Posts Tagged ‘குதிரை’

அலெக்சாந்தர் கட்டுக்கதை, இட்டுக்கதை, ரோமாஞ்சன கதைகள் முதலியவற்றைப் பற்றிய கண்காட்சியும், விவரங்களும்.

செப்ரெம்பர் 7, 2023

அலெக்சாந்தர் கட்டுக்கதை, இட்டுக்கதை, ரோமாஞ்சன கதைகள் முதலியவற்றைப் பற்றிய கண்காட்சியும், விவரங்களும்.

அலெக்சாந்தர் கட்டுக் கதையும், இந்திய சத்திரமும்: மூல சரித்திர ஆதாரங்களை ஆயும் பொழுது, அலெக்சாந்தர் என்ற நபர் இருந்ததே சந்தேகத்திற்கு எடுத்துச்சென்றது. இதைப் பற்றி 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஐரோப்பியர் கண்டறிந்தனர். அலெக்சாந்தர் 367-326 BCEல் “இந்தியாவின்” மீது படையெடுத்தான், வென்றான், அதிலிருந்து தான் “இந்தியாவின்” சரித்திரமே ஆரம்பிக்கிறது என்றெல்லாம் ஆங்கிலேயர் எழுதி வைக்க, அது பிரபலமாகி இன்னும் தொயடர்ந்து கற்பிக்கப் படுகிறது, இந்தியர் படித்து தேர்ச்சிப் பெற்று வருகின்றன. ஒரு சிலரே இந்த கட்டுக்கதையினை அவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளனர்[1]. ஆனால், முதலில், அவர்களை “Revisionist historians” என்று முத்திரைக் குத்தி, தனிமைப் படுத்தப் பட்டனர்[2]. ஆனால், கட்டுக்கதைகளை தொடர்ந்து, “சரித்திரம்” என்று சொல்லிப் பரப்ப முடியாது. “சந்திரகுப்த” மற்றும் “அலெக்சாந்த” சொற்பிரயோகங்கள் பாரசீக, அரேபிய, உருது மொழிகளில் ஒரே மாதிரி இருப்பதை பலர் எடுத்து காட்டியும் இந்தியாவில் அதைப் பற்றிப் பேசப் படவில்லை. சரித்திராசிரியர்களும் கவனத்தில் கொள்ளவில்லை. 

A mosaic of Alexander at House of the Faun in Pompeii, Italy. | Unknown authorUnknown author, Public domain, via Wikimedia Commons

2022ல் அல்லெக்சாந்தர் கட்டுக்கதைகள் பற்றிய கண்காட்சி ஆங்கிலேய நூலகம், லண்டனில் நடந்தது[3]: அந்நிலையில் சென்ற ஆண்டு 2022, அக்டோபர் 21 முதல், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகம் “அலெக்சாண்டர் தி கிரேட்: தி மேக்கிங் ஆஃப் எ மித்” (Alexander the Great: The Making of a Myth) என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை நடத்தியது[4]. பொதுவாக அவனது கதைகளுக்கு ஆதாரமாக உள்ளதாகச் சொல்லப் படும் ஆதாரங்களும் பார்வைக்கு வைக்கப் பட்டன. அலெக்சாண்டர்  356 BCE ஜூலையில் மாசிடோனின் அரசன் பிலிப் II மற்றும் மனைவி ஒலிம்பியாஸின் மகனாக, மாசிடோனின் தலைநகரான பெல்லாவில் (Pella) பிறந்தான். கிமு 330 BCE ஜூலை வாக்கில், அவன் பாரசீக இராணுவத்தை தோற்கடித்தான், 25 வயதில், ஆசியா மைனரின் ஆட்சியாளராகவும், எகிப்தின் பார்வோனாகவும், பாரசீகத்தின்  பேரரசன் டேரியஸ் III பின் ஆட்சியாளனாகவும் ஆனான். அதாவது, ஒரே நபர் மூன்று நாகரிகங்களின் தலைவனாக, கடவுளாகச் சித்தரிக்கப் பட்டதை எடுத்துக் காட்டப் படுகிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில், அலெக்சாண்டர் ஒரு பேரரசை மேற்கில் கிரீஸிலிருந்து கிழக்கில் சிந்து நதிக்கு அப்பால் வரை உருவாக்கினான். 32 வயதில் பாபிலோனில் தனது மரணத்திற்கு முன், அவ்வாறு சாதித்ததாகச் சொல்லப் படுகிறது. .

A Christian Alexander described as ‘enemy of devils’ heads this amulet scroll in the Ethiopian Ge‘ez language. Ethiopia, 18th century?

இதுரோமாஞ்சன கட்டுக்கதைகள் தான், சரித்திரம் அல்லஎன்ற முன்னுரைஎச்சரிக்கை: எவ்வாறாயினும், இந்த கண்காட்சி வரலாற்றைப் பற்றியது அல்ல, ஆனால் 2,000 ஆண்டுகளாக நிலவி வரும் கட்டுக்ககதைகள், மற்றும் புராணக்கதைகளை வைத்து புனையப்பட்டுள்ளவற்றை ஆராய்வதற்கான அண்காட்சியாக அமைந்தது என்று மிகவும் எச்சரிக்கையாக அறிவித்துக் கொன்டனர். 25 நாடுகளில் இருந்து 21 மொழிகளில் உள்ள பொருட்களைக் கொண்டு, புனையப் பட்ட ஒரு உருவம் எப்படி பல நோக்கங்களுக்காக சரித்திரம் போல செயல்பட, சேவை செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறது, இது உலகளாவிய “அலெக்ஸ்சாந்தர் கட்டுக்கதைகள்” (The Alexander Romance),  மூன்றாம் நூற்றாண்டில் CE முதலில் கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட அலெக்சாண்டர் ரொமான்ஸ் கட்டுக்கதைகள் ஆதாரமானவை. ஆனால், அவற்றை மறைக்க இந்த முன்னுரையும் கொடுக்கப் பட்டது.

Nahid, daughter of Philip of Macedon, is here married to the Persian emperor as part of a diplomatic alliance. Rejected on account of her bad breath, she was sent home, unknowingly pregnant, to Greece where she gave birth to a son, Alexander. This version of Alexander’s origins saw him, in Persian eyes, as the legitimate heir and successor to the throne. From the Darabnamah (Story of Darab), by Abu Tahir Muhammad Tarsusi, Mughal India, 1580–85 (British Library Or.4615, f. 129r)

வியாபாரமயமாக்கல் யுக்திகளில் கட்டுக்கதைகள் பரப்பப் படுதல்: அலெக்சாந்தரின் திரைப் படம் பலமுறை வெளிவந்துள்ளது. 2004ல் வெளிவந்த படம் பலரின் கவனத்தை ஈர்த்தது. சரித்திர ஆதாரமாக, கோடிகள் செலவழிக்கப் பட்டு எடுக்கப் பட்ட படம் சிலரால் எதிர்க்கப் படவும் செய்தது.  இதனால், நான்கு விதமான படப்பிரதிகள் உருவாக்கப் பட்டு விநியோகத்தில் வந்தன[5]. இருப்பினும்,கட்டுக் கதைகளையும் வியாபாரமாக்குவதில் சளைக்கவில்லை. அதிலும் பலர் இறங்கினர். ஆனால் புராணக்கதைகள் காவியக் கவிதை மற்றும் நாடகத்திலும், மேலும் சமீபத்தில் நாவல்கள், காமிக்ஸ், திரைப்படங்கள் மற்றும் வீடியோ கேம்களிலும் பிரபலமாக்கப் பட்டது. இவை அனைத்தின் உதாரணங்களையும் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப் பட்டன.

Aristotle instructs a pupil in the Kitab na‘t al-hayawan (On the Characteristics of Animals). Baghdad?, about 1225 (British Library Or.2784, f. 96r)

கண்காட்சியில் வைக்கப் பட்ட ஆதாரங்கள்: ஏறக்குறைய 140 பொருட்களில், 86 பிரிட்டிஷ் நூலகத்தின் சேகரிப்பில் இருந்து வந்தவை. ஆசிய மற்றும் ஆப்பிரிக்க சேகரிப்புகளில் இருந்து 37 கண்காட்சிகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப் பட்டன.

Alexander comforts the dying Darius and agrees to his final requests in Firdawsi’s Shahnamah (Book of Kings). According to one Persian tradition, Darius was in fact his half-brother. Isfahan?, Iran, 1604 (British Library IO Islamic 966, f. 335r)

குதிரையின் சமாதி, அதைப் பற்றிய கட்டுக்கதை: அலெக்சாண்டரின் புகழ்பெற்ற வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கண்காட்சி ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு அறிமுகத்திற்குப் பிறகு, A Conqueror in the Makeing அலெக்சாண்டரின் தோற்றத்தின் வெவ்வேறு பதிப்புகளும் ஆராயப் படுகிறது. , தத்துவஞானி அரிஸ்டாட்டில் மற்றும் அவரது விசுவாசமான போர்க்குதிரை புசெபாலஸ் முதலியவையும் இருந்தன. அது போரஸுடன் நடந்த போரில் கொல்லப் பட்டதாகவும், அங்கேயே சமாதி கட்டப் பட்டதாகவும் சரித்திரம் எழுதி வைக்கப் பட்டது. ஆனால், அதெல்லாம் யாருக்கும் தெரியாது. இவ்வாறு சரித்திரம் போர்வையில், அலெக்சாந்தர் கட்டுக்கதைகளை இந்திய சரித்திரத்தில் எழுதி வைத்தனர்.

In Kandahar, Alexander was persuaded by a beautiful priestess not to destroy the sacred statue. This copy of the twelfth-century poet Nizami’s Khamsah (Five Poems) was especially commissioned by the Mughal Emperor Akbar who had conquered Kandahar in 1595 while this manuscript was still being copied. The painting would have deliberately invited comparison between Akbar, famous for his religious tolerance, and Alexander. Artists: Mukund and La‘l, Lahore, 1593–95 (British Library Or.12208, ff. 317v–318r)

கிரேக்கர்களுக்கு பூகோள ரீதியில் இந்தியா தெரியாது: பகுதி மூன்று, ஒரு பேரரசை உருவாக்குதல், பெர்சியாவின் டேரியஸ் III மீது அலெக்சாண்டரின் வெற்றி மற்றும் இந்தியா மற்றும் சீனாவிற்கு மேலும் கிழக்கே மேற்கொண்டதாக விளக்கும் அவனது பயணங்களைனாக்கட்டுக்கதைகள் விவரிக்கிறது – ஆனால் அலெக்சாண்டர் இந்தியாவை அடைந்தார், என்று கதைகள் சொன்னாலும் சீனாவுக்கு செல்லவில்லை, என்று அக்கட்டுக்கதை பண்டிதர்கள் ஒப்புக் கொண்டனர். இந்தியாவைப் பற்றிய அறிவே கிரேக்க பூகோள ஆசிரியர்களுக்குத் தெரியாது என்பது உண்மை. முதலில் கிரேக்க பூகோள ஆசிரியர்கள், சிந்துநதிக்கரைக்கு வந்ததும், உலகத்தின் எல்லைக்கு கடற்கரைக்கு வந்து விட்டோம் என்றனர். ஆனால், அதைத் தாண்டி ஒரு பெரிய நாடு, பேரரசு இருந்ததை அறிந்த அவன், அவர்களைக் கொன்றுவிடுவதாகவும் கதைகள் குறிப்பிடுகின்றன.

The wedding of Alexander and Darius’ daughter, Roxana. From Firdawsi’s Shahnamah (Book of Kings), Qazvin, Iran, about 1590–95 (British Library Add MS 27257, f. 326v)

அலெக்சாண்டரின் உறவுகள் பற்றிய விவரங்கள்: அலெக்சாந்தர் தனது தாயிடமே மையல் கொண்டதாக உள்ளது. ஒரு பகுதியில், அவரது வாழ்க்கையில் முக்கியமான நபர்களை அறிமுகப்படுத்தப் படுகின்றன: அவரது மனைவிகள், அவர் சந்தித்த சக்திவாய்ந்த பெண்கள், அவரது ஜெனரல் ஹெபஸ்டின் மற்றும் அலியான அடிமை பகோவாஸ், முதலியோர் காணப்படுகின்றனர். தவிர, அவன், ஒரு அலி என்றும் கதைகள் விவரிக்கின்றன. ஓரின சேர்க்கையில் ஈடுபட்டவன் என்று 2004-திரைப்படம் எடுத்துக் காட்டியதால், கிரேக்கர் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும், பாரசீக, கிரேக்க, எகிப்திய பாலியல் கதைகளில் இவையெல்லாம் சகஜம் என்பது, எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான்[6]. ஆகவே தான், இதைப் பற்றிய விவரங்கள் அதிகமாக மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்று தான், நான்குமுறை திரைப்படத்தை எடிடிங் செய்யப் பட்டு, சிடி/டிவிடி தயாரித்து சுற்றுக்கு விட்டனர்.

This Coptic fragment of the Alexander Romance describes Alexander setting off to explore the Land of Darkness. When a mysterious voice predicted his imminent death, he turned back bringing with him some objects he had gathered in the dark. These later turned out to be diamonds. Atripe, Upper Egypt, 14th century (British Library Or.3367/2)

அலெக்சாந்தர் சொர்க்கத்திற்குச் சென்றது: பிறகு, அலெக்சாந்தரின் பிரயாணங்கள் விவரிக்கப் படுகின்றன. இங்கு அலெக்சாண்டர் மார்பில் முகங்கள், எக்காளங்கள், விசித்திரமான விலங்குகள் மற்றும் டிராகன்கள் போன்ற மக்கள் வசிக்கும் விசித்திரமான நிலங்களில் பயணித்ததாக சொல்லப் படுகிறது. இதெல்லாம் சிந்துபாத் கதைகள் போலவே இருக்கின்றன.. அவரது பயணம் அவரை பூமியின் முனைகளுக்கும், எல்லைகளுக்கும், மேலே உள்ள வானங்களுக்கும் கடலின் அடிப்பகுதிக்கும் அழைத்துச் செல்கிறது, எப்போதும் புதிய அனுபவங்களையும் அழியாமைக்கான திறவுகோலையும் தேடுகிறது. எங்கோ சொர்க்கத்தை அடைந்ததாகக் கூட கதைகள் சொல்கின்றன. இங்குதான், இந்திய நிர்வாண சாமியார்களுடன் போட்ட சண்டை, அலெக்சாந்தரை சபித்தது, அவர்களை அலெக்சாந்தர் கொன்றது போன்ற விவரங்களும் காணப் படுகின்றன.

அலெக்சாந்தர் கட்டுக்கதைமுடிவு: இறுதிப் பகுதி, ‘பிரயாணத்தின் இறுதி” அலெக்சாண்டர் பாபிலோனுக்குத் திரும்புவதையும், அவரது அடுத்தடுத்த மரணத்தின் மர்மத்தையும் விவரிக்கிறது. அவரது உடல் ஒரு அற்புதமான வண்டியில் எகிப்துக்கு கொண்டு செல்லப்பட்டது, இறுதியில் அது அலெக்ஸாண்டிரியாவில் உள்ள கல்லறையில் வைக்கப்பட்டது. கல்லறை இப்போது தொலைந்துவிட்டது, அதாவது கண்டுபிடிக்க முடியவில்லையாம், ஆனால் அவரது இறுதி ஓய்வு பெற்ற இடம், உடல் புதைக்கப் பட்டதாக சொல்லப் படும் இடம் இன்னும் விவாதத்திற்கு உட்பட்டது.  உண்மையில் ஆள் இருந்தால், உடல் இருந்திருக்கும், உடல் இருந்திருந்தால், புதைக்கப் பட்டிருக்கும், புதைக்கப் பட்டிருந்தால் கல்லறை இருந்திருக்கும், இருப்பினும், 2300 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டு பிடிக்க முடியாது[7]. ஆகவே, கட்டுக்கதை மீது கட்டுக்கதைகள், இட்டுக் கட்டி வளர்த்துக் கொண்டிருக்கலாமே தவிர, உண்மையில் எதுவும் கிடைக்காது[8].

© வேதபிரகாஷ்

07-09-2023.


[1] K. V. Ramakrishna Rao, The Truth about Alexander, https://www.hinduwebsite.com/history/alexander.asp

[2] K. V. Ramakrishna Rao, The Myth, Romance and Historicity of Alexander and His Influence on India,

https://www.hinduwebsite.com/history/research/alexandermyth.asp

[3] The Scroll, How Alexander become ‘the Great’? A new exhibition explores the making of a myth did, Ursula Sims-Williams, Sep 26, 2022 · 07:30 pm

[4] https://scroll.in/article/1033628/how-did-alexander-become-the-great-a-new-exhibition-explores-the-making-of-a-myth

[5] Four versions of the film exist, the initial theatrical cut and three home video director’s cuts: the “Director’s Cut” in 2005, the “Final Cut” in 2007, and the “Ultimate Cut” in 2014. The two earlier DVD versions of Alexander (“director’s cut” version and the theatrical version) sold over 3.5 million copies in the United States.[5] Oliver Stone’s third version, Alexander Revisited: The Final Cut (2007), sold nearly a million copies and became one of the highest-selling catalog items from Warner Bros (as of 2012).

[6] அதாவது அத்தகைய நாடுகளில் சரித்திரம், கலாச்சாரம், நாகரிகம் பற்றி படிப்பவர்களுக்குத் தெரிந்த விசயம் ஆகும்.

[7] வேதபிரகாஷ், கடவுளின் மகன் யார்முருகனா, பிள்ளையாரா, அலெக்சாந்தரா, ஏசுவா, கிறிஸ்துவா? யார்?, செப்டம்பர் 10, 2016.

[8] https://indianhistoriography.wordpress.com/2016/09/10/who-is-son-of-god-zeus-jesus-christ-muruga-vinayaka-who/

காபாவை யானைப்படை தாக்க மறுத்தது ஏன்? – காபாவில் பிள்ளையார் விக்கிரகம் இருந்ததா? – யானை வருடத்தில் மொஹம்மது நபி பிறந்த விஷேசம் என்ன?

செப்ரெம்பர் 11, 2016

காபாவை யானைப்படை தாக்க மறுத்தது ஏன்? – காபாவில் பிள்ளையார் விக்கிரகம் இருந்ததா? – யானை வருடத்தில் மொஹம்மது நபி பிறந்த விஷேசம் என்ன?

people-of-elephant-quaran

மூக்கு பிளவுபட்டவன் யானைப்படை வைத்திருந்தான்: யானைக்கும், அரேபியாவுக்கும், குறிப்பாக இஸ்லாத்திற்கு என்ன சம்பந்தம் உள்ளது என்று பார்ப்போம்.  மொஹம்மதுக்கு முன்னர் அரேபியாவில் இஸ்லாம் இல்லை. அப்ரஹா அல்-ஆஸ்ரம் [Abraha Al-Ashram] என்ற அபிசினிய கவர்னர், தெற்கு அரேபியாவை ஆண்டு வந்தான். அப்ரஹா என்றால் பிரகாசமான முகம் கொண்டவர் என்று பொருள். ஆனால், அரேபியர் அவனை அல்-ஆஸ்ரம் என்று அழைத்தனர், அதாவது, மூக்கு பிளவு பட்டவன் என்று கிண்டலாக அழைத்தனர். அதாவது, ஒரு தடவை யானைகளைப் பிடிக்கச் சென்றபோது, அவ்வாறு மூக்கு பிளந்ததால் அப்படி அழைக்கப்பட்டான் எனப்படுகிறது. ஒருவேளை, அவன் முகமே பிள்ளையார் மாதிரி, பிளவுபட்ட மூக்குடன், துதிக்கைப் போல காணப்பட்டதால் அப்படி அழைக்கப்பட்டான் போலும்! கிரேக்கர் யானை தொப்பி, கிரீடம் எல்லாம் வைத்துக் கொண்டனர் என்று முன்னர் எடுத்துக் கட்டப்பட்டது. எப்படியாகிலும், அப்பெயர் யானையுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.  அவனது பெயர் இபின் அல்-சபாஹ் மற்றும் அபு யக்ஷும் [Ibn al-Sabbāh and as Abū Yaksūm] என்றும் குறிப்பிடப் படுகிறது. இவர்கள் எல்லோருமே “யானை மனிதர்கள்” [“People of the Elephant”] என்றே அழைக்கப்பட்டனர். யாமனின் அரசனாகவும் இருக்கக்கூடும் எனப்படுகிறது.

elephants-attacking-kabaஅல்காபா அல்யமானியா மற்றும் காபா கோவில்களிடையே போட்டி: அரேபியா மொஹம்மது மற்றும் இஸ்லாத்திற்கு முன்னர் யூதர், கிருத்துவர், பௌத்தர், இந்துக்கள் என்று பலர் இருந்தனர். அவர்களுடைய கோவில்களும் விக்கிரகங்களும் இருந்தன. அவர்களு கோவில்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று வருவது வழக்கம். மக்கள் அதிகமாக குறிப்பிட்ட கோவிலுக்கு வந்து சென்றால், அதற்கு பாதுகாப்பு கிடைக்கிறது, மேலும், சுற்றியுள்ள மக்கள் சம்பந்தப்பட்ட வியாபாரத்தினால் திர்ப்தியாகவும் வாழலாம். அதனால், அப்ரஹா ஒரு கோவிலைக் கட்டி அங்கு அரேபியர்களை வழிபாடு செய்யச் சொன்னான். காபாவுக்கு செல்லும் கூட்டத்தை இங்கே வர முயற்சி செய்தான். அல்-காபா அல்-யமானியா [al-kaba al-yamaniyya] எனப்பட்ட அக்கோவிலில் இருந்த விக்கிரகம் அல்-கல்ஸா [al-Khalasa] என்றைழைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் காபத்துல்லாவைத் தவிர வேறெங்கிலும் வழிபட மாட்டோம் என்று மறுத்துவிட்டனர். அது மட்டுமல்லாது, வட அரேபியா பிரிவினரான கினானா மக்கள் அதைத் தாக்கினர். இதனால் அப்ரஹா காபாவை அழிக்கத் திட்டமிட்டான். அதன்படி, யானை, குதிரை மற்றும் காலாட்படைகளுடன் காபாவைத் தாக்கப் புறப்பட்டான்.  போகும் போது, அபு ரிகால் என்பவன் அல்-முகம்மாஸ் என்ற இறந்து விட்டதால், அங்கேயே புதைக்கப்பட்டான். இதுதான், இப்பொழுதுக் அரேபியர் கற்களால் அடித்து வருகின்றனர். மேலும், யானைகளும் அதற்கு மேல் நகர மறுத்தன.

moon-and-sun-deities-surmounted-by-the-eagleமெக்காவில் யானை விக்கிரகம் இருந்ததா?: ஆனால், யானை சம்பந்தப்பட்ட இருவகையான கதைகள் சொல்லப்படுகின்றன. யானை உருவத்தில் ஒரு விக்கிரகத்தை மெக்காவில் வைக்கப்படுவதாகவும், அதை அழிக்க அபிசீனிய படை சென்றதாகவும், யானைகள் அதைப் பார்த்து [யானை விக்கிரகத்தைப் பார்த்து?] நகர மறுத்ததாக ஒரு கதை கூறுகிறது. அபிசீனிய படையே அந்த யானை விக்கிரகத்தை அங்கு வைக்கச் சென்றதாகவும் உள்ளது[1]. அபிசீனிய மன்னன் கிருத்துவன் எனும்போது, அவன், யானை விக்கிரகம் வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று நோக்கத்தக்கது. இல்லை விநாயகர் விக்கிரகம் வைக்கப்படும் அளவுக்கு அந்த அளவுக்கு பிரசித்தி பெற்றதாக இருந்ததா என்றும் நோக்கத்தக்கது. இன்னொரு கதையின் படி, குரேசி வணிகர்கள், அபிசீனியாவுக்கு வந்து, ஒரு சர்ச்சில் தங்கியிருந்து, சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, நெருப்பு வளர்ந்து, அது சர்ச்சையே எரித்து விட்டதால், பழி வாங்கும் பொருட்டு காபாவைத் தாக்க வந்தான் என்றுள்ளது[2]. எது எப்படியாகிலும், குரானிலேயே இந்த சம்பவம் “யானைகளால் காபா தாக்கப்பட்டது” பதிவு செய்யப்பட்டுள்ளது.

how-kaba-was-saved-by-the-birds-and-elephants-refused-to-attackகாபாவை யானைகள் மதித்தது, ஆனால், பறவைகள் அபிசீனிய படையத் துரத்தியது: அப்பொழுது அப்துல் முத்தாலிப் இபின் ஹாஸிம் [‘Abdul Muttalib Ibn Hashim] என்பவர் காபாவுக்குப் பொறுப்பாக இருந்தார். குரேசிப் பிரிவைச் செர்ர்ந்த இவர் மொஹம்மது நபியின் தாத்தா ஆவர். குரேசிகளால் அப்ராஹாவின் படையை எதிர்க்க முடியாதலால், அருகிலுள்ள மலைப்பகுதிக்குச் சென்று விட்டனர். அபிசீனிய சைனியம் முன்னேறி, காபாவைத் தாக்க, யானைப்படையுடன் வந்தது. மெக்காவில் இருந்த அந்த கோவிலானது “பாகன்”களுடையது [Pagan], அதாவது, முன்னர் இருந்த கிழக்கத்தைய நாகரிக மக்களின் கோவில் ஆகும். அவ்விடம், மொஹம்மது நபி பிறந்த இடமானதால், யானைகள் காபாவைத் தாக்க மறுத்தன. பாகன் எவ்வளவு தூண்டியும் யானைகள் கேட்கவில்லை. அபிசீனியர் திகைத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று பறவைகளின் கூட்டம் வானத்தில் வந்தன. அவை கற்களை, அபிசீனிய படையின் மீது பொழிய ஆரம்பித்தன. இதனால், அபிசீனிய படை பின்வாங்க நேர்ந்தது. இப்படியாக காபா தாக்குதல் முடிவடைந்தன.  இந்த யானை தாக்குதல் மூலம் குரேசிபிரிவினருக்கு வியாபாரம் நன்றாக பெருகியது என்றும் விளக்கம் கொடுக்கப்படுகிறது[3].

mohammed-born-in-the-elephant-year-570-ce-near-kabaயானை வருடத்தில் பிறந்த மொஹம்மது நபி: அமீனாவின் வீட்டிற்கு, தேவதைகள் வந்தன. அமீனாவின் கனவில் மொஹம்மது நபி, அவருக்குப் பிறப்பார் என்று அறிவித்தன. “மொஹம்மது” என்றால் மிகவும் போற்றப்படுபவர் என்று பொருள். குழந்தை பிறந்தது. தேவதைகள் சீலைகளால் மறைக்கின்றன. “ஓது” என்ற சடங்கை குழந்தை செய்கிறது. தேவதைகள் அக்குழந்தைக்கு உதவுகின்றன.. யானை” வருடம் [The Year of the Elephant , Arabic: عام الفيل‎, ʿĀmu l-Fīl) என்றா வருடத்தில் தான், மொஹம்மது நபி பிறந்தாராம்[4]! அதனால், இஸ்லாமிய மத வரலாற்றில், இந்த ஆண்டு முக்கியமாகிறது. பிளேக் / சின்னம்மை போன்ற கொடிய வியாதி 570ல் பரவியிருந்தாலும், கடவுளின் அருளால் தாய்-சேய் தப்பித்துக் கொண்டன என்ற விளக்கமும் கொடுக்கப்படுகிறது[5]. ஆனால் இத்தகைய விளக்கத்தை வில்லியம் மியூர் போன்றவர் முன்னரே 1878லேயே கொடுத்துள்ளனர்[6]. மேலும், அப்ரஹா வட-ஆப்பிரிக்க வகை [the North African elephant (Loxodonta africana pharaoensis)] யானையைத் தான் உபயோகப்படுத்தியிருக்க வேண்டும்.அவ்வகை மறைந்து விட்டது[7].

idols-at-mecca-kabaமெக்காவில்காபாவில் இருந்த விக்கிரங்கள்: மெக்காவில் உள்ள காபத்துல்லா எனப்படுகின்ற காபா கோவில், முன்னர் ஒரு சிவன் கோவிலாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள், சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அங்கு 360 விக்கிரங்கள் இருந்தன, அவை வானியல் ரீதியில் அமைக்கப்பட்டிருந்தன என்று எடுத்துக் காட்டுகின்றனர்[8]. குறிப்பாக வானத்திலிருந்து விழும் எரிகற்களை வைத்து வழிபாடு செய்து வந்தனர்[9]. ஆனால், கிடைத்துள்ள அல்-லத், அல்-மனத், அல்-உஜ்ஜா போன்ற “அல்லாவின் குழந்தைகள்-பெண்கள்”, மற்ற தேவதைகளின் உருவங்கள் இந்திய மூலங்களைக் காட்டுகின்றன[10]. சித்திரங்களில் வரையப்பட்டுள்ள விக்கிரகங்கள் தெளிவாக இந்திய விக்கிரங்கள் என்பதை காட்டுகின்றன. ஒருவேளை சிவலிங்கம் அங்கிருந்திருந்தால், யானைகள் அக்கோவிலை தாக்காமல் இருந்திருக்கும். அல்லது யானை பாகன்கள் இந்தியர்களாக இருந்தால், அவர்களும் மறுத்திருப்பார்கள். அதனால் தான், மேற்குறிப்பிட்ட கதைகளில், பாகன் யானையிடத்தில் அது கடவுளின் இடம் என்று காதில் கூறியதாகவும், யானை தாக்க மறுத்ததாகவும் உள்ளது.  எது எப்படியிருப்பினும், அபிசீனொய அரசன் இங்கு ஒரு விநாயக விக்கிரகத்தை வைக்க வந்தான் என்ற குறிப்பு கவனத்திற்கு முக்கியமாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

11-09-2016

more-goddesses-at-petra-arabia

[1] The first was initiated by the Yemeni Abraha b. al-Ashram; he dispatched his son Abū Yaksūm—who is called al-Yamānī al-Sabashī (“the Abyssinian Yemeni”)—with an army and an elephant, in order to make the elephant an idol in place of the Ka’ba, which they planned to destroy. The elephant refused to advance on the Ka’ba, and the army eventually retreated.

Turner, John P. Arabia in the middle of the sixth century CE According to Muslim sources, he attacked Mecca with the “People of the Elephant” in about 570 CE The name “Abraha” is said in Muslim.” Studies 3: 796-831.

[2] The second attack was attempted a year or two later. Some Quraysh traders went to Abyssinia and camped in a Christian church not far from the beach. They roasted meat and left the fi re burning, and

the church went up in fl ames. The Negus was enraged and set out with his army and elephant toward Mecca. He was accompanied by “kings” of Kinda (an originally South Arabian tribal group), among them Abū Yaksūm al-Kindī and Abraha b. al-Sabbā al-Kindī. The defeat of the army came when birds attacked it, pelting it with stones (Muqātil b. Sulaymān, 4:847–54; see also de Prémare, 311–25).

[3] Mousavi, Rahim. New look to Mecca and Qoraish from the death of Qosay-ibn-Kallab to emergence of Islam. (2013).

[4] The Year of the Elephant , (Arabic: عام الفيل‎, ʿĀmu l-Fīl) is the name in Islamic history for the year approximately equating to 570 CE. According to Islamic tradition, it was in this year that Muhammad was born.

[5] Marr, John S., Elias J. Hubbard, and John T. Cathey. “The Year of the Elephant.” (2015).

[6] Muir, William. The life of Mahomet: from original sources. Smith, Elder, 1878.

[7] The elephant that Abraha rode was probably the North African elephant (Loxodonta africana pharaoensis)—now extinct, which had been used by the Carthaginians centuries before.

Marr, John S., Elias J. Hubbard, and John T. Cathey. “The Year of the Elephant.” (2015).

[8] Farrington, Oliver C. “The worship and folk-lore of meteorites.” The Journal of American Folklore 13.50 (1900): 199-208.

[9] Newton, Hubert A. “The worship of meteorites.” American Journal of Science13 (1897): 1-14.

[10] http://sakina.wikidot.com/arabian-deities

யானையின் மூலம், தோற்றம் மற்றும் பரவல்; அதை ஆதரித்தது, மதித்தது மற்றும் தெய்வமாக்கப்பட்டது – விநாயகர் வழிபாடு தோன்றியது எப்படி?

செப்ரெம்பர் 10, 2016

யானையின் மூலம், தோற்றம் மற்றும் பரவல்; அதை ஆதரித்தது, மதித்தது மற்றும் தெய்வமாக்கப்பட்டதுவிநாயகர் வழிபாடு தோன்றியது எப்படி?

asian-and-african-elephants

யானையின் மூலம், தோற்றம் மற்றும் பரவல்: யானையின் மூலம், தோற்றம் மற்றும் பரவல்; அதை ஆதரித்தது, மதித்தது மற்றும் தெய்வமாக்கப்பட்டது முதலியவற்றைப் பற்றி ஆராயும் போது, பல வியப்பான, உபயோகமான மற்றும் சரித்திரபூர்வமான விசயங்கள் கிடைத்தன. யானைகளின் தோற்றத்தைப் பற்றி ஆராய்பவர்கள் ஆப்பிரிக்க [Loxodonta] மற்றும் ஆசிய [Elephas maximus indicus] யானை வகைகள் என்று இரண்டாகப் பிரித்துள்ளனர். ஆப்பிரிக்காவைப் பொறுத்த வரையில், மனிதர்களும், யானைகளும் சேர்ந்தே[1] சுமார் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றி வளர ஆரம்பித்தன என்று விஞ்ஞானிகள் எடுத்துக் காட்டியுள்ளனர்[2]. மனிதன் மற்றும் யானைகளில் பரிணாம வளர்ச்சிகளை ஒப்பிட்டிப் பார்த்தால் அத்தகைய ஒற்றுமைகளில் பலவிசயங்களில் பார்க்கமுடிகிறது[3]. அதனால், ஆப்பிரிக்க மக்கள் யானையை தெய்வமாகக் கருதினர். தங்களது நாகரிகம், பண்பாட்டின் சின்னமாக வைத்துக் கொண்டனர்.

babylon-elephants-depicted

40,000 YBP முதல் 1000 BCE வரை: சுமார் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக மனிதர்களும், யானைகளும் சேர்ந்தே பரிமணித்தனர், வளர்ந்தனர், மாற்றம் கொண்டனர் என்றால், அந்நிலைகளில் நாகரிகம் அடைந்தது என்பது முன்னரே நடந்திருக்க வேண்டும். சுமார் 1000 BCEயில் இரும்பு உபயோகத்துடன் மனிதன் வளர்ச்சியடைந்தான் என்று சொல்லப்படுவதும் கவனிக்கத்தக்கது. மனிதன்  பழங்கற்காலம் [paleollithic], இடைக்கற்காலம்  [mesolithic], பெருங்கற்காலம்  [megalithic]  மற்றும் புதிய கற்காலம் [neolithic] என்று வளர்ச்சியடைந்து தான், நவநாகரிகமான மனிதன் ஆகவேண்டும் என்ற வரையறை வைத்திருப்பதும் நோக்கத்தக்கது. அப்படியென்றால், கோடிக்கணக்கான, லட்சக்கணக்கான, பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரிலிருந்து இருந்து வரும் மனிதர்கள், வில்லங்குகள் அப்படியே இருந்து, சுமார் 3000-5000 ஆண்டுகள் முன்னர் தான் நாகரிகம் அடைந்தது என்பது அத்தகைய விஞ்ஞான கொள்கைக்கே முரணாக உள்ளது. யானை விசயத்தில் இருந்தது-இல்லை என்ற முரண்பாடுகள் நன்றாகவே வெளிப்படுகின்றன.

elephant-head-trunk-etc-represented-in-the-coins-issued-by-the-kings-of-nw-india

இந்திய யானைகளின் வகை, தொன்மை மற்றும் பரவல்: இந்திய வகை யானைகள் நேபாளம், பங்களாதேசம், பூடான், மியன்மார் / பர்மா, தாய்லாந்து, மலாய் தீபகற்பம், கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் பரவி, காணப்படுகின்றன. ஆனால், பாகிஸ்தானில் முழுவதுமாக மறைந்து விட்டன. பொதுவாக, ஆசிய நாடுகளில் காணப்படும் யானைகள் தெவீகமாகப் போற்றப்படுகின்றன. அங்குள்ள மக்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் முதலியவை அவ்வாறே காணப்படுகின்றன. பொதுவாக யானைகள் தந்தந்தளுக்காகக் கொல்லப்படுகின்றன. தந்தந்திலிருந்து, மறுபடியும், தெய்வீக உருவங்கள் செதுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்திய தந்தப் பொருட்களின் தொன்மை எந்த அளவிற்கு உள்ளன என்று பார்க்கும் போது, போம்பேய் எனப்படுகின்ற ரோமானிய நகரத்தில் ஒரு அகழ்வாய்வில் கிடைத்த லக்ஷ்மியின் உருவத்திலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

sambu-people-believe-god-created-elephants-and-men-brothers

ஆப்பிரிக்கவில் மாறி வரும் நிலைமை: ஆப்பிரிக்காவில் குருகர் பூங்கா என்ற இடத்தில் உள்ள யானைகள் சரணாலாயத்தில், 7000 BCE முதல் 300CE வரை யானைகள் இயற்கையான வசிப்பிடங்களில் இருந்ததற்கான ஆதாரங்களை பாறை கலைச்சின்னங்கள் எடுத்துக் காட்டுகின்றன[4]. இருப்பினும், இக்காலத்தில் மக்கட்தொகை அதிகரிக்கும் நிலையில், யானைகள் தொகை அதிகமாகும் போது, அவற்றை நிர்வகிக்க அதிக செலவாகிறது என்ற நிலையில், அங்கு, யானைத் தொகயினை குறைக்க வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால், நகர்புறங்களில் யானையின் தெய்வீகத்தன்மை மறக்கப்பட்டு வருகின்றது. 40,000 வருடங்களுக்கு முன்னரே மனிதன் யானைகளை வேட்டையாடியதற்கான ஆதாரங்கள் ஸ்பெயினில் காணப்படுகின்றன[5]. ஐரோப்பாவில் யானைகள் இல்லை, பிறகு உள்ளே நுழைந்தன என்று வாதிடுபவர்கள் இதை கவனிக்க வேண்டும். யானை தந்தம், தந்தத்தினால் செய்யப்பட்ட தாயத்து, சின்னங்கள், பொம்மைகள் முதலியன நீண்ட ஆயுள், செல்வம், பாதுகாப்பு முதலியவற்றைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உலகத்தில் இன்றும் தெய்வீகமாகக் கருதப்படுகிறது[6].

mithra-temple

ஜீயஸ், மித்ரா, விநாயகர்யானை சம்பந்தம்வாத விவாதங்கள்: ஜீயஸ் மற்றும் மித்ரா போன்ற கிரேக்க, ரோமானிய, பாரசீகக் கடவுளர்களுடன் யானை தொடர்பு படுத்தப் படுகிறது. கணேஸர் ஜீயஸ்-மித்ராவுடனும் ஒப்புமைப்படுத்தப் படுகிறது[7]. நாணயங்களில் காணப்படும் யானை, யானை துதிக்கை, தலை, காது போன்ற உருவங்களை வைத்தும் கணேஸர் ஜீயஸ்-மித்ரா தொடர்புகள் எடுத்துக் காட்டப்பட்டன[8]. கிரேக்கப் புராணங்களில் உள்ல கதைகளை வைத்து ஜியஸ் மற்றும் மித்ரா போர் கடவுள், சைனியத்தை நடத்துபவர்கள், தாயினால் பால் கொடுத்து வளர்க்கப்பட்ட கடவுள் முதலியவற்றை வைத்து விளக்குகிறார்கள். பொதுவாக இத்தகைய விளக்கங்களில், விநாயகக் கடவுள் தோற்றம், கிரேக்கர்களிடத்திலிருந்து பெறப்பட்டது என்றுள்ளது. சிந்துசமவெளி நாகரிகத்தில் கிடைத்த யானை உருவங்களை மறந்து அவர்களது ஆராய்ச்சி விவாதங்கள் இருந்துள்ளன. மேலும், இந்தோ-கிரேக்க மன்னர்கள் யானைத்தலை கிரீடங்களை அணிந்ததாலும், அவற்றின் உருவங்கள் நாணயங்களில் காணப்படுவதாலும், கிரேக்கத்திலிருந்து, இந்தியாவுக்குள் வந்தது என்ற சித்தாந்தத்தை வைக்கின்றனர். இந்தியாவில் யானைகள் இருந்தன, ஆனால், யானையை தெய்வீகமாகக் கருதவில்லை. கிரேக்கத்தில் யானைகள் இல்லை, ஆனால், அவகள் யானையை தெய்வீகமாகக் கருதினர், அதனை கிரேக்கர்களிடமிருந்து காப்பியடித்துக் கற்றுக் கொண்டனர் என்ற வாதம் வேடிக்கையாக இருக்கிறது.

Alexander was defeated by the Indian King

இறைவனின் மகன் என்ற விளக்கத்திற்கு உட்படுத்தப்படும் ஜீயஸ், மித்ரா, கணேஸா: கிரேக்கர்கள் யானையைப் பார்த்தது கிடையாது என்கிறார்கள். அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த போது, யானைப்படையைப் பார்த்து, கிரேக்க சைனியம் பயந்தோடியது என்றுள்ளது.ஆலெக்சாந்தரின் மெடல் / பதக்கம் நாணயங்களிலும் அவ்வாறே சித்தரித்து வைத்தனர். ஆனால், கிரேக்கர்கள், இந்தியாவிலிருந்து, அங்கு குடியேறிய, தாழ்த்தப்பட்ட சத்தியர்களே என்று இக்கால, எழுத்தாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அலெக்சாந்தரையும் கடவுளாக்கும் முயற்சியில், அவனுக்கு யானை கிரீடம் வைத்து, ஜீயஸ்ஸுடன் ஒப்பிடும் முயற்சியும் உள்ளது. சிந்துசமவெளி யானை வழிபாட்டை கவனிக்கும் போது, அது 2250-1950 BCE காலத்தில் இருந்திருந்ததால், 1000 BCE காலத்தில் எவோனியர் மூலம், கிரேக்கர்களை அது அடைந்திருக்க வேண்டும். அதே போல, பஞ்சநதிகள் பாயும் இடத்திலிருந்து, இந்தியாவிற்குள் பரவியிருக்க வேண்டும். இதே போல, பிறகு, ஏசுவிற்கு சரித்திர ஆதாரங்கள் இல்லை என்ற நிலையில், இவர்களுடன் ஒப்புமைப் படுத்தி, கிருத்துவயியல் எழுத்தாளர்களும் கட்டுக்கதைகளைப் புனைய ஆரம்பித்தார்கள்.

© வேதபிரகாஷ்

10-09-2016

babylon-elephants-depicted-in-cinema

[1] Peter Jackson, Elephants and Rhinos in Africa: A Time for Decision, 15, 1983.

[2] Schmidtz, David, and Elizabeth Willott. Reinventing the commons: an African case study,  Environs: Envtl, L. & Pol’y J. 27 (2003): 203.Michael D. Lemonick & Andrea Dorfman, Up From the Apes: Remarkable New Evidence is Filling in the Story of How We Became Human, TIME, Aug. 23, 1991, at 50.

[3] Michael D. Lemonick & Andrea Dorfman, Up From the Apes: Remarkable New Evidence is Filling in the Story of How We Became Human, TIME, Aug. 23, 1991, at 50.

[4] Of the 109 shelters containing rock art so far discovered in Kruger Park, only one depicts elephants. This suggests there were elephants in what is now Kruger Park somewhere between 7000 BCE. and 300 CE.

[5] F. Clark Howell discovered evidence of Homo erectus living in Spain and hunting elephants as long as 400,000 years ago. He found large numbers of elephant fossils, together with evidence of fires used to stampede them, and stone tools used to butcher them.

[6] Christy, Bryan. Ivory worship, National Geographic 222 (2012): 28-61.

[7] Bopearachchi, Osmund. Elephant-Headed GaneSa or Zeus-Mithra, Yavanika, Vol. 2, 1992, and.” (1993).

[8] Bopearachchi, Osmund. “On the so-called earliest representation of Ganesa.” Topoi 3.2 (1993): 425-453.

“லா இலா இல்லல்லாஹ், அக்பர் ரஸருல்லா” மற்றும் “லா இலாஹ இல்லலஹ அக்பர் கைபித்துல்லா” பிரச்சினைகள்!

ஜூன் 19, 2015

 “லா இலா இல்லல்லாஹ், அக்பர் ரஸருல்லா” மற்றும் “லா இலாஹ இல்லலஹ அக்பர் கைபித்துல்லா” பிரச்சினைகள்!

[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (2)].

Akbar - Allahu akbar and Jalla jalalu

Akbar – Allahu akbar and Jalla jalalu

 “அல்லாஹு அக்பர்பிரச்சினை: அக்பர் ஒரு பக்கம் சூபித்துவத்தில் அதிகமாக ஈர்க்கப்பட்டிருந்தார், அதே நேரத்தில் மற்ற மதங்களுடன் உரையாடல்களில் ஈடுபட்டிருந்தார். இதனால், மௌல்விகள், காஜிகள் உலேமாக்கள் இவர் மீது அதிகமாகவே குற்றஞ்சாட்டினர். தனது அந்தப்புரத்தில் அதிகமான இந்துப் பெண்களை வைத்திருந்தார். அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க “லா இலா இல்லல்லாஹ், அக்பர் ரஸருல்லா” என்று புதியதாக “சஹாதா”, நம்பிக்கையின் வெளிப்பாடாக சொல்லச் சொன்னதாக பாரசீக / சூபி நூல்களில் காணப்படுகின்றது. மேலும் ஒருவரையொருவர் பார்க்கும் போது, சந்தித்துக் கொள்ளும் போது, “சலாம் அலைக்கும், அலைக்கும் சலாம்” என்று சொல்வதற்கு பதிலாக, “அல்லாஹு அக்பர்” என்று சொல்ல வற்புறுத்தியதாக உள்ளது. இன்னொரு இடத்தில் “ஜல்லா ஜலாலு” என்று சொல்லவேண்டும் என்றுள்ளது[1]. பொதுவாக, “அல்லாஹு அக்பர்” என்றால், “கடவுள் மிகப்பெரியவர்” என்று பொருள் என்கிறார்கள், ஆனால், உண்மையில் அப்படியில்லை. “அல்லாஹு அக்பர்” என்றால், மற்றதை விட உயர்ந்தது, பெரியது, சிறந்தது என்று பொருள் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது[2]. புதியதாக மதம் மாறுபவருக்கு ஒரு சிறிய பொருள் அடையாளமாகக் கொடுக்கப்பட்டது. அதன் மீது “மிகப்பெரிய பெயர்” மற்றும் “அல்லாஹு அக்பர்” என்று செதுக்கப் அல்லது பதிக்கப் பட்டிருந்தது[3]. அதனால், அக்பர் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவே அவ்வாறு செய்தார் என்று கூறப்பட்டது. இப்படி முதலில் தன்னை நபி, பிறகு “தீன்-இலாஹி” மத்ததின் கடவுள் என்றெல்லாம் அறிவித்துக் கொள்வது, இஸ்லாத்திற்கு விரோதமானது என்று மௌல்விகள், காஜிகள், உலேமாக்கள் அறிவித்தனர். செயிக் அஹமது சிர்ஹிந்தி (Shaykh Ahmad Sirhindi 1564-1624) அக்பரது “தீன்-இலாஹி” இஸ்லாத்திற்கு விரோதமானது என்று அதை அடியோடு எதிர்த்தார்.

Dini-ilahi formula -there is no god Allah, Akbar his messenger

Dini-ilahi formula -there is no god Allah, Akbar his messenger

அக்பர் மொஹம்மது நபியின் நிலையை மறுத்தாரா?: ஜெசுவைட்டுகளுடன் நடந்த விவாதத்தில் அக்பர் மொஹம்மது நபியின் நிலையை மறுத்தது போன்று தெரிகிறது. “….ஒருவர் நபி மற்றும் அல்லாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் போது, யாராவது அல்லாவைத்தவிர வேறு கடவுள் கிடையாது”, என்று கத்தினால் என்னாகும் என்ற சர்ச்சை வந்தது. அதற்கு ருடால்பஸ், “அது உண்மையானால், மொஹம்மது கடவுளின் தூதர் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”, என்று வாதிட்டார். அதாவது கடவுள், கடவுள் தான், ஒரு தூதுவர் அக்கடவுளுக்கு இருந்தால் தான் அவர் கடவுள் ஆவார் என்பதில்லை. கடவுள் என்றிருந்தால், அவர் இருப்பார், அவருக்குத் துணையாக யாரும் இருக்க வேடும் என்ற அவசியம் இல்லை. மோன்செரேட் இவ்விடத்தில் குறிப்பிடுவதாவது, “இப்படி சொன்னதை அனைவரும் ஒப்புக்கொண்டதுடன், பாராட்டினர். குறிப்பாக அரசரால் மொஹம்மது பெயரை அங்கு குறிப்பிட விரும்பவில்லை. மொஹம்மது ஒரு துறவி இல்லை, மாறாக அவர் வஞ்சகர் மற்றும் வில்லன்”, என்று சொன்னதாக உள்ளது[4].  பொதுவாக யூத-கிருத்துவ மதங்களிலும், ஜேஹோவா “என்னைத்தவிர வேறு கடவுள் இல்லை, பூமியிலோ, ஆகாசத்திலோ, மூமியின் கீழேயோ இல்லை”, என்று உறுதியாக அறிவிப்பதாக உள்ளது. இங்குகூட, கடவுளுக்கு தான்தான் கடவுள் என்று நன்றாகத் தெரியும் என்ற போது, “என்னைத்தவிர வேறு கடவுள் இல்லை”, என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

Dini-ilahi formula -there is no god Allah, Akbar his messenger-with Tamil translation

Dini-ilahi formula -there is no god Allah, Akbar his messenger-with Tamil translation

லா இலாஹ இல்லலஹ அக்பர் கைபித்துல்லா: அல்-பதாயினி என்பவர் புதிய மதத்தின் பெயரை “தீன் இலாஹி” என்றபோது, அதன் அடிப்படை நம்பிக்கையானது, “லா இலாஹ இல்லல்லாஹ அக்பர் கைபித்துல்லா” [La Ilaha Illallah Akbar Khalifatullah] என்றிருந்தது, என்று குறிப்பிடுகின்றார்[5]. செயிக் அபுல் பத்ல், மஹாபாரத்தை பாரசீக மொழியில், மொழிபெயர்க்கும் போது, முன்னுரையில் அக்பரை “கலிபத்துல்லாஹ்” என்று தான் குறிப்பிடுகின்றார். அதாவது அக்பரை காலிப் என்று குறிப்பிடுவது, முகமதியர்களுக்கு தலைவர் என்ற அந்தஸ்த்தைக் கொடுப்பதாகும். இருப்பினும் இங்கு ஷியாக்களின் நம்பிக்கையின் படி, இமாம் “மஹதி” தான் கலிபத்துல்லாஹ், அதாவது அல்லாவின் பிரதிநிதி, அவர் தான், உலகத்தில் அல்லாவின் ஆட்சியை ஏற்படுத்துவார். அதாவது, மஹதி என்பவர் எதிர்பார்க்கப்பட்ட நபி, தீர்க்கதரிசி (Prophet) என்று எல்லா முகமதியர்களும் நம்புகின்றனர். ஏழு வயதில் ஷியாக்களின் 12வது இமாமாக இருந்த மஹதி 878 CEல் காணாமல் போய்விட்டதால், அவர் மறுபடியும் வருவார் என்று ஷியாக்கள் எதிர்பார்க்கிறார்கள். சுன்னிகள் மஹதி இதுவரை பிறக்கவில்லை ஆனால் அவர் நிச்சயமாக உய்விக்க வருவார் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு வெள்ளை குதிரையின் மீது ஏறிக்கொண்டு வருவார், காட்சியளிப்பார், உய்விப்பார் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். கிருத்துவத்திலும் அத்தகைய நம்பிக்கை உள்ளது. ஏசு தான் ஒரு வெள்ளை குதிரையின் மீது வந்து, எதிரிகளை அழித்து, நம்பிக்கையாளர்களைக் காப்பேன் என்று சொல்லியுள்ளாதால், அவ்வாறே வருவார் என்று கிருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் அக்பர் நேரிடையாக அல்லாவுடன் தொடர்பு கொண்டிருப்பதால், நபிகளுக்கு இங்கு வேலையில்லை என்ற பொருள் வரும் என்று பதுயானி எடுத்துக் காட்டியுள்ளார்[6]. இங்கும் “அல்லாஹு அக்பர்” என்பதற்கு ஒன்றிற்கு மேலான விளக்கங்களை, இஸ்லாமிய பண்டிதகள் கூறுகின்றனர்.

There is no god Allah, Akbar his messenger-with Tamil translation

There is no god Allah, Akbar his messenger-with Tamil translation

மஹதி, காலிப், மொஹம்மது, சிக்கந்தர் முதலிய பெயர்களுக்கு, பட்டங்களுக்கு முகமதியர் ஆசைப்படுவது ஏன்?: அக்பரை ஏற்கெனவே “காலத்தின் மனிதன்” [ صاحب زمان Man of the time] என்று உயர்வாக அழைக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், அக்பரை “இமாம்” அல்லது “காலிப்” என்று அழைப்பதில் தான் பிரச்சினை இருந்தது. ஏனெனில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மூரத் என்பவன் தன்னை அவ்வாறு அழைத்துக் கொள்ள முயற்சி செய்தான். ஆனால், இரானைச் சேர்ந்த மூரத் ஏற்கெனவே அவ்வாறு அழைத்துக் கொண்டதால் இவரும் தன்னை அவ்வாறு அழைத்துக் கொள்ள முடியவில்லை. ஏனெனில், ஒரே காலத்தில் இரண்டு பேர் அந்நிலையில் இருக்க முடியாது, அதனை ஆசார முகமதியர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதுதவிர அக்காலத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்த பலர் பலர் தம்மை “குதுப்” என்று அழைத்துக் கொண்டனர். முல்லா மீர் என்பவன், “ஒரு பெரிய கூடாரம் இருக்கிறது, அதில் ஒரு சிம்மாசனம் உள்ளது, சிம்மாசனத்தின் மீது படுக்கையுள்ளது, அதன் மீது கல் உள்ளது. அக்கல்லின் மீது ஒரு கூடாரம் உள்ளது, அதற்கு 7,000 கதவுகள். அதற்குள் ஒரு ஆசனம் உள்ளது, அந்த ஆசனத்தின் மீது அல்லா உட்கார்ந்திருக்கிறார். இதெல்லாம் மிகவும் ரகசியமான விசயங்கள். உலேமாக்களுக்குக் கூடத் தெரியாது”, என்று தன்னைப் பின்பற்றுபவர்களிடன் சொன்னான்[7]. இது “ஆயிரத்து இரவு கதைகள்” போன்றிருக்கிறது. மக்களிடையே இக்கதைகள் பிரபலமாக இருந்ததாலும், ஆசார இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை. இதேபோல “அலெக்சாந்தரின் ரோமாஞ்சகக் கதைகளும்” (Alexander Romance stories) முகமதிய உலககில் பிரபலமாக இருந்தன. சூபிக்கள் மூலம் இத்தகைய கதைகள், புராணங்கள் பிரபலமாகின. அதாவது, முகமதிய அரசர்கள், ஆட்சியாளர்கள், சுல்தான்கள் முதலியோர் முதலில் தங்களை எப்பொழுதும் “சிகந்தர்” என்று அழைத்துக் கொள்ள ஆசைப்படுவர். அதாவது, அலெக்சாந்தர் எப்படி இந்தியாவை வென்றாரோ அதேபோல தாமும் இந்தியாவை வென்றோம் என்று “சிகந்தர்” என்று கூறிக்கொண்டு அல்லது பட்டம் போல வைத்துக் கொண்டனர். அதே பாணியில் தம்மை “மொஹம்மது” என்றும் கூறிக்கொண்டனர். அதாவது மொஹம்மது நபி போன்றே கோவில்களை இடிப்போம், விக்கிரங்களை உடைப்போம், அவ்வாறு செய்தால், மக்கள் தங்களையும் “மொஹம்மது” என்றே கருதி மரியாதை அளிப்பர் என்று நினைத்துக் கொண்டனர். முஹம்மது கோரி, முஹம்மது கஜினி முதலியோர் அத்தகைய முறையைக் கையாண்டனர். பிறகு “காலிப்”, “மஹதி” போன்ற பெயர்களுக்கு, ஸ்தானங்களுக்கு ஆசைப்பட்டனர். அதன் விளைவுதான், முகமதியர் அவ்வாறெல்லாம் உயர்வாக பெயர்களை வைத்துக் கொண்டு அழைத்துக் கொள்வது முதலியன. அக்பரும் அதே பாணியில் தான் தன்னை பெரிய மனிதன், தூதுவன், தீர்க்கதரிசி, மஹதி, என்றெல்லாம் கூறிக் கொண்டு கடைசியில் தன்னை கடவுள் என்று கூறிக் கொள்ளவும்முற்பட்டார்.

வேதபிரகாஷ்

© 19-06-2015

[1]  The members of the Divine Faith, on seeing each other, observe the following custom. One says, “Allahu Akbar” and the other responds, “Jalla Jaldluhu “. Aini – i – Aakbari, Vol.I, p.,175.

[2] Many Muslims and their apologists claim “Allahu Akbar” is simply the Arabic translation of a common English phrase meaning “God is great!” However, this is untrue. “Allahu Akbar” does not mean “God is great” as claimed. It actually means “Allah is greater.”

[3] Pierre Du Jarric, Akbar and the Jesuits – An account of the Jesuit Missions to the court of Akbar, George Routledge & Sons Lyd, London, 1926, p.68, p.238.

[4] “….if they believe in the prophet and in one God without a rival, and cry, ‘ Laillah, illallah, there is no god but God.” To this Rudolfus replied, ” If that is true, there is no use m repeating the watchword of Muhammad ‘ Muhammad rassul allah,’ i.e., Muhammad is the messenger of God.” This was not only approved but even applauded by all those present, especially by the King, who could not bear the name of Muhammad to be invoked ; for he himself was rightly of the opinion that Muhammad was not only unworthy of being praised as a saint, but was a wicked and impious villain.

  1. S. Hoyland (Trans), The Commentary of Father Monsrrate, S. J., on his Journey to the Court of Akbar, Humphrey Milford, Oxford University Press, London, 1922, p.177.

[5] Muntakhabut Tawarikh, vol. II. P. 278.

  1. F. M. Abu Bakar Siddique, Shaikh Ahmad Sirhindi (Rh.) & his Reforms, Khanka-e-Mujaddida, Mirpur, Dhaka, Bangaladesh, p.67

[6] Because, the Shi ‘a consider Imam Mahdi as Khalifa-tullah, who-Will establish Kingdom of Allah in the world. Such writings of Abul Fadl, Fadi, testify the opinion of Badauni that,

the flatterers of Akbar used to utter: “There is no God but Allah; Akbar is the Caliph of

Allah”, Which means that, Akbar has direct relation with Allah, and the Prophet Muhammad (s.) have no place therein. Badauni, op. cit., vol. II, p. 278.

Badauni, Abdul Qadir Ibn Maluk Shah—Muntakhabut, Tawarikh, Calcutta, 1865-69,(Tr.) Vol. I, George S.A.Ranking;Vol. II. W.A. Lowe; Vol. III, Sir Wolsely Haig, Patna, 1973.

[7] In 981 A.H., when the followers of Akbar began to call him صاحب زمان Man of the time, then some Murad of Afghanistan claimed for himself to be the proposed Imam Mahdi, and he did not claim for himself to be a Prophet, because of the fact, a person named Mahmud of Iran claimed so. During that period, many people from among the different tribes of Afghanistan claimed for themselves to be the ( (غوث Ghaoth and qutub. Among them a qutub, named. Mulla Mir used to say : on the ( عرش ) throne there is a ( فرش ) bed on which there is a big stone, and on that stone there is a big tent, which has seventy thousands doors. Inside of this tent, there is a chair, on which Allah has exalted. He used to say to his followers that, this was a secret matter which the Ulama did not know.