் பட்டு, சிடி/டிவிடி தயாரித்து சுற்றுக்கு விட்டனர்.

This Coptic fragment of the Alexander Romance describes Alexander setting off to explore the Land of Darkness. When a mysterious voice predicted his imminent death, he turned back bringing with him some objects he had gathered in the dark. These later turned out to be diamonds. Atripe, Upper Egypt, 14th century (British Library Or.3367/2)

அலெக்சாந்தர் சொர்க்கத்திற்குச் சென்றது: பிறகு, அலெக்சாந்தரின் பிரயாணங்கள் விவரிக்கப் படுகின்றன. இங்கு அலெக்சாண்டர் மார்பில் முகங்கள், எக்காளங்கள், விசித்திரமான விலங்குகள் மற்றும் டிராகன்கள் போன்ற மக்கள் வசிக்கும் விசித்திரமான நிலங்களில் பயணித்ததாக சொல்லப் படுகிறது. இதெல்லாம் சிந்துபாத் கதைகள் போலவே இருக்கின்றன.. அவரது பயணம் அவரை பூமியின் முனைகளுக்கும், எல்லைகளுக்கும், மேலே உள்ள வானங்களுக்கும் கடலின் அடிப்பகுதிக்கும் அழைத்துச் செல்கிறது, எப்போதும் புதிய அனுபவங்களையும் அழியாமைக்கான திறவுகோலையும் தேடுகிறது. எங்கோ சொர்க்கத்தை அடைந்ததாகக் கூட கதைகள் சொல்கின்றன. இங்குதான், இந்திய நிர்வாண சாமியார்களுடன் போட்ட சண்டை, அலெக்சாந்தரை சபித்தது, அவர்களை அலெக்சாந்தர் கொன்றது போன்ற விவரங்களும் காணப் படுகின்றன.

அலெக்சாந்தர் கட்டுக்கதைமுடிவு: இறுதிப் பகுதி, ‘பிரயாணத்தின் இறுதி” அலெக்சாண்டர் பாபிலோனுக்குத் திரும்புவதையும், அவரது அடுத்தடுத்த மரணத்தின் மர்மத்தையும் விவரிக்கிறது. அவரது உடல் ஒரு அற்புதமான வண்டியில் எகிப்துக்கு கொண்டு செல்லப்பட்டது, இறுதியில் அது அலெக்ஸாண்டிரியாவில் உள்ள கல்லறையில் வைக்கப்பட்டது. கல்லறை இப்போது தொலைந்துவிட்டது, அதாவது கண்டுபிடிக்க முடியவில்லையாம், ஆனால் அவரது இறுதி ஓய்வு பெற்ற இடம், உடல் புதைக்கப் பட்டதாக சொல்லப் படும் இடம் இன்னும் விவாதத்திற்கு உட்பட்டது.  உண்மையில் ஆள் இருந்தால், உடல் இருந்திருக்கும், உடல் இருந்திருந்தால், புதைக்கப் பட்டிருக்கும், புதைக்கப் பட்டிருந்தால் கல்லறை இருந்திருக்கும், இருப்பினும், 2300 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டு பிடிக்க முடியாது[7]. ஆகவே, கட்டுக்கதை மீது கட்டுக்கதைகள், இட்டுக் கட்டி வளர்த்துக் கொண்டிருக்கலாமே தவிர, உண்மையில் எதுவும் கிடைக்காது[8].

© வேதபிரகாஷ்

07-09-2023.


[1] K. V. Ramakrishna Rao, The Truth about Alexander, https://www.hinduwebsite.com/history/alexander.asp

[2] K. V. Ramakrishna Rao, The Myth, Romance and Historicity of Alexander and His Influence on India,

https://www.hinduwebsite.com/history/research/alexandermyth.asp

[3] The Scroll, How Alexander become ‘the Great’? A new exhibition explores the making of a myth did, Ursula Sims-Williams, Sep 26, 2022 · 07:30 pm

[4] https://scroll.in/article/1033628/how-did-alexander-become-the-great-a-new-exhibition-explores-the-making-of-a-myth

[5] Four versions of the film exist, the initial theatrical cut and three home video director’s cuts: the “Director’s Cut” in 2005, the “Final Cut” in 2007, and the “Ultimate Cut” in 2014. The two earlier DVD versions of Alexander (“director’s cut” version and the theatrical version) sold over 3.5 million copies in the United States.[5] Oliver Stone’s third version, Alexander Revisited: The Final Cut (2007), sold nearly a million copies and became one of the highest-selling catalog items from Warner Bros (as of 2012).

[6] அதாவது அத்தகைய நாடுகளில் சரித்திரம், கலாச்சாரம், நாகரிகம் பற்றி படிப்பவர்களுக்குத் தெரிந்த விசயம் ஆகும்.

[7] வேதபிரகாஷ், கடவுளின் மகன் யார்முருகனா, பிள்ளையாரா, அலெக்சாந்தரா, ஏசுவா, கிறிஸ்துவா? யார்?, செப்டம்பர் 10, 2016.

[8] https://indianhistoriography.wordpress.com/2016/09/10/who-is-son-of-god-zeus-jesus-christ-muruga-vinayaka-who/

சரித்திரம் / வரலாறு, சரித்திர வரைவியல், சரித்திர வரைவியல் சித்தாந்தம், பாடதிட்டம், புதுப்பிக்கும் முறை – வலது சாரிகளால் என்ன சாதிக்கப் பட்டுள்ளது?

செப்ரெம்பர் 18, 2020

சரித்திரம் / வரலாறு, சரித்திர வரைவியல், சரித்திர வரைவியல் சித்தாந்தம், பாடதிட்டம், புதுப்பிக்கும் முறை – வலது சாரிகளால் என்ன சாதிக்கப் பட்டுள்ளது?

 

இந்திய வராலாற்றுப் பேரவையில் வலதுசாரிகளின் செயலற்றத் தன்மை: இந்திய வராலாற்றுப் பேரவை / இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ் (Indian History Congress), கடந்த 79  ஆண்டுகளாக செயல் பட்டு வருகின்றது. தலைசிறந்த இந்திய மற்றும் அயல்நாட்டு சரித்திராசியர்களும் இதில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் படிப்பது, சிறப்பு சொற்பொழிவுகள் அளிப்பது என்று நடந்து வருகிறது. இதில் வலதுசாரிகளின் பங்கு மிகக்குறைவே. பேராசிரியர் குரோவர் [Prof. B.R. Grover[1] (1923-2001)] இருந்த வரையில், பொதுக்குழுக் கூட்டங்களில் (General Body Meeting), கம்யூனிஸ-முகமதிய சரித்திராசிரியர்களின் (Marxist-Mohammedan) ஆதிக்கம், பொறுப்பற்ற முறையில் தீர்மானங்களை நிறைவேற்றுவது, தனது நிலை மறந்து, அரசு, அரசாட்சி, நிர்வாகம் முதலியவற்றில் ஏதோ அதிகாரம் இருப்பது போல, ஆணைகள் இடுவது போன்றவற்றை எடுத்துக் காட்டி, கேள்விகள் கேட்டு முறைப்படுத்தி வந்தார். இதைக் கண்டு பொறுமிய இடதுசாரி சரித்திராசிரியர்கள் அமர்தியா சென் (Amartya Sen) போன்றோரை வைத்து விமர்சித்தனர்[2]. ஆனால், குரோவர் அவருக்குத் தகுந்த பதில் அளித்தார். அவர் 2001ல் காலமானப் பிறகு, அவர்களை கேள்வி கேட்க யாரும் இல்லை. கே.எல். டூடேஜா மற்றும் கபில்குமார் சில கூட்டங்கைளில் கேள்விகள் கேட்டு வந்தார்கள், பிறகு அடங்கி விட்டார்கள். ஒப்புக்காக, தென்னிந்தியாவிலிருந்து, ஒன்று அல்லது இரண்டு பொதுக்குழு உறுப்பினர்களை (executive members) சேர்த்துக் கொண்டு, ஹிட்லரை விட மோசமாக நிர்வாகித்து வந்தனர்[3]. இனி அகரெமிக்ஸ் / அறிவுசார்ந்த கல்விமுறை, சரித்திர ஆராய்ச்சி, ஆய்வுக் கட்டுரை தேர்ந்தெடுப்பு, பதிப்பு என்றெல்லாம் வரும் போது, அவர்களது பாரபட்சத்தை தாராளாமாகப் பார்க்கலாம்.

 

இந்திய வரலாறு பிரிக்கப் படும் முறையும், பாரபட்சமும்: இந்த அமைப்பு கடந்த 70 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் (அடதுசாரி வகையறாக்கள்) மற்றும் முகமதியர் ஆதிக்கம் செல்லுத்தி வருவது தெரிந்த விசயமே.

ஆரம்பகாலங்களில்,

  1. பழங்கால இந்தியா (Ancient India)
  2. இடைக்கால இந்தியா (Medieval India)
  3. நவீன இந்தியா (Modern India)

என்றுதான், மூன்று பிரிவுகளாகப் பரிக்கப் பட்டு ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப் பட்டு வந்தன. பிறகு அகழ்வாய்வு சேர்க்கப் பட்டது.  “இந்தியா அல்லாத மற்ற நாடுகள்” என்றும் சேக்கப் பட்டது.

  1. பழங்கால இந்தியா
  2. இடைக்கால இந்தியா
  3. நவீன இந்தியா
  4. அகழ்வாய்வு (Archaeology)
  5. இந்தியா அல்லாத மற்ற நாடுகள் (Countries other than India).

இப்பொழுது, இப்படி உள்ளது:

  1. பழங்கால இந்தியா
  2. இடைக்கால இந்தியா
  3. நவீன இந்தியா
  4. இந்தியா அல்லாத மற்ற நாடுகள்.
  5. அகழ்வாய்வு.
  6. இக்கால இந்தியா (Contemporary India)

என்றுள்ளது. பழங்கால இந்தியாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சரிசெய்ய, இவ்வாறு மாற்றியமைக்கப் பட்டுள்ளது. ஆக, மறுபடியும், “பழங்கால இந்தியா” ஒதுக்கப் பட்டுள்ளது. அப்படியே, ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப் பட்டு, அவர்களது, தொகுப்பில் வெளியிடும் பொழுது, அவை, பழங்கால இந்திய நிலையை விமர்சிக்கும் போக்கில் தான் உள்ளது.

இடது-வலது சரித்திராசிரியர்களின் திறமை, அதிகாரம் மற்றும் ஒற்றுமை: ரோமிலா தாபர், சதீஸ் சந்திரா, இர்பான் ஹபீப், ஶ்ரீமாலி, பருன் டே என்று இந்த மர்க்சிஸ்ட்-முகமதிய வரலாற்றாசிரியர்கள் தான் கோலோச்சி வந்தனர். அதனால், அவர்களது கட்டுரைகள், எழுத்துகள் பெரும்பாலும் புத்தகங்களில், பாடப் புத்தகங்களில், பாடதிட்டங்களில் இருந்து வந்தன, வந்துள்ளன, வருகின்றன. அவர்களுக்கு இணையாக, வலதுசாரி சரித்திராசிரியர்கள் ஆதிக்கத்தைப் பெறவில்லை. பி.பி. லால், பி.ஆர்.குரோவர், அஜய் மித்ர சாஸ்திரி, எஸ்.ஆர்.ராவ், கே.வி.ராமன், போன்ற தலைசிறந்த சரித்திராசிரியர்கள்-அகழ்வாய்வு நிபுணர்கள் இருந்தும், அவர்கள் மதிக்கப் படவில்லை. எந்த மாநாட்டிற்கும் வரவேற்கப் படவில்லை[4]. ஒதுக்கப் பட்டனர். இப்பொழுது, இந்துத்துவ வாதிகள் அதனை தமக்குள்ளேயே செய்து வருகின்றனர். அதாவது, அவர்களுக்கு இருக்கும் திட்டம், தொலைநோக்குப் பார்வை, திறமை முதலியவை இந்துத்துவ வாதிகளுக்கு இல்லை. ஆர்.எஸ்.எஸ், சித்தாந்தம் என்றெல்லாம் பேசி வந்தாலும், இவர்களைப் போன்ற நிபுணத்துவம், கல்வி-திறமை, ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றல், ஆய்வுக் கட்டுரைகள் கொடுத்தல் முதலியவை முடியவில்லை.

வலதுசாரி (Rightist), மத்திய வகைக்களின் (Centric / neutral) சமரசம், மௌனம் முதலியன: பேராசிரியர் குரோவர் காலமானப் பிறகு, இவர்களுக்கு குளிர் விட்டுப் போயிற்று. பாரதீய இதிஹாஸ சங்கலன சமிதி சார்பில், ஶ்ரீராம்சாதே (Sri Ramsathe) என்பவர் இருக்கும் வரை, இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ் நடக்கும் டிசம்பர் 28, 29 மற்றும் 30 தேதிகளுக்கு முன்னதாக, டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தேசிய சரித்திர மாநாடு நடத்தப் பட்டு வந்தது. அதாவது, இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ் மாநாட்டிற்கு வருபவர்கள் போக்குவரத்து செலவு இல்லாமல், இதில் பங்குக் கொண்டு, முடித வரை, இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸில் எப்படி ஆய்வுக் கட்டுரை படிப்பது, கேள்விகள் கேட்டால் எதிர்கொள்வது, எதிர்சித்தாந்திகளை எதிர்கொள்வது, பொதுக்குழுவில் சேர தேர்தலில் நிற்பது என்று பலவித முக்கியமான விசயங்களும் பேசப் பட்டன. ஆனால், அவருக்குப் பிறகு, அது நின்று விட்டது[5]. முன்னரே குறிப்பிட்டபடி, வலதுசாரி சித்தாந்த சரித்திராசிரியர்கள், முகமூடிகளை அணிந்து கொண்டு, பெரும்பாலும், மார்க்சிஸ்ட் (இடதுசாரி வகையறாக்கள்) மற்றும் முகமதியர் கூட்டங்களோடு சேர்ந்து, சமரசம் செய்துக் கொண்டு, அனுசரித்துச் செயல்பட்டு வருகின்றனர். ஏனெனில், அப்பொழுது தான், அவர்களுக்கு கொஞ்சமாவது மரியாதை கிடைக்கும். பொதுக்குழு உறுப்பினர் பதவி கிடைக்கும், இல்லையென்றால், யாரும் சீண்ட மாட்டார்கள். இந்நிலையில், சமூக ஊடகங்களில், மற்ற இடங்களில் வீராப்புக் காட்டும், சுயபிரகடன சரித்திராசிரியர்கள், இந்துத்துவ சரித்திரப் பண்டிதர்கள், மற்ற வலதுசாரி வகையறாக்கள், குண்டு சட்டியில் அல்லது அவர்களுடைய வட்டங்களில் குதிரைகளை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

2014 முதல் ஒன்றும் நடக்கவில்லை: முன்னர் வாஜ்பாயி ஆட்சி காலத்திலும் (1999-2004), இப்பொழுது மோடி ஆட்சி காலத்திலும் (2014-2020), இவ்வவிசயங்களில் ஒன்றும் நடக்கவில்லை. ஆட்சி-அதிகாரம் இருந்தும், UGC, NCERT, IHC, ICCSR, IPS போன்றவற்றில் தலைவர், உறுப்பினர் என்று பொறுப்புகளைக் கேட்டு வாங்கிக் கொண்டாலும், அவர்கள் தங்களது நிலைகளை உயர்த்திக் கொண்டார்களேத் தவிர, இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸின் எதேச்சாதிகாரத்தை உடைக்க முடியவில்லை. அத்தகைய வலதுசாரி உறுப்பினர்களை வைத்துக் கொண்டிருந்தாலும், கடந்த ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை. மாநாட்டிற்கு வருவதும் இல்லை, ஆய்வுக் கட்டுரைகள் படிப்பதும் இல்லை, வலடுசாரி சிந்தனைக் கொண்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ளூம் போது அவர்களுக்கு உதவுவதும் இல்லை. சரித்திர பாடத்திட்டமும் மாற்றப் படவில்லை. உச்சநீதி மன்றம், “இந்துத்துவ தீர்ப்பு”  என விமர்சிக்கப் படும் தீர்ப்பு வந்த பிறகும், ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்கள். ஆனால், சமூக ஊடகங்களில், மற்ற இடங்களில், எல்லாமே இந்தியா தான் என்று பிரசாரம் செய்கிறார்கள். இதை அவர்கள் தான் பார்த்து, படித்து, கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

16-09-2020


[1] B. R. Grover was an Indian historian specialising in medieval Indian history.He was a professor of history at the Jamia Millia Islamia University.

He served as the Director of Indian Council of Historical Research (ICHR) for 11 years and was appointed as its Chairman in 1999 on a three-year term.

He died of a heart attack in 2001 while serving as the Chairman of the ICHR.

Five volumes of Collected Works of Professor B. R. Grover have been published posthumously by Books for All.

[2] India Today, Nobel laureate Amartya Sen versus ICHR chairman B.R. Grover, January 15, 2001, ISSUE DATE: January 15, 2001UPDATED: November 19, 2012 17:46 IST.

https://www.indiatoday.in/magazine/indiascope/vis-a-vis/story/20010115-nobel-laureate-amartya-sen-versus-ichr-chairman-b.r.-grover-776804-2001-01-15

[3] That is why some historians broke away and started SIHC. South Indian History Congress was started on 2nd December 1978 by Prof. K.K.Pillay as first President and Prof. K.Rajayyan as founder General Secretary at the School of Historical Studies, Madurai Kamaraj University, Madurai – 625021,. It was registered under the Societies Act at Madurai in 1979 with Reg.No.32/1979. The Central Office of the Congress is established at School of Historical Studies, Madurai Kamaraj University, Madurai. The first inaugural conference of this Congress was held at Madurai Kamaraj University Campus in February 1980.

[4]  Many unknown, less qualified and even asst.professors without PhD and such other persons were nominated for the sectional presidents, just because, of the ideology followed. If one goes through the names, the fact could be easily found out.

[5]  இப்பொழுது இருக்கும் ஆட்கள் அகம்பாவம், ஆணவம், பிஜேபி ஆட்சியில் இருக்கிறது என்ற தோரணைகளுடன் இருந்து, செயல்பட்டு, இருக்கும் ஆராய்ச்சியாளர்களையும் இழ்வு படுத்தி வருகின்றனர். பெயர்களை சொல்ல வேண்டிய அவசியல் இல்லை, ஏனெனில், கடந்த 40 ஆண்டுகளில் அவர்களால் எந்த ஆராய்ச்சியும் வெளிப்படவில்லை.