மூதேவி, மூத்ததேவியா, முதல் தேவியா–முண்டதேவியா? தமிழ் தேவியா–சமஸ்கிருத தேவியா? “மந்திர–தந்திர–எந்திர” முறைகள் மூலம் ஏற்பட்ட மாற்றங்களும், முடிவுகளும் [7]
“மந்திர–தந்திர–எந்திர” முறைகள் நீங்கி பக்தி மார்க்கம் வளர்ந்தது: மேலும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பக்தி மார்க்கம் மூலம் நம்பிக்கையாளர்களைத் திரட்டினர். கோவில்கள் தோறும் சென்று, பதிகம் பாடி பக்தி நெறி வளர்த்தனர். உழவாரப்படை கொண்டு, உழவாரப் பணி செய்து, கோவில்களை தூய்மைப் படுத்தினர்; மூடிய கோவில்களை திறந்து வைத்தனர்.தைவையெல்லாம் மக்கள் இயக்கமாகவும் செயல்பட்டன. “மந்திர-தந்திர-எந்திர” முறைகள் போல ரகசியமாகப் பின்பற்றப்படவில்லை. இத்தகைய குறிப்புகள், அவர்கள், ஜைன-பௌத்த தாக்கங்களினால், சீரழிந்த கோவில்களை மீட்டு, புனர் நிர்மானம் செய்தனர் என்றாகிறது. அதாவது, மக்களை வைத்து செய்வித்தனர். வழிபாட்டு முறைகளை ஜைன-பௌத்தர் மாற்றியதால், அவற்றையும் முன்னர் இருந்த படி, திரும்பவும் செயல்பட வைத்தனர். இதனால், மக்கள் “மந்திர-தந்திர-எந்திர” முறைகளை விடுத்தனர், அதற்குண்டான தேவதைகளும் விடப்பட்டன.
தேவதைகள் பிரிக்கப்பட்டன: ஜைன-பௌத்த “மந்திர-தந்திர-எந்திர” முறைகளில் தேவதைகள் மூன்று, ஏழு, பதினாறு, 64, 86, 108 என்று பெருகிக்கொண்டே போனது. ஸ்தோத்திரங்களும் பெருகின. பொது மக்களைக் கவர, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய, அவ்வாறு புதிய தேவதைகள் உருவாக்கப்பட்டன. நல்ல-கெட்ட தேவதைகள், துர்தேவதைகள் என்றெல்லாம் கூட பிரிக்கப்பட்டன. சக்தி உபாசகர்களுடன் போட்டியாகவும் அவ்வாறு செய்தனர். ஆட்சியாளர்களின் ஆதரவுடன் இத்தேவதைகளின் உருவங்கள் கோவில்களில் வைக்கப் பட்டன. இதனால், ஆண்-தெய்வங்களுடன், பெண்-தெய்வங்களும் வைக்கப் பட்டன. அதற்கேற்றார்போல, புராணங்கள், ஆகம விதிமுறைகளும் எழுதப்பட்டன. பக்தர்களுக்குள் ஏற்பட்ட சண்டை-சச்சரவுகளை அப்புதிய புராணக் கதைகளிலும் சேர்த்தனர். அதனால் தான், பிரம்மா-சரஸ்வதி, விஷ்ணு-லக்ஷ்மி, சிவன்-பார்வதி அவ்வப்போது சண்டைப் போட்டுக் கொள்வதைப் பார்க்கலாம். பிறகு அவர்களை சமாதானப் படுத்த அல்லது சண்டையை மேலும் வளர்க்க மகன்–கடவுளர்களையும் சேர்த்தனர். ஆனால், மகாவீரர் மற்றும் புத்தர் தத்தமது மதநூல்களில் சண்டை-சச்சரவுகள் மேற்கொண்டதாக கதைகள் இல்லை. ஆகையால், இவையெல்லாம் அவர்களின் இடைசெருகல்கள் என்று நன்றாக அறிந்து கொள்ளலாம். முன்னால் ஜைன ராமாயணம் எழுதியது போல, இவ்வாறு புதிய கடவுளர்களை உண்டாக்கி, புராணங்களையும் உண்டாக்கினர்.
புதிய தேவதைகளை ஏற்றுக் கொள்ளுதல், சமரசம் செய்து கொள்ளுதல் முதலியன: கடவுளர்கள் குடும்பங்கள் உண்டான போது, ஜைன-பௌத்தர்களின் இத்தகைய இடைச் செருகல்ளை தாக்குப் பிடிக்க முடியாமல், ஒரு நிலையில், இந்து மடாதிபதிகள், குருமார்கள், பண்டிதர்கள் முதலியோர், அதற்கேற்றப்படி புராணங்களையும், ஸ்தல புராணங்களையும் மாற்றி எழுதி வைத்தனர். சக்தி உபாசகர்கள் மற்றும் புதிய கடவுளர் பக்தர்களைத் திருப்திப் படுத்த, பிரம்மா-சரஸ்வதி, விஷ்ணு-லக்ஷ்மி, சிவன்-பார்வதி முதலியோர்களை சொந்தக்காரர்களாக மாற்றினர். பிரம்மா விஷ்ணுவின் மகனாகிறார். சிவனுக்கு சம்பந்தியாகிறார். இருப்பினும் இடைக்காலத்தில், சைவ-வைணவ மோதல்கள் திகைக்க வைக்கின்றன. சைவ-வைணவ பிரிவுகளில் சேர்ந்த ஜைன-பௌத்தர்களின் வேலையாகவும் இருக்கலாம்.
தீட்டுப்பட்ட தேவதைகள், கடவுளர்கள் முதலியன: துலுக்கர்களின் கோவில் இடிப்புகளுக்குப் பின்னர், இத்தகைய பிரிப்புகள் இன்னும் அதிகமாகின. முதலில், துலுக்கர் கைப்பட்ட கோவில்களை பகிஷ்காரம் செய்தனர். உடைந்த, மூளியான விக்கிரங்கள்-சிலைகள் ஒதுக்கப் பட்டன. இருப்பினும் பரிகார முறைகளை அறிமுகப்படுத்தி, சிலசமரசங்களை செய்து கொண்டனர். இதனால், துலுக்கர்களால் தீட்டுப் பட்ட கோவில்களில் நுழைவுவாயில்களை மேற்கு பக்கமாக மாற்றினர். அதற்கேற்றார்போல, மூலவரையும் மேற்கு பக்கம் பார்ப்பது போல வைத்தனர். அதாவது, மேற்கிலிருந்து வந்த துலுக்கர் மற்றும் கிருத்துவர்களால் தாக்கப்பட்ட, சேதப்படுத்தப்பட்ட மற்றும்மிடிக்கப்பட்ட கோவில்கள் என்பதை தெரியப் படுத்தவே அவ்வாறு செய்யப்பட்டது. 1310-11ல் மாலிகாபூர் காலத்தில் பாதிக்கப் பட்ட கோவில்க்ளில் அந்நிலையைக் காணலாம். சென்னையில், மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில், இடம் பெயர்ந்து கட்டப் பட்டதால், மேற்கு பக்கம் பார்த்து இருக்கிறது. வாசலில் வைக்கப் பட்டுள்ள கல்வெட்டில்,.முன்பு அக்க்கோவில் இப்பொழுதுள்ள சர்ச் இருக்கும் இடத்தில் இருந்தது, போர்ச்சுகீசியர் இடித்ததால், விக்கிரங்களை எடுத்து வந்து, இங்கு கோவில் கட்டப்பட்டது என்று தெளிவாக பதிவு செய்யப் பட்டுள்ளது.
துர்தேவதைகள், கெட்ட தேவதைகள் ஒதுக்கப்பட்டன: இதனால் தான் இடைகாலத்தில் தீட்டுப்பட்ட தேவதைகள், துர்தேவதைகள், கெட்டதை செய்யும் தேவதைகள் என்று பல்வேறு தேவதைகள் விலக்கப் பட்டன. நிர்வாண தேவதைகளும் விலக்கப் பட்டனர். துணிகளால் மூடப்பட்டன, இல்லை தூக்கியெறியப் பட்டன.. வயல்களில் போடப்பட்ட தேவதைகள் எல்லை தெய்வங்களாக, கிராமதேவதைகளாக மாறின. உக்கிரதேவதைகளும் ஊருக்கு ஒதுக்குப் புறமாக வைக்கப்பட்டன. இதனால் தான், நரசிம்மர் விக்கிரங்கள் கோவில்கள் வயல்வெளிகளிலும், மலைப்பகுதிகளிலும் இன்றும் காணலாம். சப்தரிஷி மனைவிகள் – சப்தரிஷி மண்டலமாகி, சப்தமாதர்கள் ஆகி, புதியதாக உண்டாக்கப் பட்ட புராணங்களில் அபவாதத்திற்கு உட்பட்டதால், ஒதுக்கி வைக்கப் பட்டனர். ஒன்று கோவில் பிரகாரத்திற்கு வெளியே வைக்கப் பட்டனர் அல்லது நவக்கிரகங்களை வைத்து பரிகாரம் செய்யப் பட்டது. ஏழு ஒன்பதாக, ராகு-கேது சேர்க்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் புதிய் கதைகள் உண்டாக்கி விளக்கம் கொடுக்கப் பட்டன.
அலசப்பட்ட ஆதாரங்கள்–விவரங்களின் தொகுப்பு – முடிவுரை: மேற்கண்ட ஆதாரங்கள், விவரங்கள், விவாதங்கள் முதலியவற்றிலிருந்து, கீழ்காணும் விசயங்கள் முடிவுரையாக கொடுக்கப் படுகின்றன:
- சிந்துசமவெளி அகழ்வாய்வு ஆதாரங்கள் படி தாய்-சேய் / பெண் தெய்வம் வழிபாடு அக்காலத்தில் இருந்தது தெரிகிறது. குள்ளி, பலுச்சிஸ்தான் ஆதாரமே3000-2500 BCE காலத்திற்குச் செல்கிறது.
- சிந்துசமவெளி நாகரிகத்தின் உச்சகாலகட்ட நிலை2250-1950 BCE மற்றும் திடீரென்று உண்டான மௌரிய c.350-200 BCE கால சாம்ராஜ்யத்திற்கும், இடையில் உள்ள காலத்தை சரித்திராசிரியர்கள் விளக்க வேண்டும்.
- ஏழு பெண்கள், சப்தமாதர், ஏழு கன்னியர் வழிபாட்டிற்கான உருவமும் காணப்படுகிறது.
- அப்பெண்தெய்வங்களின் உருவங்கள், வரிசை, எண்ணிக்கை மாற்றம் முதலியன, ஜைன-பௌத்த “மந்திர-தந்திர-எந்திர” முறைகளினால் ஏற்பட்டன.
- சமஸ்கிருத இலக்கிய ஆதாரங்கள், கிடைத்துள்ள அகழ்வாழ்வு ஆதாரங்களுடன், காலக்கணக்கியல் ரீதியில் ஒத்துப் போகின்றன.
- ஆனால், தமிழ் இலக்கிய ஆதாரங்கள் [c.300 BCE- 100 CE], கிடைத்துள்ள அகழ்வாழ்வு ஆதாரங்களுடன், காலக்கணக்கியல் ரீதியில் ஒப்பிடும் போது, இடைக்காலத்தைக் [9-14thCE] காட்டுகின்றன.
- சிந்துசமவெளி நாகரிகம் “திராவிடர்களுடையது” என்றால், அவர்களும் [c.300 BCE- 100 CE வரை என்ன செய்து கொண்டிருந்தனர் என்று சொல்ல வேண்டும்.
- ஆதாரங்கள் இல்லாததால், பாரதம் முழுவதும்1950 BCE முதல் c.300 BCE வரை, 1600 ஆண்டுகளுக்கு ஒரே நாகரிகம் இருந்திருக்க வேண்டும் என்றாகிறது. ஏனெனில், வெறுமையிலிருந்து திடீரென்று மௌரியர்களும் சங்ககால நாகரிகமும் தோன்றியிருக்க முடியாது.
- ஜைன-பௌத்த “மந்திர-தந்திர-எந்திர” முறைகள் சீரழிந்ததால், அம்முறைகள் மற்றும் சம்பந்தப் பட்ட தேவதைகள் ஒதுக்கப் பட்டன.
- இதற்கும் ஆரிய-திராவிட, சமஸ்கிருத-தமிழ் கட்டுக்கதைகள், கருதுகோள்கள், சித்தாந்தங்கள் முதலியவற்றிற்கும் தொடர்பில்லை.
- மூதேவியின் கதையினை நம்ப வேண்டுமானால், பாற்கடலைக் கடையும் கதையினை நம்பியாகி வேண்டும். ஆகவே, புராணங்களை கட்டுக்கதைகள் என்று ஒருபக்கம் எதிர்ப்பது, இன்னொரு பக்கம் ஆதரித்து ஏற்றுக் கொண்டு, பார்ப்பனர் சதி, கைவேலை என்றெல்லாம் பேசுவது, முரண்பாட்டைக் காட்டுகிறது.
© வேதபிரகாஷ்
09-09-2018