பவிஷ்யபுராணம் – முகமதியர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலங்களில் உருவானதும், தொடரப்பட்ட இடைச்செருகல்களும்!
[அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (9)].
பவிஷ்யபுராணம் [भविष्य पुराण]: பவிஷ்ய புராணம் இடைக்காலத்தில் தொகுத்து எழுதப் பட்ட புராணம் ஆகும். பவிஷ்யம் என்றால் எதிர்காலம், அதாவது எதிர்காலத்தைப் பற்றியது என்று பொருள். உண்மையில் ஆரூடங்கள், தீர்க்கதரிசனங்கள், சடங்குகள், கிரியைகள் பற்றி விளக்கும் புராணம் ஆகும். இதுபோன்ற பவிஷ்ய புராணம், பவிஷ்யோத்திர புராணம், பவிஷ்யதி புராணம் என்றும் இருந்தன. அம்மூன்றையும் சுருக்கி இதனை உருவாக்கினர் என்று சொல்லப்படுகிறது[1]. பெருமளவில் ஆரூடங்கள், தீர்க்கதரிசனங்கள் கொண்டு உருவாக்கிய புராணம் இது மட்டும்தான். கல்கி புராணத்தில், அந்த அவதாரமே இனிமேல் ஏற்படும் என்ற ரீதியில் இருந்ததால், கலியுகத்தில் நிலைமை இப்படி இருக்கும் போது, விஷ்ணு அவதாரம் எடுப்பார் என்ற குறிப்பு இருந்தது. ஆனால், இதிலுள்ள சுலோகங்களில் முகலாய, ஐரோப்பிய அரசர்கள் வருவார்கள், ஆள்வார்கள் என்றெல்லாம் எழுதி வைக்கப்பட்டது.
புராணத்திற்குரிய இலக்கணம், லட்சணங்கள் இல்லாமல் பவிஷ்யபுராணம் உருவாக்கப்பட்டது: பொதுவாக புராணத்திற்குரிய பஞ்ச-லட்சணங்கள் – ஐந்து தன்மைகள் இருக்க வேண்டும் என்ற முறை-மரபு இருந்தது, அதன்படியே புராணங்கள் எழுதப்பட்டன, தொகுக்கப்பட்டன:
- படைப்பு, அண்ட-பேரண்டங்களின் தோற்றம் – சர்க்கம்.
- படைப்பு-அழிப்பு சுழற்சி – பிரதிசர்க்கம்
- மன்வந்திரங்கள் – பல மனுக்கள் இருந்த காலங்கள்.
- சூரிய மற்றும் சந்திர வம்சங்களிகள்.
- சடங்குகள்.
ஆனால், பவிஷ்யதி புராணத்தில் அத்தகைய முறை இல்லாமல் இருக்கிறது. இதை சாரலஸ் எலியட் புரொடெஸ்டென்ட் மிஷனரிகள் இந்தியாவில் பைபிள் போதிப்பது ஆரம்பித்தப் பிறகு தான், படைப்புப் பற்றிய விவரங்களை பாவிஸ்ய புராணத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது என்றார்[2]. அதாவது, ஆங்கிலேயர் காலத்தில் அத்தகைய விவரங்கள் சேர்க்கப்பட்டன என்றாகிறது. அதனால், வேண்டுமென்றே பிற்காலத்தில் ஏதோவொரு காரணத்திற்காக இப்புராணம் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும்.
வசிஸ்டரால் தொகுக்கப்பட்டது என்பது 18 புராணங்கள் தாம்.
1. அக்னி
2. பாகவத 3. பிரம்மா 4. பிரம்மாண்ட 5. பிரம்மாவைவர்த 6. கருட |
7. ஹரிவம்ஸ
8. கூர்ம 9. லிங்க 10. மார்க்கண்டேய 11. மத்ஸய 12. நாரத |
13. பத்ம
14. சிவ 15. ஸ்காந்த 16. வாமன 17. வாயு 18. விஷ்ணு |
ஆனால், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆட்சிகாலத்தில், தங்களது கதைகளையும் சேர்த்துக் கொண்டு, மேலும் புதியதாக 18 புராணங்களை உருவாக்கினர்.
1. சனத் குமார
2. நரசிம்ஹ 3. பிரஹந்நாரதீய 4. சிவ-ரஹஸ்ய 5. துர்வாஸ 6. கபில |
7. வாமன
8. பார்க்கவ 9. வருண 10. காளிக 11. சம்ப 12. நந்தி |
13. சூரிய
14. பராசர 15. வசிஸ்ட 16. தேவி-பாகவத 17. கணேச 18. ஹம்ஸ |
அவற்றிற்கு உபபுராணங்கள் என்று பெயர் வைத்தனர். இவை பெயர்களிலும், எண்ணிக்கையிலும் வேறுபடுகின்றன. இவற்றிற்கு அங்கீகாரம் இல்லாதனால், மக்களும் அவற்றை பொருட்படுத்துவது இல்லை. இந்த இரண்டு பிரிவுகளிலும் பவிஷ்யபுராணம் இல்லாதது நோக்கத்தக்கது. இவை முகமதியர் காலத்திலும் மறுபடியும் அக்பர் போன்றோரது விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றி எழுதப்பட்டன.
முகலாயர் காலத்தில் செய்யப்பட்ட இடைசெருகல்கள்: மிலேச்சர்கள் இந்தியாவை ஆள்வார்கள், பாபர், அக்பர் போன்றோர் ஆள்வார்கள் என்றெல்லாம் சேர்த்து எழுதப்பட்டது. அதனால், அரேபிய-பாரசீக வார்த்தைகள் (அஹ்லாத், திமிர்லிங்) எல்லாம் இதில் காணப்படுகின்றன. அதாவது, அக்கால நிகழ்ச்சிகளை சேர்த்து-சேர்த்து எழுதபட்டு வந்த நூலாகும். இப்பொழுதுள்ள பவிஷ்ய புராணம் ஆங்கிலேயர் காலத்தில் அச்சிடப்பட்டது. அதில் அரசி விக்டோரியாவின் ஆட்சியும் சேர்க்கப்பட்டது, அதாவது, இந்தியாவை விக்டோரியா ராணி ஆள்வாள் [1876 – 1901] என்று தீர்க்கதரிசனம், ஆரூடம் சொல்லப்பட்டது போல எழுதப்பட்டது. 50-100 ஆண்டுகள் கழிந்த பிறகு, முந்தைய நிகழ்ச்சிகளை, நடக்கும் என்பது போல இப்புராணம் எழுதப் பட்டது. “விக்டோரியா ராணி ஆள்வாள்” என்றெல்லாம் உள்ளதால், அது ஆங்கிலேயர்களாலும் திருத்தி சேர்க்கப்பட்டது என்று தெரிகிறது. இத்தகைய புராணத்தில் தான் இஸ்லாம் பற்றியெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று இப்பொழுது பிரச்சாரம் செய்கிறார்கள்[3].
உண்மையில், அக்பர் ஹிந்துக்களை மதம் மாற்ற, அப்புராணத்தில் அவ்வாறெல்லாம், அரசவையில் உள்ள பண்டிதர்களை வைத்து எழுத வைத்தார். அல்லா என்ற கடவுள் இருந்தார், மொஹம்மது நபி வந்து, பழைய ஞானத்தை மீட்டெடுத்து மக்களுக்கு கொடுப்பார் என்றெல்லாம் எழுத வைத்தால், ஹிந்துக்கள் அதனை ஏற்றுக் கொண்டு மதம் மாறுவார்கள் என்று அவ்விதத்தில் கள்ளத்தனமாக, போலி புராணம் தயாரிக்கப்பட்டது[4].
முகமதியரைத் தொடர்ந்த ஆங்கிலேயர்களின் இடைசெருகல்கள்; பத்மபுராணம் இப்புராணத்தை ரஜஸ் புராணம் என்கிறது[5], அதாவது, உணர்ச்சி வசப்படல், அதிகமான ஆர்வம் கொள்ளுதல், தேவைக்கு அதிகமாக ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபடல் போன்ற குணாதிசயத்தை, நிலையைக் காட்டுவதகும். அப்படியென்றால், பத்மபுராணத்தில் வரும் அந்த சுலோகம் இடைச்செருகல் என்றாகிறது இல்லை பத்மபுராணமே 19-20 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது என்றாகிறது. எப்படியாகிலும் அக்காலம் வரை இடைச்செருகல்கள் நடந்து கொண்டிருந்தன, அவற்றிற்கு காரணம் ஆங்கிலேயர் என்றாகிறது. இப்பொழுதுள்ள பவிஷ்ய புராணம் ஆங்கிலேயர் காலத்தில் அச்சிடப்பட்டது. அதில் அரசி விக்டோரியாவின் ஆட்சியும் சேர்க்கப்பட்டது, அதாவது, இந்தியாவை விக்டோரியா ராணி ஆள்வாள் [1876 – 1901] என்று எழுதப்பட்டது[6]. அது மட்டுமல்லாது, பைபிளில் வரும் ஜெனிசஸ், எக்ஸ்டோசஸ், வசனங்கள் இருப்பதால், 19 அல்லது 19ம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்டிருக்கலாம் என்று அல்ப் ஹில்டிபைடில் குறிப்பிடுகிறார்[7]. இடைக்காலத்தில் முகலாயர் தங்களது மொஹம்மதுவை சேர்த்துக் கொண்டார்கள் என்றால், ஆங்கிலேயர்கள், ஏசு, கிறிஸ்து, மோசஸ் முதலியவற்றை சேர்த்தார்கள் என்றாகிறது. அதனால் தான் ஏசு[8], மொஹம்மது முதலியோரின் குறிப்புகளும் அத்தகையவே[9], என்று எடுத்துக் காட்டுகின்றனர். ஏ.கே.ராமானுஜனும், “ஏசு, கிறிஸ்து, மோசஸ், ராணி விக்டோரியா என்று எல்லோரும் குறிப்பிடப்பட்டுள்ளது, இதனை புதுப்பிக்கும் செய்த முயற்சியாகும்”, என்று கிண்டலடித்தார். “இதனால் புராணங்கள் திறந்து கிடக்கும் அமைப்புகளாக இருக்கின்றன”, என்று தனகேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார்[10]. கல்கத்தா, பாராளுமன்றம் முதலிய வார்த்தைகளையும் சேர்துள்ளதும் ஹஜ்ரா போன்ற வல்லுனர்களால் எடுத்துக் காட்டப் பட்டது[11].
நம்பகத்தன்மை வேண்டும் என்பதற்காக, மனுதர்ம சாஸ்திரத்திலிருந்து சுலோகங்களை 2.69-87, ….அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் மனுதர்ம சாஸ்திரத்தில் இல்லாததையும் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. அதாவது, சாஸ்திரத்திலேயே இடைச்செருகல்கள் இருந்ததால், எந்த பிரதியில் எந்த உலோகம் இருந்தது, இல்லை என்பது தெரியாமல் இருந்தது. ஸ்டெர்ன்பாக் (Sternbach) போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர்[12]. இடைச்செருகல் செய்யப்பட்ட நூலிலிருந்து, இன்னொரு போலியாக உருவாக்கப்பட்ட நூலில் இத்தகைய இடைச்செருகல்கள், முரண்பாடுகள் இருப்பது ஆராய்ச்சியாளர்களைத் திகைப்ப்டையச் செய்துள்ளது.
வேதபிரகாஷ்
© 23-06-2015
[1] B.K. Chaturvedi, Bhavishya Purana, Diamond Pocket Books (P) Limited, New Delhi, 2006, p.8.
[2] Sir Charles Elliot, Hinduism and Buddhism, an Historical Sketch, Vol.I,
[3] ஜகீர் நாயக் போன்ற அரைவேக்காட்டுகள், மோசடி பிரச்சாரிகள் அதிலுள்ள சில சுலோகங்களை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டு, ஏதோ எல்லாவற்றையும் கரைத்துக் குடித்துவிட்டது போல பேசிவருவதை, இன்றும் காணலாம்.
[4] இதெல்லாம் ராபர்ட் டி நொபிலி போன்ற கிருத்துவப் பாதிரிகள் போலித்தனமாக வேதங்களை உருவாக்கியது போலத்தான். இந்துக்களை ஏமாற்ற மேற்கொண்டு வரும் முயற்சிகளில் ஒன்றாகத் தெரிகிறது.
[5] H. H. Wilson, The Vishnu Purana: A system of Hindu mythology and tradition, Oriental Translation Fund, p. 12., 1840
[6] V.D.N.Rao, Prophecies on Some Highlights of Bharat thereafter, Shri Kanchi Kamakoti Peetham, http://www.kamakoti.org/kamakoti/bhavishya/bookview.php?chapnum=30
[7] Alf Hiltebeitel, Rethinking India’s Oral and Classical Epics, 2009 Page 277 “Since references to Queen Victoria’s Calcutta provide a mid- to even late-nineteenth-century terminus ad quem for other … but of the Genesis-Exodus sequence and the Krsnarrrtacarita—with its Jesus and Muhammad passages— as well.”
[8] Bonazzoli, Giorgio: Christ in the Bhavisya Purana [Engl.]. (a methodological approach to Bhav. P. III. 3.2.21-32). Puranaissue 21 January 1979, pp. 23-39.
[9] Swami Parmeshwaranand, Encyclopaedic Dictionary of Purāṇas 2001 – Page 280 “CHRIST IN THE BHAVISYA PURANA… was an expression of the living tradition. All these themes enter into a broader context relating some of the events in the history of the Mleccha-s. In this connection are also mentioned Muhammad “
[10] A. K. Ramanujan mentions finding references to Christ (as Isha Putra), Moses, and Queen Victoria in the “appropriately up-to-date Bhaviṣya Purāṇa” and cites this as an example of the fact that: “In spite of repeated efforts to impose schemes and canons on them from time to time, Purāṇas are open systems.” R amanujan, A. K., “Folk Mythologies and Purāṇas” in: Doniger (1993) p. 105.
[11] Hazra has the following to say regarding the Pratisargaparvan: The Pratisargaparvan, though nominally mentioned in the Bhaviṣya (I.1.2–3), contains stories aboutAdam, Noah, Yākuta, Taimurlong, Nadir Shah,Akbar (the emperor of Delhi), Jayacdandra, … and many others. It even knows the British rule in India and names Calcutta and the Parliament.
[12] Patrick Olivelle, Suman Olivelle, Manu’s Code of Law, Oxford University Press, New York, 2005, 54-55