தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – சரித்திர எழுதப்படும் முறை (1)
வேதபிரகாஷ்
“இதிகாசம்” – “இது இப்படி நடந்தது”: எல்லா இந்திய மொழிகளிலும் சரித்திர நூல்கள் இருந்து வந்துள்ளன[1]. இந்தியாவைப் பொறுத்தவரையில் சரித்திரம் “இதிகாசம்” எனப்படுகிறது. அதாவது “இது இப்படி நடந்தது” என்று அதன் சுருக்கமான பொருள் மற்றும் விளக்கம் ஆகும். “இது இப்படி நடந்தது” எனும்போது, சொல்பவர், எழுதுபவர் தான், “பார்த்தது இப்படித்தான்” என்று உறுதியாகச் சொல்கிறார். எழுதுபவரும் “நடந்தது இப்படித்தான்” என்று எழுதுகிறார்.
ஆகவே, இப்படி –
- நடந்துள்ளது,
- நடந்திருக்கக் கூடும்,
- நடந்திருக்க வேண்டும்
என்றெல்லாம் சொல்லாமல், “இது இப்படி நடந்தது” என்பதில் இந்திய சரித்திராசியர்கள் (Indian historians) எந்த அளவிற்கு சரித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம்[2]. மஹாபாரதம் எழுதப்பட்ட முறையில் “இந்திய சரித்திரவரையியல்” (Indian Historiography) கொள்கைகளைக் காணலாம். வியாசர் சொல்ல விநாயகர் மாகாபாரதம் எழுதினார் மற்றும் விதுரர் திருதராஷ்டிரனுக்கு, போரே நேரிடையாகத் தெரியும்படி செய்கிறார், அதனால், விதுரர் கண்களாள் பார்த்து, பார்க்க முடியாத குருடனான திருதராஷ்டிரனுக்கு போர் நிகழ்ச்சிகளை பார்த்து சொல்கிறான் என்றும் உள்ளது. அதாவது, அந்நிலையும்
- பார்ப்பவர் (the persond who sees the historical event),
- சொல்பவர் (the personal who narrates the historical event),
- கேட்பவர் (the person who listerns to the historical event),
- எழுதுபவர் (the person who actually writes the historical event)
முதலிய நிலைகளில் மனிதர்கள் மாறினாலும், விசயம் மாறக்கூடாது என்ற நிலையில் எழுதப்பட்டது மகாபாரதம் என்றாகிறது. மூலங்களுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது சரித்திரவரைவியல் எப்படியிருக்க வேண்டும் என்பது அப்பொழுதே எடுத்துக் காட்டப்பட்டது.
மூலம், ஆதாரம், சான்று முதலியவை இல்லாமல் சரித்திரம் எழுதப்படாது [न।मूलॱ लिखयते ॱकिॱचित]: இந்திய எழுத்தாளர்கள் பொதுவாகவே மூலம், ஆதாரம், சான்று இல்லாமல் எதையும் எழுதும் வழக்கம் கொண்டிருக்கவில்லை. தொல்காப்பியத்திலேயே, எதைச் சொன்னாலும், முன்னோர், சான்றோர், உயர்ந்தோர்……“என்ப”, அதாவது கூறினர் என்று தான் சூத்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. எழுத்து, சொல், இலக்கணம், சமூகம் முதலியவற்றைப் பற்றி எழுதும் போதே அத்தகை உணர்வு, கடமை, பொறுப்பு முதலியவை இருந்தன, கடைப்பிடிக்கப்பட்டன. அதாவது படித்தவர்கள், படித்ததை உண்மையா-இல்லையா என்பதனை தாராளமாக சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம். அதனால், சரித்திரம் மிக்கப்பொறுப்பு, கடமை, பாரப்படசமின்மை முதலிய கொள்கைகளுடன் எழுதப்பட்டன. ஆனால், முகமதியர் மற்றும் ஐரோப்பிய எழுத்தாளர்கள் அவ்வாறு எழுதவில்லை. தம்மை உயர்த்தி எழுதிக் கொண்டது மற்றுமன்றி, பாரத மக்களை குறைவாகவே, தாழ்த்தி, இழிவுபடுத்தியே எழுதி வைத்தனர்[3]. அதனால் தான், இந்திய சரித்திரத்தில் ஒவ்வாதவை என்று பல விசயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சரித்திரம் என்பது என்ன எழுதப்பட்டுள்ளது, என்ன எழுதப்படுகிறது அல்லது என்ன எழுதப்படப்போகிறது என்பதல்லா, ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பது தான் சரித்திரம் ஆகும்[4]. அதில் எந்தவித பாரபட்சமும் இருக்கக் கூடாது.
சரித்திரத்தின் தந்தைகளும், தாத்தாக்களும்: ஐரோப்பியர்களுக்கு தமக்குச் சொந்தமாக இருப்பது மிகவும் குறைவே, ஏனெனில், அவர்கள் தனித்தனியாகப் பிரிந்து நாடுகளாக உருவான நிலையில் ஒவ்வொரு சமய, தத்துவ, சமூக, பொருளாதார காரணிகளுக்கு வெவ்வேறான பழமையான நாகரிகங்களிலிருந்து பெற வேண்டியதாகியது. பைபிளை சார்ந்து பொதுவாக ஐரோப்பிய சரித்திராசிரியர்கள் எழுதி வந்ததால், –
- மதத்திற்கு, மத்தியத்தரைகடல் பகுதி,
- தத்துவத்திற்கு கிரேக்கம்,
- வானவியலுக்கு பாபிலோனியா,
- கணிதத்திற்கு அசிரியா,
- காலக்கணக்கீடுத் தொன்மைக்கு எகிப்து
என்று பலவிடங்களிலிருந்து பெற்று, பைபிள் காலக்கணக்கீடு (Biblical chronology) என்பதனை உருவாக்கினர். அதை வைத்துக் கொண்டு சரித்திரம் எழுத ஆரம்பித்தனர். பெரும்பாலும் கிரேக்க-ரோமானிய மூலங்களை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டதால், வார்த்தைகள், சொற்றொடர்கள், வாக்கியங்கள் முதலியன அவற்றைச் சான்றதாகவே இருக்கும். கிரேக்க நூற்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால், அதற்கு அதிகாரம், மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்ளப் படும் தன்மை என்பவற்றை மனத்தில் கொண்டு “ஹெரோடோடஸ் சரித்திரத்தின் தந்தை” (Herodotus is the Father of History) என்று சொல்ல ஆரம்பித்தார்கள். உண்மையில் ஹெரோடோடஸ் ஒன்றும் இப்பொழுதுள்ள சரித்திரம் போன்று எழுதிவிடவில்லை.
ஹெரோடோடஸ் சரித்திரம் ஒன்றும் சரித்திரம் இல்லை: ஹெரோடோடஸின் புத்தகத்தைப் படித்தால், அவருடைய உலகத்தின் ஞானம் மற்றும் இந்தியாவின் அறிவு முதலியவற்றைக் காட்டும் மாதிரி வரைப்படம் முதலியவற்றை அறிந்து கொள்லலாம்.குறிப்பாக இந்தியா, இந்தியர்களைப் பற்றி குறிப்பிடும் போது,
- அவர்களுக்கு இரண்டு தலைகள், மூன்று கண்கள்,
- நான்கு கைகள் இருந்தன,
- உடைகள் அப்படியே மரங்களில் காய்த்துத் தொங்கின,
- எறும்புகள் நாய் உருவில் பெரியதாக இருந்தன,
- அவை பூமிக்கடியில் சென்று தங்கப்பொடியை அள்ளிக் கொண்டு வந்தன
என்றெல்லாம் எழுதியுள்ளதாக, அவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். இதில் சரித்துவத்துவம் (Historicity) என்று சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஏதோ “சிந்துபாத்” மற்றும் “ஆயிரத்தொரு இரவுகள்” கதைகளில் வரும் விஷயங்களைப் போல் உள்ளது. பிறகு எப்படி, ஹெரோடோடஸ் “சரித்திரத்தின் தந்தை” என்றாகிறார் என்று தெரியவில்லை!
கிரேக்க சரித்திரம் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது: இந்தியா எப்படி இருக்கும் என்று தெரியாது, இந்தியர்கள் எப்படி இருப்பார்கள் என்று அறியாது, இந்தியர்களின் தன்மயினையும் புரியாது ஹெரோடோடஸ் எழுதியிருக்கிறார். அலெக்சாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்த நிகழ்ச்சியிலிருந்து தான் இந்திய சரித்திரமே ஆரம்பிக்கிறது என்ற முடிவுசெய்த, ஆதாரமில்லாத சருதுகோளின் மீது ஆதாரமாக இந்திய சரித்திரம் எழுதப்பட்டது. பிரச்சினை என்னவென்றால், சமகாலத்தைய இலக்கியச் சான்றுகளை (contemporary literary evidences) நோக்கும் போது, இந்திய புராணங்கள் “சரித்திரப் புத்தகங்களை”ப் போன்றுள்ளன. ஆகவே, எங்களிடத்தில் “தாத்தாக்கள்” இல்லையென்றாலும், “தந்தைகள்” இருக்கிறார்கள் என்று காட்டிக் கொள்ள அவ்வாறு கூறிக்கொண்டார்கள். அதே நேரத்தில் இந்திய புராணங்கள் பற்றி கேவலமாக “அவை மாயை (myth), மாயாஜாலக் கதைகள் (fables), கட்டுக் கதைகள் (legends)” எழுதி வைத்தார்கள். ஆனால், வம்சாவளிகள் (geneologies), ராஜப்பரம்பரைகள் (royal dynasties), வரிசைக்கிரம ஆட்சியாளர்கள் (successive rulers), அவர்களது ஆட்சியின் காலம் (period of reign), முதலிய விவரங்களைப் புராணங்களிலிருந்து தான் பெற்றுக் கொண்டார்கள். உண்மையில் புராணங்கள் இல்லாமலிருந்தால், வில்லியம் ஜோன்ஸ் (William Jones), ஜான் பைத்புல் பிளீட் (John Faithful Fleet), வின்சென்ட் ஸ்மித் (Vincent Smith) முதலியோரால் இந்திய சரித்திரமே எழுதியிருக்க முடியாது.
குறிப்பு: இக்கட்டுரை சிறியதாக “தமிழர் புத்தகங்கள்” என்ற புத்தகத்தில், 195-199 பக்கங்களில் உள்ளது. “எடிடிங்” முறையில் பல பத்திகள், விவரங்கள் படங்கள், நீக்கப்பட்டுள்ளதால், முழுமையாக இங்கு வெளியிடப்படுகிறது.
[1] “தமிழில் சரித்திர நூல்கள்” என்ற தலைப்பு நண்பர் சுப்பு அவர்களால் எனக்குக் கொடுக்கப்பட்டு, ஒரு கட்டுரை எழுதி தருமாறு 2013ல் கேட்டுக் கொள்லப்பட்டதால், இத்தலைப்பில் எழுத வேண்டியதாயிற்று. உண்மையில் இதனை misnomer எனலாம், ஏனெனில், இந்தியாவில் என்றுமே சரித்திரம் மொழிவாறு பிரித்துப் பார்க்கப்பட்டதில்லை.
[2] சரித்திரத்தில் மற்றும் சரித்திரவரவியலில் (historiography) நோக்கம் குறிக்கொள், கருத்து, இலக்கு (objectivity) இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இன்றைய சரித்திராசிரியர்கள் கூற ஆரம்பித்துள்ளார்கள்.
[3] Conquerer and conquered, victor and defeated, ruler and ruled and such concepts were involved in writing their histories. And thus, they never recorded their defeats or the victories of their opponents.
[4] History is not what had been written or being written or would be written, but, it is actually what had happened in the past.