அக்பர் விசயத்தில் சுன்னி–ஷியா சர்ச்சைகள், சண்டைகள் மற்றும் மோதல்கள் (மஹதி):
[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (8)].
அக்பர் கலிபுல்லாஹ் அல்லது மஹதி ஆக முடியுமா?: ஷியா பண்டிதர்கள் அக்பரை “மஹதி” என்று வர்ணித்தனர். செயிக் அப்துல் பதல் பாரசீக மஹாபாரத்ததின் முன்னுரையில் அவ்வாறே கூறியுள்ளார். அக்பர் எல்லோருரையும் வழிநடத்துபவர் மற்றுமன்றி மஹதியும் ஆவர் என்று குறிப்பிட்டார். சிலர் அவரை சாஹப்-இ-ஜமன் [Saheb-i-zaman] என்றும் வர்ணித்தனர். முன்னரே குறிப்பிட்டப்படி செயிக் அப்துல் பதல், அவரை கலிபத்துல்லாஹ், அல்லாவின் பிரதிநிதி என்று சிறப்பித்தார். ஏனெனில், ஷியாக்கள் இமாம் மஹதியை, கலிப-துல்லாஹ், அதாவது, அல்லாவின் ஆட்சியை, இப்பூமியின் மீது நிறுவ வந்துள்ளவர் என்று விவரிக்கிறது. இஸ்மயிலி ஷியைத் இறையியலின் படி, இமாம் என்பவர் ஒரு வலியாகப் பிறக்கிறார் மற்றும் அவரது தாயார் மிகச்சுத்தமாகவும், எந்தவிதமான பாவத்தையும் செய்யாதவராகவும் இருக்கிறார். அக்பரின் தாயார் கர்ப்பத்துடன் இருக்கும் போது கண்ணால் பார்க்கமுடியாத மற்றும் சிறந்த தீர்க்கதரிசனங்களைப் பார்த்துள்ளாராம். அதனால், அக்பர் அவரது கர்ப்பத்தில் இருக்கும்போது, அவரது முகம் பிரகாசத்துடன் இருந்தது என்று செயிக் அப்துல் பதல் விவரிக்கிறார். மேலும் அக்பர் கருவிலிருக்கும் போதே, எல்லா ஞானத்தையும் கடவுளிடமிருந்து நேரிடையாகப் பெற்றுவிட்டார், மற்றும் தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் சக்தியைக் கொண்டிருந்தார் என்று விவரித்தார்[1]. அதாவது தீர்க்கதரிசி என்றால், அதிசயங்களை செய்ய வேண்டும், குறிப்பிட்ட சின்னங்களை காட்ட வேண்டும் என்றுள்ளது. அதனால், அக்பரரை அவ்வாறெல்லாம் வர்ணிக்கப்பட்டு உருவாக்கினர். ஆனால், சுன்னி முகமதியரோ, வெளிப்படையாக அத்தகைய நம்பிக்கைகளை மிகக்கடுமையாக எதிர்த்தனர்.
சுன்னி–ஷியா சர்ச்சைகள், சண்டைகள் மற்றும் மோதல்கள் (இறையியல், சமாதிகள் முதலியன): 1567ல் செயிக் அபுதுன் நபி என்பவரின் அறிவுரையின் படி, அமீர் குர்ஸு சமாதிக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த, மீர் மூர்தாஜா செரிப் சிராஜி என்பவரின் சமாதி தோண்டப்பட்டு, உள்ளேயிருந்தவற்றை வேறொரு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டது. இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், அடிப்படைவாத இஸ்லாம் சமாதி, சமாதி மரியாதை, வழிபாடு, நினைவு கொள்வது முதலியவற்றை எதிர்க்கிறது[2].
பிறகு அமாதிகளில் ஷியா-சுன்னி என்று வித்தியாசம் பாராட்டுவது ஏன் என்று தெரியவில்லை. இத்தகைய ஷியாக்களுக்கு எதிரான காரியங்கள் 1570 வரை நடந்து கொண்டிருந்தன. 1573ல் அக்பர் மஹதவித்துவம் (Mahadhvism) என்ற முகமதியப் பிரிவை அடக்கி ஒடுக்கியுக்கினார். அப்பிரிவைச் சேர்ந்த பந்தகி மியான் செயிக் முஸ்தபா என்ற மதத்தலைவர், சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, தில்லிக்கு இழுத்து வரப்பட்டார். ஒன்றரை வருடங்களில் சிறையில் இருந்த அவர், 1570ல் விடுதலை செய்யப்பட்டதும் உடனே இறந்து விட்டார் என்று முகமதிய நூற்க்குறிப்புகள் கூறுகின்றன. 1495ல் ஜோன்பூரைச் சேர்ந்த முல்லா மொஹம்மது என்பவர் தன்னை மஹதி என்று அறிவித்துக் கொண்டார். அவர் வழி வந்தவர் தாம் இந்த மியான் செயிக் முஸ்தபா. அக்பர் மற்ற மத மக்களை, நம்பிக்கையாளர்களை எப்படி தண்டித்தார், கொலைசெய்தான் என்பதனையும் பாடப்புத்தகங்களில் எடுத்துக் காட்டுவதில்லை. சுன்னி-ஷியாக்களுக்கிடையில் உள்ள வேற்றுமைகளை, இந்துக்கள் இப்பொழுது வரை சரிவர தெரிந்து கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர்.
அக்பர் ஷியா முகமதியர்களுடன் ஏன் உரையாடல் நடத்தவில்லை, ஒத்துப் போகவில்லை?: எல்லா மதங்களுடன் உரையாடல் வைத்துக் கொண்டு சமரசத்துடன் கருத்துகள், பழக்கங்களை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அக்பர் மாறிய நிலையில், ஷியாக்களுடன் ஏன் அவர் ஒத்துப் போகவில்லை என்பதை எந்த செக்யூலரிஸவாதியும் கண்டுகொள்ளவில்லை போலும். மொஹம்மதுக்குப் பிறகு யார் தலைவராவது என்ற விசயத்தில், ஓரு பிரிவினர் அலி என்கின்றவரைத் தேர்ந்தெடுத்தனர். மொஹம்மதுவின் மகளை அவர் திருமணம் செய்து கொண்டிருந்தார். மற்றொரு பிர்வினர் வேறொருவர் வரவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். இதனால், அலி இமாமான போது இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டது. 661ல் குபா என்ற இடத்தில் அலி கொல்லப்பட்டார். அவரது மகன்களும் கொல்லப்பட்டனர். சுன்னியொருவர் இமாம் ஆனார். இவ்வாறு தான், பிரிவு ஏற்பட்டது. இஸ்லாத்தில் உள்ள பிரிவினர்களுடன் உரையாடல் வைத்துக் கொண்டு சேர்ந்து, அமைதியாக வாழ்வது சுலபமானது என்பது போல உள்ளது. ஆனால், அப்பிரிவினர் ஏன் சேர்ந்து போவதில்லை என்பது தான் புதிராக உள்ளது[3]. ஆலிப் முறை, காலிப்புகளை மதிப்பது சுன்னித்துவம் என்றால், மஹதியிஸத்தை அதிகமாகப் போற்றுவது, அதுபோலவே காட்டிக் கொள்வது, நடப்பது முதலியவை ஷியத்துவ ஆகிறது. பிறகு தன்னையும், தனது தாயையும் அவ்வாறான குணாதிசயங்களைப் பெற்றிருப்பது போல காண்பித்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
இந்துக்கள் மசூதிகளை இடித்தனரா அல்லது அக்பர் கொடுத்த இடத்தில் கோவில்களைக் கட்டிக் கொண்டனரா?: முஜாதித் அல்ப் தானி, இந்துக்கள் மசூதிகளை இடித்துவிட்டு கோவில்களைக் கட்டினர் என்று எழுதிவைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது[4]. அக்பர் காலத்தில், இந்துக்களுக்கு அதிக அளவில் இடம் கொடுத்ததால், அவர்கள் அதிகாரம் பெற்று, அதனால், மசூதிகளை மாற்றி கோவில்களைக் கட்டினார்கள் என்று தானி கூறுகிறார்[5]. தானேஸ்வரத்தில் குருக்யாதின் உள்ளே ஒரு மசூதி மற்றும் சமாதி இருந்ததாகவும், அதனை ஒரு இந்து இடித்து விட்டு, மசூதி கட்டினான் என்று எழுதி வைத்துள்ளார். ஆனால், இதெல்லாம் முகமதியர்களே கிளப்பி விட்ட வதந்தி என்று அவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். ஆசார இஸ்லாம் நீர்க்கப்பட்டுகிறது என்ற ஆதங்கங்கத்தில் அவர்கள் அவ்வாறு எழுதிவைத்தனராம். உண்மையில் அக்பர் காலத்தில் பீர்பலைத்தவிர வேறெந்த இந்துவும் காணப்படவில்லை. ஜைனர்களும், கிருத்துவர்களும் தான் ஆதிக்கம் பெற்றிருந்தனர். எனவே, அக்பர் காலத்தில், இந்துக்களுக்கு அதிக அளவில் இடம் கொடுத்ததால், அவர்கள் அதிகாரம் பெற்று, அதனால், மசூதிகளை மாற்றி கோவில்களைக் கட்டினார்கள் என்று தானி குறிப்பிடுவது அப்பட்டமான பொய்யாகும்.
ஒருபக்கம் இந்துக்களின் ஆதிக்கம், தாக்கம் அக்பர் அவையில் உள்ளன என்று குற்றஞ்சாட்டி வந்தாலும், இந்துக்கள்-அல்லாதர்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்தது. ஜைனர்களின் கோவில்கள் இடிக்கப்படக்கூடாது என்று அக்பர் ஆணையிட்டார், புதிய ஜைன-கோவில்களைக் கட்டிக் கொள்ள அனுமதியளித்தார். ஆனால், அக்பர் காலத்தில் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன, ஜெசியா வரி விதிக்கப்பட்டிருந்தது. அவ்வரி பிறாகு தான் நீக்கப்பட்டது, அதற்கு, ஒரு இந்து கவி, அக்பரைப் புகழ்ந்து பாடவேண்டிஇருந்தது என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. எனவே, அக்பர் காலத்தில், இந்துக்கள் மசூதிகளை இடித்தனர் என்பதெல்லாம் அப்பட்டமான பொய்களாகும்.
வேதபிரகாஷ்
© 23-06-2015
[1] Abul Fadl; Akbar Nama, vol. I. P. 187; Ibid.Mahabharat (preface). P. 9-12.
[2] அமிர் குஸ்ரோ ஹொடர் தூர்தர்ஷனில் ஒலிபரப்பியபோது, சமாதி காட்டியது, சமாதியிலிருந்து குரல் வருவது, புகை வருவது போன்றா காட்சிகளை எதிர்த்து அடிப்படைவாத முஸ்ளிம்கள் வழக்கு தொடர்ந்தனர். பிறகு அத்தகைய காட்சிகள் நிறுத்தப்பட்டன.
[3] இன்று கூட ஐசிஸ் போன்ற தீவிரவாத ஜிஹாதிகள் அல்லாவின் பெயரிலேயே, ஷியா முஸ்லிம்களைக் கொன்றுவருகின்றனர். ஆனால், இந்தியாவில் இரு பிரிவுகளும் இந்துக்களுக்கு எதிரான விசயங்களில் ஒன்றாக செயல்படுகின்றனர்.
[4] Shaikh Ahmad, Maktubat Imam Rabbani, vol. I, Maktub no. 105; Ibid, vol. II, Maktub No. 92.
[5] During the reign of Akbar, the Hindus became The infidle people of the Hind are mercilessly obliterating the Mosques and in that place they are erecting their Mandirs………………….so powerful that, without any hesitation, they obliterating the Mosque erected their mandirs. There was a mosque at Thanyswar within Kurukhayt, and a grave- yard of a pious man, the Hindus distroying them, erected a mandir there.